|
981
திருவாடானை ஊனாரும் உட்பிணியும் |
தானான தத்ததன தானான தத்ததன தானான தத்ததன ...... தனதான |
ஊனாரு முட்பிணியு மானாக வித்தவுட லூதாரி பட்டொழிய ...... வுயிர்போனால் ஊரார் குவித்துவர ஆவா வெனக்குறுகி ஓயா முழக்கமெழ ...... அழுதோய நானா விதச்சிவிகை மேலே கிடத்தியது நாறா தெடுத்தடவி ...... யெரியூடே நாணாமல் வைத்துவிட நீறாமெ னிப்பிறவி நாடா தெனக்குனருள் ...... புரிவாயே மானாக துத்திமுடி மீதே நிருத்தமிடு மாயோனு மட்டொழுகு ...... மலர்மீதே வாழ்வா யிருக்குமொரு வேதாவு மெட்டிசையும் வானோரு மட்டகுல ...... கிரியாவும் ஆனா வரக்கருடன் வானார் பிழைக்கவரு மாலால முற்றவமு ...... தயில்வோன்முன் ஆசார பத்தியுடன் ஞானாக மத்தையருள் ஆடானை நித்தமுறை ...... பெருமாளே.
|
ஊனாரு முட்பிணியு மானா கவித்தவுடல் ஊதாரி பட்டொழிய.....வுயிர்போனால் ஊரார் குவித்துவர ஆவா வெனக்குறுகி ஓயா முழக்கமெழ.....அழுதோய நானா விதச்சிவிகை மேலே கிடத்தி அது நாறாது எடுத்து அடவி.....யெரியூடே நாணாமல் வைத்துவிட நீறாமென இப்பிறவி நாடா தெனக்கு உனருள்.....புரிவாயே மா நாக துத்திமுடி மீதே நிருத்தமிடு மாயோனும் மட்டொழுகு.....மலர்மீதே வாழ்வாயிருக்குமொரு வேதாவும் எட்டிசையும் வானோரும் அட்டகுல.....கிரியாவும் ஆனா வரக்கருடன் வானார் பிழைக்க வரும் ஆலால முற்ற.....அமுதயில்வோன் முன் ஆசார பத்தியுடன் ஞான ஆகமத்தையருள் ஆடானை நித்தம் உறை.....பெருமாளே. |
| Audio/Video Link(s) |
|
https://www.youtube.com/watch?v=kJ1bZZEet2w
|
|
https://www.youtube.com/watch?v=yDGT7k4jN4c
|
Add (additional) Audio/Video Link
|