சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

Selected Thiruppugazh      Thiruppugazh Thalangal      All Thiruppugazh Songs      Thiruppugazh by Santham     

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew   Korean  
Order by:
Thiruppugazh from Thalam: திருப்பூவணம்
1329   அறப்பாவை அத்தற்கு     1330   வானவராதி யோர்     1331   பந்தப்பொற் பார    
1329   திருப்பூவணம்   அறப்பாவை அத்தற்கு  
தனத்தான தத்தத் ...... தனதானா
     தனத்தான தத்தத் ...... தனதானா

அறப்பாவை அத்தற் ...... கருள்பாலா
     அளித்தாது வெட்சித் ...... திருமார்பா
குறப்பாவை அற்பிற் ...... புணர்வோனே
     குலத்தேவ வர்க்கப் ...... பரிபாலா
மறப்பாத கத்துற் ...... றுழல்வேனோ
     மலர்த்தாள்வ ழுத்தக் ...... க்ருபையீவாய்
சிறப்பான முத்திக் ...... கொருவாழ்வே
     திருப்பூவ ணத்திற் ...... பெருமாளே.
......... உரை .........
சிறப்பான முத்தியை அளிக்கக் கூடிய பூவணத்தில் எழுந்தருளியுள்ள
பெருமானே! முருகா! நீ அறப்பாவையான தேவசேனையின் இனத்தைச்
சார்ந்த தேவர்களுக்கு அருளுகின்றவன். எப்போதும் வெற்றியை
அளிக்கக்கூடிய வெட்சி மாலையை மார்பினில் அணிந்தவன். குறப்
பாவையாகிய வள்ளியின் அன்பிற்கு அடிமையானவன். தேவர்களின்
குலம் பெருக பரிபாலனம் செய்வோன். இவ்வளவு உயரிய நீ, மிகக் கொடிய
பாவங்கள் செய்து மாபாதகத்துள் உழலும் என்னைக் காத்து மலர்போன்ற
உனது தாளை வணங்கிட அருள் செய்வாய்.


அறப்பாவை அத்தற் ...... கருள்பாலா
     அளித்தாது வெட்சித் ...... திருமார்பா
குறப்பாவை அற்பிற் ...... புணர்வோனே
     குலத்தேவ வர்க்கப் ...... பரிபாலா
மறப்பாத கத்துற் ...... றுழல்வேனோ
     மலர்த்தாள்வ ழுத்தக் ...... க்ருபையீவாய்
சிறப்பான முத்திக் ...... கொருவாழ்வே
     திருப்பூவ ணத்திற் ...... பெருமாளே.
......... உரை .........
சிறப்பான முத்தியை அளிக்கக் கூடிய பூவணத்தில் எழுந்தருளியுள்ள
பெருமானே! முருகா! நீ அறப்பாவையான தேவசேனையின் இனத்தைச்
சார்ந்த தேவர்களுக்கு அருளுகின்றவன். எப்போதும் வெற்றியை
அளிக்கக்கூடிய வெட்சி மாலையை மார்பினில் அணிந்தவன். குறப்
பாவையாகிய வள்ளியின் அன்பிற்கு அடிமையானவன். தேவர்களின்
குலம் பெருக பரிபாலனம் செய்வோன். இவ்வளவு உயரிய நீ, மிகக் கொடிய
பாவங்கள் செய்து மாபாதகத்துள் உழலும் என்னைக் காத்து மலர்போன்ற
உனது தாளை வணங்கிட அருள் செய்வாய்.
Add (additional) Audio/Video Link

Back to Top

1330   திருப்பூவணம்   வானவராதி யோர்  
தானனதான தானனதான தானனதான ...... தனதான
     தானனதான தானனதான தானனதான ...... தனதான

வானவராதி யோர்சிறைமேவ மாவலியேசெய் ...... திடுசூரன்
     மார்பிருகூற தாய்விடவாரி வாய்விடவேலை ...... விடுதீரா
கானவர்பாவை காதலனான காசணிபார ...... தனமார்பா
     காலனைமோது காலகபால காளகளேசர் ...... தருபாலா
தேனமர்நீப மாலைவிடாத சேவகஞான ...... முதல்வோனே
     தீயகுணாதி பாவிநினாது சேவடிகாண ...... அருள்வாயே
போனகசாலை யாதுலர்வாழ வீதிகடோறும் ...... நனிமேவு
     பூவணமான மாநகர்வாழு நாதகுகேச ...... பெருமாளே.


வானவர் ஆதியோர் சிறைமேவ மாவலியே செய்திடு சூரன்
மார்பிரு கூற தாய் விடவாரி வாய்விடவேலை விடுதீரா
கானவர் பாவை காதலனான காசணி பார தனமார்பா
காலனை மோது காலகபால காளகளேசர் தருபாலா
தேனமர் நீபமாலை விடாத சேவகஞான முதல்வோனே
தீய குணாதி பாவி நினாது சேவடிகாண அருள்வாயே
போனக சாலை யாதுலர்வாழ வீதிகடோறும் நனிமேவு
பூவணமான மாநகர் வாழு நாத குகேச பெருமாளே.

Add (additional) Audio/Video Link

Back to Top

1331   திருப்பூவணம்   பந்தப்பொற் பார  
தந்தத்தத் தானன தானன
     தந்தத்தத் தானன தானன
          தந்தத்தத் தானன தானன ...... தனதானா

பந்தற்பொற் பாரப யோதர
     முந்தச்சிற் றாடைசெய் மேகலை
          பண்புற்றுத் தாளொடு வீசிய ...... துகிலோடே
பண்டைச்சிற் சேறியில் வீதியில்
     கண்டிச்சித் தாரொடு மேவிடு
          பங்குக்கைக் காசுகொள் வேசையர் ...... பனிநீர்தோய்
கொந்துச்சிப் பூவணி தோகையர்
     கந்தக்கைத் தாமரை யாலடி
          கும்பிட்டுப் பாடிசை வீணையர் ...... அநுராகங்
கொண்டுற்றுப் பாயலின் மூழ்கிய
     சண்டிச்சிக் சீயென வாழ்துயர்
          குன்றப்பொற் பாதக்ரு பாநிதி ...... அருள்வாயே
அந்தத்துக் காதியு மாகியு
     மந்திக்குட் டானவ னானவ
          னண்டத்தப் பாலுற மாமணி ...... ஒளிவீசும்
அங்கத்தைப் பாவைசெய் தேயுயர்
     சங்கத்திற் றேர்தமி ழோதிட
          அண்டிக்கிட் டார்கழு வேறினர் ...... ஒருகோடி
சந்தத்திக் காளுநி சாசரர்
     வெந்துட்கத் தூளிப டாமெழ
          சண்டைச்சொற் றார்பட வேவயில் ...... விடுவோனே
தங்கச்சக் ராயுதர் வானவர்
     வந்திக்கப் பேரரு ளேதிகழ்
          தம்பப்பொற் பூவண மேவிய ...... பெருமாளே.


பந்தற்பொற் பாரப யோதர
     முந்தச்சிற் றாடைசெய் மேகலை
          பண்புற்றுத் தாளொடு வீசிய ...... துகிலோடே
பண்டைச்சிற் சேறியில் வீதியில்
     கண்டிச்சித் தாரொடு மேவிடு
          பங்குக்கைக் காசுகொள் வேசையர் ...... பனிநீர்தோய்
கொந்துச்சிப் பூவணி தோகையர்
     கந்தக்கைத் தாமரை யாலடி
          கும்பிட்டுப் பாடிசை வீணையர் ...... அநுராகங்
கொண்டுற்றுப் பாயலின் மூழ்கிய
     சண்டிச்சிக் சீயென வாழ்துயர்
          குன்றப்பொற் பாதக்ரு பாநிதி ...... அருள்வாயே
அந்தத்துக் காதியு மாகியு
     மந்திக்குட் டானவ னானவ
          னண்டத்தப் பாலுற மாமணி ...... ஒளிவீசும்
அங்கத்தைப் பாவைசெய் தேயுயர்
     சங்கத்திற் றேர்தமி ழோதிட
          அண்டிக்கிட் டார்கழு வேறினர் ...... ஒருகோடி
சந்தத்திக் காளுநி சாசரர்
     வெந்துட்கத் தூளிப டாமெழ
          சண்டைச்சொற் றார்பட வேவயில் ...... விடுவோனே
தங்கச்சக் ராயுதர் வானவர்
     வந்திக்கப் பேரரு ளேதிகழ்
          தம்பப்பொற் பூவண மேவிய ...... பெருமாளே.

Add (additional) Audio/Video Link

Back to Top

     
send corrections and suggestions to admin-at-sivaya.org
This page was last modified on Tue, 07 Apr 2026 01:48:44 +0000