| சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
Selected Thiruppugazh
Thiruppugazh Thalangal
All Thiruppugazh Songs
Thiruppugazh by Santham
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Spanish
Hebrew
Korean
Thiruppugazh from Thalam: திருப்பரங்குன்றம்
7 அருக்கு மங்கையர் 8 உனைத் தினம் 9 கருவடைந்து 10 கறுக்கும் அஞ்சன 11 கனகந்திரள்கின்ற 12 காதடருங்கயல் 13 சந்ததம் பந்த 14 சருவும்படி 15 தடக்கைப் பங்கயம் 16 பதித்த செஞ்சந்த 17 பொருப்புறுங் 18 மன்றலங் கொந்துமிசை 19 வடத்தை மிஞ்சிய 20 வரைத்தடங் கொங்கை
7
திருப்பரங்குன்றம் அருக்கு மங்கையர் தனத்த தந்தன தனதன தனதன
தனத்த தந்தன தனதன தனதன
தனத்த தந்தன தனதன தனதன ...... தனதான
அருக்கு மங்கையர் மலரடி வருடியெ
கருத்த றிந்துபின் அரைதனில் உடைதனை
அவிழ்த்தும் அங்குள அரசிலை தடவியும் ...... இருதோளுற்
றணைத்தும் அங்கையின் அடிதொறும் நகமெழ
உதட்டை மென்றுபல் இடுகுறி களுமிட
அடிக்க ளந்தனில் மயில்குயில் புறவென ...... மிகவாய்விட்
டுருக்கும் அங்கியின் மெழுகென உருகிய
சிரத்தை மிஞ்சிடும் அநுபவம் உறுபலம்
உறக்கை யின்கனி நிகரென இலகிய ...... முலைமேல்வீழ்ந்
துருக்க லங்கிமெய் உருகிட அமுதுகு
பெருத்த உந்தியின் முழுகிமெ யுணர்வற
உழைத்தி டுங்கன கலவியை மகிழ்வது ...... தவிர்வேனோ
இருக்கு மந்திரம் எழுவகை முநிபெற
உரைத்த சம்ப்ரம சரவண பவகுக
இதத்த இங்கிதம் இலகிய அறுமுக ...... எழில்வேளென்
றிலக்க ணங்களும் இயலிசை களுமிக
விரிக்கும் அம்பல மதுரித கவிதனை
இயற்று செந்தமிழ் விதமொடு புயமிசை ...... புனைவோனே
செருக்கும் அம்பல மிசைதனில் அசைவுற
நடித்த சங்கரர் வழிவழி அடியவர்
திருக்கு ருந்தடி அருள்பெற அருளிய ...... குருநாதர்
திருக்கு ழந்தையு மெனஅவர் வழிபடு
குருக்க ளின்திற மெனவரு பெரியவ
திருப்ப ரங்கிரி தனிலுறை சரவண ...... பெருமாளே.
அருக்கு மங்கையர் மலர் அடி வருடியெ
கருத்து அறிந்து பின் அரைதனில் உடை தனை
அவிழ்த்தும் அங்கு உள அரசிலை தடவியும்.....இரு தோள் உற்று
அணைத்தும் அங்கையின் அடிதொறும் நகம் எழ
உதட்டை மென்று பல் இடு குறிகளும் இட
அடிக் களம் தனில் மயில் குயில் புறவு என.....மிக வாய் விட்டு
உருக்கும் அங்கியின் மெழுகு என உருகிய
சிரத்தை மிஞ்சிடும் அநுபவம் உறு பலம்
உற கையின் கனி நிகர் என இலகிய.....முலை மேல் வீழ்ந்து
உருக் கலங்கி மெய் உருகிட அமுது உகு
பெருத்த உந்தியின் முழுகி மெய் உணர்வு அற
உழைத்திடும் கன கலவியை மகிழ்வது.....தவிர்வேனோ
இருக்கு மந்திரம் எழு வகை முநி பெற
உரைத்த சம்ப்ரம சரவணபவ குக
இதத்த இங்கிதம் இலகிய அறுமுக.....எழில் வேள் என்று
இலக்கணங்களும் இயல் இசைகளும் மிக
விரிக்கும் அம் பல மதுரித கவி தனை
இயற்று செந்தமிழ் விதமொடு புய மிசை.....புனைவோனே
செருக்கும் அம்பல மிசை தனில் அசைவுற
நடித்த சங்கரர் வழி வழி அடியவர்
திருக் குருந்தடி அருள் பெற அருளிய.....குருநாதர்
திருக் குழந்தையும் என அவர் வழி படு
குருக்களின் திறம் என வரு பெரியவ
திருப்பரங்கிரி தனில் உறை சரவண.....பெருமாளே.
Add (additional) Audio/Video Link
8
திருப்பரங்குன்றம் உனைத் தினம் தனத்த தந்தன தனதன தனதன
தனத்த தந்தன தனதன தனதன
தனத்த தந்தன தனதன தனதன ...... தனதான
உனைத்தி னந்தொழு திலனுன தியல்பினை
உரைத்தி லன்பல மலர்கொடுன் அடியிணை
உறப்ப ணிந்திலன் ஒருதவ மிலனுன ...... தருள்மாறா
உளத்து ளன்பினர் உறைவிடம் அறிகிலன்
விருப்பொ டுன்சிக ரமும்வலம் வருகிலன்
உவப்பொ டுன்புகழ் துதிசெய விழைகிலன் ...... மலைபோலே
கனைத்தெ ழும்பக டதுபிடர் மிசைவரு
கறுத்த வெஞ்சின மறலிதன் உழையினர்
கதித்த டர்ந்தெறி கயிறடு கதைகொடு ...... பொருபோதே
கலக்கு றுஞ்செயல் ஒழிவற அழிவுறு
கருத்து நைந்தல முறுபொழு தளவைகொள்
கணத்தில் என்பய மறமயில் முதுகினில் ...... வருவாயே
வினைத்த லந்தனில் அலகைகள் குதிகொள
விழுக்கு டைந்துமெய் உகுதசை கழுகுண
விரித்த குஞ்சியர் எனுமவு ணரைஅமர் ...... புரிவேலா
மிகுத்த பண்பயில் குயில்மொழி அழகிய
கொடிச்சி குங்கும முலைமுக டுழுநறை
விரைத்த சந்தன ம்ருகமத புயவரை ...... உடையோனே
தினத்தி னஞ்சதுர் மறைமுநி முறைகொடு
புனற்சொ ரிந்தலர் பொதியவி ணவரொடு
சினத்தை நிந்தனை செயுமுநி வரர்தொழ ...... மகிழ்வோனே
தெனத்தெ னந்தன எனவரி யளிநறை
தெவிட்ட அன்பொடு பருகுயர் பொழில்திகழ்
திருப் பரங்கிரி தனிலுறை சரவண ...... பெருமாளே.
உனைத்தி னந்தொழு திலன் உனதியல்பினை
உரைத்திலன் பல மலர்கொடுன்அடியிணை
உறப்ப ணிந்திலன் ஒருதவ மிலன் உன.....தருள்மாறா
உளத்து ளன்பினர் உறைவிடம் அறிகிலன்
விருப்பொடுன் சிகரமும்வலம் வருகிலன்
உவப்பொடுன்புகழ் துதிசெய விழைகிலன்.....மலைபோலே
கனைத்தெ ழும்பகடது பிடர் மிசைவரு
கறுத்த வெஞ்சின மறலிதன் உழையினர்
கதித்த டர்ந்தெறி கயிறு அடுகதைகொடு.....பொருபோதே
கலக்கு றுஞ்செயல் ஒழிவற அழிவுறு
கருத்து நைந்து அல முறுபொழுது அளவைகொள்
கணத்தில் என்பய மற மயில் முதுகினில்.....வருவாயே
வினைத்தலந்தனில் அலகைகள் குதிகொள
விழுக்கு டைந்துமெய் உகுதசை கழுகுண
விரித்த குஞ்சியர் எனும் அவுணரை அமர்.....புரிவேலா
மிகுத்த பண்பயில் குயில்மொழி அழகிய
கொடிச்சி குங்கும முலைமுகடு உழுநறை
விரைத்த சந்தன ம்ருகமத புயவரை.....உடையோனே
தினத்தினஞ் சதுர்மறைமுநி முறைகொடு
புனற்சொரிந்து அலர் பொதிய விணவரொடு
சினத்தை நிந்தனை செயுமுநி வரர்தொழ.....மகிழ்வோனே
தெனத்தெனந்தன என வரி யளிநறை
தெவிட்ட அன்பொடு பருகு உயர் பொழில்திகழ்
திருப் பரங்கிரி தனிலுறை சரவண.....பெருமாளே.
Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=9ZOd5ygwqIw
Add (additional) Audio/Video Link
9
திருப்பரங்குன்றம் கருவடைந்து தனனதந்த தத்தத்த தந்த
தனனதந்த தத்தத்த தந்த
தனனதந்த தத்தத்த தந்த ...... தனதான
கருவடைந்து பத்துற்ற திங்கள்
வயிறிருந்து முற்றிப்ப யின்று
கடையில்வந்து தித்துக்கு ழந்தை ...... வடிவாகிக்
கழுவியங்கெ டுத்துச்சு ரந்த
முலையருந்து விக்கக்கி டந்து
கதறியங்கை கொட்டித்த வழ்ந்து ...... நடமாடி
அரைவடங்கள் கட்டிச்ச தங்கை
இடுகுதம்பை பொற்சுட்டி தண்டை
அவையணிந்து முற்றிக்கி ளர்ந்து ...... வயதேறி
அரியபெண்கள் நட்பைப்பு ணர்ந்து
பிணியுழன்று சுற்றித்தி ரிந்த
தமையுமுன்க்ரு பைச்சித்தம் என்று ...... பெறுவேனோ
இரவிஇந்த்ரன் வெற்றிக்கு ரங்கி
னரசரென்றும் ஒப்பற்ற உந்தி
யிறைவன்எண்கி னக்கர்த்த னென்றும் ...... நெடுநீலன்
எரியதென்றும் ருத்ரற்சி றந்த
அநுமனென்றும் ஒப்பற்ற அண்டர்
எவரும்இந்த வர்க்கத்தில் வந்து ...... புனமேவ
அரியதன்ப டைக்கர்த்த ரென்று
அசுரர்தங்கி ளைக்கட்டை வென்ற
அரிமுகுந்தன் மெச்சுற்ற பண்பின் ...... மருகோனே
அயனையும்பு டைத்துச்சி னந்து
உலகமும்ப டைத்துப்ப ரிந்து
அருள்பரங்கி ரிக்குட்சி றந்த ...... பெருமாளே.
கருவடைந்து பத்துற்ற திங்கள்
வயிறிருந்து முற்றிப்ப யின்று
கடையில்வந்து தித்து குழந்தை.....வடிவாகி
கழுவியங்கெ டுத்து சுரந்த
முலையருந்து விக்க கிடந்து
கதறி அங்கை கொட்டித்தவழ்ந்து.....நடமாடி
அரைவடங்கள் கட்டி சதங்கை
இடுகுதம்பை பொற்சுட்டி தண்டை
அவையணிந்து முற்றிக் கிளர்ந்து.....வயதேறி
அரியபெண்கள் நட்பைப் புணர்ந்து
பிணியுழன்று சுற்றித் திரிந்த(து)
அமையும் உன் க்ருபைச்சித்தம் என்று.....பெறுவேனோ
இரவிஇந்த்ரன் வெற்றிக்கு குரங்கின
அரசரென்றும் ஒப்பற்ற உந்தி
இறைவன் எண் கினக்க அர்த்த என்றும்.....நெடுநீலன்
எரியதென்றும் ருத்ரற் சிறந்த
அநுமனென்றும் ஒப்பற்ற அண்டர்
எவரும் இந்த வர்க்கத்தில் வந்து.....புனமேவ
அரியதன் படைக்கு அர்த்தரென்று
அசுரர்தங்கி ளைக்கட்டை வென்ற
அரிமுகுந்தன் மெச்சுற்ற பண்பின்.....மருகோனே
அயனையும் புடைத்துச் சினந்து
உலகமும் படைத்து பரிந்து
அருள் பரங் கிரிக்குள் சிறந்த.....பெருமாளே. Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=lGuNoClwffI
https://www.youtube.com/watch?v=Jmls7aRZNqc
https://www.youtube.com/watch?v=k0ZCdREUysw
Add (additional) Audio/Video Link
10
திருப்பரங்குன்றம் கறுக்கும் அஞ்சன தந்தன தனதன தனதன
தனத்த தந்தன தனதன தனதன
தனத்த தந்தன தனதன தனதன ...... தனதான
கறுக்கும் அஞ்சன விழியிணை அயில்கொடு
நெருக்கி நெஞ்சற எறிதரு பொழுதொரு
கனிக்குள் இன்சுவை அமுதுகும் ஒருசிறு ...... நகையாலே
களக்கொ ழுங்கலி வலைகொடு விசிறியெ
மனைக்கெ ழுந்திரும் எனமனம் உருகஒர்
கவற்சி கொண்டிட மனைதனில் அழகொடு ...... கொடுபோகி
நறைத்த பஞ்சணை மிசையினில் மனமுற
அணைத்த கந்தனில் இணைமுலை எதிர்பொர
நகத்த ழுந்திட அமுதிதழ் பருகியு ...... மிடறூடே
நடித்தெ ழுங்குரல் குமுகுமு குமுவென
இசைத்து நன்கொடு மனமது மறுகிட
நழுப்பு நஞ்சன சிறுமிகள் துயரற ...... அருள்வாயே
நிறைத்த தெண்டிரை மொகுமொகு மொகுவென
உரத்த கஞ்சுகி முடிநெறு நெறுவென
நிறைத்த அண்டமு கடுகிடு கிடுவென ...... வரைபோலும்
நிவத்த திண்கழல் நிசிசர ருரமொடு
சிரக்கொ டுங்குவை மலைபுரை தரஇரு
நிணக்கு ழம்பொடு குருதிகள் சொரிதர ...... அடுதீரா
திறற்க ருங்குழல் உமையவள் அருளுறு
புழைக்கை தண்கட கயமுக மிகவுள
சிவக்கொ ழுந்தன கணபதி யுடன்வரும் ...... இளையோனே
சினத்தொ டுஞ்சமன் உதைபட நிறுவிய
பரற்கு ளன்புறு புதல்வநன் மணியுகு
திருப்ப ரங்கிரி தனிலுறை சரவண ...... பெருமாளே.
கறுக்கும் அஞ்சன விழி இணை அயில் கொடு
நெருக்கி நெஞ்சு அற எறி தரு பொழுது ஒரு
கனிக்குள் இன் சுவை அமுது உகும் ஒரு சிறு.....நகையாலே
களம் கொழும் கலி வலை கொடு விசிறியெ
மனைக்கு எழுந்திரும் என மனம் உருக ஓர்
கவற்சி கொண்டிடமனை தனில் அழகொடு.....கொடு போகி
நறைத்த பஞ்சு அணை மிசையினில் மனம் உற
அணைத்த அகம் தனில் இணை முலை எதிர் பொர
நகத்து அழுந்திட அமுது இதழ் பருகியும்.....மிடறூடே
நடித்து எழும் குரல் குமு குமு குமு என
இசைத்து நன்கொடு மனம் அது மறுகிட
நழுப்பு நஞ்சன சிறுமிகள் துயர் அற.....அருள்வாயே
நிறைத்த தெண் திரை மொகு மொகு மொகு என
உரத்த கஞ்சுகி முடி நெறு நெறு நெறு என
நிறைத்த அண்ட முகடு கிடு கிடு என.....வரை போலும்
நிவத்த திண் கழல் நிசிசரர் உரமொடு சிரக்
கொடும் குவை மலை புரை தர இரு நிணக் குழம்பொடு
குருதிகள் சொரி தர.....அடுதீரா
திறல் கரும் குழல் உமையவள் அருள் உறு புழைக்கை தண்
கட கய முக மிக உள சிவக் கொழுந்து அ(ன்)ன
கணபதியுடன் வரும்.....இளையோனே
சினத்தொடும் சமன் உதை பட நிறுவிய
பரற்கு உளம் அன்புறு புதல்வ நன் மணி உகு
திருப்பரங்கிரி தனில் உறை சரவண.....பெருமாளே. Add (additional) Audio/Video Link
11
திருப்பரங்குன்றம் கனகந்திரள்கின்ற தனதந்தன தந்தன தந்தன
தனதந்தன தந்தன தந்தன
தனதந்தன தந்தன தந்தன ...... தனதான
கனகந்திரள் கின்றபெ ருங்கிரி
தனில்வந்துத கன்தகன் என்றிடு
கதிர்மிஞ்சிய செண்டைஎ றிந்திடு ...... கதியோனே
கடமிஞ்சிஅ நந்தவி தம்புணர்
கவளந்தனை உண்டுவ ளர்ந்திடு
கரியின்றுணை என்றுபி றந்திடு ...... முருகோனே
பனகந்துயில் கின்றதி றம்புனை
கடல்முன்புக டைந்தப ரம்பரர்
படரும்புயல் என்றவர் அன்புகொள் ...... மருகோனே
பலதுன்பம்உழன்றுக லங்கிய
சிறியன்புலை யன்கொலை யன்புரி
பவமின்றுக ழிந்திட வந்தருள் ...... புரிவாயே
அனகன்பெயர் நின்றுரு ளுந்திரி
புரமுந்திரி வென்றிட இன்புடன்
அழலுந்தந குந்திறல் கொண்டவர் ...... புதல்வோனே
அடல்வந்துமு ழங்கியி டும்பறை
டுடுடுண்டுடு டுண்டுடு டுண்டென
அதிர்கின்றிட அண்டநெ ரிந்திட ...... வருசூரர்
மனமுந்தழல் சென்றிட அன்றவர்
உடலுங்குட லுங்கிழி கொண்டிட
மயில்வென்றனில் வந்தரு ளுங்கன ...... பெரியோனே
மதியுங்கதி ருந்தட வும்படி
உயர்கின்றவ னங்கள்பொ ருந்திய
வளமொன்றுப ரங்கிரி வந்தருள் ...... பெருமாளே.
கனகந்திரள்கின்ற பெருங்கிரி
தனில்வந்து தகன்தகன் என்றிடு
கதிர் மிஞ்சிய செண்டை எறிந்திடு.....கதியோனே
கடமிஞ்சி அநந்தவிதம் புணர்
கவளந்தனை உண்டு வளர்ந்திடு
கரியின்றுணை என்றுபிறந்திடு.....முருகோனே
பனகந்துயில்கின்ற திறம்புனை
கடல்முன்பு கடைந்த பரம்பரர்
படரும்புயல் என்றவர் அன்புகொள்.....மருகோனே
பலதுன்பம் உழன்று கலங்கிய
சிறியன்புலையன் கொலையன் புரி
பவமின்று கழிந்திட வந்தருள்.....புரிவாயே
அனகன்பெயர் நின்று உருளுந்திரி
புரமுந்திரி வென்றிட இன்புடன்
அழலுந்த நகுந்திறல் கொண்டவர்.....புதல்வோனே
அடல்வந்து முழங்கியிடும்பறை
டுடுடுண்டுடு டுண்டுடு டுண்டென
அதிர்கின்றிட அண்டநெரிந்திட.....வருசூரர்
மனமும் தழல் சென்றிட அன்றவர்
உடலுங் குடலுங் கிழி கொண்டிட
மயில்வென்றனில் வந்தருளும் கன.....பெரியோனே
மதியுங்கதிருந் தடவும்படி
உயர்கின்ற வனங்கள் பொருந்திய
வளமொன்று பரங்கிரி வந்தருள் பெருமாளே.
Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=e5dOurLzdcs
https://www.youtube.com/watch?v=An6V4EguBUU
Add (additional) Audio/Video Link
12
திருப்பரங்குன்றம் காதடருங்கயல் தானன தந்தன தந்தனந் தந்தன
தானன தந்தன தந்தனந் தந்தன
தானன தந்தன தந்தனந் தந்தன ...... தனதான
காதட ருங்கயல் கொண்டிசைந் தைம்பொறி
வாளிம யங்கம னம்பயந் தந்திருள்
கால்தர விந்துவி சும்பிலங் கும்பொழு ...... தொருகோடி
காய்கதி ரென்றொளிர் செஞ்சிலம் புங்கணை
யாழியு டன்கட கந்துலங் கும்படி
காமனெ டுஞ்சிலை கொண்டடர்ந் தும்பொரு ...... மயலாலே
வாதுபு ரிந்தவர் செங்கைதந் திங்கித
மாகந டந்தவர் பின்திரிந் துந்தன
மார்பில ழுந்தஅ ணைந்திடுந் துன்பம ...... துழலாதே
வாசமி குந்தக டம்பமென் கிண்கிணி
மாலைக ரங்கொளும் அன்பர்வந் தன்பொடு
வாழநி தம்புனை யும்பதந் தந்துன ...... தருள்தாராய்
போதிலு றைந்தருள் கின்றவன் செஞ்சிர
மீதுத டிந்துவி லங்கிடும் புங்கவ
போதவ ளஞ்சிவ சங்கரன் கொண்டிட ...... மொழிவோனே
பூகமு டன்திகழ் சங்கினங் கொண்டகி
ரீவம டந்தைபு ரந்தரன் தந்தருள்
பூவைக ருங்குற மின்கலந் தங்குப ...... னிருதோளா
தீதக மொன்றினர் வஞ்சகந் துஞ்சியி
டாதவர் சங்கரர் தந்ததென் பும்பல
சேர்நிரு தன்குலம் அஞ்சமுன் சென்றடு ...... திறலோனே
சீதள முந்தும ணந்தயங் கும்பொழில்
சூழ்தர விஞ்சைகள் வந்திறைஞ் சும்பதி
தேவர்ப ணிந்தெழு தென்பரங் குன்றுறை ...... பெருமாளே.
காது அடரும் கயல் கொண்டு இசைந்து ஐம்பொறி
வாளி மயங்க மனம் பயம் தந்து இருள்
கால் தர இந்து விசும்பு இலங்கும் பொழுது.....ஒரு கோடி
காய் கதிர் என்று ஒளிர் செம் சிலம்பும் கணை
யாழியுடன் கடகம் துலங்கும்படி
காமன் நெடும் சிலை கொண்டு அடர்ந்தும் பொரு.....மயலாலே
வாது புரிந்து அவர் செம் கை தந்து இங்கித
மாக நடந்தவர் பின் திரிந்தும் தன
மார்பில் அழுந்த அணைந்திடும் துன்பம் அது.....உழலாதே
வாசம் மிகுந்த கடம்பம் மென் கிண்கிணி
மாலை கரம் கொளும் அன்பர் வந்து அன்பொடு
வாழ நிதம் புனையும் பதம் தந்து உனது.....அருள் தாராய்
போதில் உறைந்து அருள்கின்றவன் செம் சிரம்
மீது தடிந்து விலங்கிடும் புங்கவ
போத வளம் சிவ சங்கரன் கொண்டிட.....மொழிவோனே
பூகம் உடன் திகழ் சங்கு இனம் கொண்ட
கிரீவ மடந்தை புரந்தரன் தந்து அருள்
பூவை கரும் குற மின் கலம் தங்கு.....ப(ன்)னிரு தோளா
தீது அகம் ஒன்றினர் வஞ்சகம் துஞ்சி
யிடாதவர் சங்கரர் தந்த தென்பும் பல
சேர் நிருதன் குலம் அஞ்ச முன் சென்றடு.....திறலோனே
சீதளம் முந்து மணம் தயங்கும் பொழில்
சூழ் தர விஞ்சைகள் வந்து இறைஞ்சும் பதி
தேவர் பணிந்து எழு தென் பரங் குன்று உறை.....பெருமாளே. Add (additional) Audio/Video Link
13
திருப்பரங்குன்றம் சந்ததம் பந்த தந்தனந் தந்தத் ...... தனதான
தந்தனந் தந்தத் ...... தனதான
சந்ததம் பந்தத் ...... தொடராலே
சஞ்சலந் துஞ்சித் ...... திரியாதே
கந்தனென் றென்றுற் ...... றுனைநாளும்
கண்டுகொண் டன்புற் ...... றிடுவேனோ
தந்தியின் கொம்பைப் ...... புணர்வோனே
சங்கரன் பங்கிற் ...... சிவைபாலா
செந்திலங் கண்டிக் ...... கதிர்வேலா
தென்பரங் குன்றிற் ...... பெருமாளே.
சந்ததம் பந்தத் தொடராலே
சஞ்சலந் துஞ்சித்.....திரியாதே
கந்தனென்று என்று உற்று உனைநாளும்
கண்டுகொண்டு அன்புற்றிடு.....வேனோ
தந்தியின் கொம்பை புணர்வோனே
சங்கரன் பங்கிற்.....சிவைபாலா
செந்திலங் கண்டிக் கதிர்வேலா
தென்பரங் குன்றிற்.....பெருமாளே. Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=EWPds8Y_L9I
https://www.youtube.com/watch?v=JpcCyw8JPkc
https://www.youtube.com/watch?v=y3KPG8Ua4QM
Add (additional) Audio/Video Link
14
திருப்பரங்குன்றம் சருவும்படி தனதந்தன தந்தன தந்தன
தனதந்தன தந்தன தந்தன
தனதந்தன தந்தன தந்தன ...... தனதான
சருவும்படி வந்தனன் இங்கித
மதனின்றிட அம்புலி யுஞ்சுடு
தழல்கொண்டிட மங்கையர் கண்களின் ...... வசமாகிச்
சயிலங்கொளு மன்றல்பொ ருந்திய
பொழிலின்பயில் தென்றலும் ஒன்றிய
தடவஞ்சுனை துன்றியெ ழுந்திட ...... திறமாவே
இரவும்பகல் அந்தியு நின்றிடு
குயில்வந்திசை தெந்தன என்றிட
இருகண்கள்து யின்றிட லின்றியும் ...... அயர்வாகி
இவணெஞ்சுப தன்பதன் என்றிட
மயல்கொண்டுவ ருந்திய வஞ்சகன்
இனியுன்றன்ம லர்ந்தில கும்பதம் ...... அடைவேனோ
திருவொன்றிவி ளங்கிய அண்டர்கள்
மனையின்தயிர் உண்டவன் எண்டிசை
திகழும்புகழ் கொண்டவன் வண்டமிழ் ...... பயில்வோர்பின்
திரிகின்றவன் மஞ்சுநி றம்புனை
பவன்மிஞ்சுதி றங்கொள வென்றடல்
செயதுங்கமு குந்தன்ம கிழ்ந்தருள் ...... மருகோனே
மருவுங்கடல் துந்திமி யுங்குட
முழவங்கள்கு மின்குமி னென்றிட
வளமொன்றிய செந்திலில் வந்தருள் ...... முருகோனே
மதியுங்கதி ரும்புய லுந்தின
மறுகும்படி அண்டம்இ லங்கிட
வளர்கின்றப ரங்கிரி வந்தருள் ...... பெருமாளே.
சருவும்படி வந்தனன் இங்கித
மதன் நின்றிட அம்புலியும் சுடு
தழல் கொண்டிட மங்கையர் கண்களின்.....வசமாகி
சயிலம் கொளு மன்றல் பொருந்திய
பொழிலின் பயில் தென்றலும் ஒன்றிய
தட அம் சுனை துன்றி எழுந்திட.....திறமாவே
இரவும் பகல் அந்தியும் நின்றிடு
குயில் வந்து இசை தெந்தன என்றிட
இரு கண்கள் துயின்றிடல் இன்றியும்.....அயர்வாகி
இவண் நெஞ்சு பதன் பதன் என்றிட
மயல் கொண்டு வருந்திய வஞ்சகன்
இனி உன் தன் மலர்ந்து இலகும் பதம்.....அடைவேனோ
திரு ஒன்றி விளங்கிய அண்டர்கள்
மனையின் தயிர் உண்டவன் எண் திசை
திகழும் புகழ் கொண்டவன் வண் தமிழ்.....பயில்வோர் பின்
திரிகின்றவன் மஞ்சு நிறம் புனை
பவன் மிஞ்சு திறம் கொள வென்று அடல்
செய துங்க முகுந்தன் மகிழ்ந்து அருள்.....மருகோனே
மருவும் கடல் துந்துமியும் குட
முழவங்கள் குமின் குமின் என்றிட
வளம் ஒன்றிய செந்திலில் வந்து அருள்.....முருகோனே
மதியும் கதிரும் புயலும் தினம்
மறுகும்படி அண்டம் இலங்கிட
வளர்கின்ற பரங்கிரி வந்து அருள்.....பெருமாளே. Add (additional) Audio/Video Link
15
திருப்பரங்குன்றம் தடக்கைப் பங்கயம் தனத்தத் தந்தனந் தனத்தத் தந்தனந்
தனத்தத் தந்தனந் ......தனதான
தடக்கைப் பங்கயம் கொடைக்குக் கொண்டல்தண்
டமிழ்க்குத் தஞ்சமென் ...... றுலகோரைத்
தவித்துச் சென்றிரந் துளத்திற் புண்படுந்
தளர்ச்சிப் பம்பரந் ...... தனையூசற்
கடத்தைத் துன்பமண் சடத்தைத் துஞ்சிடுங்
கலத்தைப் பஞ்சஇந் ...... த்ரியவாழ்வைக்
கணத்திற் சென்றிடந் திருத்தித் தண்டையங்
கழற்குத் தொண்டுகொண் ...... டருள்வாயே
படைக்கப் பங்கயன் துடைக்கச் சங்கரன்
புரக்கக் கஞ்சைமன் ...... பணியாகப்
பணித்துத் தம்பயந் தணித்துச் சந்ததம்
பரத்தைக் கொண்டிடுந் ...... தனிவேலா
குடக்குத் தென்பரம் பொருப்பிற் றங்குமங்
குலத்திற் கங்கைதன் ...... சிறியோனே
குறப்பொற் கொம்பைமுன் புனத்திற் செங்கரங்
குவித்துக் கும்பிடும் ...... பெருமாளே.
தடக்கைப் பங்கயம் கொடைக்குக் கொண்டல் தண்
டமிழ்க்குத் தஞ்சமென்று.....உலகோரைத்
தவித்துச் சென்றிரந்து உளத்திற் புண்படும்
தளர்ச்சிப் பம்பரந்தனை.....ஊசற்
கடத்தை துன்பமண் சடத்தை துஞ்சிடுங்
கலத்தை பஞ்சஇந்த்ரிய.....வாழ்வை
கணத்திற் சென்று இடம் திருத்தி தண்டையங்
கழற்கு தொண்டுகொண்.....டருள்வாயே
படைக்கப் பங்கயன் துடைக்கச் சங்கரன்
புரக்கக் கஞ்சைமன்.....பணியாகப்
பணித்து தம்பயந் தணித்து சந்ததம்
பரத்தைக் கொண்டிடும்.....தனிவேலா
குடக்குத் தென்பரம் பொருப்பில் தங்கும்
அங்குலத்திற் கங்கைதன்.....சிறியோனே
குறப்பொற் கொம்பைமுன் புனத்திற் செங்கரங்
குவித்துக் கும்பிடும்.....பெருமாளே. Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=TkeZXVxDmss
Add (additional) Audio/Video Link
16
திருப்பரங்குன்றம் பதித்த செஞ்சந்த தனத்ததந் தந்தத் தத்தன தத்தந்
தனத்ததந் தந்தத் தத்தன தத்தந்
தனத்ததந் தந்தத் தத்தன தத்தந் ...... தனதான
பதித்தசெஞ் சந்தப் பொற்குட நித்தம்
பருந்துயர்ந் தண்டத் திற்றலை முட்டும்
பருப்பதந் தந்தச் செப்பவை ஒக்குந் ...... தனபாரம்
படப்புயங் கம்பற் கக்குக டுப்பண்
செருக்குவண் டம்பப் பிற்கயல் ஒக்கும்
பருத்தகண் கொண்டைக் கொக்குமி ருட்டென் ...... றிளைஞோர்கள்
துதித்துமுன் கும்பிட் டுற்றது ரைத்தன்
புவக்கநெஞ் சஞ்சச் சிற்றிடை சுற்றுந்
துகிற்களைந் தின்பத் துர்க்கம் அளிக்கும் ...... கொடியார்பால்
துவக்குணும் பங்கப் பித்தன வத்தன்
புவிக்குளென் சிந்தைப் புத்திம யக்கந்
துறக்கநின் தண்டைப் பத்மமெ னக்கென் ...... றருள்வாயே
குதித்துவெண் சங்கத் தைச்சுற வெற்றுங்
கடற்கரந் தஞ்சிப் புக்கஅ ரக்கன்
குடற்சரிந் தெஞ்சக் குத்திவி திர்க்குங் ...... கதிர்வேலா
குலக்கரும் பின்சொற் றத்தையி பப்பெண்
தனக்குவஞ் சஞ்சொற் பொச்சையி டைக்குங்
குகுக்குகுங் குங்குக் குக்குகு குக்குங் ...... குகுகூகூ
திதித்திதிந் தித்தித் தித்தியெ னக்கொம்
பதிர்த்துவெண் சண்டக் கட்கம்வி திர்த்துந்
திரட்குவிந் தங்கட் பொட்டெழ வெட்டுங் ...... கொலைவேடர்
தினைப்புனஞ் சென்றிச் சித்தபெ ணைக்கண்
டுருக்கரந் தங்குக் கிட்டிய ணைத்தொண்
திருப்பரங் குன்றிற் புக்குளி ருக்கும் ...... பெருமாளே.
பதித்த செம் சந்தப் பொன் குட(ம்) நித்தம்
பருத்து உயர்ந்து அண்டத்தில் தலை முட்டும்
பருப்பதம் தந்தச் செப்பு அவை ஒக்கும்.....தன பாரம்
படப் புயங்கம் பல் கக்கு கடுப் பண்
செருக்கு வண்டு அம்பு அப்பில் கயல் ஒக்கும்
பருத்த கண் கொண்டைக்கு ஒக்கும் இருட்டு என்று.....இளைஞோர்கள்
துதித்து முன் கும்பிட்டு உற்றது உரைத்து அன்பு
உவக்க நெஞ்சு அஞ்சச் சிற்றிடை சுற்றும்
துகில் களைந்து இன்பத் து(ரு)க்கம் அளிக்கும்.....கொடியார் பால்
துவக்குணும் பங்கப் பித்தன் அவத்தன்
புவிக்குள் என் சிந்தைப் புத்தி மயக்கம்
துறக்க நின் தண்டைப் பத்மம் எனக்கு என்று.....அருள்வாயே
குதித்து வெண் சங்கத்தைச் சுறவு எற்றும்
கடல் கரந்து அஞ்சிப் புக்க அரக்கன்
குடல் சரிந்து எஞ்சக் குத்தி விதிர்க்கும்.....கதிர் வேலா
குலக் கரும்பின் சொல் தத்தை இபப் பெண்
தனக்கு வஞ்சம் சொல் பொச்சை இடை
குங்குகுக் குகுங் குங்குக் குக்குகு குக்குங்.....குகுகூகூ
திதித்திதித் திந்தித் தித்தெயெனக் கொம்பு
அதிர்த்து வெண் சண்டக் கட்கம் விதிர்த்து
திரள் குவித்து அங்கண் பொட்டு எழ வெட்டும்.....கொலை வேடர்
தினைப் புனம் சென்று இச்சித்த பெ(ண்)ணைக் கண்டு
உருக் கரந்து அங்குக் கிட்டி அணைந்து ஒள்
திருப்பரங் குன்றில் புக்கு உள் இருக்கும்.....பெருமாளே.
Add (additional) Audio/Video Link
17
திருப்பரங்குன்றம் பொருப்புறுங் தனத்தனந் தந்தன தனத்தனந் தந்தன
தனத்தனந் தந்தன ...... தந்ததான
பொருப்புறுங் கொங்கையர் பொருட்கவர்ந் தொன்றிய
பிணக்கிடுஞ் சண்டிகள் ...... வஞ்சமாதர்
புயற்குழன் றங்கமழ் அறற்குலந் தங்கவிர்
முருக்குவண் செந்துவர் ...... தந்துபோகம்
அருத்திடுஞ் சிங்கியர் தருக்கிடுஞ் செங்கயல்
அறச்சிவந் தங்கையில் ...... அன்புமேவும்
அவர்க்குழன் றங்கமும் அறத்தளர்ந் தென்பயன்
அருட்பதம் பங்கயம் ...... அன்புறாதோ
மிருத்தணும் பங்கயன் அலர்க்கணன் சங்கரர்
விதித்தெணுங் கும்பிடு ...... கந்தவேளே
மிகுத்திடும் வன்சம ணரைப்பெருந் திண்கழு
மிசைக்கிடுஞ் செந்தமிழ் ...... அங்கவாயா
பெருக்குதண் சண்பக வனத்திடங் கொங்கொடு
திறற்செழுஞ் சந்தகில் ...... துன்றிநீடு
தினைப்புனம் பைங்கொடி தனத்துடன் சென்றணை
திருப்பரங் குன்றுறை ...... தம்பிரானே.
பொருப்பு உறும் கொங்கையர் பொருள் கவர்ந்து ஒன்றிய
பிணக்கிடும் சண்டிகள்.....வஞ்சமாதர்
புயல் குழன்ற அம் கமழ் அறல் குலம் தங்கு அவிர்
முருக்கு வண் செம் துவர்.....தந்து போகம்
அருத்திடும் சிங்கியர் தருக்கிடும் செம் கயல்
அறச் சிவந்த அம் கையில்.....அன்பு மேவும்
அவர்க்கு உழன்று அங்கமும் அறத் தளர்ந்து என் பயன்
அருள் பதம் பங்கயம்.....அன்பு உறாதோ
மிருத்து அணும் பங்கயன் அலரக் க(ண்)ணன் சங்கரர்
விதித்து எணும் கும்பிடு(ம்).....கந்த வேளே
மிகுத்திடும் வன் சமணரைப் பெரும் திண் கழு
மிசைக்கு இடும் செம் தமிழ்.....அங்க வாயா
பெருக்கு தண் சண்பக வனம் திடம் கொங்கோடு
திறல் செழும் சந்து அகில்.....துன்றி நீடும்
தினைப் புனம் பைம் கொடி தனத்துடன் சென்று அணை
திருப்பரம் குன்று உறை.....தம்பிரானே. Add (additional) Audio/Video Link
18
திருப்பரங்குன்றம் மன்றலங் கொந்துமிசை தந்தனந் தந்ததன தந்தனந் தந்ததன
தந்தனந் தந்ததன ...... தனதான
மன்றலங் கொந்துமிசை தெந்தனத் தெந்தனென
வண்டினங் கண்டுதொடர் ...... குழல்மாதர்
மண்டிடுந் தொண்டையமு துண்டுகொண் டன்புமிக
வம்பிடுங் கும்பகன ...... தனமார்பில்
ஒன்றஅம் பொன்றுவிழி கன்றஅங் கங்குழைய
உந்தியென் கின்றமடு ...... விழுவேனை
உன்சிலம் புங்கனக தண்டையுங் கிண்கிணியும்
ஒண்கடம் பும்புனையும் ...... அடிசேராய்
பன்றியங் கொம்புகம டம்புயங் கஞ்சுரர்கள்
பண்டையென் பங்கமணி ...... பவர்சேயே
பஞ்சரங் கொஞ்சுகிளி வந்துவந் தைந்துகர
பண்டிதன் தம்பியெனும் ...... வயலூரா
சென்றுமுன் குன்றவர்கள் தந்தபெண் கொண்டுவளர்
செண்பகம் பைம்பொன்மலர் ...... செறிசோலை
திங்களுஞ் செங்கதிரு மங்குலுந் தங்குமுயர்
தென்பரங் குன்றிலுறை ...... பெருமாளே.
மன்றல் அங் கொந்துமிசை தெந்தனத் தெந்தனென
வண்டினங் கண்டுதொடர்.....குழல்மாதர்
மண்டிடும் தொண்டை அமுது உண்டுகொண்டு அன்புமிக
வம்பிடுங் கும்பகன.....தனமார்பில்
ஒன்ற அம்பு ஒன்றுவிழி கன்ற அங்கங்குழைய
உந்தியென்கின்ற மடு.....விழுவேனை
சிலம்புங் கனக தண்டையுங் கிண்கிணியும்
ஒண்கடம் பும்புனையும் உன்.....அடிசேராய்
பன்றியங் கொம்பு கமடம் புயங்கம் சுரர்கள்
பண்டை என்பு அங்கம்.....அணிபவர்சேயே
பஞ்சரங் கொஞ்சுகிளி வந்துவந்து ஐந்துகர
பண்டிதன் தம்பியெனும்.....வயலூரா
சென்றுமுன் குன்றவர்கள் தந்த பெண் கொண்டு வளர்
செண்பகம் பைம்பொன்மலர்.....செறிசோலை
திங்களும செங்கதிரும் அங்குலும் தங்குமுயர்
தென்பரங் குன்றிலுறை.....பெருமாளே.
Add (additional) Audio/Video Link
19
திருப்பரங்குன்றம் வடத்தை மிஞ்சிய தனத்த தந்தன தனதன தனதன
தனத்த தந்தன தனதன தனதன
தனத்த தந்தன தனதன தனதன ...... தனதான
வடத்தை மிஞ்சிய புளகித வனமுலை
தனைத்தி றந்தெதிர் வருமிளை ஞர்களுயிர்
மயக்கி ஐங்கணை மதனனை ஒருஅரு ...... மையினாலே
வருத்தி வஞ்சக நினைவொடு மெலமெல
நகைத்து நண்பொடு வருமிரும் எனஉரை
வழுத்தி அங்கவ ரொடுசரு வியுமுடல் ...... தொடுபோதே
விடத்தை வென்றிடு படைவிழி கொடுமுள
மருட்டி வண்பொருள் கவர்பொழு தினில்மயல்
விருப்பெ னும்படி மடிமிசை யினில்விழு ...... தொழில்தானே
விளைத்தி டும்பல கணிகையர் தமதுபொய்
மனத்தை நம்பிய சிறியனை வெறியனை
விரைப்ப தந்தனில் அருள்பெற நினைகுவ ...... துளதோதான்
குடத்தை வென்றிரு கிரியென எழில்தள
தளத்த கொங்கைகள் மணிவடம் அணிசிறு
குறக்க ரும்பின்மெய் துவள்புயன் எனவரு ...... வடிவேலா
குரைக்க ருங்கடல் திருவணை எனமுனம்
அடைத்தி லங்கையின் அதிபதி நிசிசரர்
குலத்தொ டும்பட ஒருகணை விடுமரி ...... மருகோனே
திடத்தெ திர்ந்திடும் அசுரர்கள் பொடிபட
அயிற்கொ டும்படை விடுசர வணபவ
திறற்கு கன்குரு பரனென வருமொரு ...... முருகோனே
செழித்த தண்டலை தொறுமில கியகுட
வளைக்கு லந்தரு தரளமு மிகுமுயர்
திருப்ப ரங்கிரி வளநகர் மருவிய ...... பெருமாளே.
வடத்தை மிஞ்சிய புளகித வன முலை
தனைத் திறந்து எதிர் வரும் இளைஞர்கள் உயிர்
மயக்கி ஐங்கணை மதனனை ஒரு.....அருமையினாலே
வருத்தி வஞ்சக நினைவோடு மெ(ல்)ல மெ(ல்)ல
நகைத்து நண்பொடு வரும் இரும் என உரை
வழுத்தி அங்கு அவரோடு சருவியும் உடல்.....தொடு போதே
விடத்தை வென்றிடு படை விழி கொ(ண்)டும் உ(ள்)ள(ம்)
மருட்டி வண் பொருள் கவர் பொழுதினில் மயல்
விருப்பு எனும்படி மடி மிசையினில் விழு.....தொழில் தானே
விளைத்திடும் பல கணிகையர் தமது பொய்
மனத்தை நம்பிய சிறியனை வெறியனை
விரைப் பதம் தனில் அருள் பெற நினைகுவது.....உளதோ தான்
குடத்தை வென்றிடு கிரி என எழில் தள
தளத்த கொங்கைகள் மணி வடம் அணி சிறு
குறக் கரும்பின் மெய் துவள் புயன் என வரு(ம்).....வடிவேலா
குரைக் கரும் கடல் திரு அணை என மு(ன்)னம்
அடைத்து இலங்கையின் அதிபதி நிசிசரர்
குலத்தொடும் பட ஒரு கணை விடும் அரி.....மருகோனே
திடத்து எதிர்ந்திடும் அசுரர்கள் பொடிபட
அயில் கொடும் படை விடு சரவணபவ
திறற் குகன் குருபரனென வருமொரு.....முருகோனே
செழித்த தண்டலை தொறும் இலகிய குட
வளைக் குலம் தரு தரளமும் மிகும் உயர்
திருப்பரங்கிரி வள நகர் மருவிய.....பெருமாளே. Add (additional) Audio/Video Link
20
திருப்பரங்குன்றம் வரைத்தடங் கொங்கை தனத்தனந் தந்த தான
தனத்தனந் தந்த தான
தனத்தனந் தந்த தான ...... தனதான
வரைத்தடங் கொங்கை யாலும்
வளைப்படுஞ் செங்கை யாலும்
மதர்த்திடுங் கெண்டை யாலும் ...... அனைவோரும்
வடுப்படுந் தொண்டை யாலும்
விரைத்திடுங் கொண்டை யாலும்
மருட்டிடுஞ் சிந்தை மாதர் ...... வசமாகி
எரிப்படும் பஞ்சு போல
மிகக்கெடுந் தொண்ட னேனும்
இனற்படுந் தொந்த வாரி ...... கரையேற
இசைத்திடுஞ் சந்த பேதம்
ஒலித்திடுந் தண்டை சூழும்
இணைப்பதம் புண்ட ரீகம் ...... அருள்வாயே
சுரர்க்குவஞ் சஞ்செய் சூரன்
இளக்ரவுஞ் சந்த னோடு
துளக்கெழுந் தண்ட கோளம் ...... அளவாகத்
துரத்தியன் றிந்த்ர லோகம்
அழித்தவன் பொன்று மாறு
சுடப்பருஞ் சண்ட வேலை ...... விடுவோனே
செருக்கெழுந் தும்பர் சேனை
துளக்கவென் றண்ட மூடு
தெழித்திடுஞ் சங்க பாணி ...... மருகோனே
தினைப்புனஞ் சென்று லாவு
குறத்தியின் பம்ப ராவு
திருப்பரங் குன்ற மேவு ...... பெருமாளே.
வரைத் தடம் கொங்கையாலும்
வளைப் படும் செம் கையாலும்
மதர்த்திடும் கெண்டையாலும்.....அனைவோரும்
வடுப் படும் தொண்டையாலும்
விரைத்திடும் கொண்டையாலும்
மருட்டிடும் சிந்தை மாதர்.....வசமாகி
எரிப் படும் பஞ்சு போல
மிகக் கெடும் தொண்டனேனும்
இ(ன்)னல் படும் தொந்த வாரி.....கரை ஏற
இசைத்திடும் சந்த பேதம்
ஒலித்திடும் தண்டை சூழும்
இணைப் பதம் புண்டரீகம்.....அருள்வாயே
சுரர்க்கு வஞ்சம் செய் சூரன்
இள க்ரவுஞ்சன் த(ன்)னோடு
துளக்க எழுந்து அண்ட கோளம்.....அளவாகத்
துரத்தி அன்று இந்த்ர லோகம்
அழித்தவன் பொன்று மாறு
சுடப்ப அரும் சண்ட வேலை.....விடுவோனே
செருக்கு எழுந்து உம்பர் சேனை
துளக்க வென்று அண்டம் ஊடு
தெழித்திடும் சங்க பாணி.....மருகோனே
தினைப் புனம் சென்று உலாவு
குறத்தி இன்பம் பராவு(ம்)
திருப்பரங் குன்றம் மேவு(ம்).....பெருமாளே. Add (additional) Audio/Video Link