| சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
Selected Thiruppugazh
Thiruppugazh Thalangal
All Thiruppugazh Songs
Thiruppugazh by Santham
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Spanish
Hebrew
Korean
Thiruppugazh from Thalam: திருச்செங்கோடு
585 அன்பாக வந்து 586 பந்து ஆடி அம் கை 587 வண்டார் மதங்கள் 588 கரை அற உருகுதல் 589 இடம் பார்த்து 590 கலக்கும் கோது 591 துஞ்சு கோட்டி 592 நீலமஞ்சான குழல் 593 பொன்றலைப் பொய் 594 மந்தக் கடைக்கண் 595 மெய்ச் சார்வு அற்றே 596 வருத்தம் காண 597 ஆலகால படப்பை 598 காலனிடத்து 599 தாமா தாம ஆலாபா 600 அத் துகிரின் நல் 601 அத்த வேட்கை 602 பத்தர் கணப்ரிய 603 புற்புதம் 604 பொன் சித்ர 605 கொடிய மறலி
585
திருச்செங்கோடு அன்பாக வந்து தந்தான தந்த தந்தான தந்த
தந்தான தந்த ...... தனதான
அன்பாக வந்து உன்றாள் பணிந்து
ஐம்பூத மொன்ற ...... நினையாமல்
அன்பால் மிகுந்து நஞ்சாரு கண்க
ளம்போரு கங்கள் ...... முலைதானும்
கொந்தே மிகுந்து வண்டாடி நின்று
கொண்டாடு கின்ற ...... குழலாரைக்
கொண்டே நினைந்து மன்பேது மண்டி
குன்றா மலைந்து ...... அலைவேனோ
மன்றாடி தந்த மைந்தா மிகுந்த
வம்பார் கடம்பை ...... யணிவோனே
வந்தே பணிந்து நின்றார் பவங்கள்
வம்பே தொலைந்த ...... வடிவேலா
சென்றே யிடங்கள் கந்தா எனும்பொ
செஞ்சேவல் கொண்டு ...... வரவேணும்
செஞ்சாலி கஞ்ச மொன்றாய் வளர்ந்த
செங்கோ டமர்ந்த ...... பெருமாளே.
அன்பாக வந்து உன்தாள் பணிந்து
ஐம்பூதம் ஒன்ற நினையாமல்
அன்பால் மிகுந்து நஞ்சாரு கண்கள்
அம்போருகங்கள் முலைதானும்
கொந்தே மிகுந்து வண்டாடி நின்று
கொண்டாடுகின்ற குழலாரைக்
கொண்டே நினைந்து மன்பேது மண்டி
குன்றா மலைந்து அலைவேனோ
மன்றாடி தந்த மைந்தா மிகுந்த
வம்பார் கடம்பை அணிவோனே
வந்தே பணிந்து நின்றார் பவங்கள்
வம்பே தொலைந்த வடிவேலா
சென்றே யிடங்கள் கந்தா எனும்பொ
செஞ்சேவல் கொண்டு வரவேணும்
செஞ்சாலி கஞ்சம் ஒன்றாய் வளர்ந்த
செங்கோடு அமர்ந்த பெருமாளே. Audio/Video Link(s)
http://kaumaram.com/thiru/nnt0585_u.html#audio
https://www.youtube.com/watch?v=Tg2ZRCV6QnI
https://www.youtube.com/watch?v=y6XDKGMEhlo
Add (additional) Audio/Video Link
586
திருச்செங்கோடு பந்து ஆடி அம் கை தந்தான தந்த தந்தான தந்த
தந்தான தந்த ...... தனதான
பந்தாடி யங்கை நொந்தார் பரிந்து
பைந்தார் புனைந்த ...... குழல்மீதே
பண்பார் சுரும்பு பண்பாடு கின்ற
பங்கே ருகங்கொள் ...... முகமீதே
மந்தார மன்றல் சந்தார மொன்றி
வன்பாத கஞ்செய் ...... தனமீதே
மண்டாசை கொண்டு விண்டாவி நைந்து
மங்காம லுன்ற ...... னருள்தாராய்
கந்தா அரன்றன் மைந்தா விளங்கு
கன்றா முகுந்தன் ...... மருகோனே
கன்றா விலங்க லொன்றாறு கண்ட
கண்டா வரம்பை ...... மணவாளா
செந்தா தடர்ந்த கொந்தார் கடம்பு
திண்டோள் நிரம்ப ...... அணிவோனே
திண்கோ டரங்க ளெண்கோ டுறங்கு
செங்கோட மர்ந்த ...... பெருமாளே.
பந்து ஆடி அம் கை நொந்தார் பரிந்து
பைம் தார் புனைந்த குழல் மீதே
பண்பு ஆர் சுரும்பு பண் பாடுகின்ற
பங்கேருகம் கொள் முகம் மீதே
மந்தார மன்றல் சந்து ஆரம் ஒன்றி
வன் பாதகம் செய் தனம் மீதே
மண்டு ஆசை கொண்டு விண்டு ஆவி நைந்து
மங்காமல் உன் தன் அருள் தாராய்
கந்தா அரன் தன் மைந்தா விளங்கு
கன்று ஆ முகுந்தன் மருகோனே
கன்றா விலங்கல் ஒன்று ஆறு கண்ட
கண்டா அரம்பை மணவாளா
செம் தாது அடர்ந்த கொந்து ஆர் கடம்பு
திண் தோள் நிரம்ப அணிவோனே
திண் கோடரங்கள் எண்கோடு உறங்கு
செங்கோடு அமர்ந்த பெருமாளே. Add (additional) Audio/Video Link
587
திருச்செங்கோடு வண்டார் மதங்கள் தந்தான தந்த தந்தான தந்த
தந்தான தந்த ...... தனதான
வண்டார்ம தங்க ளுண்டேம யங்கி
வந்தூரு கொண்ட ...... லதனோடும்
வண்காம னம்பு தன்கால்ம டங்க
வன்போர்ம லைந்த ...... விழிவேலும்
கொண்டேவ ளைந்து கண்டார்தி யங்க
நின்றார்கு ரும்பை ...... முலைமேவிக்
கொந்தார ரும்பு நின்தாள்ம றந்து
குன்றாம லுன்ற ...... னருள்தாராய்
பண்டாழி சங்கு கொண்டாழி தங்கு
பண்போனு கந்த ...... மருகோனே
பண்சார நைந்து நண்போது மன்பர்
பங்காகி நின்ற ...... குமரேசா
செண்டாடி யண்டர் கொண்டாட மன்றில்
நின்றாடி சிந்தை ...... மகிழ்வாழ்வே
செஞ்சாலி மிஞ்சி மஞ்சாடு கின்ற
செங்கோட மர்ந்த ...... பெருமாளே.
வண்டார் மதங்கள் உண்டே மயங்கி வந்து ஊரு(ம்)
கொண்டல் அதனோடும்
வண் காமன் அம்பு தன் கால் மடங்க வன் போர் மலைத்த
விழி வேலும்
கொண்டே வளைந்து கண்டார் தியங்க நின்றார் குரும்பை
முலை மேவி
கொந்து ஆர் அரும்பு(ம்) நின் தாள் மறந்து குன்றாமல் உன்
தன் அருள் தாராய்
பண்டு ஆழி சங்கு கொண்டு ஆழி தங்கு பண்போன் உகந்த
மருகோனே
பண் சார நைந்து நண்பு ஓதும் அன்பர் பங்காகி நின்ற
குமரேசா
செண்டு ஆடி அண்டர் கொண்டாட மன்றில் நின்று ஆடி
சிந்தை மகிழ் வாழ்வே
செம் சாலி மிஞ்சி மஞ்சு ஆடுகின்ற செங்கோடு அமர்ந்த
பெருமாளே. Add (additional) Audio/Video Link
588
திருச்செங்கோடு கரை அற உருகுதல் தனதன தனதன தனதன தனதன
தந்தான தந்த ...... தனதான
கரையற வுருகுதல் தருகயல் விழியினர்
கண்டான செஞ்சொல் ...... மடமாதர்
கலவியில் முழுகிய நெறியினி லறிவுக
லங்காம யங்கும் ...... வினையேனும்
உரையையு மறிவையும் உயிரையு முணர்வையும்
உன்பாத கஞ்ச ...... மலர்மீதே
உரவொடு புனைதர நினைதரு மடியரொ
டொன்றாக என்று ...... பெறுவேனோ
வரையிரு துணிபட வளைபடு சுரர்குடி
வந்தேற இந்த்ர ...... புரிவாழ
மதவித கஜரத துரகத பததியின்
வன்சேனை மங்க ...... முதுமீன
திரைமலி சலநிதி முறையிட நிசிசரர்
திண்டாட வென்ற ...... கதிர்வேலா
ஜெகதல மிடிகெட விளைவன வயலணி
செங்கோட மர்ந்த ...... பெருமாளே.
கரை அற உருகுதல் தரு கயல் விழியினர்
கண்டு ஆன செம் சொல் மடமாதர்
கலவியில் முழுகிய நெறியினில் அறிவு கலங்கா மயங்கும்
வினையேனும்
உரையையும் அறிவையும் உயிரையும் உணர்வையும் உன் பாத
கஞ்ச மலர் மீதே
உரவொடு புனை தர நினைதரும் அடியரொடு ஒன்றாக
என்று பெறுவேனோ
வரை இரு துணி பட வளை படு சுரர் குடி வந்து ஏற இந்த்ர
புரி வாழ
மத வித கஜ ரத துரக பத(தா)யின் வன் சேனை மங்க
முது மீன திரை மலி சல நிதி முறை இட நிசிசரர் திண்டாட
வென்ற கதிர்வேலா
ஜெகதல மிடி கெட விளைவன வயல் அணி செங்கோடு
அமர்ந்த பெருமாளே. Add (additional) Audio/Video Link
589
திருச்செங்கோடு இடம் பார்த்து தனந்தாத் தனந்தாத் தனந்தாத் தனந்தாத்
தனந்தாத் தனத்தம் ...... தனதான
இடம்பார்த் திடம்பார்த் திதங்கேட் டிரந்தேற்
றிணங்காப் பசிப்பொங் ...... கனல்மூழ்கி
இறுங்காற் கிறுங்கார்க் கிரும்பார்க் குநெஞ்சார்க்
கிரங்கார்க் கியற்றண் ...... டமிழ்நூலின்
உடம்பாட் டுடன்பாட் டியம்பாத் தயங்காத்
துளங்காத் திடப்புன் ...... கவிபாடி
ஒதுங்காப் பொதுங்காப் பதுங்காப் புகன்றேத்
துறும்பாற் குணக்கன் ...... புறலாமோ
கடந்தோற் கடந்தோற் றறிந்தாட் கருந்தாட்
கணைந்தாட் கணித்திண் ...... புயமீவாய்
கரும்போற் கரும்போர்க் குளங்காட் டிகண்டேத்
துசெங்கோட் டில்நிற்குங் ...... கதிர்வேலா
அடைந்தோர்க் குணந்தோர்க் களிந்தோர்க் கமைந்தோர்க்
கவிழ்ந்தோர்க் குணற்கொன் ...... றிலதாகி
அலைந்தோர்க் குலைந்தோர்க் கினைந்தோர்க் கலந்தோர்க்
கறிந்தோர்க் களிக்கும் ...... பெருமாளே.
இடம் பார்த்து இடம் பார்த்து இதம் கேட்டு இரந்து ஏற்று
இணங்காப் பசிப் பொங்கி அனல் மூழ்கி
இறும் காற்கு இறுங்கார்க்கு இரும்பு ஆர்க்கு நெஞ்சார்க்கு
இரங்கார்க்கு
இயல் தண் தமிழ் நூலின் உடம் பாட்டுடன் பாட்டு இயம்பா
தயங்காத் துளங்காத் திடப் புன் கவி பாடி
ஒதுங்காப் பொதுங்காப் பதுங்காப் புகன்று ஏத்து உறும் பால்
குணக்கு அன்புறலாமோ
கடம் தோல் கடம் தோற்ற அறிந்தாட்கு அரும் தாட்கள்
அணைந்தாட்கு அணித் திண் புயம் ஈவாய்
கரும்போர்க்கு அரும்போரக் குளம் காட்டி கண்டு ஏத்து
செங்கோட்டில் நிற்கும் கதிர் வேலா
அடைந்தோர்க்கு உணந்தோர்க்கு அளிந்தோர்க்கு
அமைந்தோர்க்கு அவிழ்ந்தோர்க்கு
உணற்கு ஒன்று இலதாகி அலைந்தோர்க்கு குலைந்தோர்க்கு
இனைந்தோர்க்கு அலந்தோர்க்கு
அறிந்தோர்க்கு அளிக்கும் பெருமாளே. Add (additional) Audio/Video Link
590
திருச்செங்கோடு கலக்கும் கோது தனத்தந் தானன தனத்தந் தானன
தனத்தந் தானன ...... தனதான
கலக்குங் கோதற வடிக்குஞ் சீரிய
கருப்பஞ் சாறெனு ...... மொழியாலே
கருத்தும் பார்வையு முருக்கும் பாவிகள்
கடைக்கண் பார்வையி ...... லழியாதே
விலக்கும் போதக மெனக்கென் றேபெற
விருப்பஞ் சாலவு ...... முடையேனான்
வினைக்கொண் டேமன நினைக்குந் தீமையை
விடற்கஞ் சேலென ...... அருள்வாயே
அலைக்குந் தானவர் குலத்தின் சேனையை
அறுக்குங் கூரிய ...... வடிவேலா
அழைத்துன் சீரிய கழற்செந் தாமரை
யடுக்கும் போதக ...... முடையோராம்
சிலர்க்கன் றேகதி பலிக்குந் தேசிக
திருச்செங் கோபுர ...... வயலூரா
திதிக்கும் பார்வயின் மதிப்புண் டாகிய
திருச்செங் கோடுறை ...... பெருமாளே.
கலக்கும் கோது அற வடிக்கும் சீரிய கருப்பஞ்சாறு எனு
மொழியாலே
கருத்தும் பார்வையும் உருக்கும் பாவிகள் கடைக் கண்
பார்வையில் அழியாதே
விலக்கும் போதகம் எனக்கு என்றே பெற விருப்பம் சாலவும்
உடையேன்
நான் வினைக் கொண்டே மன(ம்) நினைக்கும் தீமையை
விடற்கு அஞ்சேல் என அருள்வாயே
அலைக்கும் தானவர் குலத்தின் சேனையை அறுக்கும் கூரிய
வடி வேலா
அழைத்து உன் சீரிய கழல் செம் தாமரை அடுக்கும் போதகம்
உடையோராம்
சிலர்க்கு அன்றே கதி பலிக்கும் தேசிக
திருச் செம் கோபுர வயலூரா
திதிக்கும் பார் வயின் மதிப்பு உண்டாகிய திருச் செங்கோடு
உறை பெருமாளே. Add (additional) Audio/Video Link
591
திருச்செங்கோடு துஞ்சு கோட்டி தந்த தாத்தத் தனத்தந் தாத்தத்
தந்த தாத்தத் தனத்தந் தாத்தத்
தந்த தாத்தத் தனத்தந் தாத்தத் ...... தனதான
துஞ்சு கோட்டிச் சுழற்கண் காட்டிக்
கொங்கை நோக்கப் பலர்க்குங் காட்டிக்
கொண்ட ணாப்பித் துலக்கஞ் சீர்த்துத் ...... திரிமானார்
தொண்டை வாய்ப்பொற் கருப்பஞ் சாற்றைத்
தந்து சேர்த்துக் கலக்குந் தூர்த்தத்
துன்ப வாழ்க்கைத் தொழிற்பண் டாட்டத் ...... துழலாதே
கஞ்சம் வாய்த்திட் டவர்க்குங் கூட்டிக்
கன்று மேய்த்திட் டவர்க்குங் கூற்றைக்
கன்ற மாய்த்திட் டவர்க்குந் தோற்றக் ...... கிடையாநீ
கண்டு வேட்டுப் பொருட்கொண் டாட்டத்
தின்ப வாக்யத் தெனக்குங் கேட்கத்
தந்து காத்துத் திருக்கண் சாத்தப் ...... பெறுவேனோ
வஞ்ச மாய்ப்புக் கொளிக்குஞ் சூற்கைத்
துன்று சூர்ப்பொட் டெழச்சென் றோட்டிப்
பண்டு வாட்குட் களிக்குந் தோட்கொத் ...... துடையோனே
வண்டு பாட்டுற் றிசைக்குந் தோட்டத்
தண்கு ராப்பொற் புரக்கும் பேற்றித்
தொண்டர் கூட்டத் திருக்குந் தோற்றத் ...... திளையோனே
கொஞ்சு வார்த்தைக் கிளித்தண் சேற்கட்
குன்ற வேட்டிச் சியைக்கண் காட்டிக்
கொண்டு வேட்டுப் புனப்பைங் காட்டிற் ...... புணர்வோனே
கொங்கு லாத்தித் தழைக்குங் காப்பொற்
கொண்ட லார்த்துச் சிறக்குங் காட்சிக்
கொங்கு நாட்டுத் திருச்செங் கோட்டுப் ...... பெருமாளே.
துஞ்சு கோட்டிச் சுழல் கண் காட்டிக் கொங்கை நோக்கப்
பலர்க்கும் காட்டிக் கொண்டு அணாப்பித் துலக்கம் சீர்த்துத்
திரிமானார்
தொண்டை வாய்ப் பொன் கருப்பன் சாற்றைத் தந்து சேர்த்துக்
கலக்கும் தூர்த்தத் துன்ப வாழ்க்கைத் தொழில் பண்டு
ஆட்டத்து உழலாதே
கஞ்சம் வாய்த்திட்ட அவர்க்கும் கூட்டிக் கன்று மேய்த்திட்ட
அவர்க்கும் கூற்றைக் கன்ற மாய்த்திட்ட அவர்க்கும் தோற்றக்
கிடையா நீ
கண்டு வேட்டுப் பொருள் கொண்டாட்டத்து இன்ப வாக்யத்து
எனக்கும் கேட்கத் தந்து காத்துத் திருக் கண் சாத்தப்
பெறுவேனோ
வஞ்சமாய்ப் புக்கு ஒளிக்கும் சூல் கைத் துன்று சூர்ப் பொட்டு
எழச் சென்று ஓட்டிப் பண்டு வாட்குள் களிக்கும் தோள்
கொத்து உடையோனே
வண்டு பாட்டு உற்று இசைக்கும் தோட்டத் தண் குராப்
பொன்பு உரக் கும்பு ஏற்றித் தொண்டர் கூட்டத்து இருக்கும்
தோற்றத்து இளையோனே
கொஞ்சு வார்த்தைக் கிளித் தண் சேல் கண் குன்ற
வேட்டிச்சியைக் கண் காட்டிக் கொண்டு வேட்டுப் புனம் பைம்
காட்டில் புணர்வோனே
கொங்கு உலாத்தித் தழைக்கும் காப் பொன் கொண்டல்
ஆர்த்துச் சிறக்கும் காட்சிக் கொங்கு நாட்டுத்
திருச்செங்கோட்டுப் பெருமாளே. Add (additional) Audio/Video Link
592
திருச்செங்கோடு நீலமஞ்சான குழல் தானனந் தானதன தானனந் தானதன
தானனந் தானதன தானனந் தானதன
தானனந் தானதன தானனந் தானதன
தானனந் தானதன தானனந் தானதன
தானனந் தானதன தானனந் தானதன
தானனந் தானதன தானனந் தானதன ...... தந்ததான
நீலமஞ் சானகுழல் மாலைவண் டோடுகதி
நீடுபந் தாடுவிழி யார்பளிங் கானநகை
நீலபொன் சாபநுத லாசையின் தோடசையு
நீள்முகந் தாமரையி னார்மொழிந் தாரமொழி
நேர்சுகம் போலகமு கானகந் தாரர்புய
நேர்சுணங் காவிகிளை யேர்சிறந் தார்மலையி ...... ரண்டுபோல
நீளிபங் கோடிளநிர் தேனிருந் தாரமுலை
நீடலங் காரசர மோடடைந் தார்மருவி
நீள்மணஞ் சாறுபொழி யாவளம் போதிவையி
னீலவண் டேவியநல் காமனங் காரநிறை
நேசசந் தானஅல்குல் காமபண் டாரமுதை
நேருசம் போகரிடை நூலொளிர்ந் தாசையுயிர் ...... சம்பையாரஞ்
சாலுபொன் தோகையமை பாளிதஞ் சூழ்சரண
தாள்சிலம் போலமிட வேநடந் தானநடை
சாதிசந் தானெகின மார்பரந் தோகையென
தானெழுங் கோலவிலை மாதரின் பார்கலவி
தாவுகொண் டேகலிய நோய்கள்கொண் டேபிறவி
தானடைந் தாழுமடி யேனிடஞ் சாலும்வினை ...... யஞ்சியோடத்
தார்கடம் பாடுகழல் பாதசெந் தாமரைகள்
தாழ்பெரும் பாதைவழி யேபடிந் தேவருகு
தாபம்விண் டேயமுத வாரியுண் டேபசிகள்
தாபமுந் தீரதுகிர் போனிறங் காழ்கொளுரு
சாரவுஞ் சோதிமுரு காவெனுங் காதல்கொடு
தானிருந் தோதஇரு வோரகம் பேறுறுக ...... விஞ்சைதாராய்
சூலியெந் தாய்கவுரி மோகசங் காரிகுழை
தோடுகொண் டாடுசிவ காமசுந் தாரிநல
தூளணைந் தாளிநிரு வாணியங் காளிகலை
தோகைசெந் தாமரையின் மாதுநின் றேதுதிசெய்
தூயஅம் பாகழைகொள் தோளிபங் காளக்ருபை
தோய்பரன் சேயெனவு மேபெரும் பார்புகழும் ...... விந்தையோனே
சூரசங் காரசுரர் லோகபங் காவறுவர்
தோகைமைந் தாகுமர வேள்கடம் பாரதொடை
தோளகண் டாபரம தேசிகந் தாவமரர்
தோகைபங் காஎனவே தாகமஞ் சூழ்சுருதி
தோதகம் பாடமலை யேழுதுண் டாயெழுவர்
சோரிகொண் டாறுவர வேலெறிந் தேநடன ...... முங்கொள்வேலா
மாலியன் பாறவொரு ஆடகன் சாகமிகு
வாலியும் பாழிமர மோடுகும் பாகனனு
மாழியுங் கோரவலி ராவணன் பாறவிடு
மாசுகன் கோலமுகி லோனுகந் தோதிடையர்
மாதுடன் கூடிவிளை யாடுசம் போகதிரு
மார்பகன் காணமுடி யோனணங் கானமதி ...... யொன்றுமானை
மார்புடன் கோடுதன பாரமுஞ் சேரஇடை
வார்துவண் டாடமுக மோடுகந் தீரரச
வாயிதங் கோதிமணி நூபுரம் பாடமண
வாசைகொண் டாடுமயி லாளிதுங் காகுறவி
மாதுபங் காமறைகு லாவுசெங் கோடைநகர்
வாழவந் தாய்கரிய மாலயன் தேவர்புகழ் ...... தம்பிரானே.
நீல மஞ்சான குழல் மாலை வண்டோடு கதி நீடு பந்தாடு
விழியார் பளிங்கான நகை நீல பொன் சாப நுதல் ஆசையின்
தோடு அசையு(ம்) நீள் முகம் தாமரையினார்
மொழிந்து ஆர மொழி நேர் சுகம் போல கமுகான கந்தாரர்
புய(ம்) நேர் சுணங்கு ஆவி கிளை ஏர் சிறந்தார் மலை
இரண்டு போல நீள் இபம் கோடு இள நீர் தேன் இருந்த
ஆர முலை நீடு அலங்கார சரமோடு அடைந்தார்
மருவி நீள் மணம் சாறு பொழி அவ் வ(ள்)ளம் போது
இவையில் நீல வண்டு ஏவிய நல் காமன் அங்கார(ம்) நிறை
நேச சந்தான அல்குல் காம பண்டார அமுதை நேரு
சம்போகர்
இடை நூல் ஒளிர்ந்து ஆசை உயிர் சம்பையார் அம்சாலு பொன்
தோகை அமை பாளிதம் சூழ் சரண தாள் சிலம்பு ஓலம்
இடவே நடந்து
ஆன நடை சாதி சந்தான எகின(ம்) மார்பர் அம் தோகை என
தான் எழும் கோல விலை மாதர் இன்பு ஆர் கலவி தாவு
கொண்டே
கலிய நோய்கள் கொண்டே பிறவி தான் அடைந்து ஆழும்
அடியேன் இடம் சாலும் வினை அஞ்சி ஓட
தார் கடம்பு ஆடு கழல் பாத செந்தாமரைகள் தாழ் பெரும்
பாதை வழியே படிந்தே வருகு தாபம் விண்டே அமுத வாரி
உண்டே பசிகள் தாபமும் தீர
துகிர் போல் நிறம் காழ் கொள் உரு சாரவும் சோதி முருகா
எனும் காதல் கொடு தான் இருந்து ஓத இரு ஓர் அகம் பேறு
உறுக விஞ்சை தாராய்
சூலி எம் தாய் கவுரி மோக சங்காரி குழை தோடு கொண்டு
ஆடு சிவகாம சுந்தாரி ந(ல்)ல தூள் அணைந்து ஆளி
நிருவாணி அம் காளி
கலை தோகை செந்தாமரையின் மாது நின்றே துதி செய் தூய
அம்பா கழை கொள் தோளி பங்காள க்ருபை தோய் பரன்
சேய் எனவுமே பெரும் பார் புகழும் விந்தையோனே
சூர சங்கார சுரர் லோக பங்கா அறுவர் தோகை மைந்தா
குமர வேள் கடம்பு ஆர தொடை தோள கண்டா பரம தேசிக
அந்தா அமரர் தோகை பங்கா எனவே
வேத ஆகமம் சூழ் சுருதி தோதகம் பாட மலை ஏழு துண்டாய்
எழுவர் சோரி கொண்டு ஆறு வர வேல் எறிந்தே நடனமும்
கொள் வேலா
மாலியன் பாற ஒரு ஆடகன் சாக மிகு வாலியும் பாழி
மரமோடு கும்பாகனனும் ஆழியும் கோர வலி இராவணன்
பாற விடும் ஆசுகன் கோல முகிலோன்
உகந்து ஓதி இடையர் மாதுடன் கூடி விளையாடு(ம்)
சம்போக திரு மார்பகன் காண முடியோன் அணங்கான மதி
ஒன்றும் ஆனை
மார்புடன் கோடு தன பாரமும் சேர இடை வார் துவண்டு
ஆட முகமோடு உகந்து ஈர ரச வாய் இதம் கோதி மணி
நூபுரம் பாட மண ஆசை கொண்டாடும் மயிலாளி துங்கா
குறவி மாது பங்கா
மறை குலாவு செம் கோடை நகர் வாழ வந்தாய் கரிய மால்
அயன் தேவர் புகழ் தம்பிரானே. Add (additional) Audio/Video Link
593
திருச்செங்கோடு பொன்றலைப் பொய் தந்த தத்தத் தந்த தத்தத்
தந்த தத்தத் தந்த தத்தத்
தந்த தத்தத் தந்த தத்தத் ...... தனதான
பொன்ற லைப்பொய்க் கும்பி றப்பைத்
தும்ப றுத்திட் டின்று நிற்கப்
புந்தி யிற்சற் றுங்கு றிக்கைக் ...... கறியாமே
பொங்கி முக்கிச் சங்கை பற்றிச்
சிங்கி யொத்தச் சங்க டத்துப்
புண்ப டைத்துக் கஞ்ச மைக்கட் ...... கொடியார்மேல்
துன்று மிச்சைப் பண்ட னுக்குப்
பண்ப ளித்துச் சம்ப்ர மித்துத்
தும்பி பட்சிக் கும்ப்ர சச்செய்ப் ...... பதிமீதே
தொண்டு பட்டுத் தெண்ட னிட்டுக்
கண்டு பற்றத் தண்டை வர்க்கத்
துங்க ரத்தப் பங்க யத்தைத் ...... தருவாயே
குன்றெ டுத்துப் பந்த டித்துக்
கண்சி வத்துச் சங்க ரித்துக்
கொண்ட லொத்திட் டிந்த்ர னுக்கிச் ...... சுரலோகா
கொம்பு குத்திச் சம்ப ழுத்தித்
திண்ட லத்திற் றண்டு வெற்பைக்
கொண்ட முக்கிச் சண்டை யிட்டுப் ...... பொரும்வேழம்
சென்று ரித்துச் சுந்த ரிக்கச்
சந்த விர்த்துக் கண்சு கித்துச்
சிந்தை யுட்பற் றின்றி நித்தக் ...... களிகூருஞ்
செண்ப கத்துச் சம்பு வுக்குத்
தொம்ப தத்துப் பண்பு ரைத்துச்
செங்கு வட்டிற் றங்கு சொக்கப் ...... பெருமாளே.
பொன்றலைப் பொய்க்கும் பிறப்பைத் தும்பு அறுத்திட்டு
இன்று நிற்கப் புந்தியில் சற்றும் குறிக்கைக்கு அறியாமே
பொங்கி முக்கிச் சங்கை பற்றிச் சிங்கி ஒத்தச் சங்கடத்துப்
புண் படைத்துக் கஞ்ச மைக் கண் கொடியார் மேல்
துன்றும் இச்சைப் பண்டனுக்குப் பண்பு அளித்துச்
சம்ப்ரமித்து
தும்பி பட்சிக்கும் ப்ரசச் செய்ப்பதி மீதே தொண்டு பட்டுத்
தெண்டனிட்டு
கண்டு பற்றத் தண்டை வர்க்கத் துங்க ரத்தப் பங்கயத்தைத்
தருவாயே
குன்று எடுத்துப் பந்தடித்துக் கண் சிவத்துச் சங்கரித்துக்
கொண்டல் ஒத்திட்டு இந்திரனுக்கு இச் சுர லோகா
கொம்பு குத்திச் சம்பு அழுத்தித் திண் தலத்தில் தண்டு
வெற்பைக் கொண்டு அமுக்கிச் சண்டை இட்டுப் பொரும்
வேழம்
சென்று உரித்துச் சுந்தரிக்கு அச்சம் தவிர்த்துக் கண் சுகித்துச்
சிந்தையுள் பற்று இன்றி நித்த(ம்) களி கூரும்
செண்பகத்துச் சம்புவுக்குத் தொம் பதத்துப் பண்பு உரைத்து
செங்குவட்டில் தங்கு சொக்கப் பெருமாளே. Add (additional) Audio/Video Link
594
திருச்செங்கோடு மந்தக் கடைக்கண் தந்தத் தனத்தந் தாத்தன தந்தத் தனத்தந் தாத்தன
தந்தத் தனத்தந் தாத்தன ...... தனதான
மந்தக் கடைக்கண் காட்டுவர் கந்தக் குழற்பின் காட்டுவர்
மஞ்சட் பிணிப்பொன் காட்டுவ ...... ரநுராக
வஞ்சத் திரக்கங் காட்டுவர் நெஞ்சிற் பொருத்தங் காட்டுவர்
வண்பற் றிருப்புங் காட்டுவர் ...... தனபாரச்
சந்தப் பொருப்புங் காட்டுவர் உந்திச் சுழிப்புங் காட்டுவர்
சங்கக் கழுத்துங் காட்டுவர் ...... விரகாலே
சண்டைப் பிணக்குங் காட்டுவர் பண்டிட் டொடுக்கங் காட்டுவர்
தங்கட் கிரக்கங் காட்டுவ ...... தொழிவேனோ
பந்தித் தெருக்கந் தோட்டினை யிந்துச் சடைக்கண் சூட்டுமை
பங்கிற் றகப்பன் தாட்டொழு ...... குருநாதா
பைம்பொற் பதக்கம் பூட்டிய அன்பற் கெதிர்க்குங் கூட்டலர்
பங்கப் படச்சென் றோட்டிய ...... வயலூரா
கொந்திற் புனத்தின் பாட்டிய லந்தக் குறப்பெண் டாட்டொடு
கும்பிட் டிடக்கொண் டாட்டமொ ...... டணைவோனே
குன்றிற் கடப்பந் தோட்டலர் மன்றற் ப்ரசித்தங் கோட்டிய
கொங்கிற் றிருச்செங் கோட்டுறை ...... பெருமாளே.
மந்தக் கடைக் கண் காட்டுவர் கந்தக் குழல் பின் காட்டுவர்
மஞ்சள் பிணிப் பொன் காட்டுவர்
அநுராக வஞ்சத்து இரக்கம் காட்டுவர் நெஞ்சில் பொருத்தம்
காட்டுவர் வண் பல் திருப்பும் காட்டுவர் தன பாரச் சந்தப்
பொருப்பும் காட்டுவர் உந்திச் சுழிப்பும் காட்டுவர் சங்கக்
கழுத்தும் காட்டுவர்
விரகாலே சண்டைப் பிணக்கும் காட்டுவர் பண்டு இட்ட(ம்)
ஒடுக்கம் காட்டுவர் தங்கட்கு இரக்கம் காட்டுவது
ஒழிவேனோ
பந்தித்து எருக்கம் தோட்டினை இந்துச் சடைக் கண் சூட்டு
உமை பங்கில் தகப்பன் தாள் தொழு குருநாதா
பைம்பொன் பதக்கம் பூட்டிய அன்பற்கு எதிர்க்கும் கூட்டலர்
பங்கப்படச் சென்று ஓட்டிய வயலூரா
கொந்தில் புனத்தின் பாட்டு இயல் அந்தக் குறப் பெண்டு
ஆட்டொடு கும்பிட்டிடக் கொண்டாட்டமொடு
அணைவோனே
குன்றில் கடப்பம் தோட்டு அலர் மன்றல் ப்ரசித்தம் கோட்டிய
கொங்கில் திருச்செங்கோட்டு உறை பெருமாளே. Add (additional) Audio/Video Link
595
திருச்செங்கோடு மெய்ச் சார்வு அற்றே தத்தா தத்தா தத்தா தத்தா
தத்தா தத்தத் ...... தனதான
மெய்ச்சார் வற்றே பொய்ச்சார் வுற்றே
நிச்சார் துற்பப் ...... பவவேலை
விட்டே றிப்போ கொட்டா மற்றே
மட்டே யத்தத் ...... தையர்மேலே
பிச்சா யுச்சா கிப்போ ரெய்த்தார்
பத்தார் விற்பொற் ...... கழல்பேணிப்
பிற்பால் பட்டே நற்பால் பெற்றார்
முற்பா லைக்கற் ...... பகமேதான்
செச்சா லிச்சா லத்தே றிச்சே
லுற்றா ணித்துப் ...... பொழிலேறுஞ்
செக்கோ டைக்கோ டுக்கே நிற்பாய்
நித்தா செக்கர்க் ...... கதிரேனல்
முச்சா லிச்சா லித்தாள் வெற்பாள்
முத்தார் வெட்சிப் ...... புயவேளே
முத்தா முத்தீ யத்தா சுத்தா
முத்தா முத்திப் ...... பெருமாளே.
மெய்ச் சார்வு அற்றே பொய்ச் சார்வு உற்றே
நிச்சார் துற்பப் பவ வேலை விட்டேறிப் போக ஒட்டாமல்
தே(ன்) மட்டே அத் தத்தையர் மேலே பிச்சாய் உச்சாகிப்
போர் எய்த்தார்
பத்தார் விற்பொற் கழல்பேணிப் பிற்பால் பட்டே நற்பால்
பெற்றார்முன்
பாலைக் கற்பகமே தான்
செச் சாலிச் சாலத் தேறிச் சேல் உற்று ஆணித்துப்
பொழிலேறும்
செக்கோடைக் கோடுக்கே நிற்பாய் நித்தா
செக்கர்க் கதிர் ஏனல் முச்சாலிச் சாலித் தாள் வெற்பாள்
முத்து ஆர் வெட்சிப் புயவேளே
முத்தா முத்தீ யத்தா சுத்தா முத்தா முத்திப் பெருமாளே. Add (additional) Audio/Video Link
596
திருச்செங்கோடு வருத்தம் காண தனத்தந் தான தானன தனத்தந் தான தானன
தனத்தந் தான தானன ...... தனதான
வருத்தங் காண நாடிய குணத்தன் பான மாதரு
மயக்கம் பூண மோதிய ...... துரமீதே
மலக்கங் கூடி யேயின வுயிர்க்குஞ் சேத மாகிய
மரிக்கும் பேர்க ளோடுற ...... வணியாதே
பெருத்தும் பாவ நீடிய மலத்தின் தீமை கூடிய
பிறப்புந் தீர வேயுன ...... திருதாளே
பெறத்தந் தாள வேயுயர் சுவர்க்கஞ் சேர வேயருள்
பெலத்தின் கூர்மை யானது ...... மொழிவாயே
இரத்தம் பாய மேனிக ளுரத்துஞ் சாடி வேல்கொடு
எதிர்த்துஞ் சூரர் மாளவெ ...... பொரும்வேலா
இசைக்குந் தாள மேளமெ தனத்தந் தான தானன
எனத்திண் கூளி கோடிகள் ...... புடைசூழத்
திருத்தன் பாக வேயொரு மயிற்கொண் டாடி யேபுகழ்
செழித்தன் பாக வீறிய ...... பெருவாழ்வே
திரட்சங் கோடை வாவிகள் மிகுத்துங் காவி சூழ்தரு
திருச்செங் கோடு மேவிய ...... பெருமாளே.
வருத்தம் காண நாடிய குணத்து அன்பான மாதரும்
மயக்கம் பூண மோதிய துரம் ஈதே
மலக்கம் கூடியேயின உயிர்க்கும் சேதமாகிய மரிக்கும்
பேர்களோடு உறவு அணியாதே
பெருத்தும் பாவ நீடிய மலத்தின் தீமை கூடிய பிறப்பும்
தீரவே
உனது இரு தாளே பெறத் தந்து ஆளவே
உயர்ச் சுவர்க்கம் சேரவே அருள் பெலத்தின் கூர்மையானது
மொழிவாயே
இரத்தம் பாய மேனிகள் உரத்தும் சாடி வேல் கொடு
எதிர்த்தும் சூரர் மாளவே பொரும் வேலா
இசைக்கும் தாள மேளமே தனத்தந் தான தானன எனத் திண்
கூளி கோடிகள் புடை சூழ
திருத்த அன்பாகவே ஒரு மயில் கொண்டாடியே புகழ்
செழித்து அன்பாக வீறிய பெரு வாழ்வே
திரள் சங்கு ஓடை வாவிகள் மிகுத்தும் காவி சூழ் தரு
திருச்செங்கோடு மேவிய பெருமாளே. Add (additional) Audio/Video Link
597
திருச்செங்கோடு ஆலகால படப்பை தான தானன தத்தன தத்தன
தான தானன தத்தன தத்தன
தான தானன தத்தன தத்தன ...... தனதான
ஆல காலப டப்பைம டப்பியர்
ஈர வாளற வெற்றும்வி ழிச்சியர்
யாவ ராயினு நத்திய ழைப்பவர் ...... தெருவூடே
ஆடி யாடிந டப்பதொர் பிச்சியர்
பேசி யாசைகொ டுத்தும ருட்டிகள்
ஆசை வீசிய ணைக்குமு லைச்சியர் ...... பலரூடே
மாலை யோதிவி ரித்துமு டிப்பவர்
சேலை தாழநெ கிழ்த்தரை சுற்றிகள்
வாசம் வீசும ணத்தில்மி னுக்கிகள் ...... உறவாலே
மாயை யூடுவி ழுத்திய ழுத்திகள்
காம போகவி னைக்குளு னைப்பணி
வாழ்வி லாமல்ம லச்சன னத்தினி ...... லுழல்வேனோ
மேலை வானொரு ரைத்தச ரற்கொரு
பால னாகியு தித்தொர்மு நிக்கொரு
வேள்வி காவல்ந டத்திய கற்குரு ...... அடியாலே
மேவி யேமிதி லைச்சிலை செற்றுமின்
மாது தோள்தழு விப்பதி புக்கிட
வேறு தாயட விக்குள்வி டுத்தபி ...... னவனோடே
ஞால மாதொடு புக்கவ னத்தினில்
வாழும் வாலிப டக்கணை தொட்டவ
னாடி ராவண னைச்செகு வித்தவன் ...... மருகோனே
ஞான தேசிக சற்குரு உத்தம
வேல வாநெரு வைப்பதி வித்தக
நாக மாமலை சொற்பெற நிற்பதொர் ...... பெருமாளே.
ஆலகால படப் பை மடப்பியர் ஈர வாள் அற எற்றும்
விழிச்சியர்
யாவராயினும் நத்தி அழைப்பவர் தெரு ஊடே ஆடி ஆடி
நடப்பது ஒர் பிச்சியர்
பேசி ஆசை கொடுத்து மருட்டிகள் ஆசை வீசி அணைக்கும்
முலைச்சியர் பலர் ஊடே மாலை ஓதி விரித்து முடிப்பவர்
சேலை தாழ நெகிழ்த்து அரை சுற்றிகள் வாசம் வீசு மணத்தில்
மினுக்கிகள் உறவாலே
மாயை ஊடு விழுத்தி அழுத்திகள் காம போக வினைக்குள்
உனைப் பணி வாழ்வு இலாமல் மலச் சனனத்தினில்
உழல்வேனோ
மேலை வானொர் உரைத் தசரற்கு ஒரு பாலனாகி உதித்து
ஒர் முநிக்கு ஒரு வேள்வி காவல் நடத்தி அ(க்) கற்கு உரு
அடியாலே மேவியே
மிதிலைச் சிலை செற்று மின் மாது தோள் தழுவிப் பதி
புக்கிட வேறு தாய் அடவிக்குள் விடுத்த பின்னவனோடே
ஞால மாதொடு புக்கு
அ(வ்)வனத்தினில் வாழும் வாலி படக் கணை தொட்டவன்
நாடி ராவணனைச் செகுவித்தவன் மருகோனே
ஞான தேசிக சற் குரு உத்தம வேலவா நெருவைப்பதி
வித்தக நாக மா மலை சொற் பெற நிற்பது ஒர் பெருமாளே. Add (additional) Audio/Video Link
598
திருச்செங்கோடு காலனிடத்து தான தனத் ...... தனதான
காலனிடத் ...... தணுகாதே
காசினியிற் ...... பிறவாதே
சீலஅகத் ...... தியஞான
தேனமுதைத் ...... தருவாயே
மாலயனுக் ...... கரியானே
மாதவரைப் ...... பிரியானே
நாலுமறைப் ...... பொருளானே
நாககிரிப் ...... பெருமாளே.
காலனிடத்து அணுகாதே
காசினியிற் பிறவாதே
சீலஅகத்திய ஞான
தேனமுதைத் தருவாயே
மாலயனுக்கு அரியானே
மாதவரைப் பிரியானே
நாலுமறைப் பொருளானே
நாககிரிப் பெருமாளே. Audio/Video Link(s)
http://kaumaram.com/thiru/nnt0598_u.html#audio
https://www.youtube.com/watch?v=bIKtWKfe8EU
https://www.youtube.com/watch?v=VNKfqvSKubs
Add (additional) Audio/Video Link
599
திருச்செங்கோடு தாமா தாம ஆலாபா தானா தானா தானா தானா
தானா தானத் ...... தனதான
தாமா தாமா லாபா லோகா
தாரா தாரத் ...... தரணீசா
தானா சாரோ பாவா பாவோ
நாசா பாசத் ...... தபராத
யாமா யாமா தேசா ரூடா
யாரா யாபத் ...... தெனதாவி
யாமா காவாய் தீயே னீர்வா
யாதே யீமத் ...... துகலாமோ
காமா காமா தீனா நீணா
காவாய் காளக் ...... கிரியாய்கங்
காளா லீலா பாலா நீபா
காமா மோதக் ...... கனமானின்
தேமார் தேமா காமீ பாகீ
தேசா தேசத் ...... தவரோதுஞ்
சேயே வேளே பூவே கோவே
தேவே தேவப் ...... பெருமாளே.
தாமா தாம ஆலாபா லோக
ஆதாரா தார(ம்) தரணி ஈசா
தான ஆசாரோ பாவா பாவோ
நாசா பாசத்து அபராத
யாமா யாமா தேசார் ஊடு
ஆராயா ஆபத்து எனது ஆவி
ஆமா காவாய் தீயேன் நீர்
வாயாதே ஈமத்து உகலாமோ
காமா காம ஆதீனா நீள்
நாகா வாய் காள கிரியாய்
கங்காளா லீலா பாலா நீபா
காம ஆமோதக் கன மானின்
தேம் ஆர் தே மா காமீ பாகீ
தேசா தேசத்தவர் ஓதும்
சேயே வேளே பூவே கோவே
தேவே தேவப் பெருமாளே.
Add (additional) Audio/Video Link
600
திருச்செங்கோடு அத் துகிரின் நல் தத்த தனதனன தத்த தனதனன
தத்த தனதனன ...... தனதான
அத்து கிரினலத ரத்து அலனவள
கத்து வளர்செய்புள ...... கிதபூத
ரத்தி ருகமலக ரத்தி தயமுருகி
யத்தி யிடனுறையு ...... நெடுமாம
ரத்து மலர்கனிய லைத்து வருமிடைத
லத்து ரகசிகரி ...... பகராதே
யத்தி மலவுடல்ந டத்தி யெரிகொள்நிரை
யத்தி னிடையடிமை ...... விழலாமோ
தத்து கவனவரி ணத்து வுபநிடவி
தத்து முநியுதவு ...... மொழியாறுத்
தத்தை நறவையமு தத்தை நிகர்குறவர்
தத்தை தழுவியப ...... னிருதோளா
தத்து ததிதுரக தத்து மிகுதிதிசர்
தத்து மலையவுணர் ...... குலநாகந்
தத்த மிசைமரக தத்த மனியமயில்
தத்த விடுமமரர் ...... பெருமாளே.
அத் துகிரின் நல் அதரத்து அல் அன அளகத்து
வளர் செய் புளகித பூதரத்து இரு கமல கரத்து இதயம்
உருகி
அத்தி இடன் உறையும் நெடு மாமரத்து மலர் கனி
அலைத்து
வரும் இடைத் தலத்து உரக சிகரி பகராதே
அத்தி மல உடல் நடத்தி எரி கொள் நிரையத்தின் இடை
அடிமை விழலாமோ
தத்து கவன அரிணத்து உபநிட விதத்து முநி உதவு
மொழியால்
துத்தத்தை நறவை அமுதத்தை நிகர் குறவர் தத்தை
தழுவிய ப(ன்)னிரு தோளா
தத்து உததி துரகதத்து மிகு திதிசர்
தத்து மலை அவுணர் குல நாகம் தத்த
மிசை மரகதத் தமனிய மயில் தத்த விடும் அமரர்
பெருமாளே. Add (additional) Audio/Video Link
601
திருச்செங்கோடு அத்த வேட்கை தத்த தாத்தத் தத்த தாத்தத்
தத்த தாத்தத் ...... தனதான
அத்த வேட்கைப் பற்றி நோக்கத்
தத்தை மார்க்குத் ...... தமராயன்
பற்ற கூட்டத் திற்ப ராக்குற்
றச்சு தோட்பற் ...... றியவோடும்
சித்த மீட்டுப் பொய்த்த வாழ்க்கைச்
சிக்கை நீக்கித் ...... திணிதாய
சித்ர வாக்குப் பெற்று வாழ்த்திச்
செச்சை சாத்தப் ...... பெறுவேனோ
கொத்து நூற்றுப் பத்து நாட்டக்
கொற்ற வேத்துக் ...... கரசாய
குக்கு டாத்தச் சர்ப்ப கோத்ரப்
பொற்ப வேற்கைக் ...... குமரேசா
தத்வ நாற்பத் தெட்டு நாற்பத்
தெட்டு மேற்றுத் ...... திடமேவும்
தர்க்க சாத்ரத் தக்க மார்க்கச்
சத்ய வாக்யப் ...... பெருமாளே.
அத்த(ம்) வேட்கை பற்றி நோக்கு அத் தத்தைமார்க்கு தமர்
ஆய்
அன்பு அற்ற கூட்டத்தில் பராக்கு உற்று அச்சு தோள் பற்ற
இயவோடும் சித்தம்
மீட்டுப் பொய்த்த வாழ்க்கை சிக்கை நீக்கி
திணிது ஆய சித்ர வாக்குப் பெற்று வாழ்த்திச் செச்சை சாத்தப்
பெறுவேனோ
கொத்து நூற்றுப் பத்து நாட்ட கொற்ற வேத்துக்கு அரசாய
குக்குட(ம்) அத்த
சர்ப்ப கோத்ரப் பொற்ப வேல் கைக் குமரேசா
தத்வம் நாற்பத்து எட்டு நாற்பத்து எட்டும் ஏற்றுத் திடம்
மேவும் தர்க்க சாத்ரத் தக்க மார்க்க
சத்ய வாக்யப் பெருமாளே. Add (additional) Audio/Video Link
602
திருச்செங்கோடு பத்தர் கணப்ரிய தத்தன தத்தன தத்தன தத்தன
தத்தன தத்தன ...... தனதான
பத்தர்க ணப்ரிய நிர்த்தந டித்திடு
பட்சிந டத்திய ...... குகபூர்வ
பச்சிம தட்சிண வுத்தர திக்குள
பத்தர்க ளற்புத ...... மெனவோதுஞ்
சித்ரக வித்துவ சத்தமி குத்ததி
ருப்புக ழைச்சிறி ...... தடியேனுஞ்
செப்பென வைத்துல கிற்பர வத்தெரி
சித்தவ நுக்ரக ...... மறவேனே
கத்திய தத்தைக ளைத்துவி ழத்திரி
கற்கவ ணிட்டெறி ...... தினைகாவல்
கற்றகு றத்திநி றத்தக ழுத்தடி
கட்டிய ணைத்தப ...... னிருதோளா
சத்தியை யொக்கஇ டத்தினில் வைத்தத
கப்பனு மெச்சிட ...... மறைநூலின்
தத்துவ தற்பர முற்றுமு ணர்த்திய
சர்ப்பகி ரிச்சுரர் ...... பெருமாளே.
பத்தர் கணப்ரிய நிர்த்த நடித்திடு
பட்சி நடத்திய குக பூர்வ
பச்சிம தட்சிண உத்தர திக்குள
பத்தர்கள் அற்புதம் எனவோதும்
சித்ர கவித்துவ சத்தமிகுத்த
திருப்புகழைச் சிறிதடியேனும்
செப்பென வைத்து உலகிற்பரவ தெரி
சித்த அநுக்ரகம் மறவேனே
கத்திய தத்தை களைத்துவிழ திரி
கற்கவணிட்டெறி தினைகாவல்
கற்ற குறத்தி நிறத்த கழுத்தடி
கட்டியணைத்த பனிருதோளா
சத்தியை யொக்க இடத்தினில் வைத்த
தகப்பனு மெச்சிட மறைநூலின்
தத்துவ தற்பர முற்றும் உணர்த்திய
சர்ப்பகிரிச்சுரர் பெருமாளே.
Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=X9k0gbfukdE
Add (additional) Audio/Video Link
603
திருச்செங்கோடு புற்புதம் தத்ததன தான தத்ததன தான
தத்ததன தான ...... தனதான
புற்புதமெ னாம அற்பநிலை யாத
பொய்க்குடில்கு லாவு ...... மனையாளும்
புத்திரரும் வீடு மித்திரரு மான
புத்திசலி யாத ...... பெருவாழ்வு
நிற்பதொரு கோடி கற்பமென மாய
நிட்டையுடன் வாழு ...... மடியேன்யான்
நித்தநின தாளில் வைத்ததொரு காதல்
நிற்கும்வகை யோத ...... நினைவாயே
சற்பகிரி நாத முத்தமிழ்வி நோத
சக்ரகதை பாணி ...... மருகோனே
தர்க்கசமண் மூகர் மிக்ககழு வேற
வைத்தவொரு காழி ...... மறையோனே
கற்புவழு வாது வெற்படியின் மேவு
கற்றைமற வாணர் ...... கொடிகோவே
கைத்தஅசு ரேசர் மொய்த்தகுல கால
கற்பதரு நாடர் ...... பெருமாளே.
புற்புதம் என் நாமம்
அற்ப நிலையாத
பொய்க்குடில்
குலாவு மனையாளும்
புத்திரரும் வீடு மித்திரரும ஆன்
புத்திசலியாத பெருவாழ்வு
நிற்பதொரு கோடி கற்பமென
மாய நிட்டையுடன்
வாழும் அடியேன்யான்
நித்தநின தாளில் வைத்ததொரு காதல்
நிற்கும்வகை ஓத நினைவாயே
சற்பகிரி நாத
முத்தமிழ்விநோத
சக்ரகதை பாணி மருகோனே
தர்க்கசமண் மூகர்
மிக்க கழுவேற வைத்த
ஒரு காழி மறையோனே
கற்பு வழுவாது
வெற்பு அடியின் மேவு கற்றைமறவாணர் கொடிகோவே
கைத்த அசுரேசர் மொய்த்தகுல கால
கற்பதரு நாடர் பெருமாளே. Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=ab91hUCNTww
Add (additional) Audio/Video Link
604
திருச்செங்கோடு பொன் சித்ர தத்தத்தத் தத்தத் தத்தத்
தத்தத்தத் தத்தத் தத்தத்
தத்தத்தத் தத்தத் தத்தத் ...... தனதான
பொற்சித்ரப் பச்சைப் பட்டுக்
கச்சிட்டுக் கட்டிப் பத்மப்
புட்பத்துக் கொப்பக் கற்பித் ...... திளைஞோர்கள்
புட்பட்டுச் செப்பத் துப்பற்
கொத்தப்பொற் றித்தத் திட்பப்
பொற்பிற்பெற் றுக்ரச் சக்ரத் ...... தனமானார்
கற்சித்தச் சுத்தப் பொய்ப்பித்
தத்திற்புக் கிட்டப் பட்டுக்
கைக்குத்திட் டிட்டுச் சுற்றித் ...... திரியாமல்
கற்றுற்றுச் சித்திக் கைக்குச்
சித்திப்பப் பக்ஷத் திற்சொற்
கற்பித்தொப் பித்துக் கொற்றக் ...... கழல்தாராய்
குற்சித்துக் கொட்டுக் கொட்டுத்
துக்கச்சத் துக்குக் குக்குக்
குக்குக்குக் குக்குக் குக்குக் ...... கெனமாறா
குட்சிக்குப் பக்ஷிக் கைக்குக்
கக்ஷத்திற் பட்சத் தத்தக்
கொட்டிச்சுட் டிக்கொக் ரிக்குக் ...... குடதாரி
சற்சித்துத் தொற்புத் திப்பட்
சத்தர்க்கொப் பித்தட் சத்துச்
சத்தத்தைச் சத்திக் கொச்சைப் ...... பதிவாழ்வே
தக்ஷப்பற் றுக்கெர்ப் பத்திற்
செற்பற்றைச் செற்றிட் டுச்சச்
சற்பப்பொற் றைக்குட் சொக்கப் ...... பெருமாளே.
பொன் சித்ரப் பச்சைப் பட்டுக் கச்சு இட்டுக் கட்டிப் பத்மப்
புட்பத்துக்கு ஒப்பக் கற்பித்து
இளைஞோர்கள் புள் பட்டு செப்பத்துப் பல் கொத்த
பொன் தித்தத் திட்பப் பொற்பில் பெற்று உக்ரச் சக்ரத் தனம்
மானார்
கல் சித்தச் சுத்தப் பொய்ப் பித்து அத்தில் புக்கு
இட்டப்பட்டுக் கைக் குத்திட்டு இட்டிச் சுற்றித் திரியாமல்
கற்று உற்றுச் சித்திக்கைக்குச் சித்திப்பப் பக்ஷத்தில் சொல்
கற்பித்து ஒப்பித்துக் கொற்றக் கழல் தாராய்
குற்சித்துக் கொட்டுக் கொட்டுத் துக்க அச்சத்துக்குக்
குக்குக் குக்குக்குக் குக்குக் குக்குக் என மாறா குட்சிக்குப்
பக்ஷிக்கைக்குக் கக்ஷத்தில் பட்சத்து அத்தக் கொட்டி
சுட்டிக் கொக்ரிக் குக்குட தாரி
சத் சித்துத் தொல் புத்திப் பட்ச அத்தர்க்கு ஒப்பித்து
அட்ச(ர)த்துச் சத்தத்தைத் சத்திக் கொச்சைப் பதி வாழ்வே
தக்ஷ (சம்) பற்றுக் கெர்ப்பத்தில் செல் பற்றைச் செற்றிட்ட
உச்சச் சற்பப் பொற்றைக்குள் சொக்கப் பெருமாளே. Add (additional) Audio/Video Link
605
திருச்செங்கோடு கொடிய மறலி தனன தனதன தனதன தனதன
தனன தனதன தனதன தனதன
தனன தனதன தனதன தனதன ...... தனதான
கொடிய மறலியு மவனது கடகமு
மடிய வொருதின மிருபதம் வழிபடு
குதலை யடியவ னினதருள் கொடுபொரு ...... மமர்காண
குறவர் மகள்புணர் புயகிரி சமுகமு
மறுமு கமும்வெகு நயனமும் ரவியுமிழ்
கொடியு மகிலமும் வெளிபட இருதிசை ...... யிருநாலும்
படியு நெடியன எழுபுண ரியுமுது
திகிரி திகிரியும் வருகென வருதகு
பவுரி வருமொரு மரகத துரகத ...... மிசையேறிப்
பழய அடியவ ருடனிமை யவர்கண
மிருபு டையுமிகு தமிழ்கொடு மறைகொடு
பரவ வருமதி லருணையி லொருவிசை ...... வரவேணும்
சடில தரவிட தரபணி தரதர
பரசு தரசசி தரசுசி தரவித
தமரு கமிருக தரவனி தரசிர ...... தரபாரத்
தரணி தரதநு தரவெகு முககுல
தடினி தரசிவ சுதகுண தரபணி
சயில விதரண தருபுர சசிதரு ...... மயில்வாழ்வே
நெடிய வுடலுரு இருளெழ நிலவெழ
எயிறு சுழல்விழி தழலெழ எழுகிரி
நெரிய அதிர்குரல் புகையெழ இடியெழ ...... நெடுவானும்
நிலனும் வெருவர வருநிசி சரர்தள
நிகில சகலமு மடியவொர் படைதொடு
நிருப குருபர சுரபதி பரவிய ...... பெருமாளே.
கொடிய மறலியும் அவனது கடகமு மடிய
ஒருதினம் இருபதம் வழிபடு
குதலை அடியவன
நினதருள் கொடு
பொரும் அமர்காண
குறவர் மகள்புணர் புயகிரி சமுகமும்
அறுமுகமும் வெகு நயனமும்
ரவியுமிழ் கொடியும்
அகிலமும் வெளிபட
இருதிசை யிருநாலும்
படியு நெடியன எழுபுண ரியும்
முது திகிரி
திகிரியும் வருகென வருதகு
பவுரி வருமொரு மரகத துரகத மிசையேறி
பழய அடியவருடன்
இமையவர்கணம் இருபுடையும்
மிகு தமிழ்கொடு மறைகொடு பரவ
வரும் அதில் அருணையில்
ஒருவிசை வரவேணும்
சடிலதர விடதர
பணிதர தரபரசுதர
சசிதர சுசிதர
இத தமருக மிருக தர
வனிதர சிரதர
பாரத் தரணிதர
தநுதர
வெகு முககுல தடினி தர
சிவ சுத
குண தர
பணி சயில
விதரண
தருபுர சசிதரு
மயில்வாழ்வே
நெடிய வுடலுரு இருளெழ
எயிறு நிலவெழ
சுழல்விழி தழலெழ
எழுகிரி நெரிய
அதிர்குரல் புகையெழ இடியெழ
நெடுவானும் நிலனும் வெருவர
வருநிசிசரர்தள
நிகில சகலமு மடிய
ஓர் படைதொடு நிருப
குருபர
சுரபதி பரவிய பெருமாளே. Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=5rmOjIe772M
Add (additional) Audio/Video Link