சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

Selected Thiruppugazh      Thiruppugazh Thalangal      All Thiruppugazh Songs      Thiruppugazh by Santham     

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew   Korean  
Order by:
Thiruppugazh from Thalam: காஞ்சீபுரம்
309   அதி மதம் கக்க     310   கனக தம்பத்தை     311   செடியுடம் பத்தி     312   கன க்ரவுஞ்சத்தில்     313   தெரியல் அம் செச்சை     314   புன மடந்தைக்கு     315   கறை இலங்கும்     316   செறிதரும் செப்பத்து     317   அரி அயன் புட்பி     318   கனி தரும் கொக்கு     319   தசைதுறுந் தொக்கு     320   புரைபடுஞ் செற்ற     321   சலமலம் விட்ட     322   தலை வலையத்து     323   இதத்துப் பற்றி     324   எனக்குச்சற்று     325   இறைச்சிப் பற்று     326   கடத்தைப் பற்று     327   கருப் பற்றிப் பருத்து     328   கறுக்கப் பற்று     329   அற்றைக்கு இரைதேடி     330   முட்டுப் பட்டு     331   அற்றைக் கற்றை     332   சுத்தச் சித்த     333   கொக்குக்கு ஒக்க     334   தத்தித் தத்தி     335   பொக்குப்பை     336   அயில் அப்பு     337   கச்சு இட்ட அணி     338   கமலரு சோகம்     339   கருமமான பிறப்பற     340   கலகலென     341   கொத்தார் பற் கால்     342   கோவைச் சுத்த     343   சீசி முப்புர     344   நச்சு அரவம் என்று     345   படிறொழுக்கமும்     346   மகுடக் கொப்பாட     347   மக்கட்குக் கூற     348   மயல் ஓதும்     349   முத்து ரத்ந சூத்ர     350   வம்பறாச்சில     351   வாய்ந்தப்பிடை     352   அறிவிலாப் பித்தர்    
309   காஞ்சீபுரம்   அதி மதம் கக்க  
தனதனந் தத்தத் தத்தன தத்தம்
     தனதனந் தத்தத் தத்தன தத்தம்
          தனதனந் தத்தத் தத்தன தத்தம் ...... தனதான

அதிமதங் கக்கப் பக்கமு கக்குஞ்
     சரிதனந் தைக்கச் சிக்கென நெக்கங்
          கணைதருஞ் செச்சைப் பொற்புய னத்தன் ...... குறவாணார்
அடவியந் தத்தைக் கெய்த்துரு கிச்சென்
     றடிபணிந் திட்டப் பட்டும யற்கொண்
          டயர்பவன் சத்திக் கைத்தல னித்தன் ...... குமரேசன்
துதிசெயும் சுத்தப் பத்தியர் துக்கங்
     களைபவன் பச்சைப் பக்ஷிந டத்துந்
          துணைவனென் றர்ச்சித் திச்சைத ணித்துன் ...... புகழ்பாடிச்
சுருதியின் கொத்துப் பத்தியு முற்றுந்
     துரியமுந் தப்பித் தத்வம னைத்துந்
          தொலையுமந் தத்துக் கப்புற நிற்கும் ...... படிபாராய்
கதிபொருந் தக்கற் பித்துந டத்துங்
     கனல்தலம் புக்குச் சக்ரமெ டுக்குங்
          கடவுளும் பத்மத் தச்சனு முட்கும் ...... படிமோதிக்
கதிரவன் பற்குற் றிக்குயி லைத்திண்
     சிறகரிந் தெட்டுத் திக்கர்வ குக்குங்
          கடகமுந் தட்டுப் பட்டொழி யக்கொன் ...... றபிராமி
பதிவ்ரதம் பற்றப் பெற்றம கப்பெண்
     பரிவொழிந் தக்கிக் குட்படு தக்கன்
          பரிபவம் பட்டுக் கெட்டொழி யத்தன் ...... செவிபோயப்
பணவிபங் கப்பட் டப்படி வெட்கும்
     படிமுனிந் தற்றைக் கொற்றம்வி ளைக்கும்
          பரமர்வந் திக்கக் கச்சியில் நிற்கும் ...... பெருமாளே.


அதி மதம் கக்கப் பக்கம் உகக் குஞ்சரி
     தனம் தைக்கச் சிக்கென நெக்கு அங்கு
        அணை தரும் செச்சைப் பொற்புயன் அத்தன்.....குற வாணர்
அடவி அம் தத்தைக்கு எய்த்து உருகிச் சென்று
     அடி பணிந்து இட்டப்பட்டு மயல் கொண்டு
        அயர்பவன் சத்திக் கைத்தலம் நித்தன்.....குமரேசன்
துதி செயும் சுத்தப் பத்தியர் துக்கம்
     களைபவன் பச்சைப் பக்ஷி நடத்தும்
        துணைவன் என்று அர்ச்சித்து இச்சை தணித்து உன்.....புகழ்பாடி
சுருதியின் கொத்துப் பத்தியும் முற்றும்
     துரியமும் தப்பித் தத்வம் அனைத்தும்
        தொலையும் அந்தத்துக்கு அப்புறம் நிற்கும்.....படி பாராய்
கதி பொருந்தக் கற்பித்து நடத்தும்
     கனல் தலம் புக்கு சக்ரம் எடுக்கும்
        கடவுளும் பத்ம தச்சனும் உட்கும்.....படி மோதிக்
கதிரவன் பல் குற்றி குயிலைத் திண்
     சிறகு அரிந்து எட்டுத் திக்கர் வகுக்கும்
        கடகமும் தட்டுப் பட்டு ஒழியக் கொன்ற.....அபிராமி
பதிவ்ரதம் பற்றப் பெற்ற மகப் பெண்
     பரிவு ஒழிந்து அக்கிக்கு உட்படு தக்கன்
        பரிபவம் பட்டுக் கெட்டு ஒழிய தன்.....செ(வ்)வி போய்
அப் பனவி பங்கப்பட்டு அப்படி வெட்கும்
     படி முனிந்து அற்றைக் கொற்றம் விளைக்கும்
        பரமர் வந்திக்கக் கச்சியில் நிற்கும்.....பெருமாளே.
Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=YRT136QvYlQ
Add (additional) Audio/Video Link

Back to Top

310   காஞ்சீபுரம்   கனக தம்பத்தை  
தனதனந் தத்தத் தத்தன தத்தம்
     தனதனந் தத்தத் தத்தன தத்தம்
          தனதனந் தத்தத் தத்தன தத்தம் ...... தனதான

கனகதம் பத்தைச் செச்சையை மெச்சுங்
     கடகசங் கத்துப் பொற்புய வெற்பன்
          கடலுள்வஞ் சித்துப் புக்கதொர் கொக்கும் ...... பொடியாகக்
கறுவுசெஞ் சத்திப் பத்மக ரத்தன்
     குமரனென் றர்ச்சித் தப்படி செப்புங்
          கவிமொழிந் தத்தைக் கற்றற வுற்றும் ...... புவியோர்போய்
குனகியுங் கைக்குக் கற்பக மொப்பென்
     றனகனென் றிச்சைப் பட்டத ளிக்குங்
          குமணனென் றொப்பிட் டித்தனை பட்டிங் ...... கிரவான
குருடுகொண் டத்தச் சத்தம னைத்துந்
     திருடியுஞ் சொற்குத் தக்கதொ டுத்துங்
          குலவியுங் கத்தப் பட்டக லக்கந் ...... தெளியாதோ
சனகனன் புற்றுப் பெற்றம டப்பெண்
     தனிப்பெருங் கற்புச் சக்ரந டத்துந்
          தகையிலங் கைச்சுற் றத்தைமு ழுத்துஞ் ...... சுடவேவெஞ்
சமரசண் டக்கொற் றத்தவ ரக்கன்
     கதிர்விடும் பத்துக் கொத்துமு டிக்குந்
          தனியொரம் பைத்தொட் டுச்சுரர் விக்னங் ...... களைவோனும்
தினகரன் சொர்க்கத் துக்கிறை சுக்ரன்
     சசிதரன் திக்குக் கத்தர கத்யன்
          திசைமுகன் செப்பப் பட்டவ சிட்டன் ...... திரள்வேதஞ்
செகதலஞ் சுத்தப் பத்தியர் சித்தம்
     செயலொழிந் தற்றுப் பெற்றவர் மற்றும்
          சிவனும்வந் திக்கக் கச்சியில் நிற்கும் ...... பெருமாளே.


கனக தம்பத்தைச் செச்சையை மெச்சும்
     கடக சங்கத்துப் பொன் புய வெற்பன்
        கடலுள் வஞ்சித்துப் புக்கது ஒர் கொக்கும்.....பொடியாகக்
கறுவு செம் சத்திப் பத்ம கரத்தன்
     குமரன் என்று அர்ச்சித்து அப்படி செப்பும்
        கவி மொழிந்து அத்தைக் கற்று அற உற்றும்.....புவியோர் போய்
குனகியும் கைக்குக் கற்பகம் ஒப்பென்று
     அனகன் என்று இச்சைப் பட்டது அளிக்கும்
        குமணன் என்று ஒப்பிட்டு இத்தனை பட்டு இங்கு.....இரவு ஆன
குருடு கொண்டு அத்தச் சத்தம் அனைத்தும்
     திருடியும் சொற்குத் தக்க தொடுத்தும்
        குலவியும் கத்தப்பட்ட கலக்கம்.....தெளியாதோ
சனகன் அன்புற்றுப் பெற்ற மடப் பெண்
     தனிப் பெரும் கற்புச் சக்ரம் நடத்தும்
        தகை இலங்கைச் சுற்றத்தை முழுத்தும்.....சுடவே வெம்
சமர சண்டக் கொற்றத்து அவ் அரக்கன்
     கதிர் விடும் பத்துக் கொத்து முடிக்கும்
        தனி ஒர் அம்பைத் தொட்டுச் சுரர் விக்னம்.....களைவோனும்
தினகரன் சொர்க்கத்துக்கு இறை சுக்ரன்
     சசிதரன் திக்குக் கத்தர் அகத்(தி)யன்
        திசை முகன் செப்பப்பட்ட வசிட்டன்.....திரள் வேதம்
செகதலம் சுத்தப் பத்தியர் சித்தம்
     செயல் ஒழிந்து அற்றுப் பெற்றவர் மற்றும்
        சிவனும் வந்திக்கக் கச்சியில் நிற்கும்.....பெருமாளே.
Add (additional) Audio/Video Link

Back to Top

311   காஞ்சீபுரம்   செடியுடம் பத்தி  
தனதனந் தத்தத் தத்தன தத்தம்
     தனதனந் தத்தத் தத்தன தத்தம்
          தனதனந் தத்தத் தத்தன தத்தம் ...... தனதான

செடியுடம் பத்தித் தெற்றியி ரத்தஞ்
     செறிநரம் பிட்டுக் கட்டிய சட்டஞ்
          சிறைதிரண் டொக்கத் தொக்கவி னைப்பந் ...... தவிகாரம்
திமிரதுங் கத்தத் துத்திரை யெற்றுஞ்
     செனனபங் கத்துத் துக்கக டற்கண்
          திருகுரும் பைப்பட் டுச்சுழல் தெப்பங் ...... கரணாதி
குடிபுகும் பொக்கப் புக்கிலி றப்பின்
     குடிகலம்வெந் தொக்குக் கொட்டில்ம லத்தின்
          குசைசுமந் தெட்டுத் திக்கிலு முற்றுந் ...... தடுமாறுங்
குவலயங் கற்றுக் கத்தியி ளைக்குஞ்
     சமயசங் கத்தைத் தப்பியி ருக்குங்
          குணமடைந் துட்பட் டொக்கஇ ருக்கும் ...... படிபாராய்
படிதருங் கற்புக் கற்பக முக்கண்
     கொடிபசுஞ் சித்ரக் குத்தர முத்தம்
          பணிநிதம் பத்துச் சத்தியு கக்குங் ...... குமரேசா
பரவசங் கெட்டெட் டக்கர நித்தம்
     பரவுமன் பர்க்குச் சித்திய ளிக்கும்
          பரமர்வந் திக்கத் தக்கப தத்தன் ...... குருநாதா
தொடியிடும் பத்மக் கைக்குமி டைக்குஞ்
     சுருள்படும் பத்திப் பட்டகு ழற்குந்
          துகிர்கடைந் தொப்பித் திட்டஇ தழ்க்குங் ...... குறமானின்
சுடர்படுங் கச்சுக் கட்டுமு லைக்குந்
     துவளுநெஞ் சத்தச் சுத்தஇ ருக்கும்
          சுரரும்வந் திக்கக் கச்சியில் நிற்கும் ...... பெருமாளே.


செடி உடம்பு அத்தித் தெற்றி இரத்தம்
     செறி நரம்பு இட்டுக் கட்டிய சட்டம்
        சிறை திரண்டு ஒக்கத் தொக்க வினைப்.....பந்த விகாரம்
திமிர துங்கத் தத்துத் திரை எற்றும்
     செனன பங்கத்துத் துக்க கடல் கண்
        திரு(கு) குரும்பைப் பட்டுச் சுழல் தெப்பம்.....கரண ஆதி
குடி புகும் பொக்கப் புக்கில் இறப்பின்
     குடிலம் வெந்து ஒக்குக் கொட்டில் மலத்தின்
        குகை சுமந்து எட்டுத் திக்கிலு(ம்) முற்றும்.....தடுமாறும்
குவலயம் கற்றுக் கத்தி இளைக்கும்
     சமய சங்கத்தைத் தப்பி இருக்கும்
        குணம் அடைந்து உட்பட்டு ஒக்க இருக்கும்.....படி பாராய்
படி தரும் கற்புக் கற்பக முக்கண்
     கொடி பசும் சித்ரக்குத் தர(ம்) முத்தம்
        பணி நிதம்பத்துச் சத்தி உகக்கும்.....குமரேசா
பரவசம் கெட்டு எட்டு அக்கரம் நித்தம்
     பரவும் அன்பர்க்கு சித்தி அளிக்கும்
        பரமர் வந்திக்க தக்க பதத்தன்.....குரு நாதா
தொடி இடும் பத்ம கைக்கும் இடைக்கும்
     சுருள்படும் பத்தி பட்ட குழற்கும்
        துகிர் கடைந்து ஒப்பித்திட்ட இதழ்க்கும்.....குறமானின்
சுடர் படும் கச்சு கட்டு முலைக்கும்
     துவளும் நெஞ்சத்த சுத்த இருக்கும்
        சுரரும் வந்திக்க கச்சியில் நிற்கும்.....பெருமாளே.
Add (additional) Audio/Video Link

Back to Top

312   காஞ்சீபுரம்   கன க்ரவுஞ்சத்தில்  
தனதனந் தத்தத் தத்தன தத்தம்
     தனதனந் தத்தத் தத்தன தத்தம்
          தனதனந் தத்தத் தத்தன தத்தம் ...... தனதான

கனக்ரவுஞ் சத்திற் சத்தியை விட்டன்
     றசுரர்தண் டத்தைச் செற்றவி தழ்ப்பங்
          கயனைமுன் குட்டிக் கைத்தளை யிட்டும் ...... பரையாளுங்
கடவுளன் புற்றுக் கற்றவர் சுற்றும்
     பெரியதும் பிக்கைக் கற்பக முற்றங்
          கரதலம் பற்றப் பெற்றவொ ருத்தன் ...... ஜகதாதை
புனவிளந் தத்தைக் கிச்சையு ரைக்கும்
     புரவலன் பத்தர்க் குத்துணை நிற்கும்
          புதியவன் செச்சைப் புட்பம ணக்கும் ...... பலபாரப்
புயனெனுஞ் சொற்கற் றுப்பிற கற்கும்
     பசையொழிந் தத்தத் திக்கென நிற்கும்
          பொருடொறும் பொத்தப் பட்டதொ ரத்தம் ...... பெறுவேனோ
அனல்விடுஞ் செக்கட் டிக்கய மெட்டும்
     பொரவரிந் திட்டெட் டிற்பகு திக்கொம்
          பணிதருஞ் சித்ரத் தொற்றையு ரத்தன் ...... திடமாக
அடியொடும் பற்றிப் பொற்கயி லைக்குன்
     றதுபிடுங் கப்புக் கப்பொழு தக்குன்
          றணிபுயம் பத்துப் பத்துநெ ரிப்புண் ...... டவனீடுந்
தனதொரங் குட்டத் தெட்பல டுக்குஞ்
     சரியலன் கொற்றத் துக்ரவ ரக்கன்
          தசமுகன் கைக்குக் கட்கம ளிக்கும் ...... பெரியோனுந்
தலைவியும் பக்கத் தொக்கவி ருக்குஞ்
     சயிலமுந் தெற்குச் சற்குரு வெற்புந்
          தணியலும் பெற்றுக் கச்சியில் நிற்கும் ...... பெருமாளே.


கன க்ரவுஞ்சத்தில் சத்தியை விட்டு அன்று
     அசுரர் தண்டத்தைச் செற்று அவ்விதழ்ப்
        பங்கயனை முன் குட்டிக் கைத்தளை இட்டு.....உம்பரை ஆளும்
கடவுள் அன்புற்றுக் கற்றவர் சுற்றும்
     பெரிய தும்பிக்கைக் கற்பக(ம்)முன் தம்
        கர தலம் பற்றப் பெற்ற ஒருத்தன்.....ஜக தாதை
புன இளம் தத்தைக்கு இச்சை உரைக்கும்
     புரவலன் பத்தர்க்குத் துணை நிற்கும்
        புதியவன் செச்சைப் புட்பம் மணக்கும்.....பல பாரப்
புயன் எனும் சொல் கற்றுப் பிற கற்கும்
     பசை ஒழிந்து அத்தத்து இக்கு என நிற்கும்
        பொருள் தொறும் பொத்தப பட்டது ஒர் அத்தம்.....பெறுவேனோ
அனல் விடும் செக் கண் திக்(கு) கயம் எட்டும்
     பொர அரிந்திட்ட எட்டில் பகுதிக் கொம்பு
        அணி தரும் சித்ரத்து ஒற்றை உரத்தன்.....திடமாக
அடியொடும் பற்றிப் பொன் கயிலைக் குன்றது
     பிடுங்கப் புக்க பொழுது அக் குன்று
        அணி புயம் பத்துப் பத்து நெரிப்பு.....உண்டவன் நீடும்
தனது ஒர் அங்குட்டத்து எள் பல் அடுக்கும்
     சரி அலன் கொற்றத்து உக்ர அரக்கன்
        தச முகன் கைக்குக் கட்கம் அளிக்கும்.....பெரியோனும்
தலைவியும் பக்கத்து ஒக்க இருக்கும்
     சயிலமும் தெற்குச் சற்குரு வெற்பும்
        தணியலும் பெற்றுக் கச்சியில் நிற்கும்.....பெருமாளே.
Add (additional) Audio/Video Link

Back to Top

313   காஞ்சீபுரம்   தெரியல் அம் செச்சை  
தனதனந் தத்தத் தத்தன தத்தம்
     தனதனந் தத்தத் தத்தன தத்தம்
          தனதனந் தத்தத் தத்தன தத்தம் ...... தனதான

தெரியலஞ் செச்சைக் கொத்துமு டிக்கும்
     பரிதிகந் தத்தைச் சுற்றந டத்துஞ்
          சிறைவிடுஞ் சொர்க்கத் துச்சுர ரைக்கங் ...... கையில்வாழுஞ்
சிறுவனென் றிச்சைப் பட்டுப ஜிக்கும்
     படிபெரும் பத்திச் சித்ரக வித்வஞ்
          சிறிதுமின் றிச்சித் தப்பரி சுத்தம் ...... பிறவாதே
பரிகரஞ் சுத்தத் தக்கப்ர புத்வம்
     பதறியங் கட்டப் பட்டனர் தத்வம்
          பலவையுங் கற்றுத் தர்க்கம தத்வம் ...... பழியாதே
பரபதம் பற்றப் பெற்றஎ வர்க்கும்
     பரவசம் பற்றிப் பற்றற நிற்கும்
          பரவ்ரதம் பற்றப் பெற்றிலன் மற்றென் ...... துயர்போமோ
சரியுடன் துத்திப் பத்திமு டிச்செம்
     பணதரங் கைக்குக் கட்டிய நெட்டன்
          தனிசிவன் பக்கத் தற்புதை பற்பந் ...... திரிசூலந்
தரிகரும் பொக்கத் தக்கமொ ழிச்சுந்
     தரியரும் பிக்கப் பித்தத னத்தந்
          தரிசுரும் பிக்குப் பத்ரையெ வர்க்குந் ...... தெரியாத
பெரியபண் டத்தைச் சத்திய பித்தன்
     பிரிதியுண் கற்புப் பச்சையெ றிக்கும்
          ப்ரபையள்தண் டிற்கைப் பத்மம டப்பெண் ...... கொடிவாழ்வே
பிரமரண் டத்தைத் தொட்டதொர் வெற்பும்
     பிளவிடுஞ் சத்திக் கைத்தல நித்தம்
          பெருமிதம் பெற்றுக் கச்சியில் நிற்கும் ...... பெருமாளே.


தெரியல் அம் செச்சைக் கொத்து முடிக்கும்
     பரி திக் அந்தத்தைச் சுற்ற நடத்தும்
        சிறை விடும் சொர்க்கத்துச் சுரரைக் கங்.....கையில் வாழும்
சிறுவன் என்று இச்சைப்பட்டு பஜிக்கும்
     படி பெரும் பத்திச் சித்ர கவித்வம்
        சிறிதும் இன்றிச் சித்தப் பரி சுத்தம்.....பிறவாதே
பரிகரம் சுத்தத் தக்க ப்ரபுத்வம்
     பதறி அங்கு அட்டம் பட்டனர் தத்வம்
        பலவையும் கற்றுத் தர்க்க மதத்(து) வம்பு.....அழியாதே
பர பதம் பற்றப் பெற்ற எவர்க்கும்
     பரவசம் பற்றிப் பற்று அற நிற்கும்
        பர வ்ரதம் பற்றப் பெற்றிலன் மற்று என்.....துயர் போமோ
சரியுடன் துத்திப் பத்தி முடிச் செம்
     பண தரம் கைக்குக் கட்டிய நெட்டன்
        தனி சிவன் பக்கத்து அற்புதை பற்பம்.....திரி சூலம்
தரி கரும்பு ஒக்கத் தக்க மொழிச்
     சுந்தரி அரும்பி கப்பித்த தனத்து
        அந்தரி சுரும்பு இக்குப் பத்ரை எவர்க்கும்.....தெரியாத
பெரிய பண் தத்தைச் சத்திய பித்தன்
     பிரிதி உண் கற்புப் பச்சை எறிக்கும்
        ப்ரபையள் தண்டில் கைப் பத்ம மடப் பெண்.....கொடி வாழ்வே
பிரமர் அண்டத்தைத் தொட்டது ஒர் வெற்பும்
     பிளவிடும் சத்திக் கைத்தல நித்தம்
        பெருமிதம் பெற்றுக் கச்சியில் நிற்கும்.....பெருமாளே.
Add (additional) Audio/Video Link

Back to Top

314   காஞ்சீபுரம்   புன மடந்தைக்கு  
தனதனந் தத்தத் தத்தன தத்தம்
     தனதனந் தத்தத் தத்தன தத்தம்
          தனதனந் தத்தத் தத்தன தத்தம் ...... தனதான

புனமடந் தைக்குத் தக்கபு யத்தன்
     குமரனென் றெத்திப் பத்தர்து திக்கும்
          பொருளைநெஞ் சத்துக் கற்பனை முற்றும் ...... பிறிதேதும்
புகலுமெண் பத்தெட் டெட்டியல் தத்வம்
     சகலமும் பற்றிப் பற்றற நிற்கும்
          பொதுவையென் றொக்கத் தக்கதொ ரத்தந் ...... தனைநாளும்
சினமுடன் தர்க்கித் துச்சிலு கிக்கொண்
     டறுவருங் கைக்குத் திட்டொரு வர்க்குந்
          தெரிவரும் சத்யத் தைத்தெரி சித்துன் ...... செயல்பாடித்
திசைதொறுங் கற்பிக் கைக்கினி யற்பந்
     திருவுளம் பற்றிச் செச்சைம ணக்குஞ்
          சிறுசதங் கைப்பொற் பத்மமெ னக்கென் ...... றருள்வாயே
கனபெருந் தொப்பைக் கெட்பொரி யப்பம்
     கனிகிழங் கிக்குச் சர்க்கரை முக்கண்
          கடலைகண் டப்பிப் பிட்டொடு மொக்கும் ...... திருவாயன்
கவளதுங் கக்கைக் கற்பக முக்கண்
     திகழுநங் கொற்றத் தொற்றைம ருப்பன்
          கரிமுகன் சித்ரப் பொற்புகர் வெற்பன் ...... றனையீனும்
பனவியொன் றெட்டுச் சக்ரத லப்பெண்
     கவுரிசெம் பொற்பட் டுத்தரி யப்பெண்
          பழயஅண் டத்தைப் பெற்றம டப்பெண் ...... பணிவாரைப்
பவதரங் கத்தைத் தப்பநி றுத்தும்
     பவதிகம் பர்க்குப் புக்கவள் பக்கம்
          பயில்வரம் பெற்றுக் கச்சியில் நிற்கும் ...... பெருமாளே.


புன மடந்தைக்கு தக்க புயத்தன்
     குமரன் என்று எத்திப் பத்தர் துதிக்கும்
        பொருளை நெஞ்சத்து கற்பனை முற்றும்.....பிறிது ஏதும்
புகலும் எண்பத்து எட்டு எட்டு இயல் தத்(து)வம்
     சகலமும் பற்றி பற்று அற நிற்கும்
        பொதுவை என்று ஒக்கத் தக்கது ஓர் அத்தம்.....தனை நாளும்
சினமுடன் தர்க்கித்துச் சிலுக்கிக் கொண்டு
     அறுவரும் கைக்குத்து இட்டு ஒருவர்க்கும்
        தெரி அரும் சத்(தி)யத்தை தெரிசித்து உன்.....செயல் பாடி
திசைதொறும் கற்பிக்கைக்கு இனி அற்பம்
     திரு உ(ள்)ளம் பற்றி செச்சை மணக்கும்
        சிறு சதங்கைப் பொன் பத்மம் எனக்கு என்று.....அருள்வாயே
கனப் பெரும் தொப்பைக்கு எள் பொரி அப்பம்
     கனி கிழங்கு இக்கு சர்க்கரை முக்கண்
        கடலை கண்டு அப்பி பிட்டொடு மொக்கும்.....திருவாயன்
கவள(ம்) துங்கக் கை கற்பக(ம்) முக்கண்
     திகழு(ம்) நம் கொற்றத்து ஒற்றை மருப்பன்
        கரி முகன் சித்ரப் பொன் புகர் வெற்பன்.....தனை ஈனும்
பனவி ஒன்று எட்டுச் சக்ரத் தலப் பெண்
     கவுரி செம் பொன் பட்டுத் தரி அப்பெண்
        பழய அண்டத்தைப் பெற்ற மடப் பெண்.....பணிவாரை
பவ தரங்கத்தைத் தப்ப நிறுத்தும்
     பவதி கம்பர்க்குப் புக்கவள் பக்கம்
        பயில் வரம் பெற்றுக் கச்சியில் நிற்கும்.....பெருமாளே.
Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=64R8J6b74aI
Add (additional) Audio/Video Link

Back to Top

315   காஞ்சீபுரம்   கறை இலங்கும்  
தனதனந் தத்தத் தத்தன தத்தம்
     தனதனந் தத்தத் தத்தன தத்தம்
          தனதனந் தத்தத் தத்தன தத்தம் ...... தனதான

கறையிலங் குக்ரச் சத்தித ரிக்குஞ்
     சரவணன் சித்தத் துக்குளொ ளிக்குங்
          கரவடன் கொற்றக் குக்குட வத்தன் ...... தனிவீரக்
கழலிடும் பத்மக் கட்செவி வெற்பன்
     பழநிமன் கச்சிக் கொற்றவன் மற்றுங்
          கடகவஞ் சிக்குக் கர்த்தனெ னச்செந் ...... தமிழ்பாடிக்
குறையிலன் புற்றுக் குற்றம றுக்கும்
     பொறைகள்நந் தற்பப் புத்தியை விட்டென்
          குணமடங் கக்கெட் டுக்குண மற்றொன் ...... றிலதான
குணமடைந் தெப்பற் றுக்களு மற்றுங்
     குறியொடுஞ் சுத்தப் பத்தரி ருக்குங்
          குருபதஞ் சித்திக் கைக்கருள் சற்றுங் ...... கிடையாதோ
பிறைகரந் தைக்கொத் துப்பணி மத்தந்
     தலையெலும் பப்புக் கொக்கிற கக்கம்
          பிரமனன் றெட்டற் கற்றதி ருக்கொன் ...... றையும்வேணிப்
பிறவுநின் றொக்கத் தொக்கும ணக்குஞ்
     சரணியம் பத்மக் கைக்கொடி முக்கண்
          பெறுகரும் பத்தக் கத்தருள் நற்பங் ...... கயவாவி
திறைகொளுஞ் சித்ரக் குத்துமு லைக்கொம்
     பறியுமந் தத்தைக் கைக்கக மொய்க்குந்
          த்ரிபுரைசெம் பட்டுக் கட்டுநு சுப்பின் ...... திருவான
தெரிவையந் துர்க்கிச் சத்தியெ வர்க்குந்
     தெரிவருஞ் சுத்தப் பச்சைநி றப்பெண்
          சிறுவதொண் டர்க்குச் சித்திய ளிக்கும் ...... பெருமாளே.


கறை இலங்கும் உக்ரச் சத்தி தரிக்கும்
     சரவணன் சித்தத்துக்குள் ஒளிக்கும்
        கரவடன் கொற்றக் குக்குடவத்தன்.....தனி வீரக்
கழல் இடும் பத்ம கண் செவி வெற்பன்
     பழநி மன் கச்சி கொற்றவன் மற்றும்
        கடக வஞ்சிக்கு கர்த்தன் எனச்செம்.....தமிழ் பாடி
குறை இல் அன்புற்று குற்றம் அறுக்கும்
     பொறைகள் நந்த அற்பப் புத்தியை விட்டு என்
        குணம் அடங்கக் கெட்டு குணம் மற்று ஒன்று.....இலதான
குணம் அடைந்து எப்பற்றுக்களும் அற்று
     குறியொடும் சுத்த பத்தர் இருக்கும்
        குரு பதம் சித்திக்கைக்கு அருள் சற்றும்.....கிடையாதோ
பிறை கரந்தை கொத்து பணி மத்தம்
     தலை எலும்பு அப்பு கொக்கின் இறகு அக்கம்
        பிரமன் அன்று எட்டற்கு அற்ற திரு கொன்.....றையும் வேணி
பிறவு நின்று ஒக்க தொக்கு மணக்கும்
     சரணி அம் பத்ம கைக் கொடி முக்கண்
        பெறு கரும்பு அத் தக்கது அருள் நல் பங்.....கயவாவி
திறை கொளும் சித்ரக் குத்து முலைக் கொம்பு
     அறியும் அம் தத்தை கைக்கு அகம் மொய்க்கும்
        த்ரிபுரை செம்பட்டுக் கட்டு நுசுப்பின்.....திருவான
தெரிவை அம் துர்க்கி சத்தி எவர்க்கும்
     தெரி அரும் சுத்த பச்சை நிற பெண்
        சிறுவ தொண்டர்க்கு சித்தி அளிக்கும்.....பெருமாளே.
Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=CUmk0ZRg390
Add (additional) Audio/Video Link

Back to Top

316   காஞ்சீபுரம்   செறிதரும் செப்பத்து  
தனதனந் தத்தத் தத்தன தத்தம்
     தனதனந் தத்தத் தத்தன தத்தம்
          தனதனந் தத்தத் தத்தன தத்தம் ...... தனதான

செறிதரும் செப்பத் துற்பல வெற்பும்
     பிறிதுமங் கத்தைக் குற்றவி ருப்புஞ்
          சிகரிதுண் டிக்கக் கற்றத னிச்செஞ் ...... சுடர்வேலும்
திரள்புயங் கொத்துப் பட்டவ னைத்துந்
     தெளியநெஞ் சத்துப் புற்றும யக்கம்
          திகழ்ப்ரபஞ் சத்தைப் புற்புத மொக்கும் ...... படிநாடும்
அறிவறிந் தத்தற் கற்றது செப்புங்
     கடவுளன் பத்தர்க் கச்சம றுத்தன்
          பருள்பவன் பொற்புக் கச்சியுள் நிற்கும் ...... பெருமானென்
றவிழுமன் புற்றுக் கற்றும னத்தின்
     செயலொழிந் தெட்டப் பட்டத னைச்சென்
          றடைதரும் பக்வத் தைத்தமி யெற்கென் ...... றருள்வாயே
குறியவன் செப்பப் பட்டஎ வர்க்கும்
     பெரியவன் கற்பிக் கப்படு சுக்ரன்
          குலைகுலைந் துட்கக் சத்யமி ழற்றுஞ் ...... சிறுபாலன்
குதலையின் சொற்குத் தர்க்கமு ரைக்குங்
     கனகனங் கத்திற் குத்திநி ணச்செங்
          குடர்பிடுங் கித்திக் குற்றமு கச்சிங் ...... கமுராரி
பொறிவிடுந் துத்திக் கட்செவி யிற்கண்
     துயில்கொளுஞ் சக்ரக் கைக்கிரி சுத்தம்
          புயலெனும் பொற்புப் பெற்றநி றத்தன் ...... ஜகதாதை
புனிதசங் கத்துக் கைத்தல நிர்த்தன்
     பழையசந் தத்தைப் பெற்றம டப்பெண்
          புகலுகொண் டற்குச் சித்திய ளிக்கும் ...... பெருமாளே.


செறிதரும் செப்பத்து உற்பல வெற்பும்
     பிறிதும் அங்கு அத்தைக்கு உற்ற இருப்பும்
        சிகரி துண்டிக்கக் கற்ற தனிச்செஞ்.....சுடர்வேலும்
திரள்புயங் கொத்துப் பட்ட அனைத்தும்
     தெளிய நெஞ்சத் துப்பு உற்று மயக்கம்
        திகழ் ப்ரபஞ்சத்தைப் புற்புதம் ஒக்கும்.....படி நாடும்
அறிவறிந்து அத்தற் கற்றது செப்புங்
     கடவுளன் பத்தர்க்கு அச்சம் அறுத்தன்
        பருள்பவன் பொற்புக் கச்சியுள் நிற்கும்.....பெருமானென்று
அவிழும் அன்புற்றுக் கற்று மனத்தின்
     செயலொழிந்து எட்டப் பட்டதனைச்சென்று
        அடைதரும் பக்வத்தைத் தமியெற்கு என்.....றருள்வாயே
குறியவன் செப்பப் பட்ட எவர்க்கும்
     பெரியவன் கற்பிக்கப்படு சுக்ரன்
        குலைகுலைந்து உட்கக் சத்யமிழற்றுஞ்.....சிறுபாலன்
குதலையின் சொற்குத் தர்க்கமு ரைக்குங்
     கனகன் அங்கத்தில் குத்தி நிணச்செங்
        குடர் பிடுங்கி திக்குற்ற முகச்சிங்.....கமுராரி
பொறிவிடுந் துத்திக் கட்செவி யிற்கண்
     துயில்கொளுஞ் சக்ரக் கைக்கிரி சுத்தம்
        புயலெனும் பொற்புப் பெற்றநி றத்தன்.....ஜகதாதை
புனித சங்கத்துக் கைத்தல நிர்த்தன்
     பழைய சந்தத்தைப் பெற்ற மடப்பெண்
        புகலு கொண்டற்குச் சித்தியளிக்கும்.....பெருமாளே.
Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=QBsmYnJEkck
Add (additional) Audio/Video Link

Back to Top

317   காஞ்சீபுரம்   அரி அயன் புட்பி  
தனதனந் தத்தத் தத்தன தத்தம்
     தனதனந் தத்தத் தத்தன தத்தம்
          தனதனந் தத்தத் தத்தன தத்தம் ...... தனதான

அரியயன் புட்பிக் கக்குழு மிக்கொண்
     டமரர்வந் திக்கத் தட்டுரு வச்சென்
          றவுணரங் கத்தைக் குத்திமு றித்தங் ...... கொருகோடி
அலகைநின் றொத்தித் தித்திய றுத்தும்
     பலவியங் கொட்டச் சக்கடி கற்றந்
          தரியுடன் பற்றிக் குச்சரி மெச்சும் ...... படிபாடிப்
பரிமுகங் கக்கச் செக்கண்வி ழித்தும்
     பவுரிகொண் டெட்டுத் திக்கையு டைத்தும்
          படுகளம் புக்குத் தொக்குந டிக்கும் ...... படிமோதிப்
படைபொருஞ் சத்திப் பத்மநி னைத்துஞ்
     சரவணன் கச்சிப் பொற்பனெ னப்பின்
          பரவியுஞ் சித்தத் துக்குவ ரத்தொண் ...... டடைவேனோ
பெரியதண் செச்சைக் கச்சணி வெற்பும்
     சிறியவஞ் சிக்கொத் தெய்த்தநு சுப்பும்
          ப்ரிதியொழிந் தொக்கக் கைக்கிளை துத்தங் ...... குரலாதி
பிரிவில்கண் டிக்கப் பட்டவு ருட்டும்
     கமுகமுஞ் சிற்பச் சித்ரமு ருக்கும்
          பிரதியண் டத்தைப் பெற்றருள் சிற்றுந் ...... தியும்நீலக்
கரியகொண் டற்கொப் பித்தக துப்புந்
     திலதமுஞ் செப்பொற் பட்டமு முத்தின்
          கனவடங் கட்டப் பட்டக ழுத்துந் ...... திருவான
கருணையுஞ் சுத்தப் பச்சைவ னப்புங்
     கருதுமன் பர்க்குச் சித்திய ளிக்குங்
          கவுரியம் பைக்குப் புத்ரஎ வர்க்கும் ...... பெருமாளே.


அரி அயன் புட்பிக்கக் குழுமிக் கொண்டு
     அமரர் வந்திக்க தட்டு உருவச் சென்று
        அவுணர் அங்கத்தைக் குத்தி முறித்து அங்கு.....ஒரு கோடி
அலகை நின்று ஒத்தித் தித்தி அறுத்தும்
     பல இயம் கொட்டச் சக்கடி கற்று
        அந்தரியுடன் பற்றிக் குச்சரி மெச்சும்.....படிபாடி
பரி முகம் கக்கச் செக்கண் விழித்தும்
     பவுரி கொண்டு எட்டுத் திக்கை உடைத்தும்
        படு களம் புக்குத் தொக்கு நடிக்கும்.....படிமோதி
படை பொரும் சத்திப் பத்ம நினைத்தும்
     சரவணன் கச்சி பொற்பன் எனப் பின்
        பரவியும் சித்தத்துக்கு வரத் தொண்டு.....அடைவேனோ
பெரிய தண் செச்சைக் கச்சு அணி வெற்பும்
     சிறிய வஞ்சிக் கொத்து எய்த்தநு சுப்பும்
        ப்ரிதி ஒழிந்து ஒக்கக் கைக்கிளை துத்தம்.....குரல் ஆதி
பிரிவில் கண்டு இக்கப்பட்ட உருட்டும்
     கமுகமும் சிற்பச் சித்ரம் உருக்கும்
        பிரதி அண்டத்தைப் பெற்று அருள்சிற்று.....உந்தியும் நீலக்
கரிய கொண்டற்கு ஒப்பித்த கதுப்பும்
     திலகமும் செம் பொன் பட்டமும் முத்தின்
        கன வடம் கட்டப்பட்ட கழுத்தும்.....திருவான
கருணையும் சுத்தப் பச்சை வனப்பும்
     கருதும் அன்பர்க்குச் சித்தி அளிக்கும்
        கவுரி அம்பைக்கு புத்ர எவர்க்கும்.....பெருமாளே.
Add (additional) Audio/Video Link

Back to Top

318   காஞ்சீபுரம்   கனி தரும் கொக்கு  
தனதனந் தத்தத் தத்தன தத்தம்
     தனதனந் தத்தத் தத்தன தத்தம்
          தனதனந் தத்தத் தத்தன தத்தம் ...... தனதான

கனிதருங் கொக்குக் கட்செவி வெற்பும்
     பழநியுந் தெற்குச் சற்குரு வெற்புங்
          கதிரையுஞ் சொற்குட் பட்டதி ருச்செந் ...... திலும்வேலும்
கனவிலுஞ் செப்பத் தப்புமெ னைச்சங்
     கடவுடம் புக்குத் தக்கவ னைத்துங்
          களவுகொண் டிட்டுக் கற்பனை யிற்கண் ...... சுழல்வேனைப்
புனிதனம் பைக்குக் கைத்தல ரத்நம்
     பழையகங் கைக்குற் றப்புது முத்தம்
          புவியிலன் றைக்கற் றெய்ப்பவர் வைப்பென் ...... றுருகாஎப்
பொழுதும் வந்திக்கைக் கற்றஎ னைப்பின்
     பிழையுடன் பட்டுப் பத்தருள் வைக்கும்
          பொறையையென் செப்பிச் செப்புவ தொப்பொன் ...... றுளதோதான்
அனனியம் பெற்றற் றற்றொரு பற்றுந்
     தெளிதருஞ் சித்தர்க் குத்தெளி சிற்கொந்
          தமலைதென் கச்சிப் பிச்சிம லர்க்கொந் ...... தளபாரை
அறவிநுண் பச்சைப் பொற்கொடி கற்கண்
     டமுதினுந் தித்திக் கப்படு சொற்கொம்
          பகிலஅண் டத்துற் பத்திசெய் முத்தின் ...... பொலமேருத்
தனிவடம் பொற்புப் பெற்றமு லைக்குன்
     றிணைசுமந் தெய்க்கப் பட்டநு சுப்பின்
          தருணிசங் குற்றுத் தத்துதி ரைக்கம் ...... பையினூடே
தவமுயன் றப்பொற் றப்படி கைக்கொண்
     டறமிரண் டெட்டெட் டெட்டும் வளர்க்கும்
          தலைவிபங் கர்க்குச் சத்யமு ரைக்கும் ...... பெருமாளே.


கனி தரும் கொக்கு கண் செவி வெற்பும்
     பழனியும் தெற்குச் சற்குரு வெற்பும்
        கதிரையும் சொற்கு உட்பட்ட திருச்செந்.....திலும் வேலும்
கனவிலும் செப்பத் தப்பும் எ(ன்)னை
     சங்கட உடம்புக்குத் தக்க அனைத்தும்
        களவு கொண்டிட்டு கற்பனையில் கண்.....சுழல்வேனை
புனிதன் அம்பைக்குக் கைத்தல ரத்நம்
     பழைய கங்கைக்கு உற்ற புது முத்தம்
        புவியில் அன்றைக்கு அற்று எய்ப்பவர் வைப்பு.....என்று உருகா
எப்பொழுதும் வந்திக்கைக்கு அற்ற எ(ன்)னை
     பிழையுடன் பட்டு பத்தருள் வைக்கும் பின்
        பொறையை என் செப்பி செப்புவது ஒப்பு ஒன்று.....உளதோ தான்
அனனியம் பெற்று அற்று அற்று ஒரு பற்றும்
     தெளி தரும் சித்தர்க்கு தெளிசில் கொந்த
        அமலை தென் கச்சி பிச்சி மலர் கொந்.....தள பாரை
அறவி நுண் பச்சை பொன் கொடி கற்கண்டு
     அமுதினும் தித்திக்கப்படு சொல் கொம்பு
        அகில அண்டத்து உற்பத்தி செய் முத்தின்.....பொல(ம்) மேரு
தனி வடம் பொற்பு பெற்ற முலை குன்று
     இணை சுமந்து எய்க்கப்பட்ட நுசுப்பின்
        தருணி சங்கு உற்று தத்து திரை கம்.....பையினூடே
தவம் முயன்று அப் பொற்றப் படி கைக்கொண்டு
     அறம் இரண்டு எட்டுஎட்டும் வளர்க்கும்
        தலைவி பங்கர்க்கு சத்யம் உரைக்கும்.....பெருமாளே.
Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=dpwx3G2fUIM
Add (additional) Audio/Video Link

Back to Top

319   காஞ்சீபுரம்   தசைதுறுந் தொக்கு  
தனதனந் தத்தத் தத்தன தத்தம்
     தனதனந் தத்தத் தத்தன தத்தம்
          தனதனந் தத்தத் தத்தன தத்தம் ...... தனதான

தசைதுறுந் தொக்குக் கட்டளை சட்டஞ்
     சரியவெண் கொக்குக் கொக்கந ரைத்தந்
          தலையுடம் பெய்த்தெற் புத்தளை நெக்கிந் ...... த்ரியமாறித்
தடிகொடுந் திக்குத் தப்பந டக்கும்
     தளர்வுறுஞ் சுத்தப் பித்தவி ருத்தன்
          தகைபெறும் பற்கொத் துக்கள னைத்துங் ...... கழலாநின்
றசலருஞ் செச்செச் செச்செயெ னச்சந்
     ததிகளும் சிச்சிச் சிச்சியெ னத்தங்
          கரிவையும் துத்துத் துத்துவெ னக்கண் ...... டுமியாமற்
றவருநிந் திக்கத் தக்கபி றப்பிங்
     கலமலஞ் செச்சைச் சித்ரம ணித்தண்
          டையரவிந் தத்திற் புக்கடை தற்கென் ...... றருள்வாயே
குசைமுடிந் தொக்கப் பக்கரை யிட்டெண்
     டிசையினுந் தத்தப் புத்தியை நத்துங்
          குரகதங் கட்டிக் கிட்டிந டத்துங் ...... கதிர்நேமிக்
குலரதம் புக்கொற் றைக்கணை யிட்டெண்
     டிரிபுரஞ் சுட்டுக் கொட்டைப ரப்புங்
          குரிசில்வந் திக்கக் கச்சியில் நிற்குங் ...... கதிர்வேலா
திசைமுகன் தட்டுப் பட்டெழ வற்குஞ்
     சிகரியுங் குத்துப் பட்டுவி ழத்தெண்
          டிரையலங் கத்துப் புக்குல விச்சென் ...... றெதிரேறிச்
சிரமதுங் கப்பொற் கட்டிகை யிட்டன்
     றவுணர்நெஞ் சிற்குத் திக்கறை கட்கஞ்
          சிதறிநின் றெட்டிப் பொட்டெழ வெட்டும் ...... பெருமாளே.


தசை துறுந்து ஒக்குக் கட்டு அளை சட்ட(க)ம்
     சரிய வெண் கொக்குக்கு ஒக்க நரைத்து அம்
        தலை உடம்பு எய்த்து எற்புத் தளை நெக்கி.....இந்த்ரிய(ம்) மாறி
தடி கொ(ண்)டும் திக்குத் தப்ப நடக்கும்
     தளர்வு உறும் சுத்தப் பித்த விருத்தன்
        தகை பெறும் பல் கொத்துக்கள் அனைத்தும்.....கழலா நின்று
அசலரும் செச்செ செச்செ எனச்
     சந்ததிகளும் சிச்சி சிச்சி என தங்கு
        அரிவையும் துத்து துத்து எனக் கண்டு.....உமியா மற்றவரு(ம்)
நிந்திக்கத் தக்க பிறப்பு இங்கு
     அலம் அலம் செச்சைச் சித்ர மணித் தண்டை
        அரவிந்தத்தில் புக்கு அடைதற்கு என்று.....அருள்வாயே
குசை முடிந்து ஒக்கப் பக்கரை இட்டு எண்
     திசையினும் தத்தப் புத்தியை நத்தும்
        குரகதம் கட்டிக் கிட்டி நடத்தும்.....கதிர் நேமி
குல ரதம் புக்கு ஒற்றைக் கணை இட்டு எண்
     திரிபுரம் சுட்டுக் கொட்டைப் பரப்பும்
        குரிசில் வந்திக்கக் கச்சியில் நிற்கும்.....கதிர் வேலா
திசை முகன் தட்டுப் பட்டு எழ வற்கும்
     சிகரியும் குத்துப்பட்டு விழ தெண்
        திரை அலங்கத்துப் புக்கு உலவிச் சென்று.....எதிர் ஏறிச்
சிரம் அதுங்க பொன் கண் திகை இட்டு
     அன்று அவுணர் நெஞ்சில் குத்திக் கறை கட்கம்
        சிதறி நின்று எட்டிப் பொட்டு எழ வெட்டும்.....பெருமாளே.
Add (additional) Audio/Video Link

Back to Top

320   காஞ்சீபுரம்   புரைபடுஞ் செற்ற  
தனதனந் தத்தத் தத்தன தத்தம்
     தனதனந் தத்தத் தத்தன தத்தம்
          தனதனந் தத்தத் தத்தன தத்தம் ...... தனதான

புரைபடுஞ் செற்றக் குற்றம னத்தன்
     தவமிலன் சுத்தச் சத்யஅ சத்யன்
          புகலிலன் சுற்றச் செத்தையுள் நிற்குந் ...... துரிசாளன்
பொறையிலன் கொத்துத் தத்வவி கற்பஞ்
     சகலமும் பற்றிப் பற்றற நிற்கும்
          பொருளுடன் பற்றுச் சற்றுமில் வெற்றன் ...... கொடியேனின்
கரையறுஞ் சித்ரச் சொற்புகழ் கற்குங்
     கலையிலன் கட்டைப் புத்தியன் மட்டன்
          கதியிலன் செச்சைப் பொற்புய வெற்புங் ...... கதிர்வேலுங்
கதிரையுஞ் சக்ரப் பொற்றையு மற்றும்
     பதிகளும் பொற்புக் கச்சியு முற்றுங்
          கனவிலுஞ் சித்தத் திற்கரு திக்கொண் ...... டடைவேனோ
குரைதருஞ் சுற்றுச் சத்தச முத்ரங்
     கதறிவெந் துட்கக் கட்புர துட்டன்
          குலமடங் கக்கெட் டொட்டொழி யச்சென் ...... றொருநேமிக்
குவடொதுங் கச்சொர்க் கத்தரி டுக்கங்
     கெடநடுங் கத்திக் கிற்கிரி வர்க்கங்
          குலிசதுங் கக்கைக் கொற்றவ னத்தங் ...... குடியேறத்
தரைவிசும் பைச்சிட் டித்தஇ ருக்கன்
     சதுர்முகன் சிட்சைப் பட்டொழி யச்சந்
          ததமும்வந் திக்கப் பெற்றவர் தத்தம் ...... பகையோடத்
தகையதண் டைப்பொற் சித்ரவி சித்ரந்
     தருசதங் கைக்கொத் தொத்துமு ழக்குஞ்
          சரணகஞ் சத்திற் பொற்கழல் கட்டும் ...... பெருமாளே.


புரைபடுஞ் செற்றக் குற்றமனத்தன்
     தவமிலன் சுத்தச் சத்யஅ சத்யன்
        புகலிலன் சுற்றச் செத்தையுள் நிற்குந்.....துரிசாளன்
பொறையிலன் கொத்துத் தத்வவி கற்பஞ்
          சகலமும் பற்றி பற்றற நிற்கும்
        பொருளுடன் பற்றுச் சற்றுமில் வெற்றன்.....கொடியேன் நின்
கரையறுஞ் சித்ரச் சொற்புகழ் கற்குங்
     கலையிலன் கட்டைப் புத்தியன் மட்டன்
        கதியிலன் செச்சைப் பொற்புய வெற்புங்.....கதிர்வேலும்
கதிரையுஞ் சக்ரப் பொற்றையு மற்றும்
     பதிகளும் பொற்புக் கச்சியு முற்றும்
        கனவிலும் சித்தத்தில் கருதிக்கொண்டு.....அடைவேனோ
குரைதருஞ் சுற்றுச் சத்தச முத்ரங்
     கதறிவெந்து உட்க கட்புர துட்டன்
        குலமடங்கக்கெட்டு ஒட்டொழிய சென்று.....ஒருநேமிக்
குவடு ஒதுங்க சொர்க்கத்தர் இடுக்கங்
     கெட நடுங்கத் திக்கிற் கிரி வர்க்கம்
        குலிச துங்கக்கைக் கொற்றவன் நத்தங்.....குடியேற
தரைவிசும்பைச் சிட்டித்த இருக்கன்
     சதுர்முகன் சிட்சைப் பட்டொழிய சந்ததமும்
        வந்திக்கப் பெற்றவர் தத்தம்.....பகையோட
தகைய தண்டைப்பொற் சித்ரவி சித்ரந்
     தருசதங்கைக் கொத்து ஒத்துமு ழக்குஞ்
        சரண கஞ்சத்தில் பொற்கழல் கட்டும்.....பெருமாளே.
Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=Fbtgwe3TdSA
Add (additional) Audio/Video Link

Back to Top

321   காஞ்சீபுரம்   சலமலம் விட்ட  
தனதன தத்தத் தனந்த தந்தன
     தனதன தத்தத் தனந்த தந்தன
          தனதன தத்தத் தனந்த தந்தன ...... தனதான

சலமலம் விட்டத் தடம்பெ ருங்குடில்
     சகலவி னைக்கொத் திருந்தி டும்படி
          சதிரவு றுப்புச் சமைந்து வந்தொரு ...... தந்தைதாயும்
தரவரு பொய்க்குட் கிடந்த கந்தலி
     லுறையுமு யிர்ப்பைச் சமன்து ரந்தொரு
          தனியிலி ழுக்கப் படுந்த ரங்கமும் ...... வந்திடாமுன்
பலவுரு வத்தைப் பொருந்தி யன்றுயர்
     படியுநெ ளிக்கப் படர்ந்த வன்கண
          படமயில் புக்குத் துரந்து கொண்டிகல் ...... வென்றிவேலா
பரிமள மிக்கச் சிவந்த நின்கழல்
     பழுதற நற்சொற் றெரிந்து அன்பொடு
          பகர்வதி னிச்சற் றுகந்து தந்திட ...... வந்திடாயோ
சிலையுமெ னப்பொற் சிலம்பை முன்கொடு
     சிவமய மற்றுத் திடங்கு லைந்தவர்
          திரிபுர மத்தைச் சுடுந்தி னந்தரி ...... திண்கையாளி
திருமகள் கச்சுப் பொருந்தி டுந்தன
     தெரிவையி ரக்கத் துடன்பி றந்தவள்
          திசைகளி லொக்கப் படர்ந்தி டம்பொரு ...... கின்றஞானக்
கலைகள ணைக்கொத் தடர்ந்து வம்பலர்
     நதிகொள கத்திற் பயந்து கம்பர்மெய்
          கருகஇ டத்திற் கலந்தி ருந்தவள் ...... கஞ்சபாதங்
கருணைமி குத்துக் கசிந்து ளங்கொடு
     கருதும வர்க்குப் பதங்கள் தந்தருள்
          கவுரிதி ருக்கொட் டமர்ந்த இநதிரர் ...... தம்பிரானே.


சல மலம் விட்டத் தடம் பெரும் குடில்
     சகல வினைக் கொத்து இருந்திடும்படி
        சதிர உறுப்புச் சமைந்து வந்த ஒரு.....தந்தை தாயும்
தர வரு பொய்க்குள் கிடந்த கந்தலில்
     உறையும் உயிர்ப்பை சமன் துரந்து ஒரு
        தனியில் இழுக்கப்படும் தரங்கமும்.....வந்திடா முன்
பல உருவத்தைப் பொருந்தி அன்று உயர்
     படியு(ம்) நெளிக்கப் படர்ந்தவன் கண
        பட மயில் புக்குத் துரந்து கொண்டு இகல்.....வென்றி வேலா
பரிமள மிக்கச் சிவந்த நின் கழல்
     பழுது அற நல் சொல் தெரிந்து அன்பொடு
        பகர்வது இனி சற்று உகந்து தந்திட.....வந்திடாயோ
சிலையும் எனப் பொன் சிலம்பை முன் கொடு
     சிவ மயம் அற்றுத் திடம் குலைந்தவர்
        திரி புரம் அத்தை சுடும் தினம் தரி.....திண் கையாளி
திரு மகள் கச்சுப் பொருந்திடும் தன
     தெரிவை இரக்கத்துடன் பிறந்தவள்
        திசைகளில் ஒக்கப் படர்ந்து இடம் பொரு.....கின்ற ஞானக்
கலைகள் அணை கொத்து அடர்ந்து வம்பு அலர்
     நதி கொள் அகத்தில் பயந்து கம்பர் மெய்
        கருக இடத்தில் கலந்து இருந்தவள்.....கஞ்ச பாதம்
கருணை மிகுத்துக் கசிந்த உளம் கொடு
     கருதும் அவர்க்குப் பதங்கள் தந்து அருள்
        கவுரி திருக் கொட்டு அமர்ந்த இந்திரர்.....தம்பிரானே.
Add (additional) Audio/Video Link

Back to Top

322   காஞ்சீபுரம்   தலை வலையத்து  
தனதன தத்தத் தனந்த தந்தன
     தனதன தத்தத் தனந்த தந்தன
          தனதன தத்தத் தனந்த தந்தன ...... தனதான

தலைவலை யத்துத் தரம்பெ றும்பல
     புலவர் மதிக்கச் சிகண்டி குன்றெறி
          தருமயில் செச்சைப் புயங்க யங்குற ...... வஞ்சியோடு
தமனிய முத்துச் சதங்கை கிண்கிணி
     தழுவிய செக்கச் சிவந்த பங்கய
          சரணமும் வைத்துப் பெரும்ப்ர பந்தம்வி ...... ளம்புகாளப்
புலவனெ னத்தத் துவந்த ரந்தெரி
     தலைவனெ னத்தக் கறஞ்செ யுங்குண
          புருஷனெ னப்பொற் பதந்த ருஞ்சன ...... னம்பெறாதோ
பொறையனெ னப்பொய்ப் ப்ரபஞ்ச மஞ்சிய
     துறவனெ னத்திக் கியம்பு கின்றது
          புதுமைய லச்சிற் பரம்பொ ருந்துகை ...... தந்திடாதோ
குலசயி லத்துப் பிறந்த பெண்கொடி
     யுலகடை யப்பெற் றவுந்தி யந்தணி
          குறைவற முப்பத் திரண்ட றம்புரி ...... கின்றபேதை
குணதரி சக்ரப் ப்ரசண்ட சங்கரி
     கணபண ரத்நப் புயங்க கங்கணி
          குவடுகு னித்துப் புரஞ்சு டுஞ்சின ...... வஞ்சிநீலி
கலபவி சித்ரச் சிகண்டி சுந்தரி
     கடியவி டத்தைப் பொதிந்த கந்தரி
          கருணைவி ழிக்கற் பகந்தி கம்பரி ...... யெங்களாயி
கருதிய பத்தர்க் கிரங்கு மம்பிகை
     சுருதிது திக்கப் படுந்த்ரி யம்பகி
          கவுரிதி ருக்கொட் டமர்ந்த இந்திரர் ...... தம்பிரானே.


தலை வலையத்துத் தரம்பெறும்பல
     புலவர் மதிக்கச் சிகண்டி குன்றெறி
        தரும் அயில் செச்சைப் புயம் கயங்குற.....வஞ்சியோடு
தமனிய முத்துச் சதங்கை கிண்கிணி
     தழுவிய செக்கச் சிவந்த பங்கய
        சரணமும் வைத்துப் பெரும்ப்ர பந்தம்.....விளம்பு காளப்
புலவனென தத்துவந்தரந்தெரி
     தலைவனென தக்கறஞ்செயுங் குண
        புருஷனென பொற் பதந்தருஞ் சனனம்.....பெறாதோ
பொறையனெனப் பொய்ப் ப்ரபஞ்சம் அஞ்சிய
     துறவனென திக்கியம்புகின்றது
        புதுமையல சிற்பரம் பொருந்துகை.....தந்திடாதோ
குலசயிலத்துப் பிறந்த பெண்கொடி
     உலகடையப் பெற்றவுந்தி அந்தணி
        குறைவற முப்பத்திரண்டு அறம்புரி.....கின்றபேதை
குணதரி சக்ரப் ப்ரசண்ட சங்கரி
     கணபண ரத்நப் புயங்க கங்கணி
        குவடு குனித்துப் புரஞ்சு டுஞ்சின.....வஞ்சி நீலி
கலபவி சித்ரச் சிகண்டி சுந்தரி
     கடியவி டத்தைப் பொதிந்த கந்தரி
        கருணை விழிக்கற்பகம் திகம்பரி.....யெங்களாயி
கருதிய பத்தர்க்கிரங்கும் அம்பிகை
     சுருதிதுதிக்கப் படுந்த்ரி யம்பகி
        கவுரிதிருக்கொட்டமர்ந்த இந்திரர்.....தம்பிரானே.
Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=GjagYXernmY
Add (additional) Audio/Video Link

Back to Top

323   காஞ்சீபுரம்   இதத்துப் பற்றி  
தனத்தத்தத் தனத்தத்தத் தனத்தத்தத் தனத்தத்தத்
     தனத்தத்தத் தனத்தத்தத் ...... தனதான

இதத்துப்பற் றிதழ்த்துப்பற் றிருட்பொக்கக் கருத்திட்டத்
     தியக்கத்திற் றியக்குற்றுச் ...... சுழலாதே
எலுப்புச்சுக் கிலக்கத்தத் தடித்தொக்குக் கடத்தைப்பெற்
     றெடுத்துப்பற் றடுத்தற்பத் ...... துழலாதே
சுதத்தத்தச் சதத்தத்தப் பதத்தர்க்குற் றவற்றைச்சொற்
     றுவக்கிற்பட் டவத்தைப்பட் ...... டயராதே
துணைச்செப்பத் தலர்கொத்துற் பலச்செச்சைத் தொடைப்பத்திக்
     கடப்பப்பொற் கழற்செப்பித் ...... தொழுவேனோ
கொதித்துக்குத் திரக்கொக்கைச் சதித்துப்பற் றிகைக்குட்பொற்
     குலத்தைக்குத் திரத்தைக்குத் ...... தியவேலா
குறத்தத்தைக் கறத்தத்திக் குமுத்தத்தத் தமொக்கிக்குக்
     குலத்துக்குக் குடக்கொற்றக் ...... கொடியோனே
கதச்சுத்தச் சுதைச்சித்ரக் களிற்றுக்கொற் றவற்குக்கற்
     பகச்சொர்க்கப் புரப்பொற்பைப் ...... புரிவோனே
கடுக்கைக்கட் செவிக்கற்றைச் சடைப்பக்கக் கொடிக்கற்புக்
     கடற்கச்சிப் பதிச்சொக்கப் ...... பெருமாளே.


இதத்துப் பற்று இதழ்த் துப்பு அற்று இருள் பொக்கக் கருத்து இட்டத்து
     இயக்கத்தில் தியக்கு உற்றுச்.....சுழலாதே
எலுப்புச் சுக்கிலம் கத்தம் தடித் தொக்குக் கடத்தைப் பெற்று
     எடுத்துப் பற்று அடுத்தத் தற்பத்து.....உழலாதே
சுதத் தத் தத் சதத்து அத்தம் பதத்தர்க்கு உற்றவற்றைச் சொல்
     துவக்கில் பட்டு அவத்தைப் பட்டு.....அயராதே
துணைச் செப்பத்து அலர்க் கொத்து உற்பலம் செச்சைத் தொடைப் பத்திக்
     கடப்பம் பொற்கழல் செப்பித்.....தொழுவேனோ
கொதித்துக் குத்திரக் கொக்கைச் சதித்துப் பற்றி கைக்குள் பொற்
     குலத்தைக் குத்திரத்தைக் குத்.....திய வேலா
குறத் தத்தைக்கு அறத்து அத்திக்கு முத்த அத்தத்து அம் ஒக்கு இக்குக்
     குலத்துக்குக் குக்குடற் கொற்றக்.....கொடியோனே
கதம் சுத்தச் சுதைச் சித்ரம் களிற்றுக் கொற்றவற்குக் கற்பகச்
     சொர்க்கப்புரப் பொற்பைப்.....புரிவோனே
கடுக்கைக் கண் செவிக் கற்றைச் சடைப் பக்கக் கொடிக் கற்புக்
     கடல் கச்சிப் பதிச் சொக்கப்.....பெருமாளே.
Add (additional) Audio/Video Link

Back to Top

324   காஞ்சீபுரம்   எனக்குச்சற்று  
தனத்தத்தத் தனத்தத்தத் தனத்தத்தத் தனத்தத்தத்
     தனத்தத்தத் தனத்தத்தத் ...... தனதான

எனக்குச்சற் றுனக்குச்சற் றெனக்கத்தத் தவர்க்கிச்சைப்
     பொருட்பொற்றட் டிடிக்கைக்குக் ...... குடில்மாயம்
எனக்கட்டைக் கிடைப்பட்டிட் டனற்சுட்டிட் டடக்கைக்குப்
     பிறக்கைக்குத் தலத்திற்புக் ...... கிடியாமுன்
தினைக்குட்சித் திரக்கொச்சைக் குறத்தத்தைத் தனத்தைப்பொற்
     பெறச்செச்சைப் புயத்தொப்பித் ...... தணிவோனே
செருக்கிச்சற் றுறுக்கிச்சொற் பிரட்டத்துட் டரைத்தப்பித்
     திரட்டப்பிக் கழற்செப்பத் ...... திறல்தாராய்
பனைக்கைக்கொக் கனைத்தட்டுப் படக்குத்திப் படச்சற்பப்
     பணத்துட்கக் கடற்றுட்கப் ...... பொரும்வேலா
பரப்பற்றுச் சுருக்கற்றுப் பதைப்பற்றுத் திகைப்பற்றுப்
     பலிப்பப்பத் தருக்கொப்பித் ...... தருள்வாழ்வே
கனிக்குத்திக் கனைத்துச்சுற் றிடப்பச்சைக் கனப்பக்ஷிக்
     கிடைப்புக்குக் களிப்புக்குத் ...... திரிவோனே
கலிக்கொப்பிற் சலிப்பற்றுக் கதிக்கொத்திட் டெழிற்சத்திக்
     கடற்கச்சிப் பதிச்சொக்கப் ...... பெருமாளே.


எனக்குச்சற்று உனக்குச்சற்றெனக் கத்து அத்தவர்க்கு இச்சைப்
     பொருட்பொற் தட்டு இடு இக்கைக்குக்.....குடில் மாயம்
எனக்கட்டைக்கு இடைப்பட்டிட்டு அனற்சுட்டிட்டு அடக்கைக்கு
     பிறக்கைக்குத் தலத்திற்புக்கு.....இடியாமுன்
தினைக்குட் சித்திரக் கொச்சைக் குறத் தத்தைத் தனத்தை பொற்
     பெறச்செச்சைப் புயத்து ஒப்பித்து.....அணிவோனே
செருக்கிச்சற்று உறுக்கிச்சொற் பிரட்ட துட்டரைத்தப்பித்
     திரள் தப்பி கழற்செப்பத்.....திறல்தாராய்
பனைக்கைக் கொக்கனை தட்டுப் படக்குத்திப் பட சற்பப்
     பணத் துட்கக் கடல துட்கப்.....பொரும்வேலா
பரப்பற்றுச் சுருக்கற்றுப் பதைப்பற்றுத் திகைப்பற்று
     பலிப்பப் பத்தருக்கு ஒப்பித்.....தருள் வாழ்வே
கனிக்குத் திக்கனைத்துச் சுற்றிட பச்சைக் கனப்பக்ஷிக்கு
     இடைப்புக்குக் களிப்புக்குத்.....திரிவோனே
கலிக்கு ஒப்பிற் சலிப்பற்றுக் கதிக்கு ஒத்திட்டு எழிற்சத்திக்
     கடற்கச்சிப் பதிச்சொக்கப்.....பெருமாளே.
Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=6sxJ9SfleY4
Add (additional) Audio/Video Link

Back to Top

325   காஞ்சீபுரம்   இறைச்சிப் பற்று  
தனத்தத்தத் தனத்தத்தத் தனத்தத்தத் தனத்தத்தத்
     தனத்தத்தத் தனத்தத்தத் ...... தனதான

இறைச்சிப்பற் றிரத்தத்திட் டிசைக்கொக்கப் பரப்பப்பட்
     டெலுப்புக்கட் டளைச்சுற்றிச் ...... சுவர்கோலி
எடுத்துச்செப் பெனக்கட்டிப் புதுக்குப்புத் தகத்திற்புக்
     கெனக்குச்சற் றுனக்குச்சற் ...... றெனுமாசைச்
சிறைக்கொத்திப் பிறப்பிற்பட் டுறக்கச்சொப் பனத்துற்றுத்
     திகைக்கப்பட் டவத்தைப்பட் ...... டுழலாதுன்
திருப்பத்மத் திறத்தைப்பற் றுகைக்குச்சித் திரத்தைச்சொற்
     றிதக்கொற்றப் புகழ்ச்செப்பித் ...... திரிவேனோ
பிறைச்செக்கர்ப் புரைக்கொத்துச் சடைப்பச்சைக் கொடிக்கிச்சைப்
     பிறக்குற்றத் திருப்பக்கச் ...... சிவநாதர்
பெருக்கப்புத் தடக்கைக்கற் பகத்தொப்பைக் கணத்துக்குப்
     பிரசித்தக் கொடிக்குக்டக் ...... கொடியோனே
பறைக்கொட்டிக் களைச்சுற்றக் குறட்செக்கட் கணத்திற்குப்
     பலிக்குப்பச் சுடற்குத்திப் ...... பகிர்வேலா
பணப்பத்திக் கணத்துத்திப் படுக்கைக்கச் சபத்திச்சைப்
     படுக்கச்சிப் பதிச்சொக்கப் ...... பெருமாளே.


இறைச்சிப் பற்று இரத்தத்து இட்டு இசைக்கு ஒக்கப் பரப்பப் பட்டு
     எலுப்புக் கட்டளைச் சுற்றிச்.....சுவர் கோலி
எடுத்துச் செப்பு எனக் கட்டிப் புதுக்குப் புத்து அகத்தில் புக்கு
     எனக்குச் சற்று உனக்குச் சற்று.....எனும் ஆசைச்
சிறைக்கு ஒத்து இப் பிறப்பில் பட்டு உறக்கம் சொப்பனத்து உற்றுத்
     திகைக்க பட்டு அவத்தைப் பட்டு.....உழலாது உன்
திருப் பத்மத் திறத்தைப் பற்றுகைக்குச் சித்திரத்தைச் சொல்
     திதம் கொற்றப் புகழ்ச் செப்பித்.....திரிவேனோ
பிறைச் செக்கர் புரைக்கு ஒத்துச் சடைப் பச்சைக் கொடிக்கு இச்சைப்
     பிறக்குற்றத் திருப் பக்கச்.....சிவநாதர்
பெருக்கு அப்பு அத் தடக் கைக் கற்பகத் தொப்பைக் கணத்துக்குப்
     பிரச்சித்த கொடிக் குக்(க)டக்.....கொடியோனே
பறைக் கொட்டிக் களைச்சு உற்றக் குறள் செக்கண் கணத்திற்குப்
     பலிக்குப் பச்சுடல் குத்திப்.....பகிர் வேலா
பணம் பத்திக் கணத் துத்திப் படுக்கைக் கச்சபத்து இச்சைப்
     படுக் கச்சிப் பதிச் சொக்கப்.....பெருமாளே.
Add (additional) Audio/Video Link

Back to Top

326   காஞ்சீபுரம்   கடத்தைப் பற்று  
தனத்தத்தத் தனத்தத்தத் தனத்தத்தத் தனத்தத்தத்
     தனத்தத்தத் தனத்தத்தத் ...... தனதான

கடத்தைப்பற் றெனப்பற்றிக் கருத்துற்றுக் களித்திட்டுக்
     கயற்கட்பொற் பிணைச்சித்ரத் ...... தனமாதர்
கலைக்குட்பட் டறக்கத்திச் சலித்துக்கட் டளைச்சொற்பொய்த்
     திரைக்குட்பட் டறச்செத்திட் ...... டுயிர்போனால்
எடுத்துக்கொட் டிடக்கட்டைப் படத்தெட்டத் தணற்றட்டக்
     கொளுத்திச்சுற் றவர்ப்பற்றற் ...... றவர்போமுன்
இணக்கிப்பத் திமைச்செச்சைப் பதத்தைப்பற் றுகைக்குச்சொற்
     றமிழ்க்கொற்றப் புகழ்செப்பித் ...... திரிவேனோ
அடைத்திட்டுப் புடைத்துப்பொற் பதச்சொர்க்கத் தனைச்சுற்றிட்
     டலைப்புப்பற் றெனச்சொற்றிட் ...... டறுசூரை
அடித்துச்செற் றிடித்துப்பொட் டெழப்பொர்ப்புப் படக்குத்திட்
     டலைத்துச்சுற் றலைத்தெற்றுக் ...... கடல்மாயப்
புடைத்திட்டுப் படிக்குட்செற் றடப்புக்குக் கதத்துக்கக்
     கயிற்கொக்கைப் படக்குத்திப் ...... பொருவோனே
புனத்திற்பொற் குறத்திக்குப் புணர்க்கொத்தப் பசப்பெத்திப்
     புணர்க்கச்சிப் பதிச்சொக்கப் ...... பெருமாளே.


கடத்தைப் பற்று எனப் பற்றிக் கருத்து உற்றுக் களித்திட்டுக்
     கயல் கண் பொற்பு இணைச் சித்ரத்.....தன மாதர்
கலைக்குள் பட்டு அறக் கத்திச் சலித்துக் கட்டளைச் சொல் பொய்த்
     திரைக்குள் பட்டு அறச் செத்திட்டு.....உயிர் போனால்
எடுத்துக் கொட்டு இடக் கட்டைப் படத் தெட்டத் தணல் தட்டக்
     கொளுத்தி சுற்று அவர் பற்று அற்று.....அவர் போ முன்
இணக்கிப் பத்திமைச் செச்சைப் பதத்தைப் பற்றுகைக்குச் சொல்
     தமிழ்க் கொற்றப் புகழ்ச் செப்பித்.....திரிவேனோ
அடைத்திட்டுப் புடைத்துப் பொன் பதச் சொர்க்கத்தனைச் சுற்றிட்டு
     அலைப்புப் பற்று எனச் சொற்றிட்ட.....அறு சூரை
அடித்துச் செற்று இடித்துப் பொட்டு எழப் பொர்ப்புப் படக் குத்திட்டு
     அலைத்துச் சுற்று அலைத் தெற்றுக்.....கடல் மாயப்
புடைத்திட்டு படிக்குள் செற்று அடப் புக்குக் கதத் துக்கக்
     கயில் கொக்கைப் படக் குத்திப்.....பொருவோனே
புனத்தில் பொன் குறத்திக்குப் புணர்க்கு ஒத்தப் பசப்பு எத்திப்
     புணர்க் கச்சிப் பதிச் சொக்கப்.....பெருமாளே.
Add (additional) Audio/Video Link

Back to Top

327   காஞ்சீபுரம்   கருப் பற்றிப் பருத்து  
தனத்தத்தத் தனத்தத்தத் தனத்தத்தத் தனத்தத்தத்
     தனத்தத்தத் தனத்தத்தத் ...... தனதான

கருப்பற்றிப் பருத்தொக்கத் தரைக்குற்றிட் டுருப்பெற்றுக்
     கருத்திற்கட் பொருட்பட்டுப் ...... பயில்காலங்
கணக்கிட்டுப் பிணக்கிட்டுக் கதித்திட்டுக் கொதித்திட்டுக்
     கயிற்றிட்டுப் பிடித்திட்டுச் ...... சமனாவி
பெருக்கப்புத் தியிற்பட்டுப் புடைத்துக்கக் கிளைப்பிற்பொய்ப்
     பிணத்தைச்சுட் டகத்திற்புக் ...... கனைவோரும்
பிறத்தற்சுற் றமுற்றுற்றிட் டழைத்துத்தொக் கறக்கத்துப்
     பிறப்புப்பற் றறச்செச்சைக் ...... கழல்தாராய்
பொருப்புக்கர்ப் புரக்கச்சுத் தனப்பொற்புத் தினைப்பச்சைப்
     புனக்கொச்சைக் குறத்தத்தைக் ...... கினியோனே
புரத்தைச்சுட் டெரித்துப்பற் றலர்க்குப்பொற் பதத்துய்ப்பைப்
     புணர்த்தப்பித் தனைக்கற்பித் ...... தருள்வோனே
செருக்கக்குக் கரைக்குத்திச் செருப்புக்குப் பிடித்தெற்றிச்
     சினத்திட்டுச் சிதைத்திட்டுப் ...... பொரும்வீரா
திருத்தத்திற் புகற்சுத்தத் தமிழ்ச்செப்புத் த்ரயச்சித்ரத்
     திருக்கச்சிப் பதிச்சொக்கப் ...... பெருமாளே.


கருப் பற்றிப் பருத்து ஒக்கத் தரைக்கு உற்றிட்டு உருப் பெற்று
     கருத்தின் கண் பொருள் பட்டு.....பயில் காலம்
கணக்கிட்டுப் பிணக்கிட்டு கதித்திட்டுக் கொதித்திட்டுக்
     கயிற்றிட்டுப் பிடித்திட்டுச்.....சமன் ஆவி
பெருக்க புத்தியில் பட்டுப் புடைத் துக்கக் கிளைப் பின் பொய்
     பிணத்தைச் சுட்டு அகத்தில் புக்கு.....அனைவோரும்
பிறத்தல் சுற்றம் முற்று உற்றிட்டு அழைத்துத் தொக்கு அறக் கத்து
     பிறப்புப் பற்று அறச் செச்சைக்.....கழல் தாராய்
பொருப்புக் கர்ப்புரக் கச்சுத் தனப் பொற்புத் தினைப் பச்சைப்
     புன கொச்சைக் குறத் தத்தைக்கு.....இனியோனே
புரத்தைச் சுட்டு எரித்துப் பற்றலர்க்குப் பொற் பதத் துய்ப்பை
     புணர்த்து அப்பித்தனைக் கற்பித்து.....அருள்வோனே
செருக்கு அக் குக்கரைக் குத்திச் செருப் புக்குப் பிடித்து எற்றி
     சினத்திட்டுச் சிதைத்திட்டுப்.....பொரும் வீரா
திருத்தத்தில் புகல் சுத்தத் தமிழ்ச் செப்புத் த்ரய சித்ரத்
     திருக் கச்சிப் பதிச் சொக்கப்.....பெருமாளே.
Add (additional) Audio/Video Link

Back to Top

328   காஞ்சீபுரம்   கறுக்கப் பற்று  
தனத்தத்தத் தனத்தத்தத் தனத்தத்தத் தனத்தத்தத்
     தனத்தத்தத் தனத்தத்தத் ...... தனதான

கறுக்கப்பற் றுவர்ப்பிட்டுச் சிரித்துச்சற் றுறுக்கிக்கட்
     பிறக்கிட்டுப் படக்கற்பித் ...... திளைஞோர்தங்
கழுத்தைச்சிக் கெனக்கட்டித் தனச்செப்புப் படக்குத்திட்
     டுருக்கிக்கற் பழிக்கப்பொற் ...... பெழுகாதல்
புறப்பட்டுக் களிக்கக்கற் புரத்தைப்பிட் டரக்கிப்பொற்
     பணிக்கட்டிற் புறத்துற்றுப் ...... புணர்மாதர்
பொருத்தத்தைத் தவிர்த்துச்சற் றிரக்ஷித்துப் புரப்பப்பொற்
     பதத்தைப்பெற் றிருக்கைக்குப் ...... பெருவேனோ
திறற்கொக்கைப் படக்குத்திச் செருக்கிக்கொக் கரித்துச்சக்
     கரிக்குப்புத் திரற்குற்றுத் ...... தளைபூணச்
சினத்துப்பொற் பொருப்பைப்பொட் டெழுத்தித்திக் கரித்துப்புத்
     திரத்தத்திற் சிரித்துற்றுப் ...... பலபேய்கள்
பறிக்கப்பச் சிறைச்சிக்கட் கறிக்குப்பைச் சிரச்சிக்குப்
     பரப்பொய்க்கட் டறப்புக்குப் ...... பொருதோனே
பணிச்செச்சைத் தொடைச்சித்ரப் புயத்துக்ரப் படைச்சத்திப்
     படைக்கச்சிப் பதிச்சொக்கப் ...... பெருமாளே.


கறுக்கப் பல் துவர்ப்பு இட்டுச் சிரித்துச் சற்று உறுக்கிக் கண்
     பிறக்கிட்டுப்படக் கண் பித்தி.....இளைஞோர் தம்
கழுத்தைச் சிக்கெனக் கட்டித் தனச்செப்புப் படக் குத்திட்டு
     உருக்கிக் கற்பு அழிக்கப் பொற்பு.....எழு காதல்
புறப்பட்டுக் களிக்க கற்புரத்தைப் பிட்டு அரக்கிப் பொன்
     பணிக் கட்டில் புறத்து உற்றுப்.....புணர் மாதர்
பொருத்தத்தைத் தவிர்த்து சற்று ரக்ஷித்துப் புரப்பப் பொன்
     பதத்தைப் பெற்று இருக்கைக்குப்.....பெறுவேனோ
திறல் கொக்கைப் படக் குத்திச் செருக்கிக் கொக்கரித்துச்
     சக்கரிக் குப்புத் திரற்கு உற்றுத்.....தளை பூண
சினத்து பொன் பொருப்பைப் பொட்டு எழுத்தித் திக்கரித்து புத்(து)
     இரத்தத்தில் சிரித்து உற்றுப்.....பல பேய்கள்
பறிக்க பச்(சை) இறைச்சிக் கண் கறிக் குப்பை சிரச் சிக்குப்
     பரப்பு ஒய்க் கட்டறப் புக்குப்.....பொருதோனே
பணிச் செச்சைத் தொடைச் சித்ரப் புயத்து உக்ரப் படைச் சத்திப்
     படைக் கச்சிப்பதிச் சொக்கப்.....பெருமாளே.
Add (additional) Audio/Video Link

Back to Top

329   காஞ்சீபுரம்   அற்றைக்கு இரைதேடி  
தத்தத் தனதான தத்தத் ...... தனதான
     தத்தத் தனதான தத்தத் ...... தனதானா

அற்றைக் கிரைதேடி அத்தத் ...... திலுமாசை
     பற்றித் தவியாத பற்றைப் ...... பெறுவேனோ
வெற்றிக் கதிர்வேலா வெற்பைத் ...... தொளைசீலா
     கற்றுற் றுணர்போதா கச்சிப் ...... பெருமாளே.


அற்றைக்கு இரைதேடி அத்தத்திலும்.....ஆசை
     பற்றித் தவியாத பற்றை.....பெறுவேனோ
வெற்றிக் கதிர்வேலா வெற்பைத்.....தொளைசீலா
     கற்றுற் றுணர்போதா கச்சிப்.....பெருமாளே.
Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=6sw4Wn03d40
Add (additional) Audio/Video Link

Back to Top

330   காஞ்சீபுரம்   முட்டுப் பட்டு  
தத்தத் தத்தத் ...... தனதான
     தத்தத் தத்தத் ...... தனதான

முட்டுப் பட்டுக் ...... கதிதோறும்
     முற்றச் சுற்றிப் ...... பலநாளும்
தட்டுப் பட்டுச் ...... சுழல்வேனைச்
     சற்றுப் பற்றக் ...... கருதாதோ
வட்டப் புட்பத் ...... தலமீதே
     வைக்கத் தக்கத் ...... திருபாதா
கட்டத் தற்றத் ...... தருள்வோனே
     கச்சிச் சொக்கப் ...... பெருமாளே.


முட்டுப் பட்டுக்.....கதிதோறும்
     முற்றச் சுற்றிப்.....பலநாளும்
தட்டுப் பட்டுச் சுழல்வேனை
     சற்றுப் பற்றக்.....கருதாதோ
வட்டப் புட்பத் தலமீதே
     வைக்கத் தக்கத்.....திருபாதா
கட்டத்து அற்றத்து அருள்வோனே
     கச்சிச் சொக்கப்.....பெருமாளே.
Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=GPYMR7JbiNQ
https://www.youtube.com/watch?v=V0DJEmN5-LA
Add (additional) Audio/Video Link

Back to Top

331   காஞ்சீபுரம்   அற்றைக் கற்றை  
தத்தத் தத்தத் தத்தத் தத்தத்
     தத்தத் தத்தத் ...... தனதான

அற்றைக் கற்றைக் கொப்பித் தொப்பித்
     தத்தத் தத்தத் ...... தருவோர்தாள்
அர்ச்சித் திச்சித் தக்கத் தக்கத்
     தொக்குத் திக்குக் ...... குடில்பேணிச்
செற்றைப் புற்சொற் கற்றுக் கற்றுச்
     செத்துச் செத்துப் ...... பிறவாதே
செப்பச் செப்பப் பச்சைப் பச்சைச்
     செச்சைச் செச்சைக் ...... கழல்தாராய்
துற்றுப் பிற்புக் குற்றக் கொக்கைத்
     துட்கத் திட்கப் ...... பொரும்வேலா
சுத்தப் பத்திச் சித்ரச் சொர்க்கச்
     சொர்க்கத் தத்தைக் ...... கினியோனே
கற்றைப் பொற்றைப் பற்றக் குத்திக்
     கத்தக் கத்தக் ...... களைவோனே
கற்புச் சத்திப் பொற்புச் சத்திக்
     கச்சிச் சொக்கப் ...... பெருமாளே.


அற்றைக்கு அற்றைக்கு ஒப்பித்து ஒப்பித்து
    அத்தத்து அத்தம்.....தருவோர் தாள்
அர்ச்சித்து இச்சித்து அக்கத்து அக்கம்
    தொக்குக் திக்குத்.....குடில் பேணி
செற்றைப் புன் சொல் கற்றுக் கற்று
    செத்துச் செத்துப்.....பிறவாதே
செப்பச் செப்ப பச்சைப் பச்சை
    செச்சைச் செச்சைக்.....கழல் தாராய்
துற்றுப் பின் புக்கு உற்றக் கொக்கை
    துட்கத் திட்கப்.....பொரும் வேலா
சுத்தப் பத்திச் சித்ரச் சொர்க்க
    சொர்க்கத் தத்தைக்கு.....இனியோனே
கற்றைப் பொற்றைப் பற்றக் குத்தி
    கத்தக் கத்த.....களைவோனே
கற்புச் சத்தி பொற்புச் சத்தி
    கச்சிச் சொக்கப்.....பெருமாளே.
Add (additional) Audio/Video Link

Back to Top

332   காஞ்சீபுரம்   சுத்தச் சித்த  
தத்தத் தத்தத் தத்தத் தத்தத்
     தத்தத் தத்தத் ...... தனதான

சுத்தச் சித்தத் தொற்பத் தர்க்குச்
     சுத்தப் பட்டிட் ...... டமுறாதே
தொக்கப் பொக்கச் சிற்கட் சிக்குட்
     சொற்குற் றத்துத் ...... துறைநாடி
பித்தத் தைப்பற் றித்தைத் தற்றுற்
     றொத்துக் கித்திப் ...... பிணிமாதர்
பெட்டிற் கட்டுத் தட்டுப் பட்டுப்
     பிற்பட் டிட்டுத் ...... தளர்வேனோ
அத்தத் தத்திக் கத்தற் கெய்த்தத்
     தத்திக் கத்துப் ...... பலமீவாய்
அர்ச்சித் துப்பொற் செக்கொச் சைத்தத்
     தைக்குச் செச்சைத் ...... தொடைசூழ்வாய்
கத்தத் தித்தத் தத்திற் கொக்கைக்
     கைத்தச் சத்திப் ...... படையேவுங்
கற்புச் சத்திப் பொற்புச் சத்திக்
     கச்சிச் சொக்கப் ...... பெருமாளே.


சுத்தச் சித்தத்து தொல் பத்தர்க்குச்
     சுத்தப் பட்டு இட்டம்.....உறாதே
தொக்கப் பொக்கம் சில் கட்சிக்குள்
     சொல் குற்றத்துத்.....துறை நாடி
பித்தத்தைப் பற்றித் தைத் தற்று உற்று
     ஒத்துக் கித்திப்.....பிணி மாதர்
பெட்டில் கட்டுத் தட்டுப் பட்டு
     பிற்பட்டு இட்டுத்.....தளர்வேனோ
அத் தத்து அத்திக்கு அத்தற்கு எய்த்த
     அத்திக்கு அத்துப்.....பலம் ஈவாய்
அர்ச்சித்துப் பொன் செக்கக் கொச்சை
     தத்தைக்குச் செச்சைத்.....தொடை சூழ்வாய்
கத்து அத்தித் தத்து அத்தில் கொக்கைக்
     கைத்தச் சத்திப்.....படை ஏவும்
கற்பச் சத்திப் பொற்புச் சத்தி
     கச்சிச் சொக்கப்.....பெருமாளே.
Add (additional) Audio/Video Link

Back to Top

333   காஞ்சீபுரம்   கொக்குக்கு ஒக்க  
தத்தத் தத்தத் தனனத் தத்தத் தத்தத் தனனத்
     தத்தத் தத்தத் தனனத் ...... தனதான

கொக்குக் கொக்கத் தலையிற் பற்றுச் சிக்கத் தளகக்
     கொத்துற் றுக்குப் பிணியுற் ...... றவனாகிக்
குக்கிக் கக்கிக் கடையிற் பற்றத் துற்றுக் கழலக்
     கொத்தைச் சொற்கற் றுலகிற் ...... பலபாஷை
திக்கித் திக்கிக் குளறிச் செப்பித் தப்பிக் கெடுபொய்ச்
     செற்றைச் சட்டைக் குடிலைச் ...... சுமைபேணும்
சிக்கற் றுட்குக் கருணைச் சுத்தச் சித்தித் தமிழைத்
     திட்டத் துக்குப் புகலப் ...... பெறுவேனோ
அக்கிட் டிக்கிட் டமருக் கொட்டிக் கிட்டிட் டெதிரிட்
     டத்ரத் தெற்றிக் கடுகப் ...... பொருசூரன்
அச்சுக் கெட்டுப் படைவிட் டச்சப் பட்டுக் கடலுட்
     புக்குப் பட்டுத் துருமத் ...... தடைவாகத்
தக்குத் திக்குத் தறுகட் டொக்குத் தொக்குற் றதுகட்
     கைக்கொட் டிட்டிட் டுடல்சிற் ...... கணமாடிச்
சத்திக் குத்தித் துடியிற் சத்திக் கக்கைச் சமர்செய்ச்
     சத்திக் கச்சிக் குமரப் ...... பெருமாளே.


கொக்குக்கு ஒக்கத் தலையில் பற்றுச் சிக்கத்து அளகக்
     கொத்து உற்று உக்குப் பிணி.....உற்றவனாகிக்
குக்கிக் கக்கிக் கடையில் பற்றத் உற்றுக் கழல
     கொத்தைச் சொல் கற்று உலகில்.....பல பாஷை
திக்கித் திக்கிக் குளறிச் செப்பி தப்பிக் கெடு பொய்ச்
     செற்றைச் சட்டைக் குடிலைச்.....சுமை பேணும்
சிக்கு அற்று உட்குக் கருணைச் சுத்தச் சித்தித் தமிழைத்
          திட்டத்துக்குப் புகலப்.....பெறுவேனோ
அக்கிட்டு இக்கிட்டு அமருக்கு ஒட்டிக் கிட்டி இட்டு எதிரிட்டு
     அத்ரத்து எற்றிக் கடுகப்.....பொரு சூரன்
அச்சுக் கெட்டுப் படை விட்டு அச்சப் பட்டுக் கடலுள்
     புக்குப்பட்டுத் துருமத்து.....அடைவாக
தக்குத் திக்குத் தறுகண் தொக்குத் தொக்கு உற்றது கண்
     கைக் கொட்டு இட்டு இட்டு உடல் சில்.....கணம் ஆடி
சத்திக் குத்தித் துடியில் சத்திக்கக் கைச் சமர் செய்
     சத்திக் கச்சிக் குமரப்.....பெருமாளே.
Add (additional) Audio/Video Link

Back to Top

334   காஞ்சீபுரம்   தத்தித் தத்தி  
தத்தத் தத்தத் தத்தத் தத்தத்
     தத்தத் தத்தத் ...... தனதான

தத்தித் தத்திச் சட்டப் பட்டுச்
     சத்தப் படுமைக் ...... கடலாலே
சர்ப்பத் தத்திற் பட்டுக் கெட்டுத்
     தட்டுப் படுமப் ...... பிறையாலே
சித்தத் துக்குப் பித்துற் றுச்சச்
     சித்ரக் கொடியுற் ...... றழியாதே
செப்பக் கொற்றச் சிற்பப் பத்திச்
     செச்சைத் தொடையைத் ...... தரவேணும்
கொத்துத் திக்குப் பத்துட் புக்குக்
     குத்திக் கிரியைப் ...... பொரும்வேலா
கொச்சைப் பொச்சைப் பொற்பிற் பச்சைக்
     கொச்சைக் குறவிக் ...... கினியோனே
சுத்தப் பத்தத் தர்க்குச் சித்தத்
     துக்கத் தையொழித் ...... திடும்வீரா
சொர்க்கத் துக்கொப் புற்றக் கச்சிச்
     சொக்கப் பதியிற் ...... பெருமாளே.


தத்தித் தத்திச் சட்டப்பட்டுச்
     சத்தப் படுமைக்.....கடலாலே
சர்ப்பத் தத்தில் பட்டுக் கெட்டுத்
     தட்டுப் படும் அப்.....பிறையாலே
சித்தத்துக்குப் பித்து உற்று உச்சச்
     சித்ரக் கொடி உற்று.....அழியாதே
செப்பக் கொற்ற(ம்) சிற்ப(ம்) பத்திச்
     செச்சைத் தொடையைத்.....தர வேணும்
கொத்துத் திக்குப் பத்துள் புக்கு
     குத்திக் கிரியைப்.....பொரும் வேலா
கொச்சைப் பொச்சைப் பொற்பில் பச்சைக்
     கொச்சைக் குறவிக்கு.....இனியோனே
சுத்தப் பத்த அத்தர்க்குச் சித்த
     துக்கத்தை ஒழித்.....திடும் வீரா
சொர்க்கத்துக்கு ஒப்பு உற்றக் கச்சிச்
     சொக்கப் பதியில்.....பெருமாளே.
Add (additional) Audio/Video Link

Back to Top

335   காஞ்சீபுரம்   பொக்குப்பை  
தத்தத்தத் தத்தத் தத்தத்தத் தத்தத்
     தத்தத்தத் தத்தத் ...... தனதான

பொக்குப்பைக் கத்தத் தொக்குப்பைக் குத்துப்
     பொய்த்தெத்துத் தத்துக் ...... குடில்பேணிப்
பொச்சைப்பிச் சற்பக் கொச்சைச்சொற் கற்றுப்
     பொற்சித்ரக் கச்சுக் ...... கிரியார்தோய்
துக்கத்துக் கத்திற் சிக்குப்பட் டிட்டுத்
     துக்கித்துக் கெய்த்துச் ...... சுழலாதே
சுத்தச்சித் தத்துப் பத்திப்பத் தர்க்கொத்
     துச்சற்றர்ச் சிக்கப் ...... பெறுவேனோ
திக்குத்திக் கற்றுப் பைத்தத்தத் திக்குச்
     செற்பத்ரக் கொக்கைப் ...... பொரும்வேலா
செப்பச்சொர்க் கத்துச் செப்பொற்றத் தைக்குச்
     செச்சைக்கொத் தொப்பித் ...... தணிவோனே
கக்கக்கைத் தக்கக் கக்கட்கக் கக்கிக்
     கட்கத்தத் தர்க்குப் ...... பெரியோனே
கற்றைப்பொற் றெத்தப் பெற்றப்பொற் சிற்பக்
     கச்சிக்குட் சொக்கப் ...... பெருமாளே.


பொக்குப்பைக் கத்தத் தொக்குப்பை குத்துப்
     பொய்த்து எத்துத் தத்துக்.....குடில்பேணி
பொச்சைப் பிச்சு அற்பக் கொச்சைச்சொற் கற்று
     பொற்சித்ரக் கச்சுக்.....கிரியார்தோய்
துக்கத் துக்கத்திற் சிக்குப்பட்டிட்டு
     துக்கித்துக் கெய்த்துச்.....சுழலாதே
சுத்தச் சித்தத்துப் பத்திப் பத்தர்க்கு ஒத்து
     சற்று அர்ச்சிக்கப்.....பெறுவேனோ
திக்குத் திக்கற்றுப் பைத் தத்து அத்திக்குச்
     செல் பத்ரக் கொக்கைப்.....பொரும்வேலா
செப்பச் சொர்க்கத்துச் செம்பொன் தத்தைக்கு
     செச்சைக் கொத்து ஒப்பித்து.....அணிவோனே
கக்கு அக்கைத் தக்க அக்கக்கட்கு அக்கு அக்கி
     கண் கத்த அத்தர்க்குப்.....பெரியோனே
கற்றைப்பொற் றெத்தப் பெற்ற பொற் சிற்பக்
     கச்சிக்குள் சொக்கப்.....பெருமாளே.
Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=YIXvxICNYuw
Add (additional) Audio/Video Link

Back to Top

336   காஞ்சீபுரம்   அயில் அப்பு  
தனனத்தத் தனனத்தத் தனனத்தத் தனனத்தத்
     தனனத்தத் தனனத்தத் ...... தனதான

அயிலப்புக் கயலப்புத் தலைமெச்சுற் பலநச்சுக்
     கணுரத்தைக் கனவெற்புத் ...... தனமேகம்
அளகக்கொத் தெனவொப்பிப் புளுகிச்சொற் பலகற்பித்
     திளகிக்கற் புளநெக்குத் ...... தடுமாறித்
துயில்விட்டுச் செயல்விட்டுத் துயர்வுற்றுக் கயர்வுற்றுத்
     தொடியர்க்கிப் படியெய்த்துச் ...... சுழலாதே
சுருதிப்பொற் பொருள்செக்கர்க் குரவிட்டுத் தமர்பற்றித்
     தொழுசெச்சைக் கழல்பற்றிப் ...... பணிவேனோ
புயலத்தைக் குயில்தத்தைக் கிளைபுக்குத் தொளைபச்சைப்
     புனமுத்தைப் புணர்சித்ரப் ...... புயவீரா
புரவிக்கொட் பிரதற்றத் திருள்திக்கிப் படிமட்கப்
     புகல்பொற்குக் குடவெற்றிக் ...... கொடியோனே
கயிலச்சுத் தரதத்துச் சயிலத்துத் தரநிற்கக்
     கரணிச்சித் தருள்கச்சிப் ...... பதியோனே
கடலிற்கொக் கடல்கெட்டுக் கரமுட்கத் தரமுட்கப்
     பொருசத்திக் கரசொக்கப் ...... பெருமாளே.


அயில் அப்புக் கயல் அப்புத் தலைமெச்சு உற்பல நச்சுக்
     கண் உரத்த ஐக் கன வெற்புத்.....தனமேகம்
அளகக் கொத்து எனஒப்பிப் புளுகிச்சொற் பல கற்பித்து
     இளகிக் கற்பு உ(ள்)ள(ம்) நெக்குத்.....தடுமாறித்
துயில்விட்டுச் செயல்விட்டுத் துயர்வு உற்று உக்கு அயர்வு உற்று
     தொடியர்க்கு இப்படி எய்த்துச்.....சுழலாதே
சுருதிப்பொற் பொருள்செக்கர்க்(கு) குரவு இட்டுத் தமர்பற்றித்
     தொழுசெச்சைக் கழல் பற்றிப்.....பணிவேனோ
புயல் அத்தைக் குயில் தத்தைக் கிளை புக்குத் தொளை பச்சைப்
     புன முத்தைப் புணர் சித்ரப்.....புய வீரா
புரவிக் கொட்பு இரத அற்றத்து இருள் திக்கிப் படி மட்கப்
     புகல் பொன் குக்குட வெற்றிக்.....கொடியோனே
கயில் அச்சுத் தர தத்துச் சயிலத்து உத்தர நிற்கக்
     கரணிச் சித்தர் உள் கச்சிப்.....பதியோனே
கடலில் கொக்கு அடல்கெட்டுக் கரம் உட்கத் தரம் உட்கப்
     பொரு சத்திக் கர சொக்கப்.....பெருமாளே.
Add (additional) Audio/Video Link

Back to Top

337   காஞ்சீபுரம்   கச்சு இட்ட அணி  
தத்தத் தனதன தத்தத் தனதன
     தத்தத் தனதன ...... தனதான

கச்சிட் டணிமுலை தைச்சிட் டுருவிய
     மச்சக் கொடிமதன் ...... மலராலுங்
கச்சைக் கலைமதி நச்சுக் கடலிடை
     அச்சப் படவெழு ...... மதனாலும்
பிச்சுற் றிவளுள மெய்ச்சுத் தளர்வது
     சொச்சத் தரமல ...... இனிதான
பிச்சிப் புதுமலர் வைச்சுச் சொருகிய
     செச்சைத் தொடையது ...... தரவேணும்
பச்சைத் திருவுமை யிச்சித் தருளிய
     கச்சிப் பதிதனி ...... லுறைவோனே
பற்றிப் பணிபவர் குற்றப் பகைகெட
     உற்றுப் பொரவல ...... கதிர்வேலா
இச்சித் தழகிய கொச்சைக் குறமகள்
     மெச்சித் தழுவிய ...... திருமார்பா
எட்டுக் குலகிரி முட்டப் பொடிபட
     வெட்டித் துணிசெய்த ...... பெருமாளே.


கச்சு இட்ட அணி முலை தைச்சிட்டு உருவிய
     மச்சக் கொடி மதன்.....மலராலும்
கச்சைக் கலை மதி நச்சுக் கடல் இடை
     அச்சப் பட எழும்.....அதனாலும்
பிச்சு உற்று இவள் உளம் எய்ச்சுத் தளர்வது
     சொச்சத் தரம் அல.....இனிதான
பிச்சிப் புது மலர் வைச்சுச் சொருகிய
     செச்சைத் தொடை அது.....தரவேணும்
பச்சைத் திரு உமை இச்சித்து அருளிய
     கச்சிப் பதி தனில்.....உறைவோனே
பற்றிப் பணிபவர் குற்றப் பகை கெட
     உற்றுப் பொர வல.....கதிர்வேலா
இச்சித்து அழகிய கொச்சைக் குறமகள்
     மெச்சித் தழுவிய.....திருமார்பா
எட்டுக் குலகிரி முட்டப் பொடிபட
     வெட்டித் துணி செய்த.....பெருமாளே.
Add (additional) Audio/Video Link

Back to Top

338   காஞ்சீபுரம்   கமலரு சோகம்  
தனதன தானாந்தன தனதன தானாந்தன
     தனதன தானாந்தன ...... தனதான

கமலரு சோகாம்பர முடிநடு வேய்பூங்கணை
     கலகமர் வாய்தோய்ந்தம ...... ளியின்மீதே
களையற மீதூர்ந்தெழ மதனவி டாய்போம்படி
     கனவிய வாரேந்தின ...... இளநீர்தோய்ந்
தெமதுயிர் நீலாஞ்சன மதர்விழி யால்வாங்கிய
     இவளுடன் மால்கூர்ந்திடு ...... மநுபோகம்
இனிவிட வேதாந்தப ரமசுக வீடாம்பொருள்
     இதவிய பாதாம்புய ...... மருள்வாயே
அமகர ஆசாம்பர அதுகர ஏகாம்பர
     அதுலன நீலாம்பர ...... மறியாத
அநகர நாளாங்கிதர் தமையுமை யாள்சேர்ந்தருள்
     அறமுறு சீகாஞ்சியி ...... லுறைவோனே
விமலகி ராதாங்கனை தனகிரி தோய்காங்கெய
     வெடிபடு தேவேந்திர ...... னகர்வாழ
விரிகடல் தீமூண்டிட நிசிசரர் வேர்மாண்டிட
     வினையற வேல்வாங்கிய ...... பெருமாளே.


கமல(ம்) அரு சோகு ஆம்பர(ம்) முடி நடு ஏய் பூங்கணை
    கலக அமர் வாய் தோய்ந்து.....அமளியின் மீதே
களை அற மீது ஊர்ந்து எழ மதன விடாய் போம்படி
    கன இய வார் ஏந்தின.....இளநீர் தோய்ந்து
எமது உயிர் நீல அஞ்சன மதர் விழியால் வாங்கிய
    இவளுடன் மால் கூர்ந்திடும்.....அநுபோகம்
இனி விட வேதாந்த பரம சுக வீடு ஆம் பொருள்
    இத(ம்) இய பாத அம்புயம்.....அருள்வாயே
அமகர ஆசாம்பர அதுகர ஏக ஆம்பரம்
    அதுல அ(ன்)ன நீல அம்பரம்.....அறியாத
அநகர நாள அங்கிதர் தமை உமையாள் சேர்ந்து அருள்
    அறம் உறு சீ(ர்) காஞ்சியில்.....உறைவோனே
விமல கிராத அங்கனை தன கிரி தோய் காங்கெய
    வெடி படு தேவேந்திர.....நகர் வாழ
விரி கடல் தீ மூண்டிட நிசிசரர் வேர் மாண்டிட
    வினை அற வேல் வாங்கிய.....பெருமாளே.
Add (additional) Audio/Video Link

Back to Top

339   காஞ்சீபுரம்   கருமமான பிறப்பற  
தனன தானன தத்தன தனதன
     தானா தத்தத் ...... தனதான

கரும மானபி றப்பற வொருகதி
     காணா தெய்த்துத் ...... தடுமாறுங்
கலக காரண துற்குண சமயிகள்
     நானா வர்க்கக் ...... கலைநூலின்
வரும நேகவி கற்பவி பரிதம
     னோபா வத்துக் ...... கரிதாய
மவுன பூரித சத்திய வடிவினை
     மாயா மற்குப் ...... புகல்வாயே
தரும வீம அருச்சுன நகுலச
     காதே வர்க்குப் ...... புகலாகிச்
சமர பூமியில் விக்ரம வளைகொடு
     நாளோர் பத்தெட் ...... டினிலாளுங்
குரும கீதல முட்பட வுளமது
     கோடா மற்க்ஷத் ...... ரியர்மாளக்
குலவு தேர்கட வச்சுதன் மருககு
     மாரா கச்சிப் ...... பெருமாளே.


கருமமான பிறப்பற ஒருகதி
      காணாது எய்த்துத்.....தடுமாறும்
கலக காரண துற்குண சமயிகள்
     நானா வர்க்கக்.....கலைநூலின்
வரும் அநேக விகற்ப விபரித
     மனோபாவத்துக்கு.....அரிதாய
மவுன பூரித சத்திய வடிவினை
     மாயா மற்குப்.....புகல்வாயே
தரும வீம அருச்சுன நகுல
     சகாதேவர்க்குப்.....புகலாகி
சமர பூமியில் விக்ரம வளைகொடு
     நாளோர் பத்தெட்.....டினிலாளும்
குரு மகீதல முட்பட உளமது
     கோடாமல் க்ஷத்.....ரியர்மாள
குலவு தேர்கடவு அச்சுதன் மருக
     குமாரா கச்சிப்.....பெருமாளே.
Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=zFaoeRBcWvg
Add (additional) Audio/Video Link

Back to Top

340   காஞ்சீபுரம்   கலகலென  
தனதன தத்தத் தாந்த தானன
     தனதன தத்தத் தாந்த தானன
          தனதன தத்தத் தாந்த தானன ...... தனதான

கலகலெ னப்பொற் சேந்த நூபுர
     பரிபுர மொத்தித் தாந்த னாமென
          கரமல ரச்சிற் றாந்தொ மாடிய ...... பொறியார்பைங்
கடிதட முற்றுக் காந்த ளாமென
     இடைபிடி பட்டுச் சேர்ந்த ஆலிலை
          கனதன பொற்பிட் டோங்கு மார்பொடு ...... வடமாடச்
சலசல சச்சச் சேங்கை பூண்வளை
     பரிமள பச்சைச் சேர்ந்து லாவிய
          சலசமு கத்துச் சார்ந்த வாள்விழி ...... சுழலாடத்
தரளந கைப்பித் தாம்ப லாரிதழ்
     குலமுகி லொத்திட் டாய்ந்த வோதியர்
          சரசமு ரைத்துச் சேர்ந்த தூவைய ...... ருறவாமோ
திலதமு கப்பொற் காந்தி மாதுமை
     யெனையருள் வைத்திட் டாண்ட நாயகி
          சிவனுரு வத்திற் சேர்ந்த பார்வதி ...... சிவகாமி
திரிபுவ னத்தைக் காண்ட நாடகி
     குமரிசு கத்தைப் பூண்ட காரணி
          சிவைசுடர் சத்திச் சாம்ப வீஅமை ...... யருள்பாலா
அலகையி ரத்தத் தோங்கி மூழ்கிட
     நரிகழு குப்பிச் சீர்ந்து வாயிட
          அசுரர்கு லத்தைக் காய்ந்த வேல்கர ...... முடையோனே
அமரர்ம கட்குப் போந்த மால்கொளும்
     விபுதகு றத்திக் காண்ட வாதின
          மழகுசி றக்கக் காஞ்சி மேவிய ...... பெருமாளே.


கல கல எனப் பொன் சேந்த நுபுர
     பரிபுரம் ஒத்தித் தாம் தனாம் என
        கர மலர் அச்சில் தாம் தோம் ஆடிய.....பொறியார் பைம்
கடி தடம் உற்றுக் காந்தள் ஆம் என
     இடை படி பட்டுச் சேர்ந்த ஆல் இலை
        கன தன பொற்பிட்டு ஓங்கு மார்பொடு.....வடம் ஆடச்
சல சல சச்சச் சேம் கை பூண் வளை
     பரிமள பச்சைச் சேர்ந்து உலாவிய
        சலச முகத்துச் சார்ந்த வாள் விழி.....சுழல் ஆட
தரள நகைப்பித்து ஆம்பல் ஆர் இதழ்
     குல முகில் ஒத்திட்டு ஆய்ந்த ஓதியர்
        சரசம் உரைத்துச் சேர்ந்த தூவையர்.....உறவு ஆமோ
திலத முக பொன் காந்தி மாது உமை
     எனை அருள் வைத்திட்டு ஆண்ட நாயகி
        சிவன் உருவத்தில் சேர்ந்த பார்வதி.....சிவகாமி
திரி புவனத்தைக் காண்ட நாடகி
     குமரி சுகத்தைப் பூண்ட காரணி
        சிவை சுடர் சத்திச் சாம்பவீ அ(ம்)மை.....அருள்பாலா
அலகை இரத்தத்து ஓங்கி மூழ்கிட
     நரி கழுகு உப்பிச் சீர்ந்து வாய் இட
        அசுரர் குலத்தைக் காய்ந்த வேல் கரம்.....உடையோனே
அமரர் மகட்குப் போந்த மால் கொளும்
     விபுத குறத்திக்கு ஆண்டவா தின(ம்)
        அழகு சிறக்கக் காஞ்சி மேவிய.....பெருமாளே.
Add (additional) Audio/Video Link

Back to Top

341   காஞ்சீபுரம்   கொத்தார் பற் கால்  
தத்தா தத்தா தத்தா தத்தா
     தத்தா தத்தா ...... தனதான

கொத்தார் பற்கா லற்றே கப்பாழ்
     குப்பா யத்திற் ...... செயல்மாறிக்
கொக்கா கிக்கூ னிக்கோல் தொட்டே
     கொட்டா விக்குப் ...... புறவாசித்
தித்தா நிற்றார் செத்தார் கெட்டேன்
     அஆ உஉ...... எனவேகேள்
செற்றே சுட்டே விட்டே றிப்போ
     மப்பே துத்துக் ...... கமறாதோ
நித்தா வித்தா ரத்தோ கைக்கே
     நிற்பாய் கச்சிக் ...... குமரேசா
நிட்டூ ரச்சூர் கெட்டோ டப்போர்
     நெட்டோ தத்திற் ...... பொருதோனே
முத்தா ரத்தோ ளிற்கோ டற்பூ
     முட்டா திட்டத் ...... தணிவோனே
முற்றா நித்தா அத்தா சுத்தா
     முத்தா முத்திப் ...... பெருமாளே.


கொத்தார் பற் கால் அற்று ஏகப் பாழ்
     குப்பாயத்திற்.....செயல்மாறி
கொக்காகிக் கூனிக் கோல் தொட்டே
     கொட்டாவிக்குப்.....புற வாசித்
தித்தா நிற்றார் செத்தார் கெட்டேன்
     அஆ உஉ.....எனவேகேள்
செற்றே சுட்டே விட்டு ஏறிப்போம்
     அப்பேதுத் துக்கம்.....அறாதோ
நித்தா வித்தாரத் தோகைக்கே
     நிற்பாய் கச்சிக்.....குமரேசா
நிட்டூரச் சூர் கெட்டோடப் போர்
     நெட்டு ஓதத்திற்.....பொருதோனே
முத்தாரத் தோளிற் கோடற்பூ
     முட்டாது இட்டத்து.....அணிவோனே
முற்றா நித்தா அத்தா சுத்தா
     முத்தா முத்திப்.....பெருமாளே.
Add (additional) Audio/Video Link

Back to Top

342   காஞ்சீபுரம்   கோவைச் சுத்த  
தானத் தத்தத் தத்தன தத்தத் ...... தனதான
கோவைச் சுத்தத் துப்பத ரத்துக் ...... கொடியார்தங்
கோலக் கச்சுக் கட்டிய முத்தத் ...... தனமேவிப்
பாவத் துக்குத் தக்கவை பற்றித் ...... திரியாதே
பாடப் பத்திச் சித்த மெனக்குத் ...... தரவேணும்
மாவைக் குத்திக் கைத்தற எற்றிப் ...... பொரும்வேலா
மாணிக் கச்சொர்க் கத்தொரு தத்தைக் ...... கினியோனே
சேவற் பொற்கைக் கொற்றவ கச்சிப் ...... பதியோனே
தேவச் சொர்க்கச் சக்கிர வர்த்திப் ...... பெருமாளே.


கோவைச் சுத்தத் துப்பு அதரத்துக்.....கொடியார் தம்
     கோலக் கச்சுக் கட்டிய முத்தத்.....தனம் மேவி
பாவத்துக்குத் தக்கவை பற்றித்.....திரியாதே
     பாடப் பத்திச் சித்தம் எனக்கு.....தரவேணும்
மாவைக் குத்திக் கைத்து அற எற்றிப்.....பொரும் வேலா
     மாணிக்கச் சொர்க்கத்து ஒரு தத்தைக்கு.....இனியோனே
சேவல் பொன் கைக் கொற்றவ கச்சிப்.....பதியோனே
     தேவச் சொர்க்கச் சக்கிரவர்த்திப்.....பெருமாளே.
Add (additional) Audio/Video Link

Back to Top

343   காஞ்சீபுரம்   சீசி முப்புர  
தான தத்தனத் தான தத்தனத்
     தான தத்தனத் தான தத்தனத்
          தான தத்தனத் தான தத்தனத் ...... தனதான

சீசி முப்புரக் காடு நீறெழச்
     சாடி நித்திரைக் கோசம் வேரறச்
          சீவன் முத்தியிற் கூட வேகளித் ...... தநுபூதி
சேர அற்புதக் கோல மாமெனச்
     சூரி யப்புவிக் கேறி யாடுகச்
          சீலம் வைத்தருட் டேறி யேயிருக் ...... கறியாமற்
பாசம் விட்டுவிட் டோடி போனதுப்
     போது மிப்படிக் காகி லேனினிப்
          பாழ்வ ழிக்கடைக் காம லேபிடித் ...... தடியேனைப்
பார டைக்கலக் கோல மாமெனத்
     தாப ரித்துநித் தார மீதெனப்
          பாத பத்மநற் போதை யேதரித் ...... தருள்வாயே
தேசில் துட்டநிட் டூர கோதுடைச்
     சூரை வெட்டியெட் டாசை யேழ்புவித்
          தேவர் முத்தர்கட் கேத மேதவிர்த் ...... தருள்வோனே
சீர்ப டைத்தழற் சூல மான்மழுப்
     பாணி வித்துருப் பாத னோர்புறச்
          சீர்தி கழ்ப்புகழ்ப் பாவை யீனபொற் ...... குருநாதா
காசி முத்தமிழ்க் கூட லேழ்மலைக்
     கோவ லத்தியிற் கான நான்மறைக்
          காடு பொற்கிரிக் காழி யாருர்பொற் ...... புலிவேளூர்
காள அத்தியப் பால்சி ராமலைத்
     தேச முற்றுமுப் பூசை மேவிநற்
          காம கச்சியிற் சால மேவுபொற் ...... பெருமாளே.


சீசி முப்புரக் காடு நீறெழச் சாடி
     நித்திரைக் கோசம் வேரற
        சீவன் முத்தியிற் கூடவே களித்து.....அநுபூதி
சேர அற்புதக் கோல மாமென
     சூரியப்புவிக் கேறி யாடுக
        சீலம் வைத்தருள் தேறியேயிருக்க.....அறியாமல்
பாசம் விட்டுவிட் டோடி போனது
     போது மிப்படிக்கு ஆகிலேன் இனிப்
        பாழ் வழிக்கு அடைக்காமலே பிடித்து.....அடியேனைப்
பார் அடைக்கலக் கோலமாமென
     தாபரித்து நித்த ஆரம் ஈதென
        பாத பத்மநற் போதை யேதரித்.....தருள்வாயே
தேசில் துட்டநிட்டூர கோதுடைச்
     சூரை வெட்டியெட் டாசை யேழ்புவித்
        தேவர் முத்தர்கட்கு ஏத மேதவிர்த்.....தருள்வோனே
சீர்ப டைத்தழற் சூல மான்மழுப்
     பாணி வித்துருப் பாதன் ஓர் புறச்
        சீர்தி கழ்ப்புகழ்ப் பாவை யீனபொற்.....குருநாதா
காசி முத்தமிழ்க் கூட லேழ்மலைக்
     கோவ லத்தியிற் கான நான்மறைக்
        காடு பொற்கிரிக் காழி யாருர்பொற்.....புலிவேளூர்
காள அத்தியப் பால்சி ராமலை
     தேச முற்றுமுப் பூசை மேவி நற்
        காம கச்சியிற் சால மேவுபொற்.....பெருமாளே.
Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=vpV-E4l4CLE
Add (additional) Audio/Video Link

Back to Top

344   காஞ்சீபுரம்   நச்சு அரவம் என்று  
தத்ததன தந்த தத்ததன தந்த
     தத்ததன தந்த ...... தனதான

நச்சரவ மென்று நச்சரவ மென்று
     நச்சுமிழ்க ளங்க ...... மதியாலும்
நத்தொடுமு ழங்க னத்தொடுமு ழங்கு
     நத்திரைவ ழங்கு ...... கடலாலும்
இச்சையுணர் வின்றி யிச்சையென வந்த
     இச்சிறுமி நொந்து ...... மெலியாதே
எத்தனையி நெஞ்சில் எத்தனமு யங்கி
     இத்தனையி லஞ்ச ...... லெனவேணும்
பச்சைமயில் கொண்டு பச்சைமற மங்கை
     பச்சைமலை யெங்கு ...... முறைவோனே
பத்தியுட னின்று பத்திசெயு மன்பர்
     பத்திரம ணிந்த ...... கழலோனே
கச்சிவர் குரும்பை கச்சவர்வி ரும்பு
     கச்சியில மர்ந்த ...... கதிர்வேலா
கற்பக வனங்கொள் கற்பகவி சும்பர்
     கைத்தளைக ளைந்த ...... பெருமாளே.


நச்சு அரவ மென்று நச்சரவ மென்று
     நச்சுமிழ்க ளங்க.....மதியாலும்
நத்தொடுமுழங்கு கனத்தொடுமுழங்கு
     நத்திரை வழங்கு.....கடலாலும்
இச்சையுணர் வின்றி யிச்சையென வந்த
     இச்சிறுமி நொந்து.....மெலியாதே
எத்தனையி நெஞ்சில் எத்தன முயங்கி
     இத்தனையில் அஞ்ச.....லெனவேணும்
பச்சைமயில் கொண்டு பச்சைமற மங்கை
     பச்சைமலை யெங்கும்.....உறைவோனே
பத்தியுட னின்று பத்திசெயும் அன்பர்
     பத்திர மணிந்த.....கழலோனே
கச்சிவர் குரும்பை கச்சவர் விரும்பு
     கச்சியில மர்ந்த.....கதிர்வேலா
கற்பக வனங்கொள் கற்பு அக விசும்பர்
     கைத்தளை களைந்த.....பெருமாளே.
Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=AflDbkmkNXk
https://www.youtube.com/watch?v=AGloziA987g
Add (additional) Audio/Video Link

Back to Top

345   காஞ்சீபுரம்   படிறொழுக்கமும்  
தனன தத்தன தனன தத்தன
     தனன தத்தன ...... தனதான

படிறொ ழுக்கமு மடம னத்துள
     படிப ரித்துட ...... னொடிபேசும்
பகடி கட்குள மகிழ மெய்ப்பொருள்
     பலகொ டுத்தற ...... உயிர்வாடா
மிடியெ னப்பெரு வடவை சுட்டிட
     விதன முற்றிட ...... மிகவாழும்
விரகு கெட்டரு நரகு விட்டிரு
     வினைய றப்பத ...... மருள்வாயே
கொடியி டைக்குற வடிவி யைப்புணர்
     குமர கச்சியி ...... லமர்வோனே
குரவு செச்சைவெண் முளரி புத்தலர்
     குவளை முற்றணி ...... திருமார்பா
பொடிப டப்பட நெடிய விற்கொடு
     புரமெ ரித்தவர் ...... குருநாதா
பொருதி ரைக்கடல் நிருத ரைப்படை
     பொருது ழக்கிய ...... பெருமாளே.


படிறொழுக்கமும் மடம னத்து
     உளபடி பரித்து உடன்.....நொடிபேசும்
பகடிகட்கு உள மகிழ மெய்ப்பொருள்
     பலகொடுத்து அற.....உயிர்வாடா
மிடியெ னப்பெரு வடவை சுட்டிட
     விதன முற்றிட.....மிகவாழும்
விரகு கெட்டு அரு நரகு விட்டு இரு
     வினையறப் பதம்.....அருள்வாயே
கொடியிடைக்குற வடிவியைப் புணர்
     குமர கச்சியில்.....அமர்வோனே
குரவு செச்சைவெண் முளரி புத்தலர்
     குவளை முற்றணி.....திருமார்பா
பொடி படப்பட நெடிய விற்கொடு
     புர மெரித்தவர்.....குருநாதா
பொருதிரைக் கடல் நிரு தரைப்படை
     பொருது உழக்கிய.....பெருமாளே.
Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=cChMuC-eeAs
Add (additional) Audio/Video Link

Back to Top

346   காஞ்சீபுரம்   மகுடக் கொப்பாட  
தனனத்தத் தானத் தானன
     தனனத்தத் தானத் தானன
          தனனத்தத் தானத் தானன ...... தந்ததான

மகுடக்கொப் பாடக் காதினில்
     நுதலிற்பொட் டூரக் கோதிய
          மயிரிற்சுற் றோலைப் பூவோடு ...... வண்டுபாட
வகைமுத்துச் சோரச் சேர்நகை
     யிதழிற்சொற் சாதிப் பாரியல்
          மதனச்சொற் பாடுக் கோகில ...... ரம்பைமாதர்
பகடிச்சொற் கூறிப் போர்மயல்
     முகவிச்சைப் பேசிச் சீரிடை
          பவளப்பட் டாடைத் தோளிரு ...... கொங்கைமேலாப்
பணமெத்தப் பேசித் தூதிடு
     மிதயச்சுத் தீனச் சோலிகள்
          பலரெச்சிற் காசைக் காரிகள் ...... சந்தமாமோ
தகுடத்தத் தானத் தானன
     திகுடத்தித் தீதித் தோதிமி
          தடுடுட்டுட் டாடப் பேரிகை ...... சங்குவீணை
தடமிட்டுப் பாவக் கார்கிரி
     பொடிபட்டுப் போகச் சூரர்கள்
          தலையிற்றிட் டாடப் போர்புரி ...... கின்றவேலா
திகிரிப்பொற் பாணிப் பாலனை
     மறைகற்புத் தேளப் பூமனை
          சினமுற்றுச் சேடிற் சாடிய ...... கந்தவேளே
தினையுற்றுக் காவற் காரியை
     மணமுற்றுத் தேவப் பூவொடு
          திகழ்கச்சித் தேவக் கோன்மகிழ் ...... தம்பிரானே.


மகுடக் கொப்பு ஆடக் காதினில்
     நுதலில் பொட்டு ஊரக் கோதிய
        மயிரில் சுற்று ஓலைப் பூவோடு.....வண்டு பாட
வகை முத்துச் சோரச் சேர் நகை
     இதழில் சொல் சாதிப் பார் இயல்
        மதனச் சொல் பாடுக் கோகில.....ரம்பை மாதர்
பகடிச் சொல் கூறிப் போர் மயல்
     முக இச்சைப் பேசிச் சீர் இடை
        பவளப் பட்டாடைத் தோள் இரு.....கொங்கை மேலா
பண(ம்) மெத்தப் பேசித் தூது இடும்
      இதயச் சுத்த ஈனச் சோலிகள்
        பலர் எச்சிற்கு ஆசைக்காரிகள்.....சந்தம் ஆமோ
தகுடத்தத் தானத் தானன
     திகுடத்தித் தீதித் தோதிமி
        தடுட்டுடுட் டாடப் பேரிகை.....சங்கு வீணை
தடம் இட்டு பாவக்கார் கிரி
     பொடி பட்டுப் போகச் சூரர்கள்
        தலை இற்று இட்டு ஆடப் போர் புரி.....கின்ற வேலா
திகிரிப் பொன் பாணிப் பாலனை
     மறை கல் புத்தேள் அப் பூம(ன்)னை
        சினம் உற்றுச் சேடில் சாடிய.....கந்த வேளே
தினை உற்றுக் காவல் காரியை
     மணம் உற்றுத் தேவ பூவொடு
        திகழ் கச்சித் தேவக் கோன் மகிழ்.....தம்பிரானே.
Add (additional) Audio/Video Link

Back to Top

347   காஞ்சீபுரம்   மக்கட்குக் கூற  
தத்தத்தத் தானன தானன
     தத்தத்தத் தானன தானன
          தத்தத்தத் தானன தானன ...... தனதான

மக்கட்குக் கூற அரிதானது
  கற்று எட்டத் தான்முடி யாதது
          மற்றொப்புக் கியாதும் ஒவாதது ...... மனதாலே
மட்டிட்டுத் தேடவொணாதது
     தத்வத்திற் கோவைபடாதது
         மத்தப்பொற் போது பகீரதி மதிசூடும்
முக்கட்பொற்பாளர் உசாவிய
     அர்த்தக்குப் போதக மானது
          முத்திக்குக் காரண மானது ...... பெறலாகா
முட்டர்க்கெட் டாதது நான்மறை
     ஏட்டிற்றெட் டாதென வேவரு
          முற்பட்டப் பாலையி லாவது ...... புரிவாயே
செக்கட் சக்ராயுத மாதுலன்
     மெச்சப்புற் போதுப டாவிய
          திக்குப்பொற் பூதர மேமுதல் ...... வெகுரூபம்
சிட்டித்துப் பூதப சாசுகள்
     கைக்கொட்டிட்டாட ம கோததி
          செற்றுக்ரச் சூரனை மார்பக ...... முதுசோரி
கக்கக்கைத் தாமரை வேல்விடு
     செச்சைக் கர்ப்பூர புயாசல
          கச்சுற்றப் பாரப யோதர ...... முலையாள்முன்
கற்புத் தப்பாது உலகேழையும்
     ஒக்கப்பெற்றாள் விளையாடிய
          கச்சிக்கச் சாலையில் மேவிய ...... பெருமாளே.


மக்கட்குக் கூறரி தானது
     கற்றெட்டத் தான்முடி யாதது
          மற்றொப்புக் கியாதுமொ வாதது ...... மனதாலே
மட்டிட்டுத் தேடவொ ணாதது
     தத்வத்திற் கோவைப டாதது
          மத்தப்பொற் போதுப கீரதி ...... மதிசூடும்
முக்கட்பொற் பாளரு சாவிய
     அர்த்தக்குப் போதக மானது
          முத்திக்குக் காரண மானது ...... பெறலாகா
முட்டர்க்கெட் டாதது நான்மறை
     ஏட்டிற்றெட் டாதென வேவரு
          முற்பட்டப் பாலையி லாவது ...... புரிவாயே
செக்கட்சக் ராயுத மாதுலன்
     மெச்சப்புற் போதுப டாவிய
          திக்குப்பொற் பூதர மேமுதல் ...... வெகுரூபம்
சிட்டித்துப் பூதப சாசுகள்
     கைக்கொட்டிட் டாடம கோததி
          செற்றுக்ரச் சூரனை மார்பக ...... முதுசோரி
கக்கக்கைத் தாமரை வேல்விடு
     செச்சைக்கர்ப் பூரபு யாசல
          கச்சுற்றப் பாரப யோதர ...... முலையாள்முன்
கற்புத்தப் பாதுல கேழையு
     மொக்கப்பெற் றாள்விளை யாடிய
          கச்சிக்கச் சாலையில் மேவிய ...... பெருமாளே.
Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=81-iorhfSU4
Add (additional) Audio/Video Link

Back to Top

348   காஞ்சீபுரம்   மயல் ஓதும்  
தனதான தந்த தனதான தந்த
     தனதான தந்த ...... தனதான

மயலோது மந்த நிலையாலும் வஞ்ச
     வசைபேசு கின்ற ...... மொழியாலும்
மறிபோலு கின்ற விழிசேரு மந்தி
     மதிநேரு கின்ற ...... நுதலாலும்
அயிலேநி கர்ந்த விழியாலும் அஞ்ச
     நடையாலும் அங்கை ...... வளையாலும்
அறிவேய ழிந்து அயர்வாகி நைந்து
     அடியேன்ம யங்கி ...... விடலாமோ
மயிலேறி யன்று நொடிபோதி லண்டம்
     வலமாக வந்த ...... குமரேசா
மறிதாவு செங்கை அரனா ரிடங்கொள்
     மலைமாது தந்த ...... முருகேசா
நயவானு யர்ந்த மணிமாட மும்பர்
     நடுவேநி றைந்த ...... மதிசூழ
நறைவீசு கும்ப குடமேவு கம்பை
     நகர்மீத மர்ந்த ...... பெருமாளே.


மயல் ஓதும் அந்த நிலையாலும் வஞ்ச
     வசை பேசுகின்ற.....மொழியாலும்
மறி போல் உகின்ற விழி சேரும் அந்தி
     மதி நேருகின்ற.....நுதலாலும்
அயிலே நிகர்ந்த விழியாலும் அஞ்ச(ம்)
     நடையாலும் அங்கை.....வளையாலும்
அறிவே அழிந்து அயர்வாகி நைந்து
     அடியேன் மயங்கி.....விடலாமோ
மயில் ஏறி அன்று நொடி போதில் அண்டம்
     வலமாக வந்த.....குமரேசா
மறி தாவு செங்கை அரனார் இடங்கொள்
     மலைமாது தந்த.....முருகேசா
நய வான் உயர்ந்த மணி மாடம் உம்பர்
     நடுவே நிறைந்த மதி சூழ
நறை வீசு கும்ப குட(ம்) மேவு கம்பை
     நகர் மீது அமர்ந்த.....பெருமாளே.
Add (additional) Audio/Video Link

Back to Top

349   காஞ்சீபுரம்   முத்து ரத்ந சூத்ர  
தத்த தத்த தாத்த தத்த தத்த தாத்த
     தத்த தத்த தாத்த ...... தனதான

முத்து ரத்ந சூத்ர மொத்த சித்ர மார்க்கர்
     முற்செ மத்து மூர்க்கர் ...... வெகுபாவர்
முத்து திர்த்த வார்த்தை யொத்த பத்ர வாட்கண்
     முச்சர் மெத்த சூட்சர் ...... நகையாலே
எத்தர் குத்தி ரார்த்தர் துட்ட முட்ட காக்கர்
     இட்ட முற்ற கூட்டர் ...... விலைமாதர்
எக்கர் துக்கர் வாழ்க்கை யுற்ற சித்த நோய்ப்புண்
     இப்ப டிக்கு மார்க்கம் ...... உழல்வேனோ
தித்தி மித்தி மீத்த னத்த னத்த மூட்டு
     சிற்று டுக்கை சேட்டை ...... தவில்பேரி
திக்கு மக்க ளாக்கை துக்க வெற்பு மீக்கொள்
     செக்க டற்கு ளாழ்த்து ...... விடும்வேலா
கற்பு ரத்தை வீட்டி நட்ட மிட்ட நீற்றர்
     கத்தர் பித்தர் கூத்தர் ...... குருநாதா
கற்கு றிச்சி வாழ்ப்பெ ணொக்க வெற்றி வேற்கொள்
     கச்சி நத்தி நாட்கொள் ...... பெருமாளே.


முத்து ரத்ந சூத்ரம் ஒத்த சித்ர மார்க்கர்
     முன் செ(ன்) மத்து மூர்க்கர் வெகு.....பாவர்
முத்து உதிர்த்த வார்த்தை ஒத்த பத்ரம் வாள் கண்
     மு(ஞ்)சர் மெத்த சூட்சர்.....நகையாலே
எத்தர் குத்திர அர்த்தர் துட்ட முட்ட காக்கர்
     இட்டம் உற்ற கூட்டர்.....விலை மாதர்
எக்கர் துக்கர் வாழ்க்கை உற்ற சித்த நோய்ப்புண்
     இப்படிக்கு மார்க்கம்.....உழல்வேனோ
தித்தி மித்தி மீத் தனத்த நத்தம் மூட்டு
     சிற்று உடுக்கை சேட்டை.....தவில் பேரி
திக்கு மக்கள் ஆக்கை துக்க வெற்பு மீக்கொள்
     செம் கடற்குள் ஆழ்த்து.....விடும் வேலா
கல் புரத்தை வீட்டி நட்டமிட்ட நீற்றர்
     கத்தர் பித்தர் கூத்தர்.....குரு நாதா
கல் குறிச்சி வாழ்ப்பெண் ஒக்க வெற்றி வேல் கொள்
     கச்சி நத்தி நாள் கொள்.....பெருமாளே.
Add (additional) Audio/Video Link

Back to Top

350   காஞ்சீபுரம்   வம்பறாச்சில  
தந்த தாத்தன தன்ன தனந்தன
     தத்தத் தத்தத் ...... தனதானா

வம்ப றாச்சில கன்ன மிடுஞ்சம
     யத்துக் கத்துத் ...... திரையாளர்
வன்க லாத்திரள் தன்னை யகன்றும
     னத்திற் பற்றற் ...... றருளாலே
தம்ப ராக்கற நின்னை யுணர்ந்துரு
     கிப்பொற் பத்மக் ...... கழல்சேர்வார்
தங்கு ழாத்தினி லென்னையு மன்பொடு
     வைக்கச் சற்றுக் ...... கருதாதோ
வெம்ப ராக்ரம மின்னயில் கொண்டொரு
     வெற்புப் பொட்டுப் ...... படமாசூர்
வென்ற பார்த்திப பன்னிரு திண்புய
     வெட்சிச் சித்ரத் ...... திருமார்பா
கம்ப ராய்ப்பணி மன்னு புயம்பெறு
     கைக்குக் கற்புத் ...... தவறாதே
கம்பை யாற்றினி லன்னை தவம்புரி
     கச்சிச் சொக்கப் ...... பெருமாளே.


வம்பறாச்சில கன்னமிடும்
     சமயத்துக் கத்துத்.....திரையாளர்
வன்கலாத்திரள் தன்னை யகன்று
     மனத்திற் பற்றற்று.....அருளாலே
தம் பராக்கு அற நின்னை யுணர்ந்துருகி
     பொற் பத்மக்.....கழல்சேர்வார்தம்
குழாத்தினில் என்னையும் அன்பொடு
     வைக்கச் சற்றுக்.....கருதாதோ
வெம்பராக்ரம மின்னயில் கொண்டு ஒரு
     வெற்புப் பொட்டுப்.....பட மாசூர்
வென்ற பார்த்திப பன்னிரு திண்புய
     வெட்சிச் சித்ரத்.....திருமார்பா
கம்ப ராய்ப்பணி மன்னு புயம்பெறு
     கைக்கு கற்புத்.....தவறாதே
கம்பை யாற்றினில் அன்னை தவம்புரி
     கச்சிச் சொக்கப்.....பெருமாளே.
Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=jAOD8aflJF4
Add (additional) Audio/Video Link

Back to Top

351   காஞ்சீபுரம்   வாய்ந்தப்பிடை  
தாந்தத்தன தானன தானன
     தாந்தத்தன தானன தானன
          தாந்தத்தன தானன தானன ...... தனதானா

வாய்ந்தப்பிடை நீடுகு லாவிய
     நீந்திப்பது மாதியை மீதினி
          லூர்ந்துற்பல வோடையில் நீடிய ...... உகள்சேலை
வார்ந்துப்பக ழீயெதி ராகிமை
     கூர்ந்துப்பரி யாவரி சேரவை
          சேர்ந்துக்குழை யோடுச லாடிய ...... விழியாலே
சாய்ந்துப்பனை யூணவ ரானபொ
     லாய்ந்துப்பணி னாரிரு தாளினில்
          வீழ்ந்திப்படி மீதினி லேசிறி ...... தறிவாலே
சாந்தப்பிய மாமலை நேர்முலை
     சேர்ந்துப்படி வீணினி லேயுயிர்
          மாய்ந்திப்படி போகினு மோர்மொழி ...... மறவேனே
சார்ந்தப்பெரு நீர்வெள மாகவெ
     பாய்ந்தப்பொழு தாருமி லாமலெ
          காந்தப்பெரு நாதனு மாகிய ...... மதராலே
தாந்தக்கிட தாகிட தாகிட
     தோந்திக்கிட தோதிமி தோதிமி
          சேஞ்செக்கண சேகெண சேகெண ...... வெனதாளம்
காந்தப்பத மாறியு லாவுய
     ராந்தற்குரு நாதனு மாகியெ
          போந்தப்பெரு மான்முரு காவொரு ...... பெரியோனே
காந்தக்கலு மூசியு மேயென
     ஆய்ந்துத்தமி ழோதிய சீர்பெறு
          காஞ்சிப்பதி மாநகர் மேவிய ...... பெருமாளே.


வாய்ந்து அப்பு இடை நீடு குலாவிய
     நீந்து பதும ஆதியை மீதினில்
        ஊர்ந்து உற்பல ஓடையில் நீடிய.....உகள் சேலை
வார்ந்துப் பகழீ எதிர் ஆகி மை
     கூர்ந்துப் பரியா(க) வரி சேர் அவை
        சேர்ந்துக் குழையோடு ஊசல் ஆடிய.....விழியாலே
சாய்ந்துப் பனை ஊண் அவர் ஆன பொல்
     ஆய்ந்துப் ப(பா)ணினார் இரு தாளினில்
        வீழ்ந்து இப்படி மீதினிலே சிறிது.....அறிவாலே
சாந்து அப்பிய மா மலை நேர் முலை
     சேர்ந்துப்படி வீணினி லேயுயிர்
        மாய்ந்து இப்படிப் போகினும் ஓர் மொழி.....மறவேனே
சார்ந்தப் பெரு நீர் வெ(ள்)ளமாகவே
     பாய்ந்த அப் பொழுது ஆரும் இல்லாமலெ
        காந்தப் பெரு நாதனும் ஆகிய.....மதராலே
தாந்தக்கிட தாகிட தாகிட
         தோந்திக்கிட தோதிமி தோதிமி
                  சேஞ்செக்கண சேகெண சேகெண.....வெனதாளம்
காந்தப் பத(ம்) மாறி உலாவு உயர்
     ஆந்தன் குரு நாதனும் ஆகியெ
        போந்தப் பெருமான முருகா ஒரு.....பெரியோனே
காந்தக் க(ல்)லும் ஊசியுமே என
     ஆய்ந்துத் தமிழ் ஓதிய சீர் பெறு(ம்)
        காஞ்சிப் பதி மாநகர் மேவிய.....பெருமாளே.
Add (additional) Audio/Video Link

Back to Top

352   காஞ்சீபுரம்   அறிவிலாப் பித்தர்  
தனதனாத் தந்த தந்த தனதனாத் தந்த தந்த
     தனதனாத் தந்த தந்த ...... தனதான

அறிவிலாப் பித்த ருன்ற னடிதொழாக் கெட்ட வஞ்சர்
     அசடர்பேய்க் கத்தர் நன்றி ...... யறியாத
அவலர்மேற் சொற்கள் கொண்டு கவிகளாக் கிப்பு கழ்ந்து
     அவரைவாழ்த் தித்தி ரிந்து ...... பொருள்தேடிச்
சிறிதுகூட் டிக்கொ ணர்ந்து தெருவுலாத் தித்தி ரிந்து
     தெரிவைமார்க் குச்சொ ரிந்து ...... அவமேயான்
திரியுமார்க் கத்து நிந்தை யதனைமாற் றிப்ப ரிந்து
     தெளியமோ க்ஷத்தை யென்று ...... அருள்வாயே
இறைவர்மாற் றற்ற செம்பொன் வடிவம்வேற் றுப்பி ரிந்து
     இடபமேற் கச்சி வந்த ...... உமையாள்தன்
இருளைநீக் கத்த வஞ்செய் தருளநோக் கிக்கு ழைந்த
     இறைவர்கேட் கத்த குஞ்சொ ...... லுடையோனே
குறவர்கூட் டத்தில் வந்து கிழவனாய்ப் புக்கு நின்று
     குருவியோட் டித்தி ரிந்த ...... தவமானைக்
குணமதாக் கிச்சி றந்த வடிவுகாட் டிப்பு ணர்ந்த
     குமரகோட் டத்த மர்ந்த ...... பெருமாளே.


அறிவிலாப் பித்தர் உன்றன் அடிதொழாக் கெட்ட வஞ்சர்
     அசடர்பேய்க் கத்தர் நன்றி.....யறியாத
அவலர் மேற் சொற்கள் கொண்டு கவிகளாக்கிப் புகழ்ந்து
     அவரை வாழ்த்தித் திரிந்து.....பொருள்தேடி
சிறிதுகூட்டிக் கொணர்ந்து தெருவுலாத்தித் திரிந்து
     தெரிவை மார்க்குச் சொரிந்து.....அவமேயான்
திரியுமார்க்கத்து நிந்தை யதனை மாற்றி பரிந்து
     தெளிய மோக்ஷத்தை யென்று.....அருள்வாயே
இறைவர் மாற்றற்ற செம்பொன் வடிவம் வேற்றுப்பி ரிந்து
     இடபமேற் கச்சி வந்த.....உமையாள் தன்
இருளை நீக்கத் தவஞ்செய்து அருளநோக்கிக் குழைந்த
     இறைவர் கேட்கத்தகுஞ் சொல்.....உடையோனே
குறவர்கூட்டத்தில் வந்து கிழவனாய்ப் புக்கு நின்று
     குருவியோட்டித் திரிந்த.....தவமானை
குணமதாக்கிச் சிறந்த வடிவுகாட்டிப் புணர்ந்த
     குமரகோட்டத்து அமர்ந்த.....பெருமாளே.
Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=s5rt7UMjiRU
Add (additional) Audio/Video Link

Back to Top

     
send corrections and suggestions to admin-at-sivaya.org
This page was last modified on Tue, 07 Apr 2026 01:48:44 +0000