சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

Selected Thiruppugazh      Thiruppugazh Thalangal      All Thiruppugazh Songs      Thiruppugazh by Santham     

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew   Korean  
Order by:
Thiruppugazh from Thalam: ஆறு திருப்பதி
307   அலைகடல் நிகராகிய     308   ஈனமிகுத்துள பிறவி    
307   ஆறு திருப்பதி   அலைகடல் நிகராகிய  
தனதன தனதானன தனதன தனதானன
     தனதன தனதானன ...... தனதான

அலைகடல் நிகராகிய விழிகொடு வலைவீசிகள்
     அபகட மகபாவிகள் ...... விரகாலே
அதிவித மதராயத நிதமொழி பலகூறிகள்
     அசடரொ டுறவாடிகள் ...... அநியாயக்
கலைபகர் விலைமாதர்கள் இளைஞர்கள் குடிகேடிகள்
     கருதிடு கொடியாருட ...... னினிதாகக்
கனதன முலைமேல்விழு கபடனை நிருமூடனை
     கழலிணை பெறவேயினி ...... யருள்வாயே
அலைபுனல் தலைசூடிய பசுபதி மகனாகிய
     அறுமுக வடிவேஅருள் ...... குருநாதா
அசுரர்கள் குடியேகெட அமரர்கள் பதியேபெற
     அதிரிடும் வடிவேல்விடு ...... மதிசூரா
தலையய னறியாவொரு சிவகுரு பரனேயென
     தரணியி லடியார்கண ...... நினைவாகா
சகலமு முதலாகிய அறுபதி நிலைமேவிய
     தடமயில் தனிலேறிய ...... பெருமாளே.


அலை கடல் நிகர் ஆகிய விழி கொடு வலை வீசிகள்
    அபகடம் மக(கா) பாவிகள் விரகாலே
அதி வித மதரா அதம் அநித மொழி பல கூறிகள்
    அசடரொடு உறவாடிகள் அநியாயக்
கலை பகர் விலைமாதர்கள் இளைஞர்கள் குடி கேடிகள்
    கருதிடு கொடியாருடன் இனிதாகக்
கன தன முலை மேல் விழு கபடனை நிரு மூடனை
    கழல் இணை பெறவே இனி அருள்வாயே
அலை புனல் தலை சூடிய பசுபதி மகனாகிய
    அறுமுக வடிவே அருள் குரு நாதா
அசுரர்கள் குடியே கெட அமரர்கள் பதியே பெற
    அதிரிடும் வடிவேல் விடும் அதி சூரா
தலை அயன் அறியா ஒரு சிவ குரு பரனே என தரணியில்
    அடியார் கண(ம்) நினை வாகா
சகலமும் முதலாகிய அறுபதி நிலைமேவிய
    தட மயில் தனில் ஏறிய பெருமாளே.
Add (additional) Audio/Video Link

Back to Top

308   ஆறு திருப்பதி   ஈனமிகுத்துள பிறவி  
தானதனத் தனதனன ...... தனதான
     தானதனத் தனதனன ...... தனதான

ஈனமிகுத் துளபிறவி ...... யணுகாதே
     யானுமுனக் கடிமையென ...... வகையாக
ஞானஅருட் டனையருளி ...... வினைதீர
     நாணமகற் றியகருணை ...... புரிவாயே
தானதவத் தினின்மிகுதி ...... பெறுவோனே
     சாரதியுத் தமிதுணைவ ...... முருகோனே
ஆனதிருப் பதிகமரு ...... ளிளையோனே
     ஆறுதிருப் பதியில்வளர் ...... பெருமாளே.


ஈனமிகுத்துள பிறவி யணுகாதே
யானுமுனக்கு அடிமையென வகையாக
ஞானஅருள் தனையருளி வினைதீர
நாணம் அகற்றிய கருணை புரிவாயே
தானதவத்தினின்மிகுதி பெறுவோனே
சாரதியுத்தமி துணைவ முருகோனே
ஆனதிருப் பதிகம் அருள் இளையோனே
ஆறுதிருப் பதியில்வளர் பெருமாளே.
 
Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=D-7jDqx0wL4
Add (additional) Audio/Video Link

Back to Top

     
send corrections and suggestions to admin-at-sivaya.org
This page was last modified on Tue, 07 Apr 2026 01:48:44 +0000