![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Hebrew
Korean
Easy version Classic version
https://www.youtube.com/watch?v=1om-VxulkEw Add audio link
7.099
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
திருநாகேச்சரம் - பஞ்சமம் ஹனுமத்தோடி ஆபோகி ஆகிரி ராகத்தில் திருமுறை அருள்தரு குன்றமுலையம்மை உடனுறை அருள்மிகு செண்பகாரணியேசுவரர் திருவடிகள் போற்றி
பிறையணி வாணுதலாள் உமை
யாளவள் பேழ்கணிக்க
நிறையணி நெஞ்சனுங்க நீல
மால்விடம் உண்டதென்னே
குறையணி குல்லைமுல்லை அளைந்
துகுளிர் மாதவிமேல்
சிறையணி வண்டுகள்சேர் திரு
நாகேச் சரத்தானே.
1
அருந்தவ மாமுனிவர்க் கரு
ளாகியொர் ஆலதன்கீழ்
இருந்தற மேபுரிதற் கியல்
பாகிய தென்னைகொலாம்
குருந்தய லேகுரவம் மர
வின்னெயி றேற்றரும்பச்
செருந்திசெம் பொன்மலருந் திரு
நாகேச் சரத்தானே.
2
பாலன தாருயிர்மேற் பரி
யாது பகைத்தெழுந்த
காலனை வீடுவித்துக் கருத்
தாக்கிய தென்னைகொலாம்
கோல மலர்க்குவளைக் கழு
நீர்வயல் சூழ்கிடங்கில்
சேலொடு வாளைகள்பாய் திரு
நாகேச் சரத்தானே.
3
குன்ற மலைக்குமரி கொடி
யேரிடை யாள்வெருவ
வென்றி மதகரியின் னுரி
போர்த்ததும் என்னைகொலாம்
முன்றில் இளங்கமுகின் முது
பாளை மதுஅளைந்து
தென்றல் புகுந்துலவுந் திரு
நாகேச் சரத்தானே.
4
அரைவிரி கோவணத்தோ டர
வார்த்தொரு நான்மறைநூல்
உரைபெரு கவ்வுரைத் தன்
றுகந்தருள் செய்ததென்னே
வரைதரு மாமணியும் வரைச்
சந்தகி லோடும்உந்தித்
திரைபொரு தண்பழனத் திரு
நாகேச் சரத்தானே.
5
Go to top
தங்கிய மாதவத்தின் தழல்
வேள்வியி னின்றெழுந்த
சிங்கமும் நீள்புலியுஞ் செழு
மால்கரி யோடலறப்
பொங்கிய போர்புரிந்து பிளந்
தீருரி போர்த்ததென்னே
செங்கயல் பாய்கழனித் திரு
நாகேச் சரத்தானே.
6
நின்றஇம் மாதவத்தை யொழிப்
பான்சென் றணைந்துமிகப்
பொங்கிய பூங்கணைவேள் பொடி
யாக விழித்தலென்னே
பங்கய மாமலர்மேல் மது
வுண்டுவண் தேன்முரலச்
செங்கயல் பாய்வயல்சூழ் திரு
நாகேச் சரத்தானே.
7
வரியர நாணதாக மா
மேரு வில்லதாக
அரியன முப்புரங்கள் ளவை
ஆரழல் ஊட்டல்என்னே
விரிதரு மல்லிகையும் மலர்ச்
சண்பக மும்மளைந்து
திரிதரு வண்டுபண்செய் திரு
நாகேச் சரத்தானே.
8
அங்கியல் யோகுதனை யழிப்
பான்சென் றணைந்துமிகப்
பொங்கிய பூங்கணைவேள் பொடி
யாக விழித்தல்என்னே
பங்கய மாமலர்மேல் மது
வுண்டுபண் வண்டறையச்
செங்கயல் நின்றுகளுந் திரு
நாகேச் சரத்தானே.
9
குண்டரைக் கூறையின்றித் திரி
யுஞ்சமண் சாக்கியப்பேய்
மிண்டரைக் கண்டதன்மை விர
வாக்கிய தென்னைகொலோ
தொண்டிரைத் துவணங்கித் தொழில்
பூண்டடி யார்பரவும்
தெண்டிரைத் தண்வயல்சூழ் திரு
நாகேச் சரத்தானே.
10
Go to top
கொங்கணை வண்டரற்றக் குயி
லும்மயி லும்பயிலும்
தெங்கமழ் பூம்பொழில்சூழ் திரு
நாகேச் சரத்தானை
வங்க மலிகடல்சூழ் வயல்
நாவல வூரன்சொன்ன
பங்கமில் பாடல்வல்லா ரவர்
தம்வினை பற்றறுமே.
11
Thevaaram Link
- Shaivam Link
Other song(s) from this location: திருநாகேச்சரம்
4.066
திருநாவுக்கரசர்
தேவாரம்
கச்சை சேர் அரவர் போலும்;
Tune - திருநேரிசை
(திருநாகேச்சரம் சண்பகாரண்ணியேசுவரர் குன்றமுலைநாயகியம்மை)
5.052
திருநாவுக்கரசர்
தேவாரம்
நல்லர்; நல்லது ஓர் நாகம்
Tune - திருக்குறுந்தொகை
(திருநாகேச்சரம் செண்பகாரணியேசுவரர் குன்றமுலைநாயகியம்மை)
6.066
திருநாவுக்கரசர்
தேவாரம்
தாய் அவனை, வானோர்க்கும் ஏனோருக்கும்
Tune - திருத்தாண்டகம்
(திருநாகேச்சரம் சண்பகாரண்ணியேசுவரர் குன்றமுலைநாயகியம்மை)
7.099
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
பிறை அணி வாள் நுதலாள்
Tune - பஞ்சமம்
(திருநாகேச்சரம் செண்பகாரணியேசுவரர் குன்றமுலையம்மை)
This page was last modified on Sun, 09 Mar 2025 21:48:18 +0000