சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

7.058   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு

சீர்காழி - தக்கேசி கரகரப்பிரியா காம்போதி கர்நாடக காபி ராகத்தில் திருமுறை அருள்தரு திருநிலைநாயகியம்மை உடனுறை அருள்மிகு பிரமபுரியீசுவரர் திருவடிகள் போற்றி
உமையம்மையளித்த திருமுலைப்பாலாகிய அமுதத்தை உண்டு உலகம் உய்யத் திருநெறிய தெய்வத் தமிழ் பாடியருளிய திருஞானசம்பந்தப் பெருமான் அவதரித் தருளிய இடமாதலால் அத்தலத்தைத் தம் பாதங்களால் மிதித்தல் கூடாதெனக் கருதிப் புற எல்லையை வணங்கி வலஞ்செய்தார் சுந்தரர். ஆரூரரின் அன்பின் திறமறிந்து மகிழ்ந்து காழிப்பெருமான் அம்மையப்பராக விடைமேல் தோன்றிக் காட்சி வழங்கினான். அவ்வருட்காட்சியைக் கண்டு மகிழ்ந்த சுந்தரர் ``சாதலும் பிறத்தலும்`` என்னும் திருப்பதிகம் பாடிப் போற்றினார்.
https://www.youtube.com/watch?v=iLMFcrlylr0   Add audio link Add Audio
சாதலும் பிறத்தலுந் தவிர்த்தெனை வகுத்துத்
தன்னருள் தந்தஎம் தலைவனை மலையின்
மாதினை மதித்தங்கொர் பால்கொண்ட மணியை
வருபுனல் சடையிடை வைத்தஎம் மானை
ஏதிலென் மனத்துக்கோர் இரும்புண்ட நீரை
எண்வகை ஒருவனை எங்கள்பி ரானைக்
காதில்வெண் குழையனைக் கடல்கொள மிதந்த
கழுமல வளநகர்க் கண்டுகொண் டேனே


1


மற்றொரு துணைஇனி மறுமைக்குங் காணேன்
வருந்தலுற் றேன்மற வாவரம் பெற்றேன்
சுற்றிய சுற்றமுந் துணையென்று கருதேன்
துணையென்று நான்தொழப் பட்டஒண் சுடரை
முத்தியும் ஞானமும் வானவ ரறியா
முறைமுறை பலபல நெறிகளுங் காட்டிக்
கற்பனை கற்பித்த கடவுளை யடியேன்
கழுமல வளநகர்க் கண்டுகொண் டேனே


2


திருத்தினை நகருறை சேந்தனப் பன்னென்
செய்வினை யறுத்திடுஞ் செம்பொனை அம்பொன்
ஒருத்தனை யல்லதிங் காரையு முணரேன்
உணர்வுபெற் றேன்உய்யுங் காரணந் தன்னால்
விருத்தனைப் பாலனைக் கனவிடை விரவி
விழித்தெங்குங் காணமாட் டாதுவிட் டிருந்தேன்
கருத்தனை நிருத்தஞ்செய் காலனை வேலைக்
கழுமல வளநகர்க் கண்டுகொண் டேனே


3


மழைக்கரும் பும்மலர்க் கொன்றையி னானை
வளைக்கலுற் றேன்மற வாமனம் பெற்றேன்
பிழைத்தொரு கால்இனிப் போய்ப்பிற வாமைப்
பெருமைபெற் றேன்பெற்ற தார்பெறு கிற்பார்
குழைக்கருங் கண்டனைக் கண்டுகொள் வானே
பாடுகின் றேன்சென்று கூடவும் வல்லேன்
கழைக்கரும் புங்கத லிப்பல சோலைக்
கழுமல வளநகர்க் கண்டுகொண் டேனே


4


குண்டலங் குழைதிகழ் காதனே யென்றுங்
கொடுமழு வாட்படைக் குழகனே யென்றும்
வண்டலம் பும்மலர்க் கொன்றைய னென்றும்
வாய்வெரு வித்தொழு தேன்விதி யாலே
பண்டைநம் பலமன முங்களைந் தொன்றாய்ப்
பசுபதி பதிவின விப்பல நாளுங்
கண்டலங் கழிக்கரை யோதம்வந் துலவுங்
கழுமல வளநகர்க் கண்டுகொண் டேனே


5


Go to top
வரும்பெரு வல்வினை யென்றிருந் தெண்ணி
வருந்தலுற் றேன்மற வாமனம் பெற்றேன்
விரும்பிஎன் மனத்திடை மெய்குளிர்ப் பெய்தி
வேண்டிநின் றேதொழு தேன்விதி யாலே
அரும்பினை அலரினை அமுதினைத் தேனை
ஐயனை அறவன்என் பிறவிவேர் அறுக்குங்
கரும்பினைப் பெருஞ்செந்நெல் நெருங்கிய கழனிக்
கழுமல வளநகர்க் கண்டுகொண் டேனே


6


அயலவர் பரவவும் அடியவர் தொழவும்
அன்பர்கள் சாயலுள் அடையலுற் றிருந்தேன்
முயல்பவர் பின்சென்று முயல்வலை யானை
படுமென மொழிந்தவர் வழிமுழு தெண்ணிப்
புயலினைத் திருவினைப் பொன்னின தொளியை
மின்னின துருவினை என்னிடைப் பொருளைக்
கயலினஞ் சேலொடு வயல்விளை யாடுங்
கழுமல வளநகர்க் கண்டுகொண் டேனே


7


நினைதரு பாவங்கள் நாசங்க ளாக
நினைந்துமுன் தொழுதெழப் பட்டஒண் சுடரை
மனைதரு மலைமகள் கணவனை வானோர்
மாமணி மாணிக்கத் தைம்மறைப் பொருளைப்
புனைதரு புகழினை எங்கள தொளியை
இருவரும் ஒருவனென் றுணர்வரி யவனைக்
கனைதரு கருங்கட லோதம்வந் துலவுங்
கழுமல வளநகர்க் கண்டுகொண் டேனே


8


மறையிடைத் துணிந்தவர் மனையிடை யிருப்ப
வஞ்சனை செய்தவர் பொய்கையுள் மாயத்
துறையுறக் குளித்துள தாகவைத் துய்த்த
துன்மை யெனுந்தக வின்மையை யோரேன்
பிறையுடைச் சடையனை எங்கள்பி ரானைப்
பேரரு ளாளனைக் காரிருள் போன்ற
கறையணி மிடறுடை யடிகளை அடியேன்
கழுமல வளநகர்க் கண்டுகொண் டேனே


9


செழுமலர்க் கொன்றையுங் கூவிள மலரும்
விரவிய சடைமுடி யடிகளை நினைந்திட்
டழுமலர்க் கண்ணிணை அடியவர்க் கல்லால்
அறிவரி தவன்றிரு வடியிணை யிரண்டுங்
கழுமல வளநகர்க் கண்டுகொண் டூரன்
சடையன்றன் காதலன் பாடிய பத்துந்
தொழுமல ரெடுத்தகை அடியவர் தம்மைத்
துன்பமும் இடும்பையுஞ் சூழகி லாவே


10


Go to top

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: சீர்காழி
1.019   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   பிறை அணி படர் சடை
Tune - நட்டபாடை   (சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
1.024   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   பூஆர் கொன்றைப் புரிபுன் சடை
Tune - தக்கராகம்   (சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
1.034   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   அடல் ஏறு அமரும் கொடி
Tune - தக்கராகம்   (சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
1.079   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   அயில் உறு படையினர்; விடையினர்;
Tune - குறிஞ்சி   (சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
1.081   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   நல்லார், தீ மேவும் தொழிலார்,
Tune - குறிஞ்சி   (சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
1.102   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   உரவு ஆர் கலையின் கவிதைப்
Tune - குறிஞ்சி   (சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
1.126   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   பந்தத்தால் வந்து எப்பால் பயின்று
Tune - வியாழக்குறிஞ்சி   (சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
1.129   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   சே உயரும் திண் கொடியான்
Tune - மேகராகக்குறிஞ்சி   (சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
2.011   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   நல்லானை, நால்மறையோடு இயல் ஆறுஅங்கம் வல்லானை,
Tune - இந்தளம்   (சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
2.039   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   ஆரூர், தில்லை அம்பலம், வல்லம்,
Tune - இந்தளம்   (சீர்காழி )
2.049   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   பண்ணின் நேர் மொழி மங்கைமார்
Tune - சீகாமரம்   (சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
2.059   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   நலம் கொள் முத்தும் மணியும்
Tune - காந்தாரம்   (சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
2.075   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   விண் இயங்கும் மதிக்கண்ணியான், விரியும்
Tune - காந்தாரம்   (சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
2.096   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   பொங்கு வெண்புரி வளரும் பொற்பு
Tune - பியந்தைக்காந்தாரம்   (சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
2.097   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   நம் பொருள், நம் மக்கள்
Tune - நட்டராகம்   (சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
2.113   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   பொடி இலங்கும் திருமேனியாளர், புலி
Tune - செவ்வழி   (சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
3.022   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   துஞ்சலும் துஞ்சல் இலாத போழ்தினும், நெஞ்சு
Tune - காந்தாரபஞ்சமம்   (சீர்காழி )
3.040   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   கல்லால் நீழல் அல்லாத் தேவை நல்லார்
Tune - கொல்லி   (சீர்காழி )
3.043   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   சந்தம் ஆர் முலையாள் தன
Tune - கௌசிகம்   (சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
3.118   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   மடல் மலி கொன்றை, துன்று
Tune - புறநீர்மை   (சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
4.082   திருநாவுக்கரசர்   தேவாரம்   பார் கொண்டு மூடிக் கடல்
Tune - திருவிருத்தம்   (சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
4.083   திருநாவுக்கரசர்   தேவாரம்   படை ஆர் மழு ஒன்று
Tune - திருவிருத்தம்   (சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
5.045   திருநாவுக்கரசர்   தேவாரம்   மாது இயன்று மனைக்கு இரு!
Tune - திருக்குறுந்தொகை   (சீர்காழி தோணியப்பர் திருநிலைநாயகியம்மை)
7.058   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   சாதலும் பிறத்தலும் தவிர்த்து, எனை
Tune - தக்கேசி   (சீர்காழி பிரமபுரியீசுவரர் திருநிலைநாயகியம்மை)
8.137   மாணிக்க வாசகர்    திருவாசகம்   பிடித்த பத்து - உம்பர்கட் ரசே
Tune - அக்ஷரமணமாலை   (சீர்காழி )
11.027   பட்டினத்துப் பிள்ளையார்   திருக்கழுமல மும்மணிக் கோவை   திருக்கழுமல மும்மணிக் கோவை
Tune -   (சீர்காழி )

This page was last modified on Sun, 09 Mar 2025 21:48:18 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai song paadal paadal orig pathigam no 7.058