முன்னவன் எங்கள்பிரான் முதல் காண்பரி தாயபிரான் சென்னியில் எங்கள்பிரான் திரு நீல மிடற்றெம்பிரான் மன்னிய எங்கள்பிரான் மறை நான்குங்கல் லால்நிழற்கீழ்ப் பன்னிய எங்கள்பிரான் பழ மண்ணிப் படிக்கரையே.
|
1
|
அண்ட கபாலஞ்சென்னி அடி மேல்அலர் இட்டுநல்ல தொண்டங் கடிபரவித் தொழு தேத்திநின் றாடுமிடம் வெண்டிங்கள் வெண்மழுவன் விரை யார்கதிர் மூவிலைய பண்டங்கன் மேயவிடம் பழ மண்ணிப் படிக்கரையே.
|
2
|
ஆடுமின் அன்புடையீர் அடிக் காட்பட்ட தூளிகொண்டு சூடுமின் தொண்டருள்ளீர் உம ரோடெமர் சூழவந்து வாடுமிவ் வாழ்க்கைதன்னை வருந் தாமல் திருந்தச்சென்று பாடுமின் பத்தருள்ளீர் பழ மண்ணிப் படிக்கரையே.
|
3
|
அடுதலை யேபுரிந்தான் அவை அந்தர மூவெயிலும் கெடுதலை யேபுரிந்தான் கிள ருஞ்சிலை நாணியிற்கோல் நடுதலை யேபுரிந்தான் நரி கான்றிட்ட எச்சில்வெள்ளைப் படுதலை யேபுரிந்தான் பழ மண்ணிப் படிக்கரையே.
|
4
|
உங்கைக ளாற்கூப்பி உகந் தேத்தித்தொழு மின்தொண்டீர் மங்கையொர் கூறுடையான் வா னோர்முத லாயபிரான் அங்கையில் வெண்மழுவன் அலை யார்கதிர் மூவிலைய பங்கய பாதனிடம் பழ மண்ணிப் படிக்கரையே.
|
5
|
Go to top |
செடிபடத் தீவிளைத்தான் சிலை யார்மதிற் செம்புனஞ்சேர் கொடிபடு மூரிவெள்ளை எரு தேற்றையும் ஏறக்கொண்டான் கடியவன் காலன்றன்னைக் கறுத் தான்கழற் செம்பவளப் படியவன் பாசுபதன் பழ மண்ணிப் படிக்கரையே.
|
6
|
கடுத்தவன் தேர்கொண்டோடிக் கயி லாயநன் மாமலையை எடுத்தவன் ஈரைந்துவாய் அரக் கன்முடி பத்தலற விடுத்தவன் கைநரம்பால் வேத கீதங்கள் பாடலுறப் படுத்தவன் பால்வெண்ணீற்றன் பழ மண்ணிப் படிக்கரையே.
|
7
|
திரிவன மும்மதிலும் மெரித் தான்இமை யோர்பெருமான் அரியவன் அட்டபுட்பம் மவை கொண்டடி போற்றிநல்ல கரியவன் நான்முகனும் மடி யும்முடி காண்பரிய பரியவன் பாசுபதன் பழ மண்ணிப் படிக்கரையே.
|
8
|
வெற்றரைக் கற்றமணும் விரை யாதுவிண் டாலமுண்ணும் துற்றரைத் துற்றறுப்பான் துன்ன ஆடைத் தொழிலுடையீர் பெற்றரைப் பித்தரென்று கரு தேன்மின் படிக்கரையுள் பற்றரைப் பற்றிநின்று பழி பாவங்கள் தீர்மின்களே.
|
9
|
பல்லுயிர் வாழுந்தெண்ணீர்ப் பழ மண்ணிப் படிக்கரையை அல்லியந் தாமரைத்தார் ஆ ரூரன் உரைத்ததமிழ் சொல்லுதல் கேட்டல்வல்லா ரவர்க் குந்தமர்க் குங்கிளைக்கும் எல்லியும் நன்பகலும் மிடர் கூருதல் இல்லையன்றே.
|
10
|
Go to top |