சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

7.003   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு

திருநெல்வாயில் அரத்துறை - இந்தளம் லதாங்கி மாயாமாளவகெளளை கீதப்ரியா ராகத்தில் திருமுறை அருள்தரு ஆனந்தநாயகியம்மை உடனுறை அருள்மிகு அரத்துறைநாதர் திருவடிகள் போற்றி
https://www.youtube.com/watch?v=R3l_wdYEp6w   Add audio link Add Audio
கல்வாய்அகி லுங்கதிர் மாமணியுங்
கலந்துந்தி வருந்நிவ வின்கரைமேல்
நெல்வாயி லரத்துறை நீடுறையுந்
நிலவெண்மதி சூடிய நின்மலனே
நல்வாயில்செய் தார்நடந் தார்உடுத்தார்
நரைத்தார்இறந் தார்என்று நானிலத்தில்
சொல்லாய்க்கழி கின்ற தறிந்தடியேன்
தொடர்ந்தேன்உய்யப் போவதொர் சூழல்சொல்லே.


1


கறிமாமிள கும்மிகு வன்மரமும்
மிகவுந்தி வருந்நிவ வின்கரைமேல்
நெறிவார்குழ லாரவர் காணடஞ்செய்
நெல்வாயி லரத்துறை நின்மலனே
வறிதேநிலை யாதஇம் மண்ணுலகின்
நரனாக வகுத்தனை நானிலையேன்
பொறிவாயில்இவ் வைந்தினை யும்மவியப்
பொருதுன்னடி யேபுகுஞ் சூழல்சொல்லே.


2


புற்றாடர வம்மரை ஆர்த்துகந்தாய்
புனிதாபொரு வெள்விடை யூர்தியினாய்
எற்றேஒரு கண்ணிலன் நின்னையல்லால்
நெல்வாயி லரத்துறை நின்மலனே
மற்றேல்ஒரு பற்றிலன் எம்பெருமான்
வண்டார்குழ லாள்மங்கை பங்கினனே
அற்றார்பிற விக்கடல் நீந்தியேறி
அடியேன்உய்யப் போவதொர் சூழல்சொல்லே.


3


கோஓடுயர் கோங்கலர் வேங்கையலர்
மிகவுந்தி வருந்நிவ வின்கரைமேல்
நீஇடுயர் சோலைநெல் வாயிலரத்
துறைநின்மல னேநினை வார்மனத்தாய்
ஓஒடுபு னற்கரை யாம்இளமை
உறங்கிவ்விழித் தாலொக்கும் இப்பிறவி
வாஅடியி ருந்துவருந் தல்செய்யா
தடியேன்உய்யப் போவதொர் சூழல்சொல்லே.


4


உலவும்முகி லிற்றலை கற்பொழிய
உயர்வேயொ டிழிநிவ வின்கரைமேல்
நிலவும்மயி லாரவர் தாம்பயிலும்
நெல்வாயி லரத்துறை நின்மலனே
புலன்ஐந்து மயங்கி அகங்குழையப்
பொருவேலொர் நமன்றமர் தாம்நலிய
அலமந்தும யங்கி அயர்வதன்முன்
அடியேன்உய்யப் போவதொர் சூழல்சொல்லே.


5


Go to top
ஏலம்மில வங்கம் எழிற்கனகம்
மிகவுந்தி வருந்நிவ வின்கரைமேல்
நீலம்மலர்ப் பொய்கையில் அன்னமலி
நெல்வாயி லரத்துறை யாய்ஒருநெல்
வாலூன்ற வருந்தும் உடம்பிதனை
மகிழாதழ காஅலந் தேன்இனியான்
ஆலந்நிழ லில்லமர்ந் தாய்அமரா
அடியேன்உய்யப் போவதொர் சூழல்சொல்லே.


6


சிகரம்முகத் திற்றிர ளாரகிலும்
மிகவுந்தி வருந்நிவ வின்கரைமேல்
நிகரின்மயி லாரவர் தாம்பயிலுந்
நெல்வாயி லரத்துறை நின்மலனே
மகரக்குழை யாய்மணக் கோலமதே
பிணக்கோலம தாம்பிற வியிதுதான்
அகரம்முத லின்னெழுத் தாகிநின்றாய்
அடியேன்உய்யப் போவதொர் சூழல்சொல்லே.


7


திண்டேர்நெடு வீதி யிலங்கையர்கோன்
திரள்தோள்இரு பஃதும்நெ ரித்தருளி
ஞெண்டாடுநெ டுவயல் சூழ்புறவின்
நெல்வாயி லரத்துறை நின்மலனே
பண்டேமிக நான்செய்த பாக்கியத்தாற்
பரஞ்சோதிநின் நாமம் பயிலப்பெற்றேன்
அண்டாஅம ரர்க்கம ரர்பெருமான்
அடியேன்உய்யப் போவதொர் சூழல்சொல்லே.


8


மாணாவுரு வாகியொர் மண்ணளந்தான்
மலர்மேலவன் நேடியுங் காண்பரியாய்
நீணீண்முடி வானவர் வந்திறைஞ்சுந்
நெல்வாயி லரத்துறை நின்மலனே
வாணார்நுத லார்வலைப்பட் டடியேன்
பலவின்கனி ஈயது போல்வதன்முன்
ஆணோடுபெண் ணாமுரு வாகிநின்றாய்
அடியேனுய்யப் போவதொர் சூழல்சொல்லே.


9


நீரூரு நெடுவயல் சூழ்புறவின்
நெல்வாயி லரத்துறை நின்மலனைத்
தேரூர்நெடு வீதிநன் மாடமலி
தென்னாவலர் கோனடித் தொண்டன்அணி
ஆரூரன் உரைத்தன நற்றமிழின்
மிகுமாலையொர் பத்திவை கற்றுவல்லார்
காரூர்களி வண்டறை யானைமன்ன
ரவராகியொர் விண்முழு தாள்பவரே.


10


Go to top

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருநெல்வாயில் அரத்துறை
2.090   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   எந்தை! ஈசன்! எம்பெருமான்! ஏறு
Tune - பியந்தைக்காந்தாரம்   (திருநெல்வாயில் அரத்துறை அரத்துறைநாதர் ஆனந்தநாயகியம்மை)
5.003   திருநாவுக்கரசர்   தேவாரம்   கடவுளை, கடலுள்(ள்) எழு நஞ்சு
Tune - திருக்குறுந்தொகை   (திருநெல்வாயில் அரத்துறை )
7.003   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   கல்வாய் அகிலும் கதிர் மா
Tune - இந்தளம்   (திருநெல்வாயில் அரத்துறை அரத்துறைநாதர் ஆனந்தநாயகியம்மை)

This page was last modified on Sun, 09 Mar 2025 21:48:18 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai song paadal paadal orig pathigam no 7.003