கைம்மான மதகளிற்றி னுரிவை யான்காண் கறைக்கண்டன் காண்கண்ணார் நெற்றி யான்காண் அம்மான்காண் ஆடரவொன் றாட்டி னான்காண் அனலாடி காண்அயில்வாய்ச் சூலத் தான்காண் எம்மான்காண் ஏழுலகு மாயி னான்காண் எரிசுடரோன் காண்இலங்கு மழுவா ளன்காண் செம்மானத் தொளியன்ன மேனியான்காண் திருவாரூ ரான்காண்என் சிந்தை யானே.
|
1
|
ஊனேறு படுதலையி லுண்டி யான்காண் ஓங்காரன் காண்ஊழி முதலா னான்காண் ஆனேறொன் ரூர்ந்துழலும் ஐயா றன்காண் அண்டன்காண் அண்டத்துக் கப்பா லான்காண் மானேறு கரதலத்தெம் மணிகண் டன்காண் மாதவன்காண் மாதவத்தின் விளைவா னான்காண் தேனேறும் மலர்க்கொன்றைக் கண்ணி யான்காண் திருவாரூ ரான்காண்என் சிந்தை யானே.
|
2
|
ஏவணத்த சிலையால்முப் புரமெய் தான்காண் இறையவன்காண் மறையவன்காண் ஈசன் தான்காண் தூவணத்த சுடர்ச்சூலப் படையி னான்காண் சுடர்மூன்றுங் கண்மூன்றாக் கொண்டான் தான்காண் ஆவணத்தால் என்றன்னை ஆட்கொண் டான்காண் அனலாடிகாண் அடியார்க் கமிர்தா னான்காண் தீவணத்த திருவுருவிற் கரியுரு வன்காண் திருவாரூ ரான்காண் என்சிந்தை யானே.
|
3
|
கொங்குவார் மலர்க்கண்ணிக் குற்றா லன்காண் கொடுமழுவன் காண்கொல்லை வெள்ளேற் றான்காண் எங்கள்பால் துயர்கெடுக்கு மெம்பி ரான்காண் ஏழ்கடலு மேழ்மலையு மாயி னான்காண் பொங்குமா கருங்கடல்நஞ் சுண்டான் தான்காண் பொற்றூண்காண் செம்பவளத் திரள்போல் வான்காண் செங்கண்வா ளராமதியோ டுடன்வைத் தான்காண் திருவாரூ ரான்காண்என் சிந்தை யானே.
|
4
|
காரேறு நெடுங்குடுமிக் கயிலா யன்காண் கறைக்கண்டன் காண்கண்ணார் நெற்றி யான்காண் போரேறு நெடுங்கொடிமேல் உயர்த்தி னான்காண் புண்ணியன்காண் எண்ணரும்பல் குணத்தி னான்காண் நீரேறு சுடர்ச்சூலப் படையி னான்காண் நின்மலன்காண் நிகரேது மில்லா தான்காண் சீரேறு திருமாலோர் பாகத் தான்காண் திருவாரூ ரான்காண்என் சிந்தை யானே.
|
5
|
Go to top |
பிறையரவக் குறுங்கண்ணிச் சடையி னான்காண் பிறப்பிலிகாண் பெண்ணோடா ணாயி னான்காண் கறையுருவ மணிமிடற்று வெண்ணீற் றான்காண் கழல்தொழுவார் பிறப்பறுக்குங் காபாலி காண் இறையுருவக் கனவளையாள் இடப்பா கன்காண் இருநிலன்காண் இருநிலத்துக் கியல்பா னான்காண் சிறையுருவக் களிவண்டார் செம்மை யான்காண் திருவாரூ ரான்காண்என் சிந்தை யானே.
|
6
|
தலையுருவச் சிரமாலை சூடி னான்காண் தமருலகந் தலைகலனாப் பலிகொள் வான்காண் அலையுருவச் சுடராழி யாக்கி னான்காண் அவ்வாழி நெடுமாலுக் கருளி னான்காண் கொலையுருவக் கூற்றுதைத்த கொள்கை யான்காண் கூரெரிநீர் மண்ணொடுகாற் றாயி னான்காண் சிலையுருவச் சரந்துரந்த திறத்தி னான்காண் திருவாரூ ரான்காண்என் சிந்தை யானே.
|
7
|
ஐயன்காண் குமரன்காண் ஆதி யான்காண் அடல்மழுவாள் தானொன்று பியன்மே லேந்து கையன்காண் கடற்பூதப் படையி னான்காண் கண்ணெரியால் ஐங்கணையோன் உடல்காய்ந் தான்காண் வெய்யன்காண் தண்புனல்சூழ் செஞ்சடை யான்காண் வெண்ணீற்றான் காண்விசயற் கருள்செய் தான்காண் செய்யன்காண் கரியன்காண் வெளியோன் தான்காண் திருவாரூ ரான்காண்என் சிந்தை யானே.
|
8
|
மலைவளர்த்த மடமங்கை பாகத் தான்காண் மயானத்தான் காண்மதியஞ் சூடி னான்காண் இலைவளர்த்த மலர்க்கொன்றை மாலை யான்காண் இறையவன்காண் எறிதிரைநீர் நஞ்சுண் டான்காண் கொலைவளர்த்த மூவிலைய சூலத் தான்காண் கொடுங்குன்றன் காண்கொல்லை யேற்றி னான்காண் சிலைவளர்த்த சரந்துரந்த திறத்தி னான்காண் திருவாரூ ரான்காண்என் சிந்தை யானே.
|
9
|
பொற்றாது மலர்க்கொன்றை சூடி னான்காண் புரிநூலன் காண்பொடியார் மேனி யான்காண் மற்றாருந் தன்னொப்பா ரில்லா தான்காண் மறையோதி காண்எறிநீர் நஞ்சுண் டான்காண் எற்றாலுங் குறைவொன்று மில்லா தான்காண் இறையவன்காண் மறையவன்காண் ஈசன் றான்காண் செற்றார்கள் புரமூன்றுஞ் செற்றான் தான்காண் திருவாரூ ரான்காண்என் சிந்தை யானே.
|
10
|
Go to top |
Other song(s) from this location: திருவாரூர்
1.091
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
சித்தம் தெளிவீர்காள்! அத்தன் ஆரூரைப் பத்தி
Tune - குறிஞ்சி
(திருவாரூர் வன்மீகநாதர் அல்லியங்கோதையம்மை)
|
1.105
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பாடலன் நால்மறையன்; படி பட்ட
Tune - வியாழக்குறிஞ்சி
(திருவாரூர் வன்மீகநாதர் அல்லியங்கோதையம்மை)
|
2.079
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பவனம் ஆய், சோடை ஆய்,
Tune - காந்தாரம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
2.101
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பருக் கை யானை மத்தகத்து
Tune - நட்டராகம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
3.045
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
அந்தம் ஆய், உலகு ஆதியும்
Tune - கௌசிகம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
4.004
திருநாவுக்கரசர்
தேவாரம்
பாடு இளம் பூதத்தினானும், பவளச்செவ்வாய்
Tune - காந்தாரம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
4.005
திருநாவுக்கரசர்
தேவாரம்
மெய் எலாம் வெண் நீறு
Tune - காந்தாரம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
4.017
திருநாவுக்கரசர்
தேவாரம்
எத் தீப் புகினும் எமக்கு
Tune - இந்தளம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
4.019
திருநாவுக்கரசர்
தேவாரம்
சூலப் படை யானை; சூழ்
Tune - சீகாமரம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
4.020
திருநாவுக்கரசர்
தேவாரம்
காண்டலே கருத்து ஆய் நினைந்திருந்தேன்
Tune - சீகாமரம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
4.021
திருநாவுக்கரசர்
தேவாரம்
முத்து விதானம்; மணி பொன்
Tune - குறிஞ்சி
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
4.052
திருநாவுக்கரசர்
தேவாரம்
படு குழிப் பவ்வத்து அன்ன
Tune - திருநேரிசை
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
4.053
திருநாவுக்கரசர்
தேவாரம்
குழல் வலம் கொண்ட சொல்லாள்
Tune - திருநேரிசை
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
4.101
திருநாவுக்கரசர்
தேவாரம்
குலம் பலம் பாவரு குண்டர்முன்னே
Tune - திருவிருத்தம்
(திருவாரூர் எழுத்தறிந்தவீசுவரர் கொந்தார்பூங்குழலம்மை)
|
4.102
திருநாவுக்கரசர்
தேவாரம்
வேம்பினைப் பேசி, விடக்கினை ஓம்பி,
Tune - திருவிருத்தம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
5.006
திருநாவுக்கரசர்
தேவாரம்
எப்போதும்(ம்) இறையும் மறவாது, நீர்;
Tune - திருக்குறுந்தொகை
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
5.007
திருநாவுக்கரசர்
தேவாரம்
கொக்கரை, குழல், வீணை, கொடுகொட்டி,
Tune - திருக்குறுந்தொகை
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
6.024
திருநாவுக்கரசர்
தேவாரம்
கைம் மான மதகளிற்றின் உரிவையான்காண்;
Tune - திருத்தாண்டகம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
6.025
திருநாவுக்கரசர்
தேவாரம்
உயிரா வணம் இருந்து, உற்று
Tune - திருத்தாண்டகம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
6.026
திருநாவுக்கரசர்
தேவாரம்
பாதித் தன் திரு உருவில்
Tune -
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
6.027
திருநாவுக்கரசர்
தேவாரம்
பொய்ம் மாயப்பெருங்கடலில் புலம்பாநின்ற
Tune - திருத்தாண்டகம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
6.028
திருநாவுக்கரசர்
தேவாரம்
நீற்றினையும், நெற்றி மேல் இட்டார்போலும்;
Tune - திருத்தாண்டகம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
6.029
திருநாவுக்கரசர்
தேவாரம்
திருமணியை, தித்திக்கும் தேனை, பாலை,
Tune - திருத்தாண்டகம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
6.030
திருநாவுக்கரசர்
தேவாரம்
எம் பந்த வல்வினைநோய் தீர்த்திட்டான்காண்;
Tune - திருத்தாண்டகம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
6.031
திருநாவுக்கரசர்
தேவாரம்
இடர் கெடும் ஆறு எண்ணுதியேல்,
Tune - திருத்தாண்டகம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
6.032
திருநாவுக்கரசர்
தேவாரம்
கற்றவர்கள் உண்ணும் கனியே, போற்றி!
Tune - போற்றித்திருத்தாண்டகம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
6.033
திருநாவுக்கரசர்
தேவாரம்
பொரும் கை மதகரி உரிவைப்
Tune - அரநெறிதிருத்தாண்டகம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
6.034
திருநாவுக்கரசர்
தேவாரம்
ஒருவனாய் உலகு ஏத்த நின்ற
Tune - திருத்தாண்டகம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
7.008
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
இறைகளோடு இசைந்த இன்பம், இன்பத்தோடு
Tune - இந்தளம்
(திருவாரூர் வன்மீகநாதர் அல்லியங்கோதையம்மை)
|
7.012
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
வீழக் காலனைக் கால்கொடு பாய்ந்த
Tune - இந்தளம்
(திருவாரூர் )
|
7.033
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
பாறு தாங்கிய காடரோ? படுதலையரோ?
Tune - கொல்லி
(திருவாரூர் )
|
7.037
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
குருகு பாய, கொழுங் கரும்புகள்
Tune - கொல்லி
(திருவாரூர் வன்மீகநாதர் அல்லியங்கோதையம்மை)
|
7.039
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
தில்லை வாழ் அந்தணர் தம்
Tune - கொல்லிக்கௌவாணம்
(திருவாரூர் )
|
7.047
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
காட்டூர்க் கடலே! கடம்பூர் மலையே!
Tune - பழம்பஞ்சுரம்
(திருவாரூர் )
|
7.051
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
பத்திமையும் அடிமையையும் கைவிடுவான், பாவியேன்
Tune - பழம்பஞ்சுரம்
(திருவாரூர் வன்மீகநாதர் அல்லியங்கோதையம்மை)
|
7.059
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
பொன்னும் மெய்ப்பொருளும் தருவானை, போகமும்
Tune - தக்கேசி
(திருவாரூர் வன்மீகநாதர் அல்லியங்கோதையம்மை)
|
7.073
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
கரையும், கடலும், மலையும், காலையும்,
Tune - காந்தாரம்
(திருவாரூர் வன்மீகநாதர் அல்லியங்கோதையம்மை)
|
7.083
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
அந்தியும் நண்பகலும் அஞ்சுபதம் சொல்லி,
Tune - புறநீர்மை
(திருவாரூர் வன்மீகநாதர் அல்லியங்கோதையம்மை)
|
7.095
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
மீளா அடிமை உமக்கே ஆள்
Tune - செந்துருத்தி
(திருவாரூர் வன்மீகநாதர் அல்லியங்கோதையம்மை)
|
8.139
மாணிக்க வாசகர்
திருவாசகம்
திருப்புலம்பல் - பூங்கமலத் தயனொடுமால்
Tune - அயிகிரி நந்தினி
(திருவாரூர் )
|
9.018
பூந்துருத்தி நம்பி காடநம்பி
திருவிசைப்பா
பூந்துருத்தி நம்பி காடநம்பி - திருவாரூர் பஞ்சமம்
Tune -
(திருவாரூர் )
|
11.007
சேரமான் பெருமாள் நாயனார்
திருவாரூர் மும்மணிக்கோவை
திருவாரூர் மும்மணிக்கோவை
Tune -
(திருவாரூர் )
|