![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Hebrew
Korean
Easy version Classic version
https://www.youtube.com/watch?v=xEIhCMkZD9U Add audio link
4.087
திருநாவுக்கரசர்
தேவாரம்
திருப்பழனம் - திருவிருத்தம் அருள்தரு பெரியநாயகியம்மை உடனுறை அருள்மிகு ஆபத்சகாயர் திருவடிகள் போற்றி
மேவித்து நின்று விளைந்தன வெந்துயர் துக்கமெல்லாம்
ஆவித்து நின்று கழிந்தன வல்ல லவையறுப்பான்
பாவித்த பாவனை நீயறி வாய்பழ னத்தரசே
கூவித்துக் கொள்ளுந் தனையடி யேனைக் குறிக்கொள்வதே.
1
சுற்றிநின் றார்புறங் காவ லமரர் கடைத்தலையில்
மற்றுநின் றார்திரு மாலொடு நான்முகன் வந்தடிக்கீழ்ப்
பற்றிநின் றார்பழ னத்தர சேயுன் பணியறிவான்
உற்றுநின் றாரடி யேனைக் குறிக்கொண் டருளுவதே.
2
ஆடிநின் றாயண்ட மேழுங் கடந்துபோய் மேலவையும்
கூடிநின் றாய்குவி மென்முலை யாளையுங் கொண்டுடனே
பாடிநின் றாய்பழ னத்தர சேயங்கொர் பான்மதியம்
சூடிநின் றாயடி யேனையஞ் சாமைக் குறிக்கொள்வதே.
3
எரித்துவிட் டாயம்பி னாற்புர மூன்றுமுன் னேபடவும்
உரித்துவிட் டாயுமை யாண்டுக் கெய்தவொர் குஞ்சரத்தைப்
பரித்துவிட் டாய்பழனத் தர சேகங்கை வார்சடைமேல்
தரித்துவிட் டாயடி யேனைக் குறிக்கொண் டருளுவதே.
4
முன்னியு முன்னி முளைத்தன மூவெயி லும்முடனே
மன்னியு மங்கு மிருந்தனை மாய மனத்தவர்கள்
பன்னிய நூலின் பரிசறி வாய்பழ னத்தரசே
முன்னியு முன்னடி யேனைக் குறிக்கொண் டருளுவதே.
5
Go to top
ஏய்ந்தறுத் தாயின்ப னாயிருந் தேபடைத் தான்றலையைக்
காய்ந்தறுத் தாய்கண்ணி னாலன்று காமனைக் காலனையும்
பாய்ந்தறுத் தாய்பழ னத்தர சேயென் பழவினை நோய்
ஆய்ந்தறுத் தாயடி யேனைக் குறிக்கொண் டருளுவதே.
6
மற்றுவைத் தாயங்கொர் மாலொரு பாக மகிழ்ந்துடனே
உற்றுவைத் தாயுமை யாளொடுங் கூடும் பரிசெனவே
பற்றிவைத் தாய்பழ னத்தர சேயங்கொர் பாம்பொருகை
சுற்றிவைத் தாயடி யேனைக் குறிக்கொண் டருளுவதே.
7
ஊரினின் றாயொன்றி நின்றுவிண் டாரையு மொள்ளழலால்
போரினின் றாய்பொறை யாயுயி ராவி சுமந்துகொண்டு
பாரினின் றாய்பழ னத்தர சேபணி செய்பவர்கட்
காரநின் றாயடி யேனைக் குறிக்கொண் டருளுவதே.
8
போகம்வைத் தாய்புரி புன்சடை மேலொர் புனலதனை
யாகம்வைத் தாய்மலை யான்மட மங்கை மகிழ்ந்துடனே
பாகம்வைத் தாய்பழ னத்தர சேயுன் பணியருளால்
ஆகம்வைத் தாயடி யேனைக் குறிக்கொண் டருளுவதே.
9
அடுத்திருந் தாயரக் கன்முடி வாயொடு தோணெரியக்
கெடுத்திருந் தாய்கிளர்ந் தார்வலி யைக்கிளை யோடுடனே
படுத்திருந் தாய்பழ னத்தர சேபுலி யின்னுரிதோல்
உடுத்திருந் தாயடி யேனைக் குறிக்கொண் டருளுவதே.
10
Go to top
Thevaaram Link
- Shaivam Link
Other song(s) from this location: திருப்பழனம்
1.067
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
வேதம் ஓதி, வெண்நூல் பூண்டு, வெள்ளை எருது ஏறி
Tune - தக்கேசி
(திருப்பழனம் ஆபத்சகாயர் பெரியநாயகியம்மை)
4.012
திருநாவுக்கரசர்
தேவாரம்
சொல் மாலை பயில்கின்ற குயில்
Tune - பழந்தக்கராகம்
(திருப்பழனம் ஆபத்சகாயர் பெரியநாயகியம்மை)
4.036
திருநாவுக்கரசர்
தேவாரம்
ஆடினார் ஒருவர் போலும்; அலர்
Tune - திருநேரிசை
(திருப்பழனம் ஆபத்சகாயர் பெரியநாயகியம்மை)
4.087
திருநாவுக்கரசர்
தேவாரம்
மேவித்து நின்று விளைந்தன, வெந்துயர்
Tune - திருவிருத்தம்
(திருப்பழனம் ஆபத்சகாயர் பெரியநாயகியம்மை)
5.035
திருநாவுக்கரசர்
தேவாரம்
அருவனாய், அத்திஈர் உரி போர்த்து
Tune - திருக்குறுந்தொகை
(திருப்பழனம் ஆபத்சகாயர் பெரியநாயகியம்மை)
6.036
திருநாவுக்கரசர்
தேவாரம்
அலை ஆர் கடல் நஞ்சம்
Tune - திருத்தாண்டகம்
(திருப்பழனம் ஆபத்சகாயர் பெரியநாயகியம்மை)
This page was last modified on Sun, 09 Mar 2025 21:48:18 +0000