சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

4.087   திருநாவுக்கரசர்   தேவாரம்

திருப்பழனம் - திருவிருத்தம் அருள்தரு பெரியநாயகியம்மை உடனுறை அருள்மிகு ஆபத்சகாயர் திருவடிகள் போற்றி
https://www.youtube.com/watch?v=xEIhCMkZD9U   Add audio link Add Audio
மேவித்து நின்று விளைந்தன வெந்துயர் துக்கமெல்லாம்
ஆவித்து நின்று கழிந்தன வல்ல லவையறுப்பான்
பாவித்த பாவனை நீயறி வாய்பழ னத்தரசே
கூவித்துக் கொள்ளுந் தனையடி யேனைக் குறிக்கொள்வதே.


1


சுற்றிநின் றார்புறங் காவ லமரர் கடைத்தலையில்
மற்றுநின் றார்திரு மாலொடு நான்முகன் வந்தடிக்கீழ்ப்
பற்றிநின் றார்பழ னத்தர சேயுன் பணியறிவான்
உற்றுநின் றாரடி யேனைக் குறிக்கொண் டருளுவதே.


2


ஆடிநின் றாயண்ட மேழுங் கடந்துபோய் மேலவையும்
கூடிநின் றாய்குவி மென்முலை யாளையுங் கொண்டுடனே
பாடிநின் றாய்பழ னத்தர சேயங்கொர் பான்மதியம்
சூடிநின் றாயடி யேனையஞ் சாமைக் குறிக்கொள்வதே.


3


எரித்துவிட் டாயம்பி னாற்புர மூன்றுமுன் னேபடவும்
உரித்துவிட் டாயுமை யாண்டுக் கெய்தவொர் குஞ்சரத்தைப்
பரித்துவிட் டாய்பழனத் தர சேகங்கை வார்சடைமேல்
தரித்துவிட் டாயடி யேனைக் குறிக்கொண் டருளுவதே.


4


முன்னியு முன்னி முளைத்தன மூவெயி லும்முடனே
மன்னியு மங்கு மிருந்தனை மாய மனத்தவர்கள்
பன்னிய நூலின் பரிசறி வாய்பழ னத்தரசே
முன்னியு முன்னடி யேனைக் குறிக்கொண் டருளுவதே.


5


Go to top
ஏய்ந்தறுத் தாயின்ப னாயிருந் தேபடைத் தான்றலையைக்
காய்ந்தறுத் தாய்கண்ணி னாலன்று காமனைக் காலனையும்
பாய்ந்தறுத் தாய்பழ னத்தர சேயென் பழவினை நோய்
ஆய்ந்தறுத் தாயடி யேனைக் குறிக்கொண் டருளுவதே.


6


மற்றுவைத் தாயங்கொர் மாலொரு பாக மகிழ்ந்துடனே
உற்றுவைத் தாயுமை யாளொடுங் கூடும் பரிசெனவே
பற்றிவைத் தாய்பழ னத்தர சேயங்கொர் பாம்பொருகை
சுற்றிவைத் தாயடி யேனைக் குறிக்கொண் டருளுவதே.


7


ஊரினின் றாயொன்றி நின்றுவிண் டாரையு மொள்ளழலால்
போரினின் றாய்பொறை யாயுயி ராவி சுமந்துகொண்டு
பாரினின் றாய்பழ னத்தர சேபணி செய்பவர்கட்
காரநின் றாயடி யேனைக் குறிக்கொண் டருளுவதே.


8


போகம்வைத் தாய்புரி புன்சடை மேலொர் புனலதனை
யாகம்வைத் தாய்மலை யான்மட மங்கை மகிழ்ந்துடனே
பாகம்வைத் தாய்பழ னத்தர சேயுன் பணியருளால்
ஆகம்வைத் தாயடி யேனைக் குறிக்கொண் டருளுவதே.


9


அடுத்திருந் தாயரக் கன்முடி வாயொடு தோணெரியக்
கெடுத்திருந் தாய்கிளர்ந் தார்வலி யைக்கிளை யோடுடனே
படுத்திருந் தாய்பழ னத்தர சேபுலி யின்னுரிதோல்
உடுத்திருந் தாயடி யேனைக் குறிக்கொண் டருளுவதே.


10


Go to top

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருப்பழனம்
1.067   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   வேதம் ஓதி, வெண்நூல் பூண்டு, வெள்ளை எருது ஏறி
Tune - தக்கேசி   (திருப்பழனம் ஆபத்சகாயர் பெரியநாயகியம்மை)
4.012   திருநாவுக்கரசர்   தேவாரம்   சொல் மாலை பயில்கின்ற குயில்
Tune - பழந்தக்கராகம்   (திருப்பழனம் ஆபத்சகாயர் பெரியநாயகியம்மை)
4.036   திருநாவுக்கரசர்   தேவாரம்   ஆடினார் ஒருவர் போலும்; அலர்
Tune - திருநேரிசை   (திருப்பழனம் ஆபத்சகாயர் பெரியநாயகியம்மை)
4.087   திருநாவுக்கரசர்   தேவாரம்   மேவித்து நின்று விளைந்தன, வெந்துயர்
Tune - திருவிருத்தம்   (திருப்பழனம் ஆபத்சகாயர் பெரியநாயகியம்மை)
5.035   திருநாவுக்கரசர்   தேவாரம்   அருவனாய், அத்திஈர் உரி போர்த்து
Tune - திருக்குறுந்தொகை   (திருப்பழனம் ஆபத்சகாயர் பெரியநாயகியம்மை)
6.036   திருநாவுக்கரசர்   தேவாரம்   அலை ஆர் கடல் நஞ்சம்
Tune - திருத்தாண்டகம்   (திருப்பழனம் ஆபத்சகாயர் பெரியநாயகியம்மை)

This page was last modified on Sun, 09 Mar 2025 21:48:18 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai song paadal paadal orig pathigam no 4.087