சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

4.084   திருநாவுக்கரசர்   தேவாரம்

பொது -ஆருயிர்த் திருவிருத்தம் - வியாழக்குறிஞ்சி தீரசங்கராபரணம் செளராஷ்டிரம் கவுடாமல்ஹார் ராகத்தில் திருமுறை அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி
+ Show Meaning  https://www.youtube.com/watch?v=8Rzb2aTC8Oo   Add audio link Add Audio

எட்டாந் திசைக்கு மிருதிசைக் கும்மிறை வாமுறையென்
றிட்டா ரமரர்வெம் பூச லெனக்கேட் டெரிவிழியா
ஒட்டாக் கயவர் திரிபுர மூன்றையு மோரம்பினால்
அட்டா னடிநிழற் கீழதன் றோவென்ற னாருயிரே.

1

பேழ்வா யரவி னரைக்கமர்ந் தேறிப் பிறங்கிலங்கு
தேய்வா யிளம்பிறை செஞ்சடை மேல்வைத்த தேவர்பிரான்
மூவா னிளகான் முழுவுல கோடுமண் விண்ணுமற்றும்
ஆவா னடிநிழற் கீழதன் றோவென்ற னாருயிரே.

2

தரியா வெகுளிய னாய்த்தக்கன் வேள்வி தகர்த்துகந்த
எரியா ரிலங்கிய சூலத்தி னானிமை யாதமுக்கட்
பெரியான் பெரியார் பிறப்பறுப் பானென்றுந் தன்பிறப்பை
அரியா னடிநிழற் கீழதன் றோவென்ற னாருயிரே.

3

வடிவுடை வாணெடுங் கண்ணுமை யாளையொர் பான்மகிழ்ந்து
வெடிகொ ளரவொடு வேங்கை யதள்கொண்டு மேன்மருவிப்
பொடிகொ ளகலத்துப் பொன்பிதிர்ந் தன்னபைங் கொன்றையந்தார்
அடிக ளடிநிழற் கீழதன் றோவென்ற னாருயிரே.

4

பொறுத்தா னமரர்க் கமுதருளி நஞ்ச முண்டுகண்டம்
கறுத்தான் கறுப்பழ காவுடை யான்கங்கை செஞ்சடைமேல்
செறுத்தான் றனஞ்சயன் சேணா ரகலங் கணையொன்றினால்
அறுத்தா னடிநிழற் கீழதன் றோவென்ற னாருயிரே.

5
Go to top

காய்ந்தான் செறற்கரி யானென்று காலனைக் காலொன்றினால்
பாய்ந்தான் பணைமதில் மூன்றுங் கணையென்னு மொள்ளழலால்
மேய்ந்தான் வியனுல கேழும் விளங்க விழுமியநூல்
ஆய்ந்தா னடிநிழற் கீழதன் றோவென்ற னாருயிரே.

6

உளைந்தான் செறுதற் கரியான் றலையை யுகிரொன்றினால்
களைந்தா னதனை நிறைய நெடுமால் கணார்குருதி
வளைந்தா னொருவிர லின்னொடு வீழ்வித்துச் சாம்பர்வெண்ணீ
றளைந்தா னடிநிழற் கீழதன் றோவென்ற னாருயிரே.

7

முந்திவட் டத்திடைப் பட்டதெல் லாமுடி வேந்தர் தங்கள்
பந்திவட் டத்திடைப் பட்டலைப் புண்பதற் கஞ்சிக்கொல்லோ
நந்திவட் டந்நறு மாமலர்க் கொன்றையும் நக்கசென்னி
அந்திவட் டத்தொளி யானடிச் சேர்ந்ததென் னாருயிரே.

8

மிகத்தான் பெரியதொர் வேங்கை யதள்கொண்டு மெய்ம்மருவி
அகத்தான் வெருவநல் லாளை நடுக்குறுப் பான்வரும்பொன்
முகத்தாற் குளிர்ந்திருந் துள்ளத்தி னாலுகப் பானிசைந்த
அகத்தா னடிநிழற் கீழதன் றோவென்ற னாருயிரே.

9

பைம்மா ணரவல்குற் பங்கயச் சீறடி யாள்வெருவக்
கைம்மா வரிசிலைக் காமனை யட்ட கடவுண்முக்கண்
எம்மா னிவனென் றிருவரு மேத்த வெரிநிமிர்ந்த
அம்மா னடிநிழற் கீழதன் றோவென்ற னாருயிரே.

10
Go to top

பழகவொ ரூர்தியரன் பைங்கட் பாரிடம் பாணிசெய்யக்
குழலு முழவொடு மாநட மாடி யுயரிலங்கைக்
கிழவ னிருபது தோளு மொருவிர லாலிறுத்த
அழக னடிநிழற் கீழதன் றோவென்ற னாருயிரே.

11

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: பொது -ஆருயிர்த் திருவிருத்தம்
4.084   திருநாவுக்கரசர்   தேவாரம்   எட்டு ஆம் திசைக்கும் இரு
Tune - வியாழக்குறிஞ்சி   (பொது -ஆருயிர்த் திருவிருத்தம் )
     
send corrections and suggestions to admin-at-sivaya.org

This page was last modified on Tue, 27 Jan 2026 00:59:47 +0000