![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Hebrew
Korean
Easy version Classic version
https://www.youtube.com/watch?v=-RAZYkaFjcM Add audio link
4.071
திருநாவுக்கரசர்
தேவாரம்
திருநாகைக்காரோணம் (நாகப்பட்டினம்) - திருநேரிசை அருள்தரு நீலாயதாட்சியம்மை உடனுறை அருள்மிகு காயாரோகணேசுவரர் திருவடிகள் போற்றி
மனைவிதாய் தந்தை மக்கள் மற்றுள சுற்ற மென்னும்
வினையுளே விழுந்த ழுந்தி வேதனைக் கிடமா காதே
கனையுமா கடல்சூழ் நாகை மன்னுகா ரோணத் தானை
நினையுமா வல்லீ ராகி லுய்யலா நெஞ்சி னீரே.
1
வையனை வைய முண்ட மாலங்கந் தோண்மேற் கொண்ட
செய்யனைச் செய்ய போதிற் றிசைமுகன் சிரமொன் றேந்தும்
கையனைக் கடல்சூழ் நாகைக் காரோணங் கோயில் கொண்ட
ஐயனை நினைந்த நெஞ்சே யம்மநா முய்ந்த வாறே.
2
நிருத்தனை நிமலன் றன்னை நீணிலம் விண்ணின் மிக்க
விருத்தனை வேத வித்தை விளைபொருண் மூல மான
கருத்தனைக் கடல்சூழ் நாகைக் காரோணங் கோயில் கொண்ட
ஒருத்தனை யுணர்த லானா முய்ந்தவா நெஞ்சி னீரே.
3
மண்டனை யிரந்து கொண்ட மாயனோ டசுரர் வானோர்
தெண்டிரை கடைய வந்த தீவிடந் தன்னை யுண்ட
கண்டனைக் கடல்சூழ் நாகைக் காரோணங் கோயில் கொண்ட
அண்டனை நினைந்த நெஞ்சே யம்மநா முய்ந்த வாறே.
4
நிறைபுன லணிந்த சென்னி நீணிலா வரவஞ் சூடி
மறையொலி பாடி யாடன் மயானத்து மகிழ்ந்த மைந்தன்
கறைமலி கடல்சூழ் நாகைக் காரோணங் கோயில் கொண்ட
இறைவனை நாளு மேத்த விடும்பைபோ யின்ப மாமே.
5
Go to top
வெம்பனைக் கருங்கை யானை வெருவவன் றுரிவை போர்த்த
கம்பனைக் காலற் காய்ந்த காலனை ஞால மேத்தும்
உம்பனை யும்பர் கோனை நாகைக்கா ரோண மேய
செம்பொனை நினைந்த நெஞ்சே திண்ணநா முய்ந்த வாறே.
6
வெங்கடுங் கானத் தேழை தன்னொடும் வேட னாய்ச்சென்
றங்கமர் மலைந்து பார்த்தற் கடுசர மருளி னானை
மங்கைமா ராட லோவா மன்னுகா ரோணத் தானைக்
கங்குலும் பகலுங் காணப் பெற்றுநாங் களித்த வாறே.
7
தெற்றினர் புரங்கண் மூன்றுந் தீயினில் விழவோ ரம்பால்
செற்றவெஞ் சிலையர் வஞ்சர் சிந்தையுட் சேர்வி லாதார்
கற்றவர் பயிலு நாகைக் காரோணங் கருதி யேத்தப்
பெற்றவர் பிறந்தார் மற்றுப் பிறந்தவர் பிறந்தி லாரே.
8
கருமலி கடல்சூழ் நாகைக் காரோணர்க மல பாதத்
தொருவிர னுதிக்கு நில்லா தொண்டிற லரக்க னுக்கான்
இருதிற மங்கை மாரோ டெம்பிரான் செம்பொ னாகம்
திருவடி தரித்து நிற்கத் திண்ணநா முய்ந்த வாறே.
9
Thevaaram Link
- Shaivam Link
Other song(s) from this location: திருநாகைக்காரோணம் (நாகப்பட்டினம்)
1.084
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
புனையும் விரிகொன்றைக் கடவுள், புனல்
Tune - குறிஞ்சி
(திருநாகைக்காரோணம் (நாகப்பட்டினம்) காயாரோகணேசுவரர் நீலாயதாட்சியம்மை)
2.116
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கூனல் திங்கள் குறுங்கண்ணி கான்ற(ந்)
Tune - செவ்வழி
(திருநாகைக்காரோணம் (நாகப்பட்டினம்) காயாரோகணேசுவரர் நீலாயதாட்சியம்மை)
4.071
திருநாவுக்கரசர்
தேவாரம்
மனைவி தாய் தந்தை மக்கள்
Tune - திருநேரிசை
(திருநாகைக்காரோணம் (நாகப்பட்டினம்) காயாரோகணேசுவரர் நீலாயதாட்சியம்மை)
4.103
திருநாவுக்கரசர்
தேவாரம்
வடிவு உடை மாமலைமங்கை பங்கா!
Tune - திருவிருத்தம்
(திருநாகைக்காரோணம் (நாகப்பட்டினம்) முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
5.083
திருநாவுக்கரசர்
தேவாரம்
பாணத்தால் மதில் மூன்றும் எரித்தவன்;
Tune - திருக்குறுந்தொகை
(திருநாகைக்காரோணம் (நாகப்பட்டினம்) காயாரோகணேசுவரர் நீலாயதாட்சியம்மை)
6.022
திருநாவுக்கரசர்
தேவாரம்
பாரார் பரவும் பழனத்தானை, பருப்பதத்தானை,
Tune - திருத்தாண்டகம்
(திருநாகைக்காரோணம் (நாகப்பட்டினம்) காயாரோகணேசுவரர் நீலாயதாட்சியம்மை)
7.046
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
பத்து ஊர் புக்கு, இரந்து,
Tune - கொல்லிக்கௌவாணம்
(திருநாகைக்காரோணம் (நாகப்பட்டினம்) காயாரோகணேசுவரர் நீலாயதாட்சியம்மை)
7.101
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
பொன் ஆம் இதழி விரை
Tune -
(திருநாகைக்காரோணம் (நாகப்பட்டினம்) )
This page was last modified on Sun, 09 Mar 2025 21:48:18 +0000