சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

4.059   திருநாவுக்கரசர்   தேவாரம்

திருஅவளிவணல்லூர் - திருநேரிசை அருள்தரு சவுந்தரநாயகியம்மை உடனுறை அருள்மிகு சாட்சிநாயகேசுவரர் திருவடிகள் போற்றி
சிவபெருமான் முனிவராய்த் தோன்றியதையும், பின்னர் தன்னை அருகில் இருந்த ஒரு குளத்தில் மூழ்கி எழுமாறு சொன்னதையும் நினைத்து, மகிழ்ந்த அப்பர் பிரான் இறைவனின் கருணையை நினைந்து வேற்றாகி விண்ணாகி என்று தொடங்கும் திருத்தாண்டகப் பதிகத்தை அருளினார்; பின்னர் அஞ்செழுத்து மந்திரத்தை ஓதியபடியே, இறைவனைப் பணித்தபடி அந்த பொய்கையில் மூழ்கினார். இவ்வாறு, இறைவனின் ஆணையை சிரமேற்கொண்டு அந்தக் குளத்தில் மூழ்கிய அப்பர் பிரான், தான் எழுந்த போது திருவையாற்றுக் குளத்தில் இருப்பதை உணர்ந்தார். குளத்தில் இருந்து எழுந்த அப்பர் பிரான் இறைவனின் திருவடிகளை வணங்கும் பொருட்டு திருக்கோயிலுக்குச் சென்றார். செல்லும் வழியில் உள்ள உயிர்கள் அனைத்தும் தத்தம் துணையுடன் கூடி விளங்கும் தோற்றத்தைக் கண்டார். அந்தத் தோற்றத்தை இந்த பதிகத்தின் பாடல்களில் அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். கோயிலின் முன் வந்து நின்ற அப்பர் பெருமானுக்கு எதிரே தோன்றும் கோயிலே கயிலாய மலையாக காட்சி அளித்தது, திருமால், பிரமன், இந்திரன் முதலான தேவர்கள் அன்புடன் வழிபடும் ஒலிகளும், மறைகளின் ஒலிகளும் தனித்தனியாக அப்பர் பெருமானுக்கு கேட்டன
https://www.youtube.com/watch?v=nGJFOf8yoo4   Add audio link Add Audio
தோற்றினா னெயிறு கவ்வித் தொழிலுடை யரக்கன் றன்னைத்
தேற்றுவான் சென்று சொல்லச் சிக்கெனத் தவிரு மென்று
வீற்றினை யுடைய னாகி வெடுவெடுத் தெழுந்த வன்றன்
ஆற்றலை யழிக்க வல்லா ரவளிவ ணல்லூ ராரே.


1


வெம்பினா ரரக்க ரெல்லா மிகச்சழக் காயிற் றென்று
செம்பினா லெடுத்த கோயில் சிக்கெனச் சிதையு மென்ன
நம்பினா ரென்று சொல்லி நன்மையான் மிக்கு நோக்கி
அம்பினா லழிய வெய்தா ரவளிவ ணல்லூ ராரே.


2


கீழ்ப்படக் கருத லாமோ கீர்த்திமை யுள்ள தாகில்
தோட்பெரு வலியி னாலே தொலைப்பனான் மலையை யென்று
வேட்பட வைத்த வாறே விதிர்விதிர்த் தரக்கன் வீழ்ந்து
ஆட்படக் கருதிப் புக்கா ரவளிவ ணல்லூ ராரே.


3


நிலைவலம் வல்ல னல்ல னேர்மையை நினைய மாட்டான்
சிலைவலங் கொண்ட செல்வன் சீரிய கயிலை தன்னைத்
தலைவலங் கருதிப் புக்குத் தாக்கினான் றன்னை யன்று
அலைகுலை யாக்கு வித்தா ரவளிவ ணல்லூ ராரே.


4


தவ்வலி யொன்ற னாகித் தனதொரு பெருமை யாலே
மெய்வ்வலி யுடைய னென்று மிகப்பெருந் தேரை யூர்ந்து
செவ்வலி கூர்வி ழி ( ய் ) யாற் சிரம்பத்தா லெடுக்குற் றானை
அவ்வலி தீர்க்க வல்லா ரவளிவ ணல்லூ ராரே.


5


Go to top
நன்மைதா னறிய மாட்டா னடுவிலா வரக்கர் கோமான்
வன்மையே கருதிச் சென்று வலிதனைச் செலுத்த லுற்றுக்
கன்மையான் மலையை யோடிக் கருதித்தா னெடுத்து வாயால்
அம்மையோ வென்ன வைத்தா ரவளிவ ணல்லூ ராரே.


6


கதம்படப் போது வார்கள் போதுமக் கருத்தி னாலே
சிதம்பட நின்ற நீர்கள் சிக்கெனத் தவிரு மென்று
மதம்படு மனத்த னாகி வன்மையான் மிக்கு நோக்க
அதம்பழத் துருவு செய்தா ரவளிவ ணல்லூ ராரே.


7


நாடுமிக் குழிதர் கின்ற நடுவிலா வரக்கர் கோனை
ஓடுமிக் கென்று சொல்லி யூன்றினா னுகிரி னாலே
பாடிமிக் குய்வ னென்று பணியநற் றிறங்கள் காட்டி
ஆடுமிக் கரவம் பூண்டா ரவளிவ ணல்லூ ராரே.


8


ஏனமா யிடந்த மாலு மெழிறரு முளரி யானும்
ஞானந்தா னுடைய ராகி நன்மையை யறிய மாட்டார்
சேனந்தா னிலாவ ரக்கன் செழுவரை யெடுக்க வூன்றி
ஆனந்த வருள்கள் செய்தா ரவளிவ ணல்லூ ராரே.


9


ஊக்கினான் மலையை யோடி யுணர்விலா வரக்கன் றன்னைத்
தாக்கினான் விரலி னாலே தலைபத்துந் தகர வூன்றி
நோக்கினா னஞ்சத் தன்னை நோன்பிற வூன்று சொல்லி
ஆக்கினா ரமுத மாக வவளிவ ணல்லூ ராரே.


10


Go to top

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருஅவளிவணல்லூர்
3.082   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   கொம்பு இரிய வண்டு உலவு
Tune - சாதாரி   (திருஅவளிவணல்லூர் சாட்சிநாயகர் சவுந்தரநாயகியம்மை)
4.059   திருநாவுக்கரசர்   தேவாரம்   தோற்றினான் எயிறு கவ்வித் தொழில்
Tune - திருநேரிசை   (திருஅவளிவணல்லூர் சாட்சிநாயகேசுவரர் சவுந்தரநாயகியம்மை)

This page was last modified on Sun, 09 Mar 2025 21:48:18 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai song paadal paadal orig pathigam no 4.059