சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

4.057   திருநாவுக்கரசர்   தேவாரம்

திருவாவடுதுறை - கொல்லி கனகாங்கி நவரோசு கனகாம்பரி ராகத்தில் திருமுறை அருள்தரு ஒப்பிலாமுலையம்மை உடனுறை அருள்மிகு மாசிலாமணியீசுவரர் திருவடிகள் போற்றி
https://www.youtube.com/watch?v=_3VaGscvF20   Add audio link Add Audio
மஞ்சனே மணியு மானாய் மரகதத் திரளு மானாய்
நெஞ்சுளே புகுந்து நின்று நினைதரு நிகழ்வி னானே
துஞ்சும்போ தாக வந்து துணையெனக் காகி நின்று
அஞ்சலென் றருள வேண்டும் ஆவடு துறையு ளானே.


1


நானுகந் துன்னை நாளும் நணுகுமா கருதி யேயும்
ஊனுகந் தோம்பு நாயே னுள்ளுற வைவர் நின்றார்
தானுகந் தேயு கந்த தகவிலாத் தொண்டனே னான்
ஆனுகந் தேறு வானே ஆவடு துறையு ளானே.


2


கட்டமே வினைக ளான காத்திவை நோக்கி யாளாய்
ஒட்டவே யொட்டி நாளு முன்னையுள் வைக்க மாட்டேன்
பட்டவான் றலைகை யேந்திப் பலிதிரிந் தூர்க டோறும்
அட்டமா வுருவி னானே யாவடு துறையு ளானே.


3


பெருமைநன் றுடைய தில்லை யென்றுநான் பேச மாட்டேன்
ஒருமையா லுன்னை யுள்கி யுகந்துவா னேற மாட்டேன்
கருமையிட் டாய வூனைக் கட்டமே கழிக்கின் றேனான்
அருமையா நஞ்ச முண்ட ஆவடு துறையு ளானே.


4


துட்டனாய் வினைய தென்னுஞ் சுழித்தலை யகப்பட் டேனைக்
கட்டனா வைவர் வந்து கலக்காமைக் காத்துக் கொள்வாய்
மட்டவிழ் கோதை தன்னை மகிழ்ந்தொரு பாகம் வைத்து
அட்டமா நாக மாட்டும் ஆவடு துறையு ளானே.


5


Go to top
காரழல் கண்ட மேயாய் கடிமதிற் புரங்கண் மூன்றும்
ஓரழ லம்பி னாலே யுகைத்துத்தீ யெரிய மூட்டி
நீரழற் சடையு ளானே நினைப்பவர் வினைக டீர்ப்பாய்
ஆரழ லேந்தி யாடு ஆவடு துறையு ளானே.


6


செறிவிலேன் சிந்தை யுள்ளே சிவனடி தெரிய மாட்டேன்
குறியிலேன் குணமொன் றில்லேன் கூறுமா கூற மாட்டேன்
நெறிபடு மதியொன் றில்லே னினையுமா நினைய மாட்டேன்
அறிவிலே னயர்த்துப் போனே னாவடு துறையு ளானே.


7


கோலமா மங்கை தன்னைக் கொண்டொரு கோல மாய
சீலமே யறிய மாட்டேன் செய்வினை மூடி நின்று
ஞாலமா மிதனு ளென்னை நைவியா வண்ண நல்காய்
ஆலமா நஞ்ச முண்ட வாவடு துறையு ளானே.


8


நெடியவன் மலரி னானுந் நேர்ந்திரு பாலு நேடக்
கடியதோ ருருவ மாகிக் கனலெரி யாகி நின்ற
வடிவின வண்ண மென்றே யென்றுதாம் பேச லாகார்
அடியனே னெஞ்சி னுள்ளார் ஆவடு துறையு ளானே.


9


மலைக்குநே ராய ரக்கன் சென்றுற மங்கை யஞ்சத்
தலைக்குமேற் கைக ளாலே தாங்கினான் வலியை மாள
வுலப்பிலா விரலா லூன்றி யொறுத்தவற் கருள்கள் செய்து
அலைத்தவான் கங்கை சூடும் ஆவடு துறையு ளானே.


10


Go to top

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருவாவடுதுறை
3.004   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   இடரினும், தளரினும், எனது உறு
Tune - காந்தாரபஞ்சமம்   (திருவாவடுதுறை மாசிலாமணியீசுவரர் ஒப்பிலாமுலையம்மை)
4.056   திருநாவுக்கரசர்   தேவாரம்   மா-இரு ஞாலம் எல்லாம் மலர்
Tune - திருநேரிசை:காந்தாரம்   (திருவாவடுதுறை மாசிலாமணியீசுவரர் ஒப்பிலாமுலையம்மை)
4.057   திருநாவுக்கரசர்   தேவாரம்   மஞ்சனே! மணியும் ஆனாய்; மரகதத்திரளும்
Tune - கொல்லி   (திருவாவடுதுறை மாசிலாமணியீசுவரர் ஒப்பிலாமுலையம்மை)
5.029   திருநாவுக்கரசர்   தேவாரம்   நிறைக்க வாலியள் அல்லள், இந்
Tune - திருக்குறுந்தொகை   (திருவாவடுதுறை )
6.046   திருநாவுக்கரசர்   தேவாரம்   நம்பனை, நால்வேதம் கரை கண்டானை,
Tune - திருத்தாண்டகம்   (திருவாவடுதுறை மாசிலாமணியீசுவரர் ஒப்பிலாமுலையம்மை)
6.047   திருநாவுக்கரசர்   தேவாரம்   திருவே, என் செல்வமே, தேனே,
Tune - திருத்தாண்டகம்   (திருவாவடுதுறை மாசிலாமணியீசுவரர் ஒப்பிலாமுலையம்மை)
7.066   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   மறையவன்(ன்) ஒரு மாணி வந்து
Tune - தக்கேசி   (திருவாவடுதுறை மாசிலாமணியீசுவரர் ஒப்பிலாமுலையம்மை)
7.070   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   கங்கை வார்சடையாய்! கணநாதா! காலகாலனே!
Tune - தக்கேசி   (திருவாவடுதுறை மாசிலாமணியீசுவரர் ஒப்பிலாமுலையம்மை)
9.006   சேந்தனார்   திருவிசைப்பா   சேந்தனார் - திருவாவடுதுறை
Tune -   (திருவாவடுதுறை )

This page was last modified on Sun, 09 Mar 2025 21:48:18 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai song paadal paadal orig pathigam no 4.057