![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Hebrew
Korean
Easy version Classic version
https://www.youtube.com/watch?v=6AoKNFcSvk4 Add audio link
4.037
திருநாவுக்கரசர்
தேவாரம்
திருநெய்த்தானம் - திருநேரிசை அருள்தரு வாலாம்பிகையம்மை உடனுறை அருள்மிகு நெய்யாடியப்பர் திருவடிகள் போற்றி
காலனை வீழச் செற்ற கழலடி யிரண்டும் வந்தென்
மேலவா யிருக்கப் பெற்றேன் மேதகத் தோன்று கின்ற
கோலநெய்த் தான மென்னுங் குளிர்பொழிற் கோயின் மேய
நீலம்வைத் தனைய கண்ட நினைக்குமா நினைக்கின் றேனே.
1
காமனை யன்றுகண் ணாற் கனலெரி யாக நோக்கித்
தூமமுந் தீபங் காட்டித் தொழுமவர்க் கருள்கள் செய்து
சேமநெய்த் தான மென்னுஞ் செறிபொழிற் கோயின் மேய
வாமனை நினைந்த நெஞ்சம் வாழ்வுற நினைந்த வாறே.
2
பிறைதரு சடையின் மேலே பெய்புனற் கங்கை தன்னை
உறைதர வைத்த வெங்க ளுத்தம னூழி யாய
நிறைதரு பொழில்கள் சூழ நின்றநெய்த் தான மென்று
குறைதரு மடிய வர்க்குக் குழகனைக் கூட லாமே.
3
வடிதரு மழுவொன் றேந்தி வார்சடை மதியம் வைத்துப்
பொடிதரு மேனி மேலே புரிதரு நூலர் போலும்
நெடிதரு பொழில்கள் சூழ நின்றநெய்த் தான மேவி
அடிதரு கழல்க ளார்ப்ப வாடுமெம் மண்ண லாரே.
4
காடிட மாக நின்று கனலெரி கையி லேந்திப்
பாடிய பூதஞ் சூழப் பண்ணுடன் பலவுஞ் சொல்லி
ஆடிய கழலர் சீரா ரந்தணெய்த் தான மென்றும்
கூடிய குழக னாரைக் கூடுமா றறிகி லேனே.
5
Go to top
வானவர் வணங்கி யேத்தி வைகலு மலர்க டூவத்
தானவர்க் கருள்கள் செய்யுஞ் சங்கரன் செங்க ணேற்றன்
தேனமர் பொழில்கள் சூழத் திகழுநெய்த் தான மேய
கூனிள மதியி னானைக் கூடுமா றறிகி லேனே.
6
காலதிர் கழல்க ளார்ப்பக் கனலெரி கையில் வீசி
ஞாலமுங் குழிய நின்று நட்டம தாடு கின்ற
மேலவர் முகடு தோய விரிசடை திசைகள் பாய
மாலொரு பாக மாக மகிழ்ந்தநெய்த் தான னாரே.
7
பந்தித்த சடையின் மேலே பாய்புன லதனை வைத்து
அந்திப்போ தனலு மாடி யடிகளை யாறு புக்கார்
வந்திப்பார் வணங்கி நின்று வாழ்த்துவார் வாயி னுள்ளார்
சிந்திப்பார் சிந்தை யுள்ளார் திருந்துநெய்த் தான னாரே.
8
சோதியாய்ச் சுடரு மானார் சுண்ணவெண் சாந்து பூசி
ஓதிவா யுலக மேத்த வுகந்துதா மருள்கள் செய்வார்
ஆதியா யந்த மானார் யாவரு மிறைஞ்சி யேத்த
நீதியாய் நியம மாகி நின்றநெய்த் தான னாரே.
9
இலையுடைப் படைகை யேந்து மிலங்கையர் மன்னன் றன்னைத்
தலையுட னடர்த்து மீண்டே தானவற் கருள்கள் செய்து
சிலையுடன் கணையைச் சேர்த்துத் திரிபுர மெரியச் செற்ற
நிலையுடை யடிகள் போலு நின்றநெய்த் தான னாரே.
38
10
Go to top
Thevaaram Link
- Shaivam Link
Other song(s) from this location: திருநெய்த்தானம்
1.015
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
மை ஆடிய கண்டன், மலை
Tune - நட்டபாடை
(திருநெய்த்தானம் நெய்யாடியப்பர் வாலாம்பிகையம்மை)
4.037
திருநாவுக்கரசர்
தேவாரம்
காலனை வீழச் செற்ற கழல்
Tune - திருநேரிசை
(திருநெய்த்தானம் நெய்யாடியப்பர் வாலாம்பிகையம்மை)
4.089
திருநாவுக்கரசர்
தேவாரம்
பார் இடம் சாடிய பல்
Tune - திருவிருத்தம்
(திருநெய்த்தானம் நெய்யாடியப்பர் வாலாம்பிகையம்மை)
5.034
திருநாவுக்கரசர்
தேவாரம்
கொல்லியான், குளிர் தூங்கு குற்றாலத்தான்,
Tune - திருக்குறுந்தொகை
(திருநெய்த்தானம் நெய்யாடியப்பர் வாலாம்பிகையம்மை)
6.041
திருநாவுக்கரசர்
தேவாரம்
வகை எலாம் உடையாயும் நீயே
Tune - திருத்தாண்டகம்
(திருநெய்த்தானம் நெய்யாடியப்பர் வாலாம்பிகையம்மை)
6.042
திருநாவுக்கரசர்
தேவாரம்
மெய்த்தானத்து அகம்படியுள் ஐவர் நின்று
Tune - திருத்தாண்டகம்
(திருநெய்த்தானம் நெய்யாடியப்பர் வாலாம்பிகையம்மை)
This page was last modified on Sun, 09 Mar 2025 21:48:18 +0000