ஊனினுள் ளுயிரை வாட்டி உணர்வினார்க் கெளிய ராகி வானினுள் வான வர்க்கும் அறியலா காத வஞ்சர் நானெனிற் றானே யென்னும் ஞானத்தார் பத்தர் நெஞ்சுள் தேனுமின் னமுது மானார் திருச்செம்பொன் பள்ளி யாரே.
|
1
|
நொய்யவர் விழுமி யாரு நூலினுண் ணெறியைக் காட்டும் மெய்யவர் பொய்யு மில்லார் உடலெனு மிடிஞ்சி றன்னில் நெய்யமர் திரியு மாகி நெஞ்சத்துள் விளக்கு மாகிச் செய்யவர் கரிய கண்டர் திருச்செம்பொன் பள்ளி யாரே.
|
2
|
வெள்ளியர் கரியர் செய்யர் விண்ணவ ரவர்கள் நெஞ்சுள் ஒள்ளிய ரூழி யூழி யுலகம தேத்த நின்ற பள்ளியர் நெஞ்சத் துள்ளார் பஞ்சமம் பாடி யாடும் தெள்ளியார் கள்ளந் தீர்ப்பார் திருச்செம்பொன் பள்ளி யாரே.
|
3
|
தந்தையுந் தாயு மாகித் தானவன் ஞான மூர்த்தி முந்திய தேவர் கூடி முறைமுறை யிருக்குச் சொல்லி எந்தைநீ சரண மென்றங் கிமையவர் பரவி யேத்தச் சிந்தையுட் சிவம தானார் திருச்செம்பொன் பள்ளி யாரே.
|
4
|
ஆறுடைச் சடையர் போலும் அன்பருக் கன்பர் போலும் கூறுடை மெய்யர் போலும் கோளர வரையர் போலும் நீறுடை யழகர் போலும் நெய்தலே கமழு நீர்மைச் சேறுடைக் கமல வேலித் திருச்செம்பொன் பள்ளி யாரே.
|
5
|
Go to top |
ஞாலமு மறிய வேண்டில் நன்றென வாழ லுற்றீர் காலமுங் கழிய லான கள்ளத்தை யொழிய கில்லீர் கோலமும் வேண்டா வார்வச் செற்றங்கள் குரோத நீக்கில் சீலமுந் நோன்பு மாவார் திருச்செம்பொன் பள்ளி யாரே.
|
6
|
புரிகாலே நேசஞ் செய்ய விருந்தபுண் டரீகத் தாரும் எரிகாலே மூன்று மாகி யிமையவர் தொழநின் றாரும் தெரிகாலே மூன்று சந்தி தியானித்து வணங்க நின்று திரிகாலங் கண்ட வெந்தை திருச்செம்பொன் பள்ளி யாரே.
|
7
|
காருடைக் கொன்றை மாலை கதிர்மதி யரவி னோடும் நீருடைச் சடையுள் வைத்த நீதியார் நீதி யுள்ளார் பாரொடு விண்ணு மண்ணும் பதினெட்டுக் கணங்க ளேத்தச் சீரொடு பாட லானார் திருச்செம்பொன் பள்ளி யாரே.
|
8
|
ஓவாத மறைவல் லானும் ஓதநீர் வண்ணன் காணா மூவாத பிறப்பி லாரும் முனிகளா னார்க ளேத்தும் பூவான மூன்று முந்நூற் றறுபது மாகு மெந்தை தேவாதி தேவ ரென்றுந் திருச்செம்பொன் பள்ளி யாரே.
|
9
|
அங்கங்க ளாறும் நான்கும் அந்தணர்க் கருளிச் செய்து சங்கங்கள் பாட வாடுஞ் சங்கரன் மலையெ டுத்தான் அங்கங்க ளுதிர்ந்து சோர வலறிட வடர்த்து நின்றும் செங்கண்வெள் ளேற தேறுந் திருச்செம்பொன் பள்ளி யாரே.
|
10
|
Go to top |