விடகிலே னடிநாயேன் வேண்டியக்கா லியாதொன்றும் இடகிலே னமணர்கள்த மறவுரைகேட் டலமந்தேன் தொடர்கின்றே னுன்னுடைய தூமலர்ச்சே வடிகாண்பான் அடைகின்றே னையாறர்க் காளாய்நா னுய்ந்தேனே.
|
1
|
செம்பவளத் திருவுருவர் திகழ்சோதி குழைக்காதர் கொம்பமருங் கொடிமருங்குற் கோல்வளையா ளொருபாகர் வம்பவிழு மலர்க்கொன்றை வளர்சடைமேல் வைத்துகந்த அம்பவள வையாறர்க் காளாய்நா னுய்ந்தேனே.
|
2
|
நணியானே சேயானே நம்பானே செம்பொன்னின் துணியானே தோலானே சுண்ணவெண் ணீற்றானே மணியானே வானவர்க்கு மருந்தாகிப் பிணிதீர்க்கும் அணியானே யையாறர்க் காளாய்நா னுய்ந்தேனே.
|
3
|
ஊழித்தீ யாய்நின்றா யுள்குவா ருள்ளத்தாய் வாழித்தீ யாய்நின்றாய் வாழ்த்துவார் வாயானே பாழித்தீ யாய்நின்றாய் படர்சடைமேற் பனிமதியம் ஆழித்தீ யையாறர்க் காளாய்நா னுய்ந்தேனே.
|
4
|
சடையானே சடையிடையே தவழுந்தண் மதியானே விடையானே விடையேறிப் புரமெரித்த வித்தகனே உடையானே யுடைதலைகொண் டூரூருண் பலிக்குழலும் அடையானே யையாறர்க் காளாய்நா னுய்ந்தேனே.
|
5
|
Go to top |
நீரானே தீயானே நெதியானே கதியானே ஊரானே யுலகானே யுடலானே யுயிரானே பேரானே பிறைசூடீ பிணிதீர்க்கும் பெருமானென் றாராத வையாறர்க் காளாய்நா னுய்ந்தேனே.
|
6
|
கண்ணானாய் மணியானாய் கருத்தானா யருத்தானாய் எண்ணானா யெழுத்தானா யெழுத்தினுக்கோ ரியல்பானாய் விண்ணானாய் விண்ணிடையே புரமெரித்த வேதியனே அண்ணான வையாறர்க் காளாய்நா னுய்ந்தேனே.
|
7
|
மின்னானா யுருமானாய் வேதத்தின் பொருளானாய் பொன்னானாய் மணியானாய் பொருகடல்வாய் முத்தானாய் நின்னானா ரிருவர்க்குங் காண்பரிய நிமிர்சோதி அன்னானே யையாறர்க் காளாய்நா னுய்ந்தேனே.
|
8
|
முத்திசையும் புனற்பொன்னி மொய்பவளங் கொழித்துந்தப் பத்தர்பலர் நீர்மூழ்கிப் பலகாலும் பணிந்தேத்த எத்திசையும் வானவர்க ளெம்பெருமா னெனவிறைஞ்சும் அத்திசையா மையாறார்க் காளாய்நா னுய்ந்தேனே.
|
9
|
கருவரைசூழ் கடலிலங்கைக் கோமானைக் கருத்தழியத் திருவிரலா லுதைகரணஞ் செய்துகந்த சிவமூர்த்தி பெருவரைசூழ் வையகத்தார் பேர்நந்தி யென்றேத்தும் அருவரைசூ ழையாறர்க் காளாய்நா னுய்ந்தேனே.
|
10
|
Go to top |
Other song(s) from this location: திருவையாறு
1.036
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கலை ஆர் மதியோடு உர
Tune - தக்கராகம்
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
1.120
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பணிந்தவர் அருவினை பற்று அறுத்து
Tune - வியாழக்குறிஞ்சி
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
1.130
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
புலன் ஐந்தும் பொறி கலங்கி,
Tune - மேகராகக்குறிஞ்சி
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
2.006
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கோடல், கோங்கம், குளிர் கூவிளமாலை,
Tune - இந்தளம்
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
2.032
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
திருத் திகழ் மலைச்சிறுமியோடு மிகு
Tune - இந்தளம்
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
4.003
திருநாவுக்கரசர்
தேவாரம்
மாதர்ப் பிறைக் கண்ணியானை மலையான்
Tune - காந்தாரம்
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
4.013
திருநாவுக்கரசர்
தேவாரம்
விடகிலேன், அடிநாயேன்; வேண்டியக் கால்
Tune - பழந்தக்கராகம்
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
4.038
திருநாவுக்கரசர்
தேவாரம்
கங்கையைச் சடையுள் வைத்தார்; கதிர்ப்
Tune - திருநேரிசை
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
4.039
திருநாவுக்கரசர்
தேவாரம்
குண்டனாய்ச் சமணரோடே கூடி நான்
Tune - திருநேரிசை:கொல்லி
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
4.040
திருநாவுக்கரசர்
தேவாரம்
தான் அலாது உலகம் இல்லை;
Tune - திருநேரிசை
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
4.091
திருநாவுக்கரசர்
தேவாரம்
குறுவித்தவா, குற்றம் நோய் வினை
Tune - திருவிருத்தம்
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
4.092
திருநாவுக்கரசர்
தேவாரம்
சிந்திப்பு அரியன; சிந்திப்பவர்க்குச் சிறந்து
Tune - திருவிருத்தம்
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
4.098
திருநாவுக்கரசர்
தேவாரம்
அந்தி வட்டத் திங்கள் கண்ணியன்,
Tune - திருவிருத்தம்
(திருவையாறு பெரியாண்டேசுவரர் திரிபுரசுந்தரியம்மை)
|
5.027
திருநாவுக்கரசர்
தேவாரம்
சிந்தை வாய்தல் உளான், வந்து;
Tune - திருக்குறுந்தொகை
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
5.028
திருநாவுக்கரசர்
தேவாரம்
சிந்தை வண்ணத்தராய், திறம்பா வணம்
Tune - திருக்குறுந்தொகை
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
6.037
திருநாவுக்கரசர்
தேவாரம்
ஆரார் திரிபுரங்கள் நீறா நோக்கும்
Tune - திருத்தாண்டகம்
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
6.038
திருநாவுக்கரசர்
தேவாரம்
ஓசை ஒலி எலாம் ஆனாய்,
Tune - திருத்தாண்டகம்
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
7.077
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
பரவும் பரிசு ஒன்று அறியேன்
Tune - காந்தாரபஞ்சமம்
(திருவையாறு செம்பொற்சோதியீசுவரர் அறம் வளர்த்த நாயகியம்மை)
|