அறையும் பூம்புன லோடும் ஆடர வச்சடை தன்மேற் பிறையுஞ் சூடுவர் மார்பிற் பெண்ணொரு பாக மமர்ந்தார் மறையி னொல்லொலி யோவா மந்திர வேள்வி யறாத குறைவி லந்தணர் வாழுங் கொச்சை வயமமர்ந் தாரே.
|
1
|
சுண்ணத்தர் தோலொடு நூல்சேர் மார்பினர் துன்னிய பூதக் கண்ணத்தர் வெங்கன லேந்திக் கங்குனின் றாடுவர் கேடில் எண்ணத்தர் கேள்விநல் வேள்வி யறாதவர் மாலெரி யோம்பும் வண்ணத்த வந்தணர் வாழுங் கொச்சை வயமமர்ந் தாரே.
|
2
|
பாலை யன்னவெண் ணீறு பூசுவர் பல்சடை தாழ மாலை யாடுவர் கீத மாமறை பாடுதன் மகிழ்வர் வேலை மால்கட லோதம் வெண்டிரை கரைமிசை விளங்குங் கோல மாமணி சிந்துங் கொச்சை வயமமர்ந் தாரே.
|
3
|
கடிகொள் கூவிள மத்தங் கமழ்சடை நெடுமுடிக் கணிவர் பொடிகள் பூசிய மார்பிற் புனைவர்நன் மங்கையொர் பங்கர் கடிகொ ணீடொலி சங்கி னொலியொடு கலையொலி துதைந்து கொடிக ளோங்கிய மாடக் கொச்சை வயமமர்ந் தாரே.
|
4
|
ஆடன் மாமதி யுடையார் ஆயின பாரிடஞ் சூழ வாடல் வெண்டலை யேந்தி வையக மிடுபலிக் குழல்வார் ஆடன் மாமட மஞ்ஞை யணிதிகழ் பேடையொ டாடிக் கூடு தண்பொழில் சூழ்ந்த கொச்சை வயமமர்ந் தாரே.
|
5
|
Go to top |
மண்டு கங்கையும் அரவும் மல்கிய வளர்சடை தன்மேற் றுண்ட வெண்பிறை யணிவர் தொல்வரை வில்லது வாக விண்ட தானவ ரரணம் வெவ்வழ லெரிகொள விடைமேற் கொண்ட கோலம துடையார் கொச்சை வயமமர்ந் தாரே.
|
6
|
அன்ற வானிழ லமர்ந்து வறவுரை நால்வர்க் கருளிப் பொன்றி னார்தலை யோட்டில் உண்பது பொருகட லிலங்கை வென்றி வேந்தனை யொல்க வூன்றிய விரலினர் வான்றோய் குன்ற மன்னபொன் மாடக் கொச்சை வயமமர்ந் தாரே.
|
8
|
சீர்கொண் மாமல ரானுஞ் செங்கண்மா லென்றிவ ரேத்த ஏர்கொள் வெவ்வழ லாகி எங்கும் உறநிமிர்ந் தாரும் பார்கொள் விண்ணழல் கானீர்ப் பண்பினர் பான்மொழி யோடுங் கூர்கொள் வேல்வல னேந்திக் கொச்சை வயமமர்ந் தாரே.
|
9
|
குண்டர் வண்டுவ ராடை போர்த்ததொர் கொள்கை யினார்கள் மிண்டர் பேசிய பேச்சு மெய்யல மையணி கண்டன் பண்டை நம்வினை தீர்க்கும் பண்பின ரொண்கொடி யோடுங் கொண்டல் சேர்மணி மாடக் கொச்சை வயமமர்ந் தாரே.
|
10
|
Go to top |
கொந்த ணிபொழில் சூழ்ந்த கொச்சை வயநகர் மேய அந்த ணன்அடி யேத்தும் அருமறை ஞானசம் பந்தன் சந்த மார்ந்தழ காய தண்டமிழ் மாலைவல் லோர்போய் முந்தி வானவ ரோடும் புகவலர் முனைகெட வினையே.
|
11
|