நேரிய னாகுமல்ல னொருபாலு மேனி யரியான்மு னாய வொளியான் நீரியல் காலுமாகி நிறைவானு மாகி யுறுதீயு மாய நிமலன் ஊரியல் பிச்சைபேணி யுலகங்க ளேத்த நல்குண்டு பண்டு சுடலை நாரியொர் பாகமாக நடமாட வல்ல நறையூரின் நம்ப னவனே.
|
1
|
இடமயி லன்னசாயன் மடமங்கை தன்கை யெதிர்நாணி பூண வரையில் கடும்அயி லம்புகோத்து எயில்செற் றுகந்து வமரர்க் களித்த தலைவன் மடமயில் ஊர்திதாதை யெனநின்றுதொண்டர் மனநின்ற மைந்தன் மருவும் நடமயி லாலநீடு குயில்கூவு சோலை நறையூரின் நம்ப னவனே.
|
2
|
சூடக முன்கைமங்கை யொருபாக மாக வருள்கார ணங்கள் வருவான் ஈடக மானநோக்கி யிடுபிச்சை கொண்டு படுபிச்ச னென்று பரவத் தோடக மாயொர்காதும் ஒருகா திலங்கு குழைதாழ வேழ வுரியன் நாடக மாகவாடி மடவார்கள் பாடும் நறையூரின் நம்ப னவனே.
|
3
|
சாயனன் மாதொர்பாகன் விதியாய சோதி கதியாக நின்ற கடவுள் ஆயக மென்னுள்வந்த வருளாய செல்வன் இருளாய கண்ட னவனித் தாயென நின்றுகந்த தலைவன் விரும்பு மலையின்கண் வந்து தொழுவார் நாயக னென்றிறைஞ்சி மறையோர்கள் பேணும் நறையூரின் நம்ப னவனே.
|
4
|
நெதிபடு மெய்யெமைய னிறைசோலை சுற்றி நிகழம்ப லத்தின் நடுவே அதிர்பட ஆடவல்ல வமரர்க் கொருத்தன் எமர்சுற்ற மாய இறைவன் மதிபடு சென்னிமன்னு சடைதாழ வந்து விடையேறி யில்பலி கொள்வான் நதிபட வுந்திவந்து வயல்வாளை பாயும் நறையூரின் நம்ப னவனே.
|
5
|
Go to top |
கணிகையொர் சென்னிமன்னு மதுவன்னி கொன்றை மலர்துன்று செஞ் சடையினான் பணிகையின் முன்னிலங்க வருவேட மன்னு பலவாகி நின்ற பரமன் அணுகிய வேதவோசை யகலங்க மாறின் பொருளான ஆதி யருளான் நணுகிய தொண்டர்கூடி மலர்தூவி யேத்து நறையூரின் நம்ப னவனே.
|
6
|
ஒளிர்தரு கின்றமேனி யுருவெங்கு மங்க மவையார ஆட லரவம் மிளிர்தரு கையிலங்க வனலேந்தி யாடும் விகிர்தன் விடங்கொண் மிடறன் துளிதரு சோலையாலை தொழின்மேவ வேத மெழிலார வென்றி யருளும் நளிர்மதி சேருமாட மடவார்க ளாரு நறையூரின் நம்ப னவனே.
|
7
|
அடலெரு தேறுகந்த வதிருங் கழற்கள் ளெதிருஞ் சிலம்பொ டிசையக் கடலிடை நஞ்சமுண்டு கனிவுற்ற கண்டன் முனிவுற் றிலங்கை யரையன் உடலொடு தோளனைத்து முடிபத் திறுத்தும் இசைகேட் டிரங்கி யொருவாள் நடலைகள் தீர்த்துநல்கி நமையாள வல்ல நறையூரின் நம்ப னவனே.
|
8
|
குலமலர் மேவினானும் மிகுமாய னாலும் எதிர்கூடி நேடி நினைவுற் றிலபல வெய்தொணாமை யெரியா யுயர்ந்த பெரியா னிலங்கு சடையன் சிலபல தொண்டர்நின்று பெருமைக்கள் பேச வருமைத் திகழ்ந்த பொழிலின் நலமலர் சிந்தவாச மணநாறு வீதி நறையூரின் நம்ப னவனே.
|
9
|
துவருறுகின்ற ஆடை யுடல்போர்த் துழன்ற அவர்தாமும் அல்ல சமணும் கவருறு சிந்தையாள ருரைநீத் துகந்த பெருமான் பிறங்கு சடையன் தவமலி பத்தர்சித்தர் மறையாளர் பேண முறைமாதர் பாடி மருவும் நவமணி துன்றுகோயி லொளிபொன்செய் மாட நறையூரின் நம்ப னவனே.
|
10
|
Go to top |
கான லுலாவி ஓதம் எதிர்மல்கு காழி மிகுபந்தன் முந்தி யுணர ஞான முலாவுசிந்தை அடிவைத் துகந்த நறையூரின் நம்ப னவனை ஈனமி லாதவண்ணம் இசையா லுரைத்த தமிழ்மாலை பத்து நினைவார் வானநி லாவவல்லர் நிலமெங்கு நின்று வழிபாடு செய்யு மிகவே.
|
11
|