உரையினில் வந்தபாவ முணர்நோய்களும்ம செயறீங்கு குற்ற முலகில் வரையினி லாமைசெய்த வவைதீரும் வண்ண மிகவேத்தி நித்த நினைமின் வரைசிலை யாகவன்று மதின்மூன் றெரித்து வளர்கங்குல் நங்கை வெருவத் திரையொலி நஞ்சமுண்ட சிவன்மேய செல்வத் திருநாரை யூர்கை தொழவே.
|
1
|
ஊனடை கின்றகுற்ற முதலாகி யுற்ற பிணிநோ யொருங்கு முயரும் வானடை கின்றவெள்ளை மதிசூடு சென்னி விதியான வேத விகிர்தன் கானிடை யாடிபூதப் படையா னியங்கு விடையா னிலங்கு முடிமேல் தேனடை வண்டுபாடு சடையண்ணல் நண்ணு திருநாரை யூர்கை தொழவே.
|
2
|
ஊரிடை நின்றுவாழும் உயிர்செற்ற காலன் றுயருற்ற தீங்கு விரவிப் பாரிடை மெள்ளவந்து பழியுற்ற வார்த்தை யொழிவுற்ற வண்ண மகலும் போரிடை யன்றுமூன்று மதிலெய்த ஞான்று புகழ்வானு ளோர்கள் புணரும் தேரிடை நின்றவெந்தை பெருமா னிருந்த திருநாரை யூர்கை தொழவே.
|
3
|
தீயுற வாயவாக்கை யதுபற்றி வாழும் வினைசெற்ற வுற்ற வுலகின் தாயுறு தன்மையாய தலைவன்றன் நாமம் நிலையாக நின்று மருவும் பேயுற வாயகானில் நடமாடி கோல விடமுண்ட கண்டன் முடிமேல் தேய்பிறை வைத்துகந்த சிவன்மேய செல்வத் திருநாரை யூர்கை தொழவே.
|
4
|
வசையப ராதமாய வுவரோதம் நீங்குந் தவமாய தன்மை வரும்வான் மிசையவ ராதியாய திருமார் பிலங்கு விரிநூலர் விண்ணு நிலனும் இசையவ ராசிசொல்ல விமையோர்க ளேத்தி யமையாத காத லொடுசேர் திசையவர் போற்றநின்ற சிவன்மேய செல்வத் திருநாரை யூர்கை தொழவே.
|
5
|
Go to top |
உறைவள ரூனிலாய வுயிர்நிற்கும் வண்ணம் உணர்வாக்கும் உண்மை யுலகில் குறைவுள வாகிநின்ற குறைதீர்க்கு நெஞ்சில் நிறைவாற்று நேசம் வளரும் மறைவளர் நாவன்மாவி னுரிபோர்த்த மெய்யன் அரவார்த்த வண்ணல் கழலே திறைவளர் தேவர்தொண்டி னருள்பேண நின்ற திருநாரை யூர்கை தொழவே.
|
6
|
தனம்வரு நன்மையாகுந் தகுதிக் குழந்து வருதிக் குழன்ற வுடலின் இனம்வள ரைவர்செய்யும் வினயங்கள் செற்று நினைவொன்று சிந்தை பெருகும் முனமொரு காலமூன்று புரம்வெந்து மங்கச் சரமுன் றெரிந்த அவுணர் சினமொரு காலழித்த சிவன்மேய செல்வத் திருநாரை யூர்கை தொழவே.
|
7
|
உருவரை கின்றநாளி லுயிர்கொள்ளுங் கூற்ற நனியஞ்சு மாத லுறநீர் மருமலர் தூவியென்றும் வழிபாடு செய்ம்மின் இழிபா டிலாத கடலின் அருவரை சூழிலங்கை யரையன்றன் வீரம் மழியத் தடக்கை முடிகள் திருவிரல் வைத்துகந்த சிவன்மேய செல்வத் திருநாரை யூர்கை தொழவே.
|
8
|
வேறுயர் வாழ்வுதன்மை வினைதுக்க மிக்க பகைதீர்க்கு மேய வுடலில் தேறிய சிந்தைவாய்மை தெளிவிக்க நின்ற கரவைக் கரந்து திகழும் சேறுயர் பூவின்மேய பெருமானும் மற்றைத் திருமாலு நேட எரியாய்ச் சீறிய செம்மையாகுஞ் சிவன்மேய செல்வத் திருநாரை யூர்கை தொழவே.
|
9
|
மிடைபடு துன்பமின்ப முளதாக்கு முள்ளம் வெளியாக்கு முன்னி யுணரும் படையொரு கையிலேந்திப் பலிகொள்ளும் வண்ண மொலிபாடி யாடி பெருமை உடையினை விட்டுளோரு முடல்போர்த்து ளோரும் உரைமாயும் வண்ண மழியச் செடிபட வைத்துகந்த சிவன்மேய செல்வத் திருநாரை யூர்கை தொழவே.
|
10
|
Go to top |
எரியொரு வண்ணமாய வுருவானை யெந்தை பெருமானை யுள்கி நினையார் திரிபுர மன்றுசெற்ற சிவன்மேய செல்வத் திருநாரை யூர்கை தொழுவான் பொருபுனல் சூழ்ந்தகாழி மறைஞான பந்தன் உரைமாலை பத்து மொழிவார் திருவளர் செம்மையாகி யருள்பேறு மிக்க துளதென்பர் செம்மை யினரே.
|
11
|