அக்கிருந்த வாரமும் ஆடரவும் ஆமையும் தொக்கிருந்த மார்பினான் தோலுடையான் வெண்ணீற்றான் புக்கிருந்த தொல்கோயில் பொய்யிலா மெய்ந்நெறிக்கே தக்கிருந்தார் ஆக்கூரிற் றான்றோன்றி மாடமே.
|
1
|
நீரார வார்சடையான் நீறுடையா னேறுடையான் காரார்பூங் கொன்றையினான் காதலித்த தொல்கோயில் கூராரல் வாய்நிறையக் கொண்டயலே கோட்டகத்தில் தாராமல் காக்கூரிற் றான்றோன்றி மாடமே.
|
2
|
வாளார்கண் செந்துவர்வாய் மாமலையான் றன்மடந்தை தோளாகம் பாகமாப் புல்கினான் தொல்கோயில் வேளாள ரென்றவர்கள் வள்ளன்மையான் மிக்கிருக்கும் தாளாளர் ஆக்கூரிற் றான்றோன்றி மாடமே.
|
3
|
கொங்குசேர் தண்கொன்றை மாலையினான் கூற்றடரப் பொங்கினான் பொங்கொளிசேர் வெண்ணீற்றான் பூங்கோயில் அங்கமா றோடும் அருமறைகள் ஐவேள்வி தங்கினார் ஆக்கூரிற் றான்றோன்றி மாடமே.
|
4
|
வீக்கினா னாடரவம் வீழ்ந்தழிந்தார் வெண்டலையென் பாக்கினான் பலகலன்கள் ஆதரித்துப் பாகம்பெண் ஆக்கினான் தொல்கோயில் ஆம்பலம்பூம் பொய்கைபுடை தாக்கினார் ஆக்கூரிற் றான்றோன்றி மாடமே.
|
5
|
Go to top |
பண்ணொளிசேர் நான்மறையான் பாடலினோ டாடலினான் கண்ணொளிசேர் நெற்றியினான் காதலித்த தொல்கோயில் விண்ணொளிசேர் மாமதியந் தீண்டியக்கால் வெண்மாடம் தண்ணொளிசேர் ஆக்கூரிற் றான்றோன்றி மாடமே.
|
6
|
வீங்கினார் மும்மதிலும் வில்வரையால் வெந்தவிய வாங்கினார் வானவர்கள் வந்திறைஞ்சுந் தொல்கோயில் பாங்கினார் நான்மறையோ டாறங்கம் பலகலைகள் தாங்கினார் ஆக்கூரிற் றான்றோன்றி மாடமே.
|
7
|
கன்னெடிய குன்றெடுத்தான் தோளடரக் காலூன்றி இன்னருளா லாட்கொண்ட வெம்பெருமான் தொல்கோயில் பொன்னடிக்கே நாடோறும் பூவோடு நீர்சுமக்கும் தன்னடியார் ஆக்கூரிற் றான்றோன்றி மாடமே.
|
8
|
நன்மையா னாரணனும் நான்முகனுங் காண்பரிய தொன்மையான் தோற்றங்கே டில்லாதான் தொல்கோயில் இன்மையாற் சென்றிரந்தார்க் கில்லையென்னா தீந்துவக்குந் தன்மையார் ஆக்கூரிற் றான்றோன்றி மாடமே.
|
9
|
நாமருவு புன்மை நவிற்றச் சமண்டேரர் பூமருவு கொன்றையினான் புக்கமருந் தொல்கோயில் சேன்மருவு பைங்கயத்துச் செங்கழுநீர் பைங்குவளை தாமருவு மாக்கூரிற் றான்றோன்றி மாடமே.
|
10
|
Go to top |
ஆட லமர்ந்தானை யாக்கூரிற் றான்றோன்றி மாட மமர்ந்தானை மாடஞ்சேர் தண்காழி நாடற் கரியசீர் ஞானசம் பந்தன்சொல் பாட லிவைவல்லார்க் கில்லையாம் பாவமே.
|
11
|