வானு லாவுமதி வந்துல வும்மதின் மாளிகை தேனு லாவுமலர்ச் சோலைமல் குந்திகழ் சிக்கலுள் வேனல் வேளைவிழித் திட்டவெண் ணெய்ப்பெரு மானடி ஞான மாகநினை வார்வினை யாயின நையுமே.
|
1
|
மடங்கொள் வாளைகுதி கொள்ளு மணமலர்ப் பொய்கைசூழ் திடங்கொண் மாமறை யோரவர் மல்கிய சிக்கலுள் விடங்கொள் கண்டத்துவெண் ணெய்ப்பெரு மானடி மேவியே அடைந்து வாழும்மடி யாரவ ரல்ல லறுப்பரே.
|
2
|
நீல நெய்தனில விம்மல ருஞ்சுனை நீடிய சேலுமா லுங்கழ னிவ்வளம் மல்கிய சிக்கலுள் வேலொண் கண்ணியி னாளையொர் பாகன்வெண் ணெய்ப்பிரான் பாலவண் ணன்கழ லேத்தநம் பாவம் பறையுமே.
|
3
|
கந்த முந்தக் கைதைபூத்துக் கமழ்ந்துசே ரும்பொழிற் செந்துவண் டின்னிசைப் பாடன்மல் குந்திகழ் சிக்கலுள் வெந்தவெண் ணீற்றண்ணல் வெண்ணைய்ப் பிரான்விரை யார்கழல் சிந்தைசெய் வார்வினை யாயின தேய்வது திண்ணமே.
|
4
|
மங்குல்தங் கும்மறை யோர்கண்மா டத்தய லேமிகு தெங்குதுங் கப்பொழிற் செல்வமல் குந்திகழ் சிக்கலுள் வெங்கண்வெள் ளேறுடை வெண்ணெய்ப்பி ரானடி மேவவே தங்கு மேற்சர தந்திரு நாளுந் தகையுமே.
|
5
|
Go to top |
வண்டி ரைத்துமது விம்மிய மாமலர்ப் பொய்கைசூழ் தெண்டி ரைக்கொள்புனல் வந்தொழு கும்வயற் சிக்கலுள் விண்டி ரைத்தமல ராற்றிகழ் வெண்ணெய்ப் பிரானடி கண்டி ரைத்துமன மேமதி யாய்கதி யாகவே.
|
6
|
முன்னுமா டம்மதின் மூன்றுட னேயெரி யாய்விழத் துன்னுவார் வெங்கணை யொன்று செலுத்திய சோதியான் செந்நெலா ரும்வயற் சிக்கல்வெண் ணெய்ப்பெரு மானடி உன்னிநீ டம்மன மேநினை யாய்வினை யோயவே.
|
7
|
தெற்ற லாகிய தென்னிலங் கைக்கிறை வன்மலை பற்றி னான்முடி பத்தொடு தோள்கணெ ரியவே செற்ற தேவனஞ் சிக்கல்வெண் ணெய்ப்பெரு மானடி உற்று நீநினை யாய்வினை யாயின வோயவே.
|
8
|
மாலி னோடரு மாமறை வல்ல முனிவனும் கோலி னார்குறு கச்சிவன் சேவடி கோலியும் சீலந் தாமறி யார்திகழ் சிக்கல்வெண் ணெய்ப்பிரான் பாலும் பன்மலர் தூவப் பறையுநம் பாவமே.
|
9
|
பட்டை நற்றுவ ராடையி னாரொடும் பாங்கிலாக் கட்ட மண்கழுக் கள்சொல் லினைக்கரு தாதுநீர் சிட்டன் சிக்கல்வெண் ணெய்ப்பெரு மான்செழு மாமறைப் பட்டன் சேவடி யேபணி மின்பிணி போகவே.
|
10
|
Go to top |
கந்த மார்பொழிற் காழியுண் ஞானசம் பந்தன்நல் செந்தண் பூம்பொழிற் சிக்கல்வெண் ணெய்ப்பெரு மானடிச் சந்த மாச்சொன்ன செந்தமிழ் வல்லவர் வானிடை வெந்த நீறணியும்பெரு மானடி மேவரே.
|
11
|