பந்தத்தால் வந்தெப்பால் பயின்றுநின்ற வும்பரப் பாலேசேர்வா யேனோர்கான் பயில்கண முனிவர்களுஞ் சிந்தித்தே வந்திப்பச் சிலம்பின்மங்கை தன்னொடுஞ் சேர்வார்நாணா ணீள்கயிலைத் திகழ்தரு பரிசதெலாஞ் சந்தித்தே யிந்தப்பார் சனங்கணின்று தங்கணாற் றாமேகாணா வாழ்வாரத் தகவுசெய்த வனதிடங் கந்தத்தா லெண்டிக்குங் கமழ்ந்திலங்கு சந்தனக் காடார்பூவார் சீர்மேவுங் கழுமல வளநகரே.
|
1
|
பிச்சைக்கே யிச்சித்துப் பிசைந்தணிந்தவெண்பொடிப் பீடார்நீடார் மாடாரும் பிறைநுத லரிவையொடும் உச்சத்தா னச்சிப்போ றொடர்ந்தடர்ந்த வெங்கணே றூராவூரா நீள்வீதிப் பயில்வொடு மொலிசெயிசை வச்சத்தா னச்சுச்சேர் வடங்கொள்கொங்கை மங்கைமார் வாராநேரே மாலாகும் வசிவல வவனதிடங் கச்சத்தான் மெச்சிப்பூக் கலந்திலங்கு வண்டினங் காரார்காரார் நீள்சோலைக் கழுமல வளநகரே.
|
2
|
திங்கட்கே தும்பைக்கே திகழ்ந்திலங்கு மத்தையின் சேரேசேரே நீராகச் செறிதரு சுரநதியோ டங்கைச்சேர் வின்றிக்கே யடைந்துடைந்த வெண்டலைப் பாலேமேலே மாலேயப் படர்வுறு மவனிறகும் பொங்கப்பேர் நஞ்சைச்சேர் புயங்கமங்கள் கொன்றையின் போதார்தாரே தாமேவிப் புரிதரு சடையனிடங் கங்கைக்கே யும்பொற்பார் கலந்துவந்த பொன்னியின் காலேவாரா மேலேபாய் கழுமல வளநகரே.
|
3
|
அண்டத்தா லெண்டிக்கு மமைந்தடங்கு மண்டலத் தாறேவேறே வானாள்வா ரவரவ ரிடமதெலாம் மண்டிப்போய் வென்றிப்போர் மலைந்தலைந்த வும்பரு மாறேலாதார் தாமேவும் வலிமிகு புரமெரிய முண்டத்தே வெந்திட்டே முடிந்திடிந்த விஞ்சிசூழ் மூவாமூதூர் மூதூரா முனிவுசெய்த வனதிடங் கண்டிட்டே செஞ்சொற்சேர் கவின்சிறந்த மந்திரக் காலேயோவா தார்மேவுங் கழுமல வளநகரே.
|
4
|
திக்கிற்றே வற்றற்றே திகழ்ந்திலங்கு மண்டலச் சீறார்வீறார் போரார்தா ரகனுட லவனெதிரே புக்கிட்டே வெட்டிட்டே புகைந்தெழுந்த சண்டத்தீப் போலேபூநீர் தீகான்மீப் புணர்தரு முயிர்கடிறஞ் சொக்கத்தே நிர்த்தத்தே தொடர்ந்தமங்கை செங்கதத் தோடேயாமே மாலோகத் துயர்களை பவனதிடங் கைக்கப்பேர் யுக்கத்தே கனன்றுமிண்டு தண்டலைக் காடேயோடா வூரேசேர் கழுமல வளநகரே.
|
5
|
Go to top |
செற்றிட்டே வெற்றிச்சேர் திகழ்ந்ததும்பி மொய்ம்புறுஞ் சேரேவாரா நீள்கோதைத் தெரியிழை பிடியதுவாய் ஒற்றைச்சேர் முற்றற்கொம் புடைத்தடக்கை முக்கண்மிக் கோவாதேபாய் மாதானத் துறுபுகர் முகவிறையைப் பெற்றிட்டே மற்றிப்பார் பெருத்துமிக்க துக்கமும் பேராநோய்தா மேயாமைப் பிரிவுசெய்த வனதிடங் கற்றிட்டே யெட்டெட்டுக் கலைத்துறைக் கரைச்செலக் காணாதாரே சேராமெய்க் கழுமல வளநகரே.
|
6
|
பத்திப்பேர் வித்திட்டே பரந்தவைம் புலன்கள்வாய்ப் பாலேபோகா மேகாவாப் பகையறும் வகைநினையா முத்திக்கே விக்கத்தே முடிக்குமுக் குணங்கள்வாய் மூடாவூடா நாலந்தக் கரணமு மொருநெறியாய்ச் சித்திக்கே யுய்த்திட்டுத் திகழ்ந்தமெய்ப் பரம்பொருள் சேர்வார்தாமே தானாகச் செயுமவ னுறையுமிடங் கத்திட்டோர் சட்டங்கங் கலந்திலங்கு நற்பொருள் காலேயோவா தார்மேவுங் கழுமல வளநகரே.
|
7
|
செம்பைச்சே ரிஞ்சிச்சூழ் செறிந்திலங்கு பைம்பொழிற் சேரேவாரா வாரீசத் திரையெறி நகரிறைவன் இம்பர்க்கே தஞ்செய்திட் டிருந்தரன் பயின்றவெற் பேரார்பூநே ரோர்பாதத் தெழில்விர லவணிறுவிட் டம்பொற்பூண் வென்றித்தோ ளழிந்துவந்த னஞ்செய்தாற் காரார்கூர்வாள் வாணாளன் றருள்புரி பவனதிடங் கம்பத்தார் தும்பித்திண் கவுட்சொரிந்த மும்மதக் காரார்சேறார் மாவீதிக் கழுமல வளநகரே.
|
8
|
பன்றிக்கோ லங்கொண்டிப் படித்தடம் பயின்றிடப் பானாமாறா னாமேயப் பறவையி னுருவுகொள ஒன்றிட்டே யம்புச்சே ருயர்ந்தபங் கயத்தவ னோதானோதா னஃதுணரா துருவின தடிமுடியுஞ் சென்றிட்டே வந்திப்பத் திருக்களங்கொள் பைங்கணின் றேசால்வேறோ ராகாரந் தெரிவுசெய் தவனதிடங் கன்றுக்கே முன்றிற்கே கலந்திலந் நிறைக்கவுங் காலேவாரா மேலேபாய் கழுமல வளநகரே.
|
9
|
தட்டிட்டே முட்டிக்கைத் தடுக்கிடுக்கி நின்றுணாத் தாமேபேணா தேநாளுஞ் சமணொடு உழல்பவரும் இட்டத்தா லத்தந்தா னிதன்றதென்று நின்றவர்க் கேயாமேவா யேதுச்சொல் லிலைமலி மருதம்பூப் புட்டத்தே யட்டிட்டுப் புதைக்குமெய்க்கொள் புத்தரும் போல்வார்தாமோ ராமேபோய்ப் புணர்வுசெய் தவனதிடங் கட்டிக்கால் வெட்டித்தீங் கரும்புதந்த பைம்புனற் காலேவாரா மேலேபாய் கழுமல வளநகரே.
|
10
|
Go to top |
கஞ்சத்தே னுண்டிட்டே களித்துவண்டு சண்பகக் கானேதேனே போராருங் கழுமல நகரிறையைத் தஞ்சைச்சார் சண்பைக்கோன் சமைத்தநற் கலைத்துறை தாமேபோல்வார் தேனேரார் தமிழ்விர கனமொழிகள் எஞ்சத்தேய் வின்றிக்கே யிமைத்திசைத்த மைத்தகொண் டேழேயேழே நாலேமூன் றியலிசை யிசையியல்பா வஞ்சத்தேய் வின்றிக்கே மனங்கொளப் பயிற்றுவோர் மார்பேசேர்வாள் வானோர்சீர் மதிநுதன் மடவரலே.
|
11
|
Other song(s) from this location: சீர்காழி
1.019
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பிறை அணி படர் சடை
Tune - நட்டபாடை
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
1.024
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பூஆர் கொன்றைப் புரிபுன் சடை
Tune - தக்கராகம்
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
1.034
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
அடல் ஏறு அமரும் கொடி
Tune - தக்கராகம்
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
1.079
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
அயில் உறு படையினர்; விடையினர்;
Tune - குறிஞ்சி
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
1.081
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
நல்லார், தீ மேவும் தொழிலார்,
Tune - குறிஞ்சி
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
1.102
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
உரவு ஆர் கலையின் கவிதைப்
Tune - குறிஞ்சி
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
1.126
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பந்தத்தால் வந்து எப்பால் பயின்று
Tune - வியாழக்குறிஞ்சி
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
1.129
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
சே உயரும் திண் கொடியான்
Tune - மேகராகக்குறிஞ்சி
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
2.011
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
நல்லானை, நால்மறையோடு இயல் ஆறுஅங்கம் வல்லானை,
Tune - இந்தளம்
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
2.039
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
ஆரூர், தில்லை அம்பலம், வல்லம்,
Tune - இந்தளம்
(சீர்காழி )
|
2.049
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பண்ணின் நேர் மொழி மங்கைமார்
Tune - சீகாமரம்
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
2.059
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
நலம் கொள் முத்தும் மணியும்
Tune - காந்தாரம்
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
2.075
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
விண் இயங்கும் மதிக்கண்ணியான், விரியும்
Tune - காந்தாரம்
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
2.096
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பொங்கு வெண்புரி வளரும் பொற்பு
Tune - பியந்தைக்காந்தாரம்
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
2.097
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
நம் பொருள், நம் மக்கள்
Tune - நட்டராகம்
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
2.113
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பொடி இலங்கும் திருமேனியாளர், புலி
Tune - செவ்வழி
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
3.022
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
துஞ்சலும் துஞ்சல் இலாத போழ்தினும், நெஞ்சு
Tune - காந்தாரபஞ்சமம்
(சீர்காழி )
|
3.040
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கல்லால் நீழல் அல்லாத் தேவை நல்லார்
Tune - கொல்லி
(சீர்காழி )
|
3.043
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
சந்தம் ஆர் முலையாள் தன
Tune - கௌசிகம்
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
3.118
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
மடல் மலி கொன்றை, துன்று
Tune - புறநீர்மை
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
4.082
திருநாவுக்கரசர்
தேவாரம்
பார் கொண்டு மூடிக் கடல்
Tune - திருவிருத்தம்
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
4.083
திருநாவுக்கரசர்
தேவாரம்
படை ஆர் மழு ஒன்று
Tune - திருவிருத்தம்
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
5.045
திருநாவுக்கரசர்
தேவாரம்
மாது இயன்று மனைக்கு இரு!
Tune - திருக்குறுந்தொகை
(சீர்காழி தோணியப்பர் திருநிலைநாயகியம்மை)
|
7.058
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
சாதலும் பிறத்தலும் தவிர்த்து, எனை
Tune - தக்கேசி
(சீர்காழி பிரமபுரியீசுவரர் திருநிலைநாயகியம்மை)
|
8.137
மாணிக்க வாசகர்
திருவாசகம்
பிடித்த பத்து - உம்பர்கட் ரசே
Tune - அக்ஷரமணமாலை
(சீர்காழி )
|
11.027
பட்டினத்துப் பிள்ளையார்
திருக்கழுமல மும்மணிக் கோவை
திருக்கழுமல மும்மணிக் கோவை
Tune -
(சீர்காழி )
|