வம்பார்குன்றம் நீடுயர்சாரல் வளர்வேங்கைக் கொம்பார்சோலைக் கோலவண்டியாழ்செய் குற்றாலம் அம்பானெய்யோ டாடலமர்ந்தா னலர்கொன்றை நம்பான்மேய நன்னகர்போலும் நமரங்காள்.
|
1
|
பொடிகள்பூசித் தொண்டர்பின்செல்லப் புகழ்விம்மக் கொடிகளோடுந் நாள்விழமல்கு குற்றாலம் கடிகொள்கொன்றை கூவிளமாலை காதல்செய் அடிகண்மேய நன்னகர்போலும் மடியீர்காள்.
|
2
|
செல்வமல்கு செண்பகம்வேங்கை சென்றேறிக் கொல்லைமுல்லை மெல்லரும்பீனுங் குற்றாலம் வில்லினொல்க மும்மதிலெய்து வினைபோக நல்கும்நம்பா னன்னகர்போலுந் நமரங்காள்.
|
3
|
பக்கம்வாழைப் பாய்கனியோடு பலவின்தேன் கொக்கின்கோட்டுப் பைங்கனிதூங்குங் குற்றாலம் அக்கும்பாம்பு மாமையும்பூண்டோ ரனலேந்தும் நக்கன்மேய நன்னகர்போலும் நமரங்காள்.
|
4
|
மலையார்சாரன் மகவுடன்வந்த மடமந்தி குலையார்வாழைத் தீங்கனிமாந்துங் குற்றாலம் இலையார்சூல மேந்தியகையா னெயிலெய்த சிலையான்மேய நன்னகர்போலுஞ் சிறுதொண்டீர்.
|
5
|
Go to top |
மைம்மாநீலக் கண்ணியர்சாரன் மணிவாரிக் கொய்ம்மாவேன லுண்கிளியோப்புங் குற்றாலம் கைம்மாவேழத் தீருரிபோர்த்த கடவுள்ளெம் பெம்மான்மேய நன்னகர்போலும் பெரியீர்காள்.
|
6
|
நீலநெய்தல் தண்சுனைசூழ்ந்த நீள்சோலைக் கோலமஞ்ஞை பேடையொடாடுங் குற்றாலம் காலன்றன்னைக் காலாற்காய்ந்த கடவுள்ளெம் சூலபாணி நன்னகர்போலுந் தொழுவீர்காள்.
|
7
|
போதும்பொன்னு முந்தியருவி புடைசூழக் கூதன்மாரி நுண்துளிதூங்குங் குற்றாலம் மூதூரிலங்கை முட்டியகோனை முறைசெய்த நாதன்மேய நன்னகர்போலுந் நமரங்காள்.
|
8
|
அரவின்வாயின் முள்ளெயிறேய்ப்ப வரும்பீன்று குரவம்பாவை முருகமர்சோலைக் குற்றாலம் பிரமன்னோடு மாலறியாத பெருமையெம் பரமன்மேய நன்னகர்போலும் பணிவீர்காள்.
|
9
|
பெருந்தண்சாரல் வாழ்சிறைவண்டு பெடைபுல்கிக் குருந்தம்மேறிச் செவ்வழிபாடுங் குற்றாலம் இருந்துண்டேரு நின்றுண்சமணு மெடுத்தார்ப்ப அருந்தண்மேய நன்னகர்போலு மடியீர்காள்.
|
10
|
Go to top |
மாடவீதி வருபுனற்காழி யார்மன்னன் கோடலீன்று கொழுமுனைகூம்புங் குற்றாலம் நாடவல்ல நற்றமிழ்ஞான சம்பந்தன் பாடல்பத்தும் பாடநம்பாவம் பறையுமே.
|
11
|