தோடுடையசெவி யன்விடையேறியோர் தூவெண்மதிசூடிக் காடுடையசுட லைப்பொடிபூசியென் னுள்ளங்கவர்கள்வன் ஏடுடையமல ரான்முனை நாட்பணிந் தேத்தவருள்செய்த பீடுடையபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே.
|
1
|
முற்றலாமையிள நாகமோடேன முளைக்கொம்பவைபூண்டு வற்றலோடுகல னாப்பலிதேர்ந்தென துள்ளங்கவர்கள்வன் கற்றல்கேட்டலுடை யார்பெரியார்கழல் கையால் தொழுதேத்தப் பெற்றமூர்ந்தபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே.
|
2
|
நீர்பரந்தநிமிர் புன்சடைமேலோர் நிலாவெண்மதிசூடி ஏர்பரந்தவின வெள்வளைசோரவென் னுள்ளங்கவர்கள்வன் ஊர்பரந்தவுல கின்முதலாகிய வோரூரிதுவென்னப் பேர்பரந்தபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே.
|
3
|
விண்மகிழ்ந்தமதி லெய்ததுமன்றி விளங்குதலையோட்டில் உண்மகிழ்ந்துபலி தேரியவந்தென துள்ளங்கவர்கள்வன் மண்மகிழ்ந்தவர வம்மலர்க்கொன்றை மலிந்தவரைமார்பில் பெண்மகிழ்ந்தபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே.
|
4
|
ஒருமைபெண்மையுடை யன்சடையன்விடை யூரும்மிவனென்ன அருமையாகவுரை செய்யவமர்ந்தென துள்ளங்கவர்கள்வன் கருமைபெற்றகடல் கொள்ளமிதந்ததொர் காலம்மிதுவென்னப் பெருமைபெற்றபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே.
|
5
|
Go to top |
மறைகலந்தவொலி பாடலோடாடல ராகிமழுவேந்தி இறைகலந்தவின வெள்வளைசோரவென் னுள்ளங்கவர்கள்வன் கறைகலந்தகடி யார்பொழில்நீடுயர் சோலைக்கதிர்சிந்தப் பிறைகலந்தபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே.
|
6
|
சடைமுயங்குபுன லன்அனலன்னெரி வீசிச்சதிர்வெய்த உடைமுயங்குமர வோடுழிதந்தென துள்ளங்கவர்கள்வன் கடன்முயங்குகழி சூழ்குளிர்கானலம் பொன்னஞ்சிறகன்னம் பெடைமுயங்குபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே.
|
7
|
வியரிலங்குவரை யுந்தியதோள்களை வீரம்விளைவித்த உயரிலங்கையரை யன்வலிசெற்றென துள்ளங்கவர்கள்வன் துயரிலங்கும்முல கிற்பலவூழிகள் தோன்றும்பொழுதெல்லாம் பெயரிலங்குபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே.
|
8
|
தாணுதல்செய்திறை காணியமாலொடு தண்டாமரையானும் நீணுதல்செய்தொழி யந்நிமிர்ந்தானென துள்ளங்கவர்கள்வன் வாணுதல்செய்மக ளீர்முதலாகிய வையத்தவரேத்தப் பேணுதல்செய்பிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே.
|
9
|
புத்தரோடுபொறி யில்சமணும்புறங் கூறநெறிநில்லா ஒத்தசொல்லவுல கம்பலிதேர்ந்தென துள்ளங்கவர்கள்வன் மத்தயானைமறு கவ்வுரிபோர்த்ததோர் மாயம்மிதுவென்னப் பித்தர்போலும்பிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே.
|
10
|
Go to top |
அருநெறியமறை வல்லமுனியகன் பொய்கையலர்மேய பெருநெறியபிர மாபுரமேவிய பெம்மானிவன்றன்னை ஒருநெறியமனம் வைத்துணர்ஞானசம் பந்தன்னுரைசெய்த திருநெறியதமிழ் வல்லவர்தொல்வினை தீர்தல்எளிதாமே.
|
11
|
Other song(s) from this location: திருப்பிரமபுரம் (சீர்காழி)
1.001
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
தோடு உடைய செவியன், விடை
Tune - நட்டபாடை
(திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி
)
|
1.063
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
எரி ஆர் மழு ஒன்று
Tune - தக்கேசி
(திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
1.090
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
அரனை உள்குவீர்! பிரமன் ஊருள்
Tune - குறிஞ்சி
(திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
1.117
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
காடு அது, அணிகலம் கார்
Tune - வியாழக்குறிஞ்சி
(திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
1.127
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பிரம புரத்துறை பெம்மா னெம்மான் பிரம
Tune - வியாழக்குறிஞ்சி
(திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
1.128
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
ஓர் உரு ஆயினை; மான்
Tune - வியாழக்குறிஞ்சி
(திருப்பிரமபுரம் (சீர்காழி) )
|
2.040
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
எம்பிரான், எனக்கு அமுதம் ஆவானும்,
Tune - சீகாமரம்
(திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
2.065
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கறை அணி வேல் இலர்போலும்;
Tune - காந்தாரம்
(திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
2.073
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
விளங்கிய சீர்ப் பிரமன் ஊர்,
Tune - காந்தாரம்
(திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
2.074
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பூமகன் ஊர், புத்தேளுக்கு இறைவன்
Tune - காந்தாரம்
(திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
3.037
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கரம் முனம் மலரால், புனல்
Tune - கொல்லி
(திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
3.056
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
இறையவன், ஈசன், எந்தை, இமையோர்
Tune - பஞ்சமம்
(திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
3.067
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
சுரர் உலகு, நரர்கள் பயில்
Tune - சாதாரி
(திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
3.110
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
வரம் அதே கொளா, உரம்
Tune - பழம்பஞ்சுரம்
(திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
3.113
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
உற்று உமை சேர்வது மெய்யினையே;
Tune - பழம்பஞ்சுரம்
(திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
3.117
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
யாமாமா நீ யாமாமா யாழீகாமா
Tune - கௌசிகம்
(திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|