| சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Hebrew
Korean
Easy version Classic version
- Hide Meaning https://sivaya.org/thiruvasagam2/34 Uyirunnip pathu.mp3 Add audio link
8.134
மாணிக்க வாசகர்
திருவாசகம்
திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில்
கலிவிருத்தம்
பைந் நாப் பட அரவு ஏர் அல்குல் உமை பாகம் அது ஆய், என்
மெய்ந் நாள்தொறும் பிரியா, வினைக் கேடா! விடைப் பாகா!
செம் நாவலர் பரசும் புகழ்த் திருப்பெருந்துறை உறைவாய்!
எந் நாள் களித்து, எந் நாள் இறுமாக்கேன், இனி, யானே?
1
பசிய நாவினையுடைய, பாம்பினது, படம் போன்ற, அழகிய அல்குலையுடைய உமையம்மையினது பாகத்தை யுடையவனாய்; என் உடம்பைத் தினந்தோறும் விட்டு நீங்காது விளங்கி நிற்கின்ற வினையை அறுப்பவனே! காளையூர்தியை உடைய வனே! செம்மையான நாவன்மை யுடையோர், துதிக்கும் புகழை யுடைய திருப்பெருந்துறையில் எழுந்தருளியிருப்பவனே! நான் இனிமேல், எந்நாளில் உன்னைக் கண்டு களித்து, எந்நாளில் இறுமாந் திருப்பேன்?
நான் ஆர், அடி அணைவான்? ஒரு நாய்க்குத் தவிசு இட்டு, இங்கு,
ஊன் ஆர் உடல் புகுந்தான்; உயிர் கலந்தான்; உளம் பிரியான்;
தேன் ஆர் சடை முடியான்; மன்னு திருப்பெருந்துறை உறைவான்;
வானோர்களும் அறியாதது ஒர் வளம் ஈந்தனன், எனக்கே.
2
திருவடியைச் சேர்வதற்கு எனக்கு என்ன தகுதியுள்ளது? எனினும், தேன் வண்டு நிறைந்த சடையையுடைய வனும், திருப்பெருந்துறையில் எழுந்தருளியிருப்பவனுமாகிய இறைவன் நாய் ஒன்றிற்கு ஆசனம் கொடுத்தது போல எனக்கு அவன் திருவருளைக் கொடுத்து, இவ்விடத்தில், தசை பொதிந்த உடம்பின் கண் புகுந்தான். என் உயிரில் கலந்தான். என் மனத்தினின்றும் பிரிய மாட்டான். இவ்வாற்றால் தேவர்களும் அறிய முடியாததாகிய, ஒரு செல்வத்தை எனக்கு அவன் தந்தருளினான்.
எனை, நான் என்பது அறியேன்; பகல், இரவு, ஆவதும் அறியேன்;
மன வாசகம் கடந்தான் எனை மத்த உன்மத்தன் ஆக்கி;
சின மால் விடை உடையான், மன்னு திருப்பெருந்துறை உறையும்
பனவன், எனைச் செய்த படிறு அறியேன்; பரம் சுடரே!
3
மனத்துக்கும், வாக்குக்கும் அப்பாற்பட்டவனும், கோபத்தையுடைய பெரிய இடபத்தையுடையவனும், நிலை பெற்ற திருப்பெருந்துறையில் எழுந்தருளியிருக்கும், அந்தணனும், மேலான சுடரானவனுமாகிய இறைவன், அடியேனைப் பெரும் பித்தனாக்கி, எனக்குச் செய்த வஞ்சனையை அறியேன். என்னை, நான் என்று உணர்வது? அறியேன். பகல் இரவு செல்வதையும் அறியேன்.
வினைக்கேடரும் உளரோ பிறர், சொல்லீர்? வியன் உலகில்
எனை, தான் புகுந்து, ஆண்டான்; எனது என்பின் புரை உருக்கி,
பினை, தான் புகுந்து, எல்லே! பெருந்துறையில் உறை பெம்மான்,
மனத்தான்; கண்ணின் அகத்தான்; மறு மாற்றத்திடையானே!
4
பகலில் திருப்பெருந்துறையில் வீற்றிருக்கின்ற பெருமான், அடியேனைத் தானே எழுந்தருளி வந்து ஆண்டு கொண்டான். என்னுடைய என்பினது உள் துளைகளையும் உருகச் செய்து, மேலும் வந்து, என் மனத்தினுள்ளானாயினான். கண்ணிலும் உள்ளானாயினான். மற்றும் வாக்கினும் உள்ளானாயினான். பரந்த உலகத்தில் இவனைப் போல வினையைக் கெடுப்பவர் பிறரும் இருக்கின்றார்களோ? சொல்லுங்கள்.
பற்று ஆங்கு அவை அற்றீர், பற்றும் பற்று ஆங்கு அது பற்றி,
நற்று ஆம் கதி அடைவோம் எனின், கெடுவீர், ஓடி வம்மின்;
தெற்று ஆர் சடைமுடியான், மன்னு திருப்பெருந்துறை இறை, சீர்
கற்று ஆங்கு, அவன் கழல் பேணினரொடும் கூடுமின், கலந்தே!
5
உலகப் பற்றுக்களாகிய அவைகளை ஒழித்தவராய், இறைவனைப் பற்றுகின்ற, ஆதரவாகிய அதனைப் பிடித்து நல்லதோர் பதவியினை அடைய விரும்பினால், அந்தோ! ஓடி வாருங்கள். பின்னலையுடைய சடையையுடையவனும் நிலை பெற்ற திருப்பெருந் துறையில் எழுந்தருளியிருக்கும் இறைவனுமாகிய பெருமானது, புகழைக் கற்றவாறே அவனது திருவடியை, விரும்பினவராகிய அடியாரோடும், கலந்து அடைவீர்களாக!
Go to top
கடலின் திரை அது போல் வரு கலக்கம், மலம், அறுத்து; என்
உடலும், எனது உயிரும், புகுந்து; ஒழியாவண்ணம், நிறைந்தான்:
சுடரும் சுடர் மதி சூடிய, திருப்பெருந்துறை உறையும்,
படரும் சடை மகுடத்து, எங்கள் பரன் தான் செய்த படிறே!
6
கடலின் அலைகள் போல ஓயாது வருகின்ற கலக்கச் செய்யும் பாசங்களைத் தொலைத்து, என் உடம்பிலும், என் உயிரிலும் நுழைந்து, ஓர் இடமும் எஞ்சி நில்லாதபடி நிறைந்தனன். இதுவே, ஒளிபரப்பும் கதிர்களையுடைய பிறையை அணிந்த திருப்பெருந் துறையில் வீற்றிருந்தருளும் விரிந்த சடையாகிய முடியையுடைய, எம் மேலோன் செய்த கள்ளம்.
வேண்டேன் புகழ்; வேண்டேன் செல்வம்; வேண்டேன் மண்ணும், விண்ணும்;
வேண்டேன் பிறப்பு, இறப்பு; சிவம் வேண்டார் தமை நாளும்
தீண்டேன்; சென்று, சேர்ந்தேன், மன்னு திருப்பெருந்துறை; இறை தாள்
பூண்டேன்; புறம் போகேன்; இனி, புறம்போகல் ஒட்டேனே!
7
நான் பிறந்தும் இறந்தும் உழல்வதை விரும்ப வில்லை. ஆகையால் புகழை விரும்பேன். பொருளை விரும்பேன். மண்ணுலக வாழ்க்கையும் விண்ணுலக வாழ்க்கையும் விரும்பேன். சிவத்தை விரும்பாத புறத்தாரை, ஒரு நாளும் தொடமாட்டேன். நிலை பெற்ற, திருப்பெருந்துறை இறைவனது திருவடியைச் சென்று அடைந் தேன். அதனையே அணிந்து கொண்டேன். இனிமேல் அதனைவிட்டு நீங்கேன். என்னை விட்டு அது நீங்குவதற்கும் இசையமாட்டேன்.
கோல்தேன் எனக்கு என்கோகுரை கடல்வாய் அமுது என்கோ
ஆற்றேன்; எங்கள் அரனே! அரு மருந்தே! எனது அரசே!
சேற்று ஆர் வயல் புடை சூழ்தரு திருப்பெருந்துறை உறையும்,
நீற்று ஆர்தரு திருமேனி நின்மலனே! உனை யானே?
8
எங்கள் சிவபெருமானே! அருமையான மருந்தே! எனக்கு அரசனே! சேற்றினால் நிறைந்த நன்செய் பக்கங்களில் சூழப்பெற்ற திருப்பெருந்துறையில் வீற்றிருக்கின்ற, திருவெண்ணீற் றால் நிறைந்த, திருமேனியையுடைய, நின்மலனே! உன்னை அடியேன் எனக்குக் கிடைத்த கொம்புத்தேன் என்பேனோ? ஒலிக் கின்ற பாற்கடலில் தோன்றிய அமுதம் என்பேனோ? சொல்ல முடியா தவன் ஆயினேன்.
எச்சம் அறிவேன் நான்; எனக்கு இருக்கின்றதை அறியேன்;
அச்சோ! எங்கள் அரனே! அரு மருந்தே! எனது அமுதே!
செச்சை மலர் புரை மேனியன், திருப்பெருந்துறை உறைவான்,
நிச்சம் என நெஞ்சில் மன்னி, யான் ஆகி நின்றானே!
9
எங்கள் சிவபெருமானே! அருமையான மருந்தானவனே! என்னுடைய அமுதமானவனே! வெட்சி மலரைப் போன்ற செம்மேனியையுடையவனாகியும், திருப்பெருந்துறையில் வீற்றிருக்கின்றவனாகியும், நாடோறும் என்னுடைய நெஞ்சத்தில் தங்கி, நானேயாய்க் கலந்து நின்றவனே! நான் எஞ்சிய பிறவற்றை அறிவேன். எனக்கு இருக்கின்ற குறைபாட்டை அறிய மாட்டேன். இது என்ன வியப்பு?
வான் பாவிய உலகத்தவர் தவமே செய, அவமே,
ஊன் பாவிய உடலைச் சுமந்து, அடவி மரம் ஆனேன்;
தேன் பாய் மலர்க் கொன்றை மன்னு திருப்பெருந்துறை உறைவாய்!
நான் பாவியன் ஆனால், உனை நல்காய் எனல் ஆமே?
10
தேன் பெருகுகின்ற மலர்களையுடைய கொன்றை மரங்கள் நிறைந்து விளங்கும், திருப்பெருந்துறையில் வீற்றிருப் பவனே! விண்ணிலே பொருந்திய உலகத்தவராகிய தேவர்களும், தவத்தையே செய்து கொண்டிருக்க, வீணே, தசை பொருந்திய உடம்பைத் தாங்கி, காட்டில் உள்ள மரம் போல ஆகிவிட்டேன். நான் இவ்வாறு பாவியாகப் போய்விட்ட பின்பு, உன்னை அருளாதவன் என்று கூறுதல் கூடுமோ?
Go to top
Thevaaram Link
- Shaivam Link
Other song(s) from this location: திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில்
8.101
மாணிக்க வாசகர்
திருவாசகம்
சிவபுராணம் - நமச்சிவாய வாஅழ்க
Tune -
(திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.105.01
மாணிக்க வாசகர்
திருவாசகம்
திருச்சதகம் - I மெய்யுணர்தல் (1-10) மெய்தான் அரும்பி
Tune - அயிகிரி நந்தினி
(திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.105.02
மாணிக்க வாசகர்
திருவாசகம்
திருச்சதகம் - II. அறிவுறுத்தல் (11-20)
Tune - அயிகிரி நந்தினி
(திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.105.03
மாணிக்க வாசகர்
திருவாசகம்
திருச்சதகம் - III. சுட்டறுத்தல் (21-30)
Tune - வெள்ளம் தாழ் விரி சடையாய்! விடையாய்!
(திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.105.04
மாணிக்க வாசகர்
திருவாசகம்
திருச்சதகம் - IV ஆன்ம சுத்தி (31-40)
Tune -
(திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.105.05
மாணிக்க வாசகர்
திருவாசகம்
திருச்சதகம் - V கைம்மாறு கொடுத்தல் (41-50)
Tune -
(திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.105.06
மாணிக்க வாசகர்
திருவாசகம்
திருச்சதகம் - VI அநுபோக சுத்தி (51-60)
Tune - ஆடுக ஊஞ்சல் ஆடுகவே
(திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.105.07
மாணிக்க வாசகர்
திருவாசகம்
திருச்சதகம் - VII. காருணியத்து இரங்கல் (61-70)
Tune -
(திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.105.08
மாணிக்க வாசகர்
திருவாசகம்
திருச்சதகம் -VIII. ஆனந்தத்து அழுந்தல் (71-80)
Tune - ஈசனோடு பேசியது போதுமே
(திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.105.09
மாணிக்க வாசகர்
திருவாசகம்
திருச்சதகம் -IX . ஆனந்த பரவசம் (81-90)
Tune -
(திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.105.10
மாணிக்க வாசகர்
திருவாசகம்
திருச்சதகம் - X. ஆனந்தாதீதம் (91-100)
Tune - ஹரிவராசனம்
(திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.120
மாணிக்க வாசகர்
திருவாசகம்
திருப்பள்ளியெழுச்சி - போற்றியென் வாழ்முத
Tune - புறநீர்மை
(திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.123
மாணிக்க வாசகர்
திருவாசகம்
செத்திலாப் பத்து - பொய்யனேன் அகம்நெகப்
Tune - ஹரிவராசனம்
(திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.124
மாணிக்க வாசகர்
திருவாசகம்
அடைக்கலப் பத்து - செழுக்கமலத் திரளனநின்
Tune - அயிகிரி நந்தினி
(திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.125
மாணிக்க வாசகர்
திருவாசகம்
ஆசைப்பத்து - கருடக்கொடியோன் காணமாட்டாக்
Tune - கருடக்கொடியோன்
(திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.126
மாணிக்க வாசகர்
திருவாசகம்
அதிசயப் பத்து - வைப்பு மாடென்றும்
Tune - கருடக்கொடியோன்
(திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.127
மாணிக்க வாசகர்
திருவாசகம்
புணர்ச்சிப்பத்து - சுடர்பொற்குன்றைத் தோளாமுத்தை
Tune - கருடக்கொடியோன்
(திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.128
மாணிக்க வாசகர்
திருவாசகம்
வாழாப்பத்து - பாரொடு விண்ணாய்ப்
Tune - அக்ஷரமணமாலை
(திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.129
மாணிக்க வாசகர்
திருவாசகம்
அருட்பத்து - சோதியே சுடரே
Tune - அக்ஷரமணமாலை
(திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.132
மாணிக்க வாசகர்
திருவாசகம்
பிரார்த்தனைப் பத்து - கலந்து நின்னடி
Tune - ஆடுக ஊஞ்சல் ஆடுகவே
(திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.133
மாணிக்க வாசகர்
திருவாசகம்
குழைத்த பத்து - குழைத்தால் பண்டைக்
Tune - ஆடுக ஊஞ்சல் ஆடுகவே
(திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.134
மாணிக்க வாசகர்
திருவாசகம்
உயிருண்ணிப்பத்து - பைந்நாப் பட அரவேரல்குல்
Tune -
(திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.136
மாணிக்க வாசகர்
திருவாசகம்
திருப்பாண்டிப் பதிகம் - பருவரை மங்கைதன்
Tune - அயிகிரி நந்தினி
(திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.138
மாணிக்க வாசகர்
திருவாசகம்
திருவேசறவு - இரும்புதரு மனத்தேனை
Tune - பூவேறு கோனும் புரந்தரனும்
(திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.141
மாணிக்க வாசகர்
திருவாசகம்
அற்புதப்பத்து - மைய லாய்இந்த
Tune - கருடக்கொடியோன்
(திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.142
மாணிக்க வாசகர்
திருவாசகம்
சென்னிப்பத்து - தேவ தேவன்மெய்ச்
Tune -
(திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.143
மாணிக்க வாசகர்
திருவாசகம்
திருவார்த்தை - மாதிவர் பாகன்
Tune - ஆடுக ஊஞ்சல் ஆடுகவே
(திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.144
மாணிக்க வாசகர்
திருவாசகம்
எண்ணப்பதிகம் - பாருருவாய
Tune - ஆடுக ஊஞ்சல் ஆடுகவே
(திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.147
மாணிக்க வாசகர்
திருவாசகம்
திருவெண்பா - வெய்ய வினையிரண்டும்
Tune - ஏரார் இளங்கிளியே
(திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.148
மாணிக்க வாசகர்
திருவாசகம்
பண்டாய நான்மறை - பண்டாய நான்மறையும்
Tune - ஏரார் இளங்கிளியே
(திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.150
மாணிக்க வாசகர்
திருவாசகம்
ஆனந்தமாலை - மின்னே ரனைய
Tune - ஆடுக ஊஞ்சல் ஆடுகவே
(திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
12.900
கடவுண்மாமுனிவர்
திருவாதவூரர் புராணம்
Tune -
(திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )