சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

8.105.03   மாணிக்க வாசகர்    திருவாசகம்

திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் - வெள்ளம் தாழ் விரி சடையாய்! விடையாய்!
எண்சீர் விருத்தம்
- Hide Meaning   https://sivaya.org/thiruvaasagam/05.03 Suttaruthal Thiruvasagam.mp3   Add audio link Add Audio

வெள்ளம் தாழ் விரி சடையாய்! விடையாய்!விண்ணோர்
பெருமானே!' எனக் கேட்டு வேட்ட நெஞ்சாய்,
பள்ளம் தாழ் உறு புனலில், கீழ் மேலாக,
பதைத்து உருகும் அவர் நிற்க, என்னைஆண்டாய்க்கு,
உள்ளந்தாள் நின்று உச்சி அளவும் நெஞ்சாய்
உருகாதால்; உடம்பு எல்லாம் கண்ணாய், அண்ணா!
வெள்ளம் தான் பாயாதால்; நெஞ்சம் கல் ஆம்;
கண் இணையும் மரம் ஆம் தீவினையினேற்கே.

21
கங்கை நீர்ப் பெருக்குத் தங்கிய, விரிந்த சடையினை யுடையாய்! எருதினை ஊர்தியாக உடையாய்! தேவர் தலைவனே! என்று அன்பர் சொல்லக் கேட்டவுடன், ஆர்வம் மிகுந்த மனத்தினராய், பள்ளத்தில் விழுகின்ற மிகுந்த நீர் போல, மேல் கீழாக விழுந்து, வணங்கி நெஞ்சம் துடிக்கும் அடியார் பலர் நிற்க, என்னைப் பெருங்கருணையால் ஆண்டு கொண்ட உன் பொருட்டு என் உள்ளங்கால் முதல் உச்சி வரையுள்ள உடம்பின் பகுதிமுற்றும், மனத்தின் இயல்புடையதாய் உருகாது, உடம்பு எல்லாம், கண்ணின் இயல்புடையதாய் நீர்ப்பெருக்குப் பாயவில்லை; ஆகையால் கொடிய வினையை உடையேனுக்கு நெஞ்சானது கல்லினால் அமைந்ததே யாம். இருகண்களும் மரத்தினால் ஆனவையாம்.

வினையிலே கிடந்தேனை, புகுந்து நின்று, போது, நான்
வினைக்கேடன்' என்பாய் போல,
இனையன் நான்' என்று உன்னை அறிவித்து, என்னை
ஆட்கொண்டு, எம்பிரான் ஆனாய்க்கு,இரும்பின் பாவை
அனைய நான், பாடேன்; நின்று ஆடேன்; அந்தோ!
அலறிடேன்; உலறிடேன்; ஆவி சோரேன்;
முனைவனே! முறையோ, நான் ஆன ஆறு?
முடிவு அறியேன்; முதல், அந்தம், ஆயினானே!

22
தோற்றத்துக்கும் முடிவுக்கும் காரணமானவனே! வினைப் பாசத்தில் அகப்பட்டுக் கிடந்த என்பால் வலிய எதிர்ப்பட்டு வந்து நின்று, நீ வா, நான் வினையை ஒழிக்க வல்லேன் என்று கூறுவாய் போல, ``நான் இத்தன்மையன்`` என்று உன்னியல்பை எனக்கு அறி வுறுத்தியருளி, என்னை அடிமை கொண்டு, எமக்குத் தலைவனாய் நின்ற உன் பொருட்டு, இருப்பினாற் செய்த பதுமை போன்ற நான், நின்று கூத்தாட மாட்டேன்; முதல்வனே! நான் இவ்வாறாய முறையின் முடிவு என்ன என்று அறிய மாட்டேன்; இது முறையாகுமோ?

ஆய நான்மறையவனும் நீயே ஆதல்
அறிந்து, யான் யாவரினும் கடையன் ஆய
நாயினேன் ஆதலையும் நோக்கிக் கண்டும்,
நாதனே! நான் உனக்கு ஓர் அன்பன் என்பேன்
ஆயினேன்; ஆதலால், ஆண்டுகொண்டாய்
அடியார் தாம் இல்லையே? அன்றி, மற்று ஓர்
பேயனேன்? இது தான் நின் பெருமை அன்றே!
எம்பெருமான்! என் சொல்லிப் பேசுகேனே?

23
நான்கு வேதப் பொருளாய் இருப்பவன் நீ என்பதையும் எல்லாரினும் இழிந்தவன் நான் என்பதையும் அறிந்து உனக்கு நானும் ஓரடியான் என்றேன். ஆதலால், ஆண்டு கொண்டனை. அத்தனையே அன்றி, உனக்கு அடியார் இல்லாத குறையினால் அன்று, உன் பெருங்குணத்தைக் குறித்து நான் என்ன சொல்லிப் புகழ்வேன்?

பேசில், தாம் ஈசனே, எந்தாய், எந்தை
பெருமானே!' என்று என்றே பேசிப் பேசி;
பூசின், தாம் திருநீறே நிறையப் பூசி;
போற்றி எம்பெருமானே!' என்று; பின்றா
நேசத்தால் பிறப்பு இறப்பைக் கடந்தார் தம்மை
ஆண்டானே! அவா வெள்ளக் கள்வனேனை,
மாசு அற்ற மணிக் குன்றே! எந்தாய்! அந்தோ!
என்னை, நீ ஆட்கொண்ட வண்ணம் தானே?

24
இறைவனே, பேசும் பொழுதும் உன் திருப் பெயரைப் பேசியும் பூசும்பொழுதும் திருநீற்றையே நிறையப் பூசும் நல் அன்பரை ஆண்டருளும் இயல்பினை உடைய நீ, அன்பில்லாத என்னை ஆண்டருளினது வியக்கத் தக்கதாயிருக்கின்றது.

வண்ணம் தான் சேயது அன்று; வெளிதே அன்று;
அநேகன்; ஏகன்; அணு; அணுவில் இறந்தாய்;என்று அங்கு
எண்ணம் தான் தடுமாறி, இமையோர் கூட்டம்
எய்தும் ஆறு அறியாத எந்தாய்! உன் தன்
வண்ணம் தான் அது காட்டி, வடிவு காட்டி,
மலர்க் கழல்கள் அவை காட்டி, வழிஅற்றேனை,
திண்ணம் தான் பிறவாமல் காத்து ஆட்கொண்டாய்;
எம்பெருமான்! என் சொல்லிச் சிந்திக்கேனே?

25
தேவர்கள் உன் திறம் முதலானவற்றையும் உள் உருவம் ஒன்றா? பலவா? என்பதனையும் அறியாமல் தடுமாறி நிற்க, என்னைத் தடுத்து உன் வண்ணம்காட்டி, திருவடி காட்டி, வடிவு காட்டி என்னை ஆட்கொண்டனையே! உன்னைக் குறித்து என்னவென்று புகழ்வேன்?
Go to top

சிந்தனை நின் தனக்கு ஆக்கி, நாயினேன் தன்
கண் இணை நின் திருப்பாதப் போதுக்குஆக்கி,
வந்தனையும் அம் மலர்க்கே ஆக்கி, வாக்கு, உன்
மணி வார்த்தைக்கு ஆக்கி, ஐம்புலன்கள் ஆர
வந்து, எனை ஆட்கொண்டு, உள்ளே புகுந்த விச்சை
மால் அமுதப் பெரும் கடலே!மலையே! உன்னைத்
தந்தனை செம் தாமரைக் காடு அனைய மேனித்
தனிச் சுடரே! இரண்டும் இல் இத்தனியனேற்கே.

26
கடவுளே! இருமை வகை தெரியாத என் மனத்தை நின்திருவுருக்காக்கி, கண்களை நின் திருவடிகளுக்கு ஆக்கி, வழி பாட்டையும் அம்மலர் அடிகளுக்கே ஆக்கி, வாக்கினை உன் திரு வார்த்தைக்கு ஆக்கி, ஐம்புலன்கள் பயனுற என்னை அடிமை கொண்ட உனது பெருங் குணத்தை என்ன வென்று புகழ்வேன்?

தனியனேன், பெரும் பிறவிப் பௌவத்து, எவ்வம்
தடம் திரையால் எற்றுண்டு, பற்றுஒன்று இன்றி,
கனியின் நேர் துவர் வாயார் என்னும் காலால்
கலக்குண்டு காம வான் சுறவின் வாய்ப்பட்டு,
இனி, என்னே உய்யும் ஆறு?' என்று என்று எண்ணி,
அஞ்சு எழுத்தின் புணை பிடித்துக்கிடக்கின்றேனை,
முனைவனே! முதல், அந்தம், இல்லா மல்லல்
கரை காட்டி, ஆட்கொண்டாய் மூர்க்கனேற்கே.

27
தனியனாய்ப் பிறவிப் பெருங்கடலில் விழுந்து, பலவகைத் துன்பங்களாகிய அலைகளால் எறியப்பட்டு, மற்றோர் உதவியும் இன்றி, மாதர் என்னும் பெருங்காற்றால் கலங்கி, காமமாகிய பெருஞ்சுறாவின் வாயிற்சிக்கி, இனிப்பிழைக்கும் வழி யாதென்று சிந்தித்து, உன் ஐந்தெழுத்தாகிய புணையைப் பற்றிக் கிடக்கின்ற என்னை முத்தியாகிய கரையில் ஏற்றி அருளினை.

கேட்டு ஆரும் அறியாதான்; கேடு ஒன்று இல்லான்;
கிளை இலான்; கேளாதே எல்லாம் கேட்டான்
நாட்டார்கள் விழித்திருப்ப, ஞாலத்துள்ளே
நாயினுக்குத் தவிசு இட்டு, நாயினேற்கே
காட்டாதன எல்லாம் காட்டி, பின்னும்
கேளாதன எல்லாம் கேட்பித்து, என்னை
மீட்டேயும் பிறவாமல் காத்து, ஆட்கொண்டான்
எம்பெருமான் செய்திட்ட விச்சை தானே!

28
ஒருவராலும் கேட்டு அறியாதவனும், தனக்கு ஒரு கேடில்லாதவனும், உறவு இல்லாதவனும், கேளாமலே எல்லாம் கேட்பவனும் ஆகிய இறைவன், என் சிறுமை நோக்காது நாய்க்குத் தவிசிட்டாற் போலத் (தவிசு - இருக்கை; ஆசனம்) தன் அருகில் இருத்தி, காட்டுதற்கரிய தன் உண்மை நிலையைக் காட்டி, நான் எக் காலத்திலும் கேட்காத வேத சிவாகமங்களின் பொருள்களைக் கேட்பித்து, மீட்டும் நான் பிறவாமல் என்னைத் தடுத்து ஆட் கொண்டான். இது ஒரு விந்தையாகும்.

விச்சை தான் இது ஒப்பது உண்டோ? கேட்கின்
மிகு காதல் அடியார் தம் அடியன் ஆக்கி
அச்சம் தீர்த்து ஆட்கொண்டான்; அமுதம் ஊறி,
அகம் நெகவே புகுந்து, ஆண்டான், அன்புகூர;
அச்சன், ஆண், பெண், அலி, ஆகாசம், ஆகி,
ஆர் அழல் ஆய், அந்தம் ஆய், அப்பால் நின்ற
செச்சை மா மலர் புரையும் மேனி, எங்கள்
சிவபெருமான், எம்பெருமான், தேவர் கோவே!

29
ஆண், பெண், அலி என்னும் உருவங்கள் இல்லாதவனாய் ஐம்பூத உருவினனாய், அவற்றுக்குக் காரணமாகிய மூலப் பகுதியாய், அதனையும் கடந்து நின்ற சிவபெருமான், சிறியேனைத் தன் அடியவன் ஆக்கிப் பிறவித்துன்பம் நீங்கும் வண்ணம் ஆட்கொண்டருளி, என் மனம் உருகும்படி அதனுள்ளே நுழைந்து நிலைத்திருந்தான். உலகத்தில் இது போன்ற விந்தையொன்று உண்டோ?

தேவர் கோ அறியாத தேவ தேவன்;
செழும் பொழில்கள் பயந்து, காத்து, அழிக்கும்மற்றை
மூவர் கோனாய் நின்ற முதல்வன்; மூர்த்தி;
மூதாதை; மாது ஆளும் பாகத்து எந்தை;
யாவர் கோன்; என்னையும் வந்து ஆண்டுகொண்டான்;
யாம் ஆர்க்கும் குடி அல்லோம்; யாதும்அஞ்சோம்;
மேவினோம் அவன் அடியார் அடியாரோடு;
மேன் மேலும் குடைந்து ஆடி, ஆடுவோமே.

30
தேவர்களால் அறியப் பெறாதவனும் மூவர் களுக்கும் மேலானவனும் ஆகிய இறைவன் தானே எழுந்தருளி என் சிறுமை கருதாது என்னைத் தடுத்தாட் கொண்டமையால், இனி நாம் யார்க்கும் குடிகளல்லோம்; எதற்கும் அஞ்சோம்; அவன் அடியார்க்கு அடியாரோடு சேர்ந்தோம். மேன்மேலும் ஆனந்தக் கடலில் குடைந் தாடுவோம்.
Go to top

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில்
8.101   மாணிக்க வாசகர்    திருவாசகம்   சிவபுராணம் - நமச்சிவாய வாஅழ்க
Tune -   (திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.105.01   மாணிக்க வாசகர்    திருவாசகம்   திருச்சதகம் - I மெய்யுணர்தல் (1-10) மெய்தான் அரும்பி
Tune - அயிகிரி நந்தினி   (திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.105.02   மாணிக்க வாசகர்    திருவாசகம்   திருச்சதகம் - II. அறிவுறுத்தல் (11-20)
Tune - அயிகிரி நந்தினி   (திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.105.03   மாணிக்க வாசகர்    திருவாசகம்   திருச்சதகம் - III. சுட்டறுத்தல் (21-30)
Tune - வெள்ளம் தாழ் விரி சடையாய்! விடையாய்!   (திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.105.04   மாணிக்க வாசகர்    திருவாசகம்   திருச்சதகம் - IV ஆன்ம சுத்தி (31-40)
Tune -   (திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.105.05   மாணிக்க வாசகர்    திருவாசகம்   திருச்சதகம் - V கைம்மாறு கொடுத்தல் (41-50)
Tune -   (திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.105.06   மாணிக்க வாசகர்    திருவாசகம்   திருச்சதகம் - VI அநுபோக சுத்தி (51-60)
Tune - ஆடுக ஊஞ்சல் ஆடுகவே   (திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.105.07   மாணிக்க வாசகர்    திருவாசகம்   திருச்சதகம் - VII. காருணியத்து இரங்கல் (61-70)
Tune -   (திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.105.08   மாணிக்க வாசகர்    திருவாசகம்   திருச்சதகம் -VIII. ஆனந்தத்து அழுந்தல் (71-80)
Tune - ஈசனோடு பேசியது போதுமே   (திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.105.09   மாணிக்க வாசகர்    திருவாசகம்   திருச்சதகம் -IX . ஆனந்த பரவசம் (81-90)
Tune -   (திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.105.10   மாணிக்க வாசகர்    திருவாசகம்   திருச்சதகம் - X. ஆனந்தாதீதம் (91-100)
Tune - ஹரிவராசனம்   (திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.120   மாணிக்க வாசகர்    திருவாசகம்   திருப்பள்ளியெழுச்சி - போற்றியென் வாழ்முத
Tune - புறநீர்மை   (திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.123   மாணிக்க வாசகர்    திருவாசகம்   செத்திலாப் பத்து - பொய்யனேன் அகம்நெகப்
Tune - ஹரிவராசனம்   (திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.124   மாணிக்க வாசகர்    திருவாசகம்   அடைக்கலப் பத்து - செழுக்கமலத் திரளனநின்
Tune - அயிகிரி நந்தினி   (திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.125   மாணிக்க வாசகர்    திருவாசகம்   ஆசைப்பத்து - கருடக்கொடியோன் காணமாட்டாக்
Tune - கருடக்கொடியோன்   (திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.126   மாணிக்க வாசகர்    திருவாசகம்   அதிசயப் பத்து - வைப்பு மாடென்றும்
Tune - கருடக்கொடியோன்   (திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.127   மாணிக்க வாசகர்    திருவாசகம்   புணர்ச்சிப்பத்து - சுடர்பொற்குன்றைத் தோளாமுத்தை
Tune - கருடக்கொடியோன்   (திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.128   மாணிக்க வாசகர்    திருவாசகம்   வாழாப்பத்து - பாரொடு விண்ணாய்ப்
Tune - அக்ஷரமணமாலை   (திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.129   மாணிக்க வாசகர்    திருவாசகம்   அருட்பத்து - சோதியே சுடரே
Tune - அக்ஷரமணமாலை   (திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.132   மாணிக்க வாசகர்    திருவாசகம்   பிரார்த்தனைப் பத்து - கலந்து நின்னடி
Tune - ஆடுக ஊஞ்சல் ஆடுகவே   (திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.133   மாணிக்க வாசகர்    திருவாசகம்   குழைத்த பத்து - குழைத்தால் பண்டைக்
Tune - ஆடுக ஊஞ்சல் ஆடுகவே   (திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.134   மாணிக்க வாசகர்    திருவாசகம்   உயிருண்ணிப்பத்து - பைந்நாப் பட அரவேரல்குல்
Tune -   (திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.136   மாணிக்க வாசகர்    திருவாசகம்   திருப்பாண்டிப் பதிகம் - பருவரை மங்கைதன்
Tune - அயிகிரி நந்தினி   (திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.138   மாணிக்க வாசகர்    திருவாசகம்   திருவேசறவு - இரும்புதரு மனத்தேனை
Tune - பூவேறு கோனும் புரந்தரனும்   (திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.141   மாணிக்க வாசகர்    திருவாசகம்   அற்புதப்பத்து - மைய லாய்இந்த
Tune - கருடக்கொடியோன்   (திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.142   மாணிக்க வாசகர்    திருவாசகம்   சென்னிப்பத்து - தேவ தேவன்மெய்ச்
Tune -   (திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.143   மாணிக்க வாசகர்    திருவாசகம்   திருவார்த்தை - மாதிவர் பாகன்
Tune - ஆடுக ஊஞ்சல் ஆடுகவே   (திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.144   மாணிக்க வாசகர்    திருவாசகம்   எண்ணப்பதிகம் - பாருருவாய
Tune - ஆடுக ஊஞ்சல் ஆடுகவே   (திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.147   மாணிக்க வாசகர்    திருவாசகம்   திருவெண்பா - வெய்ய வினையிரண்டும்
Tune - ஏரார் இளங்கிளியே   (திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.148   மாணிக்க வாசகர்    திருவாசகம்   பண்டாய நான்மறை - பண்டாய நான்மறையும்
Tune - ஏரார் இளங்கிளியே   (திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.150   மாணிக்க வாசகர்    திருவாசகம்   ஆனந்தமாலை - மின்னே ரனைய
Tune - ஆடுக ஊஞ்சல் ஆடுகவே   (திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
12.900   கடவுண்மாமுனிவர்   திருவாதவூரர் புராணம்  
Tune -   (திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )

This page was last modified on Thu, 11 Dec 2025 05:33:28 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org