சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

6.007   திருநாவுக்கரசர்   தேவாரம்

திருவதிகை வீரட்டானம் - காப்புத்திருத்தாண்டகம் அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி

சிவானந்த முதிர்வு சிவனைத் தவிர வேறு எந்தத் தெய்வத்தையும் போற்றமாட்டேன்
- Hide Meaning   https://www.youtube.com/watch?v=R_eoKaUD4Cs   Add audio link Add Audio

செல்வப் புனல் கெடில வீரட்ட(ம்)மும்,
சிற்றேமமும், பெருந் தண் குற்றால(ம்)மும்,
தில்லைச் சிற்றம்பலமும், தென்கூட(ல்)லும்,
தென் ஆனைக்காவும், சிராப்பள்ளி(ய்)யும்,
நல்லூரும், தேவன்குடி, மருக(ல்)லும்,
  நல்லவர்கள் தொழுது ஏத்தும் நாரையூரும்-
கல்லலகு நெடும்புருவக் கபாலம் ஏந்திக்
கட்டங்கத்தோடு உறைவார் காப்புக்களே.

1
நீர் மிக்க கெடிலநதியால் செல்வவளம் பெற்ற அதிகை வீரட்டம் , சிற்றேமம் , மிக்க பரப்பினை உடைய குளிர்ந்த குற்றாலம் , தில்லைச் சிற்றம்பலம் , தெற்கில் உள்ள மதுரை , அழகிய ஆனைக்கா , சிராப்பள்ளி , நல்லூர் , தேவன்குடி , மருகல் , சான்றோர்கள் வழிபட்டுத் துதிக்கும் நாரையூர் ஆகியன - கல்லலகு என்ற வாச்சியத்தையும் , நீண்ட புருவச் சுவடுடைய மண்டையோட்டினையும் கட்டங்கம் என்ற படைக்கலத்தையும் ஏந்திய சிவபெருமான் உகந்தருளியுள்ள திருத்தலங்களாம் .

தீர்த்தப்புனல் கெடில வீரட்ட(ம்)மும்,
திருக்கோவல்வீரட்டம், வெண்ணெய் நல்லூர்,
ஆர்த்து அருவி வீழ் சுனைநீர் அண்ணாமலை,
அறையணி நல்லூரும்(ம்), அரநெறியும், -
ஏத்துமின்கள்! நீர் ஏத்த நின்ற ஈசன் இடைமருது,
இன்னம்பர், ஏகம்ப(ம்) மும்,
கார்த் தயங்கு சோலைக் கயிலாய (ம்)
  மும்-கண்நுதலான் தன்னுடைய காப்புக்களே.

2
அதிகை வீரட்டம் , கோவலூர் வீரட்டம் , வெண்ணெய்நல்லூர் , அருவிகள் ஆரவாரித்து விழும் சுனைநீரை உடைய அண்ணாமலை , அறையணி நல்லூர் , அரநெறி , இடைமருது , இன்னம்பர் , ஏகம்பம் , மேகத்தொடு விளங்கும் சோலைகளை உடைய கயிலாயம் என்பன - நாம் துதிக்குமாறு நெற்றிக்கண்ணனாகிய எம் பெருமான் உகந்தருளியிருக்கும் திருத்தலங்களாம் . அத் தலங்களில் எம்பெருமானைப் போற்றுங்கள் .

சிறை ஆர் புனல் கெடில வீரட்ட(ம்)மும், திருப் பாதிரிப்புலியூர், திரு ஆமாத்தூர்,
துறை ஆர் வன முனிகள் ஏத்த நின்ற
சோற்றுத்துறை, துருத்தி, நெய்த்தான(ம்)மும், -
அறை ஆர் புனல் ஒழுகு காவிரீ சூழ் ஐயாற்று
  அமுதர்-பழனம், நல்லம்,
கறை ஆர் பொழில் புடை சூழ் கானப்பேரும்,
  கழுக்குன்றும்-தம்முடைய காப்புக்களே.

3
பாறைகளில் மோதிப் பெருகிவருகின்ற நீரை உடைய காவிரியால் தென்புறம் சூழப்பட்ட திருவையாற்றில் அமுதமாக உகந்தருளியிருக்கும் பெருமான் தடுக்கப்படுகின்ற நீரை உடைய கெடில நதிக் கரையிலுள்ள அதிகை வீரட்டம் , பாதிரிப்புலியூர் , ஆமாத்தூர் , நீர்த்துறைகளை அடுத்த சோலைகளில் வாழும் முனிவர்கள் துதிக்க இருக்கும் சோற்றுத்துறை , துருத்தி , நெய்த்தானம் , இருண்ட சோலைகளால் சூழப்பட்ட கானப்பேரூர் , கழுக்குன்றம் ஆகிய திருத்தலங்களில் கோயில் கொண்டுள்ளான் .

திரை ஆர் புனல் கெடில வீரட்ட(ம்)மும், திரு
 ஆரூர், தேவூர், திரு நெல்லிக்கா,
உரையார் தொழ நின்ற ஒற்றியூரும், ஓத்தூரும்,
மாற்பேறும், மாந்துறையும்,
வரை ஆர் அருவி சூழ் மாநதியும், மாகாளம்,
கேதாரம், மா மேரு(வ்)வும்-
கரை ஆர் புனல் ஒழுகு காவிரீ சூழ் கடம்பந்துறை
உறைவார் காப்புக்களே.

4
கெடிலக் கரை வீரட்டம் , திருவாரூர் , தேவூர் , நெல்லிக்கா , புகழை உடைய சான்றோர் வழிபடும் ஒற்றியூர் , ஓத்தூர் , மாற்பேறு , மாந்துறை , மலை அருவிகள் சூழ்ந்த மாநதி , மாகாளம் , கேதாரம் , மாமேரு என்பன காவிரி சூழ்கடப்பந்துறையில் உகந்தருளியிருக்கும் பெருமானுடைய திருத்தலங்களாம் .

செழு நீர்ப்-புனல் கெடில வீரட்ட(ம்)மும்,
  திரிபுராந்தகம், தென் ஆர் தேவீச்சுரம்,
கொழு நீர் புடை சுழிக்கும் கோட்டுக்காவும்,
குடமூக்கும், கோகரணம், கோலக்காவும்,
பழி நீர்மை இல்லாப் பனங்காட்டூரும், பனையூர்,
பயற்றூர், பராய்த்துறையும்,
கழுநீர் மது விரியும் காளிங்க(ம்)மும் - 
கணபதீச்சுரத்தார் தம் காப்புக்களே.

5
கெடிலக்கரை அதிகை வீரட்டம் , திரிபுராந்தகம் , அழகிய தேவீச்சரம் , வெள்ளம் சூழும் கோட்டுக்கா , குடமூக்கு , கோகரணம் , கோலக்கா , இழித்துரைக்கும் தன்மை இல்லாத பனங் காட்டூர் , பனையூர் , பயற்றூர் , பராய்த்துறை , கழுநீர்ப் பூக்களிலிருந்து தேன் வெளிப்படும் காளிங்கம் என்பன கணபதீச்சரத்தை உகந்தருளியிருக்கும் சிவபெருமானுடைய திருத்தலங்களாம் .
Go to top

தெய்வப் புனல் கெடில வீரட்ட(ம்)மும், செழுந்
தண் பிடவூரும், சென்று நின்று
பவ்வம் திரியும் பருப்பத(ம்)மும், பறியலூர்
  வீரட்டம், பாவநாசம்,
மவ்வம் திரையும் மணி முத்த(ம்)மும்,
 மறைக்காடும், வாய்மூர், வலஞ்சுழி(ய்)யும்,
கவ்வை வரிவண்டு பண்ணேபாடும்
 கழிப்பாலை-தம்முடைய காப்புக்களே.

6
கெடிலக் கரையிலுள்ள அதிகை வீரட்டம் , செழிப்பை உடைய குளிர்ந்த பிடவூர் , கடல் வெள்ளம் அணுகும் சீசைலம் , பறியலூர் வீரட்டம் , பாவநாசம் , இன்னிசை முழங்கும் மணிமுத்தம் , மறைக்காடு , வாய்மூர் , வலஞ்சுழி , ஆரவாரத்தை உடைய வண்டுகள் பண்பாடும் கழிப்பாலை என்பன சிவபெருமான் உகந்தருளியிருக்கும் திருத்தலங்களாம் .

தெண் நீர்ப்-புனல் கெடில வீரட்ட(ம்)மும்,
 தீக்காலிவல்லம், திரு வேட்டி(ய்)யும்,
உண் நீர் ஆர் ஏடகமும், ஊறல், அம்பர்,
  உறையூர், நறையூர், அரண நல்லூர்,
விண்ணார் விடையான் விளமர், வெண்ணி,
  மீயச்சூர், வீழிமிழலை, மிக்க
கண் ஆர் நுதலார் கரபுர(ம்)மும்-காபாலியார்
அவர்தம் காப்புக்களே.

7
அதிகை வீரட்டம் , சீர்காழி , வல்லம் , திருவேட்டி , நீர்வளம் மிக்க ஏடகம் , ஊறல் , அம்பர் , உறையூர் , நறையூர் , அரண நல்லூர் , வானத்திலும் உலவும் காளை வாகனம் உடைய சிவ பெருமான் உகக்கும் விளமர் , வெண்ணி , மீயச்சூர் , வீழிமிழலை , நெற்றிக்கண்ணனாம் சிவபெருமான் விரும்பும் கரபுரம் ஆகியவை மண்டை ஓட்டினை ஏந்தும் அப்பெருமான் உகந்தருளியுள்ள திருத்தலங்களாம் .

தெள்ளும் புனல் கெடில வீரட்ட(ம்)மும்,
  திண்டீச்சுரமும், திருப்புக(ல்)லூர்,
எள்ளும் படையான் இடைத்தான(ம்)மும்,
ஏயீச்சுரமும், நல் ஏமம், கூடல்,
கொள்ளும் இலயத்தார் கோடிகாவும், குரங்கணில்
 முட்டமும், குறும்பலாவும்,
கள் அருந்தத் தெள்ளியார் உள்கி ஏத்தும்
 காரோணம்-தம்முடைய காப்புக்களே.

8
பூதப்படையை உடையவரும் , கூத்தினை நிகழ்த்துபவரும் , ஆகிய பெருமானார் உகந்தருளியிருக்கும் திருத்தலங்கள் , அதிகை வீரட்டம் , திண்டீச்சரம் , புகலூர் , இடைத்தானம் , ஏயீச்சுரம் , ஏமம் , கூடல் , கோடிகா , குரங்கணில் முட்டம் , குறும்பலா , திருவடி ஞானம் பெறச் சத்திநிபாதம் பெற்றவர் தியானித்துத் துதிக்கும் நாகை குடந்தைக் காரோணங்கள் , என்பனவாகும் .

சீர் ஆர் புனல் கெடில வீரட்ட(ம்)மும்,
  திருக்காட்டுப்பள்ளி, திரு வெண்காடும்,
பாரார் பரவும் சீர்ப் பைஞ்ஞீலியும்,
  பந்தணைநல்லூரும், பாசூர், நல்லம்,
நீர் ஆர் நிறை வயல் சூழ் நின்றியூரும்,
 நெடுங்களமும், நெல்வெண்ணெய், நெல்வாயி(ல்)லும்,
கார் ஆர் கமழ் கொன்றைத்தாரார்க்கு 
என்றும்-கடவூரில் வீரட்டம்-காப்புக்களே.

9
அதிகை வீரட்டம் , காட்டுப்பள்ளி , வெண்காடு , உலகு புகழும் சிறப்பினை உடைய பைஞ்ஞீலி , பந்தணைநல்லூர் , பாசூர் , நல்லம் , வயல்சூழ்ந்த நின்றியூர் , நெடுங்களம் , நெல் வெண்ணெய் , நெல்வாயில் , கடவூர் வீரட்டம் என்பன கார் காலத்தில் மலரும் கொன்றை மலர் மாலையை அணிந்த சிவபெருமானுடைய திருத்தலங்களாம் .

சிந்தும் புனல் கெடில வீரட்ட(ம்)மும், திரு
வாஞ்சியமும், திரு நள்ளாறும்,
அம் தண்பொழில் புடை சூழ் அயோகந்தியும்,
ஆக்கூரும், ஆவூரும், ஆன்பட்டி(ய்)யும்,
எம்தம் பெருமாற்கு இடம் ஆவது(வ்)
 இடைச்சுரமும், எந்தை தலைச்சங்காடும்,
கந்தம் கமழும் கரவீர(ம்)மும், கடம்பூர்க்
கரக்கோயில்-காப்புக்களே.

10
அதிகை வீரட்டம் , வாஞ்சியம் , நள்ளாறு , தண்பொழில் சூழ் அயோகந்தி , ஆக்கூர் , ஆவூர் , ஆன்பட்டி , இடைச்சுரம் , தலைச்சங்காடு , நறுமணம் கமழும்கரவீரம் , சக்கரக் கோயிலை உடைய கடம்பூர் ஆகியன எங்கள் பெருமானுக்குத் திருத்தலங்களாம் .
Go to top

தேன் ஆர் புனல் கெடில வீரட்ட(ம்)மும், திருச்
செம்பொன்பள்ளி, திருப் பூவணமும்,
வானோர் வணங்கும் மணஞ்சேரி(ய்)யும்,
மதில் உஞ்சைமாகாளம், வாரணாசி,
ஏனோர்கள் ஏத்தும் வெகுளீச்சுரம், இலங்கு
  ஆர் பருப்பதத்தோடு, ஏண் ஆர் சோலைக்
கான் ஆர் மயில் ஆர் கருமாரி(ய்)யும் - 
கறைமிடற்றார் தம்முடைய காப்புக்களே.

11
அதிகை வீரட்டம் , செம்பொன்பள்ளி , பூவணம் , தேவரும் வணங்கும் மணஞ்சேரி , மதில்களை உடைய உஞ்சை மாகாளம் , வாரணாசி மற்றவர்களும் வழிபடும் வெகுளீச்சரம் , விளங்கும் சீசைலம் , பெருமையையுடைய சோலைகளிலே காட்டில் தங்கக் கூடிய மயில்கள் பொருந்தியிருக்கும் கருமாரி என்பன நீலகண்டப் பெருமானுடைய திருத்தலங்களாம் .

திரு நீர்ப்-புனல் கெடில வீரட்ட(ம்)மும், திரு
  அளப்பூர், தெற்கு ஏறு சித்தவடம்,
உரு நீர் வளம் பெருகு மா நிருப(ம்)மும் -
மயிலாப்பில் மன்னினார், மன்னி ஏத்தும்
பெருநீர் வளர்சடையான் பேணி நின்ற -
  பிரமபுரம், சுழியல், பெண்ணாகடம்
கருநீலவண்டு அரற்றும் காளத்தி(ய்)யும்,
 கயிலாயம்-தம்முடைய காப்புக்களே.

12
அதிகை வீரட்டம் , அளப்பூர் , அதிகைக்குத் தெற்கில் உள்ள சித்தவடம் , நீர் வளம் மிக்க மாநிருபம் , மயிலாப்பூர் , பிரமபுரம் , சுழியல் , பெண்ணாகடம் , நல்ல நீலநிறமான வண்டுகள் ஒலிக்கும் காளத்தி , கயிலாயம் என்பன அடியவர்களால் நிலையாகப் போற்றப்படும் கங்கை தங்கும் சடையை உடைய சிவபெருமான் உகந்தருளியிருக்கும் திருத்தலங்களாம் .

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருவதிகை வீரட்டானம்
1.046   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   குண்டைக் குறள் பூதம் குழும,
Tune - தக்கராகம்   (திருவதிகை வீரட்டானம் அதிகைநாதர் (எ) வீரட்டானேசுவரர் திருவதிகைநாயகி)
4.001   திருநாவுக்கரசர்   தேவாரம்   கூற்று ஆயின ஆறு விலக்ககிலீர்- கொடுமைபல
Tune - கொல்லி   (திருவதிகை வீரட்டானம் வீரட்டானேசுவரர் திருவதிகைநாயகி)
4.002   திருநாவுக்கரசர்   தேவாரம்   சுண்ணவெண் சந்தனச் சாந்தும், சுடர்த்
Tune - காந்தாரம்   (திருவதிகை வீரட்டானம் வீரட்டானேசுவரர் திருவதிகைநாயகி)
4.010   திருநாவுக்கரசர்   தேவாரம்   முளைக்கதிர் இளம் பிறை மூழ்க,
Tune - காந்தாரம்   (திருவதிகை வீரட்டானம் )
4.024   திருநாவுக்கரசர்   தேவாரம்   இரும்பு கொப்பளித்த யானை ஈர்
Tune - கொப்பளித்ததிருநேரிசை   (திருவதிகை வீரட்டானம் வீரட்டானேசுவரர் திருவதிகைநாயகி)
4.025   திருநாவுக்கரசர்   தேவாரம்   வெண் நிலா மதியம் தன்னை
Tune - திருநேரிசை   (திருவதிகை வீரட்டானம் வீரட்டானேசுவரர் திருவதிகைநாயகி)
4.026   திருநாவுக்கரசர்   தேவாரம்   நம்பனே! எங்கள் கோவே! நாதனே!
Tune - திருநேரிசை   (திருவதிகை வீரட்டானம் வீரட்டானேசுவரர் திருவதிகைநாயகி)
4.027   திருநாவுக்கரசர்   தேவாரம்   மடக்கினார்; புலியின்தோலை; மா மணி
Tune - திருநேரிசை   (திருவதிகை வீரட்டானம் வீரட்டானேசுவரர் திருவதிகைநாயகி)
4.028   திருநாவுக்கரசர்   தேவாரம்   முன்பு எலாம் இளைய காலம்
Tune - திருநேரிசை   (திருவதிகை வீரட்டானம் வீரட்டானேசுவரர் திருவதிகைநாயகி)
4.104   திருநாவுக்கரசர்   தேவாரம்   மாசு இல் ஒள்வாள் போல்
Tune - திருவிருத்தம்   (திருவதிகை வீரட்டானம் காயாரோகணேசுவரர் நீலாயதாட்சியம்மை)
5.053   திருநாவுக்கரசர்   தேவாரம்   கோணல் மா மதி சூடி,
Tune - திருக்குறுந்தொகை   (திருவதிகை வீரட்டானம் வீரட்டானேசுவரர் திருவதிகைநாயகி)
5.054   திருநாவுக்கரசர்   தேவாரம்   எட்டு நாள்மலர் கொண்டு, அவன்
Tune - திருக்குறுந்தொகை   (திருவதிகை வீரட்டானம் வீரட்டானேசுவரர் திருவதிகைநாயகி)
6.003   திருநாவுக்கரசர்   தேவாரம்   வெறி விரவு கூவிளநல்-தொங்கலானை, வீரட்டத்தானை,
Tune - ஏழைத்திருத்தாண்டகம்   (திருவதிகை வீரட்டானம் )
6.004   திருநாவுக்கரசர்   தேவாரம்   சந்திரனை மா கங்கைத் திரையால்
Tune - அடையாளத்திருத்தாண்டகம்   (திருவதிகை வீரட்டானம் வீரட்டானேசுவரர் திருவதிகைநாயகி)
6.005   திருநாவுக்கரசர்   தேவாரம்   எல்லாம் சிவன் என்ன நின்றாய்,
Tune - போற்றித்திருத்தாண்டகம்   (திருவதிகை வீரட்டானம் )
6.006   திருநாவுக்கரசர்   தேவாரம்   அரவு அணையான் சிந்தித்து அரற்றும்(ம்)
Tune - குறிஞ்சி   (திருவதிகை வீரட்டானம் வீரட்டானேசுவரர் திருவதிகைநாயகி)
6.007   திருநாவுக்கரசர்   தேவாரம்   செல்வப் புனல் கெடில வீரட்ட(ம்)மும்,
Tune - காப்புத்திருத்தாண்டகம்   (திருவதிகை வீரட்டானம் )
7.038   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   தம்மானை அறியாத சாதியார் உளரே?
Tune - கொல்லிக்கௌவாணம்   (திருவதிகை வீரட்டானம் வீரட்டானேசுவரர் திருவதிகைநாயகி)
     
send corrections and suggestions to admin-at-sivaya.org

This page was last modified on Sun, 01 Mar 2026 07:27:15 +0000