| சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Hebrew
Korean
Easy version Classic version
- Hide Meaning https://www.youtube.com/watch?v=mriLYunU1fc Add audio link
5.014
திருநாவுக்கரசர்
தேவாரம்
திருவிடைமருதூர் - திருக்குறுந்தொகை அருள்தரு நலமுலைநாயகியம்மை உடனுறை அருள்மிகு மருதீசர் திருவடிகள் போற்றி
பாசம் ஒன்று இலராய், பலபத்தர்கள்
வாசம் நாள்மலர் கொண்டு அடி வைகலும்,
ஈசன் எம்பெருமான் இடைமருதினில்
பூசம், நாம் புகுதும், புனல் ஆடவே.
1
பல அன்பர்கள் உலக பாசங்கள் ஒன்றும் இல்லாதவராய் மணமிக்க புதுமலர்கள் கொண்டு திருஇடைமருதில் வீற்றிருக்கும் ஈசன் எம்பெருமான் திருவடியை வழிபட்டு வைகுதலைக் கண்டு , புனலாட யாமும் பூசத்திருநாளில் அங்குப் புகுந்து வழிபடுவோம் .
மறையின் நாள்மலர் கொண்டு அடி வானவர்-
முறையினால் முனிகள் வழிபாடு செய்
இறைவன், எம்பெருமான், இடைமருதினில்
உறையும் ஈசனை, உள்கும், என் உள்ளமே.
2
வானவர்களும் முனிவர்களும் மறையின் முறையினால் புதிய மலர்கள் கொண்டு வழிபாடு செய்கின்ற இறைவனும் , எம்பெருமானுமாகிய இடைமருதூரில் உறைகின்ற ஈசனை என் உள்ளம் உள்கும் .
கொன்றைமாலையும் கூவிளம் மத்தமும்
சென்று சேரத் திகழ்சடை வைத்தவன்,
என்றும் எந்தைபிரான், இடைமருதினை
நன்று கைதொழுவார் வினை நாசமே.
3
கொன்றை மாலையும் , கூவிளமும் , ஊமத்தமலரும் ஒருங்கு சென்று சேரும்படியாகத் திகழ்கின்ற சடையில் வைத்தவனாகிய இடைமருதூர் உறையும் எந்தையினை என்றும் நன்றுறக் கைதொழுவார் வினைகள் நாசமாகும் .
இம்மை வானவர் செல்வம் விளைத்திடும்,
அம்மையே பிறவித்துயர் நீத்திடும்,
எம்மை ஆளும், இடைமருதன் கழல்
செம்மையே தொழுவார் வினை சிந்துமே.
4
எம்மையாளும் இடைமருதூர் உறையும் இறைவன் கழலைச் செம்மையாகத் தொழுவார் வினை சிந்தும் . அத்தொழுகை இம்மையில் வானவர் செல்வம் விளைத்திடும் ; அப்பிறப்பில் பிறவித் துயர் இல்லாவகையில் நீங்கும் .
வண்டு அணைந்தன வன்னியும் கொன்றையும்
கொண்டு அணிந்த சடைமுடிக் கூத்தனார்,
எண் திசைக்கும் இடைமருதா! என,
விண்டுபோய் அறும், மேலைவினைகளே.
5
வண்டுகள் அணைந்த வன்னியும் கொன்றையும் கொண்டு அணிந்த சடாமுடியை உடைய கூத்தனார் எனப் படர்க் கையிற் பரவியும் எண்டிசைக்கும் கதியாகிய இடைமருதா என முன்னிலைப் படுத்திப் புகழ்ந்தும் வழிபட மேலை வினைகள் யாவும் நம்மைவிட்டு விலகிக்கெடும் .
Go to top
ஏறு அது ஏறும் இடைமருது ஈசனார்,
கூறுவார் வினை தீர்க்கும் குழகனார்,
ஆறு செஞ்சடை வைத்த அழகனார்க்கு
ஊறி ஊறி உருகும், என் உள்ளமே.
6
விடையினை உகந்தேறும் இறைவரும் , தன்னைக் கூறுவார் வினைகளைத் தீர்க்கும் குழகரும் , ஆறு செஞ்சடையின்கண் வைத்த அழகருமாகிய இடைமருதூர் எம்பிரானையெண்ணி என் உள்ளம் ஊறி ஊறி உருகுகின்றது .
விண் உளாரும் விரும்பப்படுபவர்;
மண் உளாரும் மதிக்கப்படுபவர்;
எண்ணினார், பொழில் சூழ் இடை மருதினை
நண்ணினாரை நண்ணா, வினை; நாசமே.
7
விண்ணிலுள்ள தேவரான் விரும்பப்படுபவரும் , மண்ணினுள்ள மனிதரான் மதிக்கப்படுபவரும் ஆகிய இறைவர்க்குரிய பொழில் சூழ்ந்த திரு இடைமருதூரை எண்ணி நண்ணியவரை வினையினால் வரும் கேடுகள் நண்ணமாட்டா .
வெந்த வெண் பொடிப் பூசும் விகிர்தனார்,
கந்தமாலைகள் சூடும் கருத்தனார்,
எந்தை, என் இடை மருதினில் ஈசனைச்
சிந்தையால் நினைவார் வினை தேயுமே.
8
திருநீறு பூசும் விகிர்தரும் , நறுமண மாலைகள் சூடும் தலைவரும் , என் தந்தைபோல்வாருமாகிய திருவிடைமருதூர் ஈசனைச் சிந்தையால் நினைப்பவர்களது வினைகள் தேயும் .
வேதம் ஓதும் விரிசடை அண்ணலார்,
பூதம் பாட நின்று ஆடும் புனிதனார்
ஏதம் தீர்க்கும் இடைமருதா! என்று-
பாதம் ஏத்தப் பறையும், நம் பாவமே.
9
தேவர்கள் ஓதும் விரிசடை அண்ணலாரும் பூதங்கள் பாடநின்று ஆடும் புனிதருமாகியவரை ஏதந்தீர்க்கும் இடைமருதூரில் எழுந்தருளியிருக்கும் இறைவா ! என்று சொல்லிப் பாதங்கள் ஏத்தினால் நம்பாவங்கள் நம்மை விட்டு நீங்கும் .
கனியினும், கட்டி பட்ட கரும்பினும்,
பனிமலர்க்குழல் பாவை நல்லாரினும்,
தனி முடீ கவித்து ஆளும் அரசினும்,
இனியன் தன் அடைந்தார்க்கு, இடைமருதனே.
10
இடைமருதூரில் எழுந்தருளியிருக்கும் ஈசன் , தன்னையடைந்த அன்பர்களுக்குக் கனி , கட்டிபட்ட கரும்பு , குளிர் மலரணிந்த குழலையுடைய பாவை போன்ற பெண்கள் , தனித்து முடிகவித்து நின்று ஆளும் அரசு ஆகிய அனைத்தினும் மிக்க இனிமை உடையவன் . தன்னை அடைந்த மெய்ஞ்ஞானிகளுக்கு அவர்தம் உணர்வு புறத்தே செல்வுழி இப்பொருள்களிலெல்லாம் பரானந்த போகமாய் விளைவன் என்றலும் பொருத்தம் .
Go to top
முற்றிலா மதி சூடும் முதல்வனார்;
ஒற்றினார், மலையால் அரக்கன் முடி;
எற்றின் ஆர் கொடியார்; இடைமருதினைப்
பற்றினாரைப் பற்றா, வினைப் பாவமே.
11
இளம்பிறை சூடும் முதல்வரும் , மலையால் அரக்கன் முடியை விரலைச் சிறிது ஊன்றி ஒற்றியவரும் , இடபக் கொடியை உடையவரும் ஆகிய பெருமான் எழுந்தருளியுள்ள இடை மருதூரினைப் பற்றியவர்களை வினைகளும் அவற்றான் வரும் இடர்களும் பற்றமாட்டா .
Thevaaram Link
- Shaivam Link
Other song(s) from this location: திருவிடைமருதூர்
1.032
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
ஓடே கலன்; உண்பதும் ஊர்
Tune - தக்கராகம்
(திருவிடைமருதூர் மருதீசர் நலமுலைநாயகியம்மை)
1.095
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
தோடு ஓர் காதினன்; பாடு
Tune - குறிஞ்சி
(திருவிடைமருதூர் மருதீசர் நலமுலைநாயகியம்மை)
1.110
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
மருந்து அவன், வானவர் தானவர்க்கும் பெருந்தகை,
Tune - வியாழக்குறிஞ்சி
(திருவிடைமருதூர் மருதீசர் நலமுலைநாயகியம்மை)
1.121
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
நடை மரு திரிபுரம் எரியுண
Tune - வியாழக்குறிஞ்சி
(திருவிடைமருதூர் மருதீசர் நலமுலைநாயகியம்மை)
1.122
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
விரிதரு புலிஉரி விரவிய அரையினர், திரிதரும்
Tune - வியாழக்குறிஞ்சி
(திருவிடைமருதூர் மருதீசர் நலமுலைநாயகியம்மை)
2.056
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பொங்கு நூல் மார்பினீர்! பூதப்படையினீர்!
Tune - காந்தாரம்
(திருவிடைமருதூர் மருதீசர் நலமுலைநாயகியம்மை)
4.035
திருநாவுக்கரசர்
தேவாரம்
காடு உடைச் சுடலை நீற்றார்;
Tune - திருநேரிசை
(திருவிடைமருதூர் மருதீசர் நலமுலைநாயகியம்மை)
5.014
திருநாவுக்கரசர்
தேவாரம்
பாசம் ஒன்று இலராய், பலபத்தர்கள்
Tune - திருக்குறுந்தொகை
(திருவிடைமருதூர் மருதீசர் நலமுலைநாயகியம்மை)
5.015
திருநாவுக்கரசர்
தேவாரம்
பறையின் ஓசையும் பாடலின் ஓசையும்
Tune - திருக்குறுந்தொகை
(திருவிடைமருதூர் மருதீசர் நலமுலைநாயகியம்மை)
6.016
திருநாவுக்கரசர்
தேவாரம்
சூலப்படை உடையார் தாமே போலும்;
Tune - திருத்தாண்டகம்
(திருவிடைமருதூர் மருதீசர் நலமுலைநாயகியம்மை)
6.017
திருநாவுக்கரசர்
தேவாரம்
ஆறு சடைக்கு அணிவர்; அங்கைத்
Tune - திருத்தாண்டகம்
(திருவிடைமருதூர் மருதீசர் நலமுலைநாயகியம்மை)
7.060
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
கழுதை குங்குமம் தான் சுமந்து
Tune - தக்கேசி
(திருவிடைமருதூர் மருதீசுவரர் நலமுலைநாயகியம்மை)
9.017
கருவூர்த் தேவர்
திருவிசைப்பா
கருவூர்த் தேவர் - திருவிடைமருதூர்
Tune -
(திருவிடைமருதூர் )
11.028
பட்டினத்துப் பிள்ளையார்
திருவிடைமருதூர் மும்மணிக்கோவை
திருவிடைமருதூர் மும்மணிக்கோவை
Tune -
(திருவிடைமருதூர் )