| சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Hebrew
Korean
Easy version Classic version
- Hide Meaning https://www.youtube.com/watch?v=fhSWH2OG79Q Add audio link
5.012
திருநாவுக்கரசர்
தேவாரம்
திருவீழிமிழலை - திருக்குறுந்தொகை அருள்தரு சுந்தரகுசாம்பிகை உடனுறை அருள்மிகு வீழியழகர் திருவடிகள் போற்றி
நாயன்மார்கள் இருவரும் இந்த தலத்தில் தங்கிய போது வறட்சி ஏற்பட்டது. இறைவனின் அருளால் தினமும் ஒரு பொற்காசு பெற்ற நாயன்மார்கள் தங்களைச் சார்ந்த அடியார்களுக்கும் ஊரில் உள்ள மக்களுக்கும் நாள்தோறும் அமுது படைத்தனர். மேலும் பஞ்சம் நீங்கிய பின்னரும் பல நாட்கள் இங்கே தங்கி பல பதிகங்கள் பாடினார். ஆனால் நமக்கு அப்பர் பிரான் பாடிய எட்டு பதிகங்களே கிடைத்துள்ளன.
கரைந்து கை தொழுவாரையும் காதலன்;
வரைந்து வைது எழுவாரையும் வாடலன்;
நிரந்த பாரிடத்தோடு அவர் நித்தலும்
விரைந்து போவது, வீழிமிழலைக்கே.
1
மனங்கரைந்து கைதொழுவாரையும் காதலித்து அருள்வன் ; தன்னை விலக்கி இகழாநின்று எழும் புறச்சமயத்தாரையும் வாடச்செய்யான் . இத்தகைய அவன் வரிசையாகிய பூதகணங்களோடு நித்தலும் விரைந்து போவது வீழிமிழலைத் தலத்திற்கே . ( வேண்டுதல் வேண்டாமையிலானாகிய முதல்வன் , அந்தணர் வழிபடுதலால் அவர்க்கு அருள்புரிய விரைந்து தோன்றுவன் என்றபடி .)
ஏற்று வெல் கொடி ஈசன், தன் ஆதிரை,
நாற்றம் சூடுவர்; நன்நறும் திங்களார்
நீற்றுச் சந்தன வெள்ளை விரவலார்,
வேற்றுக் கோலம் கொள் வீழிமிழலையே.
2
பிற கொடிகளை வென்று மேம்பட்ட ஆனேற்றுக் கொடியையுடைய ஈசன் தனக்குரிய ஆதிரை நாளில் , தான் வேறு வேறு கோலங் கொண்டு காட்சியளித்தற்கு இடமாகிய திருவீழிமிழலையில் தாம் சந்தனம் எனக்கொண்டு பூசிவந்த வெள்ளை நீற்றைக் கொள்ளாது மணமுள்ள பொருள்களைச் சூடிக்கொள்வர் ; மிக நல்லமதியைச் சூடுவோராகவும் உளர் . சந்தன வெள்ளை நீற்றை விரவல் உடையராய் ( அணிந்து ) நாற்றம் சூடுவர் ( நறுமலர் அணிவர் ) என்றுரைப்பினும் அமையும் .
புனை பொன் சூலத்தன்; போர் விடை ஊர்தியான்;
வினை வெல் நாகத்தன்; வெண் மழுவாளினான்;
நினைய நின்றவன், ஈசனையே எனா;-
வினை இலார் தொழும் வீழிமிழலையே.
3
சூலம் உடையவனும் , விடை ஊர்தியனும் , வினைகளை வென்றவனும் நாகத்தைப் பூண்டவனும் , வெண்மழு வாள் உடையவனும் , அடியவர்கள் ஈசனே என்று நினைய நின்றவனும் , இருவினையற்ற மேலோர் தொழும் வீழிமிழலை இறைவனே .
மாடத்து ஆடும் மனத்து உடன் வைத்தவர்,
கோடத்தார், குருக்கேத்திரத்தார் பலர்,
பாடத்தார், பழிப்பார் பழிப்பு இல்லது ஓர்
வேடத்தார், தொழும் வீழிமிழலையே.
4
முதல்வனை மாடத்தும் ( விமானத்தும் ), ஆடும் மனத்தும் உடன் வைத்தவராகிய திருமாலும் , வேத கோஷம் செய்யும் பிரமனும் , குருகே?ஷத்திரத்தார் பலரும் ( பாண்டவர் ), வேதத்தின் மூல பாடம் பேணும் அந்தணர்களும் , பழிப்பார் கூறும் பழிப்பு அல்லதாகிய திருவேடம் பூண்ட அடியார்களும் , தொழும் ( பதி ) திருவீழி மிழலையே .
எடுத்த வெல் கொடி ஏறு உடையான் தமர்
உடுப்பர், கோவணம்; உண்பது பிச்சையே
கெடுப்பது ஆவது, கீழ் நின்ற வல்வினை;
விடுத்துப் போவது, வீழிமிழலைக்கே.
5
உயர்த்துப் பிடித்த இடபக்கொடியையுடைய சிவ பிரானின் அடியவர்கள் , கோவணமே உடுப்பது ; பிச்சை உணவே உண்பது ; கீழ்நின்ற வல்வினைகளையே கெடுப்பது ; பந்த பாசங்களை விடுத்துப் போவது வீழிமிழலைக்கே .
Go to top
குழலை யாழ் மொழியார் இசை வேட்கையால்
உழலை யாக்கையை ஊணும் உணர்வு இலீர்!
தழலை நீர் மடிக் கொள்ளன்மின்! சாற்றினோம்:
மிழலையான் அடி சார, விண் ஆள்வரே!
6
குழலையும் , யாழையும் போன்ற மொழியாரை வேட்கையினால் இசையும் , உழலும் உடலைத் தீநெறியின்கண் ஊன்றும் நல்லுணர்வற்றவர்களே ! நெருப்பை நீர் மடியின்கண் கொண்டு கெடாதீர் ; பன்முறையினும் சாற்றினோம் , மிழலையான் திருவடி சார விண்ணாளும் திறம் பெறலாம் .
தீரன்; தீத்திரளன்; சடைத் தங்கிய
நீரன்; ஆடிய நீற்றன்; வண்டு ஆர் கொன்றைத்
தாரன்; மாலையன்; தண் நறுங்கண்ணியன்;
வீரன் வீழிமிழலை விகிர்தனே.
7
அறிஞனும் , தீத்திரளைக் கையிற்கொண்டாடுபவனும் , சடைத் தங்கிய கங்கையனும் , ஆடிய திருநீற்றனும் , வண்டார்ந்த கொன்றைத்தாரும் , குளிர்ந்து மணக்கும் கண்ணியும் மாலையும் உடையவனும் , புலன்களை வென்று விளங்கும் வீரனும் வீழிமிழலை யிலுள்ள விகிர்தனே .
எரியினார்; இறையார்; இடுகாட்டு இடை
நரியினார்; பரியா மகிழ்கின்றது ஓர்
பெரியனார்; தம் பிறப்பொடு சாதலை
விரியினார் தொழும் வீழிமிழலையே!
8
எரியைக்கையால் ஏந்தியவரும் , யாங்கணும் தங்கி நிற்போரும் , நரிகளைப் பரிகளாகக் கொண்டு இடுகாட்டிடை ஆடுதலை மகிழ்கின்ற பெரியரும் ( மகாதேவனும் ) தங்கும் இடம் பிறப்போடு கூடிய இறப்பை அகல நினைப்பார் தொழும் தலமாகிய வீழிமிழலை ஆகும் .
நீண்ட சூழ் சடைமேல் ஓர் நிலா மதி;
காண்டு, சேவடிமேல் ஓர் கனைகழல்;
வேண்டுவார் அவர் வீதி புகுந்திலர்;
மீண்டும் போவது, வீழிமிழலைக்கே.
9
நீண்டு சூழ்ந்த சடையின்மேல் ஓர் நிலாமதியும் , சேவடியின்மேல் கூப்பிடுதூரம் ஒலிக்கும் ஓர் கழலும் கொண்டு , வேண்டுவாராகிய யாம் உள்ள வீதியுட் புகாது வீழிமிழலைக்கே மீண்டு போவர் ; இதுவோ அவர்தம் அருள் !
பாலையாழொடு செவ்வழி பண் கொள
மாலை வானவர் வந்து வழிபடும்,
ஆலை ஆர் அழல் அந்தணர் ஆகுதி
வேலையார் தொழும், வீழிமிழலையே!
10
மாலைக்காலத்து வானவர் வந்து பாலைப் பண்ணும் செவ்வழிப் பண்ணும் கலந்த பாடல்களைப்பாடி வழிபடும் இடம் அந்த மாலைக்காலத்தே அந்தணர் நிறைந்த நெருப்பை வளர்த்து ஆகுதி செய்யும் தொழிலராய் வழிபடும் திருவீழிமிழலையே ஆம் . மாலைக்காலத்தே சுரர்பாடப்பூசுரர் வேட்டு வழிபடும் இடம் என்பது கருத்து .
Go to top
மழலை ஏற்று மணாளன் திருமலை
சுழல ஆர்த்து எடுத்தான் முடிதோள் இறக்
கழல் கொள் காலில்-திருவிரல் ஊன்றலும்,
மிழலையான் அடி வாழ்க! என, விட்டதே.
11
இளமையான ஆனேறுடைய உமைமணாளனது திருக்கயிலாயமலையைச் சுழல ஆர்த்து எடுத்த இராவணனது முடியும் தோளும் இறும்படியாக அவன் தன் கழலணிந்த திருவடியில் உள்ள ஒரு திருவிரலால் ஊன்றுதலும் , அவ்வரக்கன் திருவீழிமிழலையானடி வாழ்க என்று வாய்விட்டரற்றினன் . அரற்றவே உமைமணாளன் அவனை மேலும் ஒறுக்காமல் விடுவித்தனன் .
Thevaaram Link
- Shaivam Link
Other song(s) from this location: திருவீழிமிழலை
1.004
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
மைம் மரு பூங்குழல் கற்றை
Tune - நட்டபாடை
(திருவீழிமிழலை பிரமபுரீசர் வீழியழகர் திருநிலைநாயகி, சுந்தரகுசாம்பிகை)
1.011
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
சடை ஆர் புனல் உடையான்,
Tune - நட்டபாடை
(திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
1.020
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
தட நிலவிய மலை நிறுவி,
Tune - நட்டபாடை
(திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
1.035
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
அரை ஆர் விரி கோவண
Tune - தக்கராகம்
(திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
1.082
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
இரும் பொன்மலை வில்லா, எரி
Tune - குறிஞ்சி
(திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
1.092
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
வாசி தீரவே, காசு நல்குவீர்! மாசு
Tune - குறிஞ்சி
(திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
1.124
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
அலர்மகள் மலிதர, அவனியில் நிகழ்பவர் மலர்
Tune - வியாழக்குறிஞ்சி
(திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
1.132
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
ஏர் இசையும் வட-ஆலின்கீழ் இருந்து,
Tune - மேகராகக்குறிஞ்சி
(திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
3.009
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கேள்வியர், நாள்தொறும் ஓது நல்வேதத்தர்
Tune - காந்தாரபஞ்சமம்
(திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
3.080
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
சீர் மருவு தேசினொடு தேசம்
Tune - சாதாரி
(திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
3.085
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
மட்டு ஒளி விரிதரு மலர்
Tune - சாதாரி
(திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
3.098
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
வெண்மதி தவழ் மதில் மிழலை
Tune - சாதாரி
(திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
3.111
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
வேலின் நேர்தரு கண்ணினாள் உமை
Tune - பழம்பஞ்சுரம்
(திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
3.116
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
திரு இயமகம் பதிகம், துன்று கொன்றை நம் சடையதே;
Tune - பழம்பஞ்சுரம்
(திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
3.119
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
புள்ளித்தோல் ஆடை; பூண்பது நாகம்;
Tune - புறநீர்மை
(திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
4.064
திருநாவுக்கரசர்
தேவாரம்
பூதத்தின் படையர்; பாம்பின் பூணினர்;
Tune - திருநேரிசை
(திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
4.095
திருநாவுக்கரசர்
தேவாரம்
வான் சொட்டச்சொட்ட நின்று அட்டும்
Tune - திருவிருத்தம்
(திருவீழிமிழலை தோன்றாத்துணையீசுவரர் தோகையம்பிகையம்மை)
5.012
திருநாவுக்கரசர்
தேவாரம்
கரைந்து கை தொழுவாரையும் காதலன்;
Tune - திருக்குறுந்தொகை
(திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
5.013
திருநாவுக்கரசர்
தேவாரம்
என் பொனே! இமையோர் தொழு
Tune - திருக்குறுந்தொகை
(திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
6.050
திருநாவுக்கரசர்
தேவாரம்
போர் ஆனை ஈர் உரிவைப்
Tune - திருத்தாண்டகம்
(திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
6.051
திருநாவுக்கரசர்
தேவாரம்
கயிலாய மலை உள்ளார்; காரோணத்தார்;
Tune - திருத்தாண்டகம்
(திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
6.052
திருநாவுக்கரசர்
தேவாரம்
கண் அவன் காண்; கண்
Tune - திருத்தாண்டகம்
(திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
6.053
திருநாவுக்கரசர்
தேவாரம்
மான் ஏறு கரம் உடைய
Tune - திருத்தாண்டகம்
(திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
7.088
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
நம்பினார்க்கு அருள் செய்யும் அந்தணர்
Tune - சீகாமரம்
(திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகையம்மை)
9.005
சேந்தனார்
திருவிசைப்பா
சேந்தனார் - திருவீழிமிழலை
Tune -
(திருவீழிமிழலை )