| சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Hebrew
Korean
Easy version Classic version
- Hide Meaning https://www.youtube.com/watch?v=9vmj1OVCS1E Add audio link
1.082
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
திருவீழிமிழலை - குறிஞ்சி தீரசங்கராபரணம் குறிஞ்சி ராகத்தில் திருமுறை அருள்தரு சுந்தரகுசாம்பிகை உடனுறை அருள்மிகு வீழியழகர் திருவடிகள் போற்றி
இரும் பொன்மலை வில்லா, எரி அம்பா, நாணில்,-
திரிந்த புரம் மூன்றும் செற்றான் உறை கோயில்
தெரிந்த அடியார்கள் சென்ற திசைதோறும்
விரும்பி எதிர்கொள்வார் வீழி மிழலையே.
1
பெரிய பொன்மயமான மேருமலையை வில்லாக வளைத்து அனலை அம்பாக அவ்வில்நாணில் பூட்டி வானில் திரிந்து கொண்டிருந்த முப்புரங்களையும் அழித்தவனாகிய சிவபிரான் உறையும் கோயில் கற்றுணர்ந்த அடியவர்கள் செல்லும் திசைகளில் எல்லாம் விரும்பி அவர்களை எதிர்கொள்ளும் மக்கள் வாழும் திருவீழிமிழலை ஆகும்.
வாதைப்படுகின்ற வானோர் துயர் தீர,
ஓதக்கடல் நஞ்சை உண்டான் உறை கோயில்
கீதத்து இசையோடும் கேள்விக் கிடையோடும்
வேதத்து ஒலி ஓவா வீழி மிழலையே.
2
துன்புறும் தேவர்களின் துயர்தீர வெள்ள நீரொடு கூடிய கடலின்கண் எழுந்த நஞ்சினை உண்ட சிவபிரான் உறையும் கோயில் இசையமைப்போடு கூடியதும் சுருதி என்பதற்கேற்ப ஒருவர் ஓதக்கேட்டு ஓதப்பட்டு வருவதும் ஆகிய வேதபாராயணத்தின் ஒலி நீங்காமல் ஒலிக்கின்ற திருவீழிமிழலை ஆகும்.
பயிலும் மறையாளன் தலையில் பலி கொண்டு,
துயிலும் பொழுது ஆடும் சோதி உறை கோயில்
மயிலும் மடமானும் மதியும் இள வேயும்
வெயிலும் பொலி மாதர் வீழி மிழலையே.
3
வேதங்களை ஓதிய பிரமனின் தலையோட்டில் பலியேற்று அனைவரும் துயிலும் நள்ளிரவில் ஆடும் ஒளிவடிவினனாகிய சிவபிரான் உறையும் கோயில் மயில் மடப்பம் பொருந்தியமான் மதி இள மூங்கில் வெயில் ஆகியனவற்றைப் போன்று கண்ணுக்கு இனிய மென்மையும் மருளும் விழி முகம் தோள்கள் உடல்ஒளி இவற்றால் பொலியும் மகளிர் வாழும் திருவீழிமிழலையாகும்.
இரவன் பகலோனும் எச்சத்து இமையோரை
நிரவிட்டு, அருள் செய்த நிமலன் உறை கோயில்
குரவம், சுரபுன்னை, குளிர் கோங்கு, இள வேங்கை,
விரவும் பொழில் அம் தண் வீழி மிழலையே.
4
தக்கன் செய்தயாகத்தில் சந்திரன் சூரியன் ஏனைய தேவர்கள் ஆகியோரை வீரபத்திரரை அனுப்பித் தண்டம் செய்து செம்மைப்படுத்தி அருள்செய்த சிவபிரான் உறையும் கோயில் குரா சுரபுன்னை குளிர்ந்த கோங்கு இளவேங்கை ஆகியன விரவிய பொழில்கள் சூழ்ந்த அழகிய தட்பமுடைய வீழிமிழலையாகும்.
கண்ணின் கனலாலே காமன் பொடி ஆக,
பெண்ணுக்கு அருள்செய்த பெருமான் உறை கோயில்
மண்ணில் பெரு வேள்வி வளர் தீப்புகை நாளும்
விண்ணில் புயல் காட்டும் வீழி மிழலையே.
5
நெற்றி விழியில் தோன்றிய கனலால் காமனைப் பொடிசெய்து இரதிதேவிவேண்ட அவள் கண்களுக்கு மட்டும் புலனாகுமாறு அருள் செய்த பெருமான் உறையும் கோயில் மண்ணில் செய்யும் பெரிய வேள்விகளில் வளரும் தீப்புகை நாள்தோறும் விண் ணகத்தே மழைமேகங்களை உருவாக்கும் திருவீழிமிழலையாகும்.
Go to top
மால் ஆயிரம் கொண்டு மலர்க்கண் இட, ஆழி
ஏலா வலயத்தோடு ஈந்தான் உறை கோயில்
சேல் ஆகிய பொய்கைச் செழு நீர்க் கமலங்கள்
மேலால் எரி காட்டும் வீழி மிழலையே.
6
திருமால் ஆயிரம் தாமரைப் பூக்களைக் கொண்டு அருச்சித்தபோது ஒன்று குறையக்கண்டு தன் மலர் போன்ற கண்ணை இடந்து சாத்திய அளவில் பிறர் சுமக்கலாற்றாத சக்கராயுதம் ஆகிய ஆழியை அவனுக்கு ஈந்தருளிய பெருமான் உறையும் கோயில் சேல்மீன்கள் பொருந்திய செழுநீர்ப் பொய்கைகளில் முளைத்த தாமரை மலர்கள் தீப்பிழப்பு போலக் காணப்படும் திருவீழிமிழலையாகும்.
மதியால் வழிபட்டான் வாழ்நாள் கொடுபோவான்,
கொதியா வரு கூற்றைக் குமைத்தான் உறை கோயில்
நெதியால் மிகு செல்வர் நித்தம் நியமங்கள்
விதியால் நிற்கின்றார் வீழி மிழலையே.
7
மெய்யறிவால் தன்னை வழிபட்ட மார்க்கண்டேயனின் வாழ்நாளைக் கையகப்படுத்தச் சினந்து வந்த கூற்றுவனை அழித்த சிவபிரானது கோயில் நிதியால் மிகுந்த செல்வர்கள் நாள்தோறும் செய்யும் நியமங்களை விதிப்படி செய்து வாழும் திருவீழி மிழலையாகும்.
எடுத்தான் தருக்கினை இழித்தான், விரல் ஊன்றி;
கொடுத்தான், வாள்; ஆளாக் கொண்டான்; உறை கோயில்
படித்தார், மறை வேள்வி பயின்றார், பாவத்தை
விடுத்தார், மிக வாழும் வீழி மிழலையே.
8
கயிலை மலையைப் பெயர்த்தெடுத்த இராவணனின் செருக்கினைத் தன் கால்விரலை ஊன்றி அழித்தவனும் பின் அவன் பிழையுணர்ந்து வேண்ட வாள் முதலியன கொடுத்து அவனை அடிமையாக ஏற்றுக் கொண்டருளியவனுமாகிய சிவபிரான் உறையும் கோயில் வேதங்களைப் பயின்றவர்களும் வேள்விகள் பலவற்றைச் செய்பவர்களும் பாவங்களை விட்டவர்களுமாகிய அந்தணர்கள் மிகுதியாக வாழும் திருவீழிமிழலையாகும்.
கிடந்தான் இருந்தானும், கீழ் மேல் காணாது,
தொடர்ந்து ஆங்கு அவர் ஏத்தச் சுடர் ஆயவன் கோயில்
படம் தாங்கு அரவு அல்குல், பவளத்துவர் வாய், மேல்
விடம் தாங்கிய கண்ணார் வீழி மிழலையே.
9
பாம்பணையில் துயிலும் திருமாலும் தாமரை மலரில் உறையும் நான்முகனும் அடிமுடிகளைக் காணாது திரும்பித் தொடர்ந்து ஏத்த அழலுருவாய் நின்ற சிவபிரானது கோயில். அரவின் படம் போன்ற அல்குலையும் பவளம் போன்ற வாயினையும் விடம் பொருந்திய கண்களையும் உடைய மகளிர் மிகுதியாக வாழும் திருவீழிமிழலையாகும்.
சிக்கு ஆர் துவர் ஆடை, சிறு தட்டு, உடையாரும்
நக்கு ஆங்கு அலர் தூற்றும் நம்பான் உறை கோயில்
தக்கார், மறை வேள்வித் தலை ஆய் உலகுக்கு
மிக்கார் அவர் வாழும் வீழி மிழலையே.
10
சிக்குப் பிடித்த காவி உடையையும் சிறிய ஒலைத் தடுக்குக்களையும் உடைய புத்தரும் சமணர்களும் ஏளனம் செய்து சிரித்துப் பழிதூற்றும் நம் இறைவர் தங்கும் கோயில் தக்கவராய் வேதவேள்விகள் செய்வதில் தலையாயவராய் உலகில் மேம்பட்டவராய் விளங்கும் மறையவர் வாழும் வீழிமிழலை ஆகும்.
Go to top
மேல் நின்று இழி கோயில் வீழி மிழலையுள்
ஏனத்து எயிற்றானை, எழில் ஆர் பொழில் காழி
ஞானத்து உயர்கின்ற நலம் கொள் சம்பந்தன்
வாய்மைத்து இவை சொல்ல, வல்லோர் நல்லோரே.
11
விண்ணிலிருந்து இழிந்து வந்துள்ள வீழிமிழலைக் கோயிலில் பன்றிப்பல் சூடியவனாய் எழுந்தருளி விளங்கும் சிவபிரானை அழகிய பொழில்கள் சூழ்ந்த காழிப்பதியில் தோன்றிய ஞானத்தால் மேம்பட்ட அழகிய ஞானசம்பந்தன் உண்மையை உடையவனாய் ஓதிய இப்பதிகத்தைச் சொல்ல வல்லவர் நல்லவர் ஆவர்.
Thevaaram Link
- Shaivam Link
Other song(s) from this location: திருவீழிமிழலை
1.004
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
மைம் மரு பூங்குழல் கற்றை
Tune - நட்டபாடை
(திருவீழிமிழலை பிரமபுரீசர் வீழியழகர் திருநிலைநாயகி, சுந்தரகுசாம்பிகை)
1.011
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
சடை ஆர் புனல் உடையான்,
Tune - நட்டபாடை
(திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
1.020
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
தட நிலவிய மலை நிறுவி,
Tune - நட்டபாடை
(திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
1.035
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
அரை ஆர் விரி கோவண
Tune - தக்கராகம்
(திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
1.082
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
இரும் பொன்மலை வில்லா, எரி
Tune - குறிஞ்சி
(திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
1.092
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
வாசி தீரவே, காசு நல்குவீர்! மாசு
Tune - குறிஞ்சி
(திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
1.124
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
அலர்மகள் மலிதர, அவனியில் நிகழ்பவர் மலர்
Tune - வியாழக்குறிஞ்சி
(திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
1.132
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
ஏர் இசையும் வட-ஆலின்கீழ் இருந்து,
Tune - மேகராகக்குறிஞ்சி
(திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
3.009
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கேள்வியர், நாள்தொறும் ஓது நல்வேதத்தர்
Tune - காந்தாரபஞ்சமம்
(திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
3.080
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
சீர் மருவு தேசினொடு தேசம்
Tune - சாதாரி
(திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
3.085
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
மட்டு ஒளி விரிதரு மலர்
Tune - சாதாரி
(திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
3.098
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
வெண்மதி தவழ் மதில் மிழலை
Tune - சாதாரி
(திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
3.111
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
வேலின் நேர்தரு கண்ணினாள் உமை
Tune - பழம்பஞ்சுரம்
(திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
3.116
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
திரு இயமகம் பதிகம், துன்று கொன்றை நம் சடையதே;
Tune - பழம்பஞ்சுரம்
(திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
3.119
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
புள்ளித்தோல் ஆடை; பூண்பது நாகம்;
Tune - புறநீர்மை
(திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
4.064
திருநாவுக்கரசர்
தேவாரம்
பூதத்தின் படையர்; பாம்பின் பூணினர்;
Tune - திருநேரிசை
(திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
4.095
திருநாவுக்கரசர்
தேவாரம்
வான் சொட்டச்சொட்ட நின்று அட்டும்
Tune - திருவிருத்தம்
(திருவீழிமிழலை தோன்றாத்துணையீசுவரர் தோகையம்பிகையம்மை)
5.012
திருநாவுக்கரசர்
தேவாரம்
கரைந்து கை தொழுவாரையும் காதலன்;
Tune - திருக்குறுந்தொகை
(திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
5.013
திருநாவுக்கரசர்
தேவாரம்
என் பொனே! இமையோர் தொழு
Tune - திருக்குறுந்தொகை
(திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
6.050
திருநாவுக்கரசர்
தேவாரம்
போர் ஆனை ஈர் உரிவைப்
Tune - திருத்தாண்டகம்
(திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
6.051
திருநாவுக்கரசர்
தேவாரம்
கயிலாய மலை உள்ளார்; காரோணத்தார்;
Tune - திருத்தாண்டகம்
(திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
6.052
திருநாவுக்கரசர்
தேவாரம்
கண் அவன் காண்; கண்
Tune - திருத்தாண்டகம்
(திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
6.053
திருநாவுக்கரசர்
தேவாரம்
மான் ஏறு கரம் உடைய
Tune - திருத்தாண்டகம்
(திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
7.088
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
நம்பினார்க்கு அருள் செய்யும் அந்தணர்
Tune - சீகாமரம்
(திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகையம்மை)
9.005
சேந்தனார்
திருவிசைப்பா
சேந்தனார் - திருவீழிமிழலை
Tune -
(திருவீழிமிழலை )