ஊனினுள் ளுயிரை வாட்டி உணர்வினார்க் கெளிய ராகி
வானினுள் வான வர்க்கும் அறியலா காத வஞ்சர்
நானெனிற் றானே யென்னும் ஞானத்தார் பத்தர் நெஞ்சுள்
தேனுமின் னமுது மானார் திருச்செம்பொன் பள்ளி யாரே. |
1
|
நொய்யவர் விழுமி யாரு நூலினுண் ணெறியைக் காட்டும்
மெய்யவர் பொய்யு மில்லார் உடலெனு மிடிஞ்சி றன்னில்
நெய்யமர் திரியு மாகி நெஞ்சத்துள் விளக்கு மாகிச்
செய்யவர் கரிய கண்டர் திருச்செம்பொன் பள்ளி யாரே. |
2
|
வெள்ளியர் கரியர் செய்யர் விண்ணவ ரவர்கள் நெஞ்சுள்
ஒள்ளிய ரூழி யூழி யுலகம தேத்த நின்ற
பள்ளியர் நெஞ்சத் துள்ளார் பஞ்சமம் பாடி யாடும்
தெள்ளியார் கள்ளந் தீர்ப்பார் திருச்செம்பொன் பள்ளி யாரே. |
3
|
தந்தையுந் தாயு மாகித் தானவன் ஞான மூர்த்தி
முந்திய தேவர் கூடி முறைமுறை யிருக்குச் சொல்லி
எந்தைநீ சரண மென்றங் கிமையவர் பரவி யேத்தச்
சிந்தையுட் சிவம தானார் திருச்செம்பொன் பள்ளி யாரே. |
4
|
ஆறுடைச் சடையர் போலும் அன்பருக் கன்பர் போலும்
கூறுடை மெய்யர் போலும் கோளர வரையர் போலும்
நீறுடை யழகர் போலும் நெய்தலே கமழு நீர்மைச்
சேறுடைக் கமல வேலித் திருச்செம்பொன் பள்ளி யாரே. |
5
|
| Go to top |
ஞாலமு மறிய வேண்டில் நன்றென வாழ லுற்றீர்
காலமுங் கழிய லான கள்ளத்தை யொழிய கில்லீர்
கோலமும் வேண்டா வார்வச் செற்றங்கள் குரோத நீக்கில்
சீலமுந் நோன்பு மாவார் திருச்செம்பொன் பள்ளி யாரே. |
6
|
புரிகாலே நேசஞ் செய்ய விருந்தபுண் டரீகத் தாரும்
எரிகாலே மூன்று மாகி யிமையவர் தொழநின் றாரும்
தெரிகாலே மூன்று சந்தி தியானித்து வணங்க நின்று
திரிகாலங் கண்ட வெந்தை திருச்செம்பொன் பள்ளி யாரே. |
7
|
காருடைக் கொன்றை மாலை கதிர்மதி யரவி னோடும்
நீருடைச் சடையுள் வைத்த நீதியார் நீதி யுள்ளார்
பாரொடு விண்ணு மண்ணும் பதினெட்டுக் கணங்க ளேத்தச்
சீரொடு பாட லானார் திருச்செம்பொன் பள்ளி யாரே. |
8
|
ஓவாத மறைவல் லானும் ஓதநீர் வண்ணன் காணா
மூவாத பிறப்பி லாரும் முனிகளா னார்க ளேத்தும்
பூவான மூன்று முந்நூற் றறுபது மாகு மெந்தை
தேவாதி தேவ ரென்றுந் திருச்செம்பொன் பள்ளி யாரே. |
9
|
அங்கங்க ளாறும் நான்கும் அந்தணர்க் கருளிச் செய்து
சங்கங்கள் பாட வாடுஞ் சங்கரன் மலையெ டுத்தான்
அங்கங்க ளுதிர்ந்து சோர வலறிட வடர்த்து நின்றும்
செங்கண்வெள் ளேற தேறுந் திருச்செம்பொன் பள்ளி யாரே. |
10
|
| Go to top |