சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Audio: https://www.youtube.com/watch?v=qucQe6XZPzE
1.050
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
திருவலிவலம் - பழந்தக்கராகம் அருள்தரு வாளையங்கண்ணியம்மை உடனுறை அருள்மிகு மனத்துணைநாதர் திருவடிகள் போற்றி
ஒல்லைஆறி உள்ளமொன்றிக் கள்ளம் ஒழிந் துவெய்ய
சொல்லைஆறித் தூய்மைசெய்து காமவினை யகற்றி
நல்லவாறே யுன்றன் நாமம் நாவில்நவின் ஏத்த
வல்லவாறே வந்துநல்காய் வலிவலம்மே யவனே.
1
இயங்குகின்ற இரவி திங்கள் மற்றுநல் தேவரெல்லாம்
பயங்களாலே பற்றிநின்பால் சித்தந்தெளி கின்றிலர்
தயங்குசோதீ சாமவேதா காமனைக்காய்ந் தவனே
மயங்குகின்றேன் வந்துநல்காய் வலிவலமே யவனே.
2
பெண்டிர்மக்கள் சுற்றமென்னும் பேதைப்பெருங் கடலை
விண்டுபண்டே வாழமாட்டேன் வேதனைநோய் நலியக்
கண்டுகண்டே யுன்றன் நாமம் காதலிக்கின்ற துள்ளம்
வண்டுகிண்டிப் பாடுஞ்சோலை வலிவலமே யவனே.
3
மெய்யர் ஆகிப் பொய்யை நீக்கி, வேதனையைத் துறந்து,
செய்யர் ஆனார் சிந்தையானே! தேவர் குலக்கொழுந்தே!
நைவன், நாயேன்; உன்தன் நாமம் நாளும் நவிற்றுகின்றேன்;
வையம் முன்னே வந்து நல்காய் வலிவலம் மேயவனே!
4
துஞ்சும் போதும் துற்றும் போதும் சொல்லுவன், உன் திறமே;
தஞ்சம் இல்லாத் தேவர் வந்து, உன் தாள் இணைக்கீழ்ப் பணிய,
நஞ்சை உண்டாய்க்கு என் செய்கேனோ? நாளும் நினைந்து, அடியேன்,
வஞ்சம் உண்டு என்று அஞ்சுகின்றேன்-வலிவலம் மேயவனே!
5
Go to top
புரிசடையாய்! புண்ணியனே! நண்ணலார் மூஎயிலும்
எரிய எய்தாய்! எம்பெருமான்! என்று இமையோர் பரவும்
கரி உரியாய்! காலகாலா! நீலமணி மிடற்று
வரி அரவா! வந்து நல்காய் வலிவலம் மேயவனே!
6
தாயும் நீயே! தந்தை நீயே! சங்கரனே! அடியேன்
ஆயும் நின்பால் அன்பு செய்வான் ஆதரிக்கின்றது, உள்ளம்;
ஆயம் ஆய காயம் தன்னுள் ஐவர் நின்று ஒன்றல் ஒட்டார்;
மாயமே என்று அஞ்சுகின்றேன்-வலிவலம் மேயவனே!
7
நீர் ஒடுங்கும் செஞ்சடையாய்! நின்னுடைய பொன்மலையை
வேரொடும் பீழ்ந்து ஏந்தல் உற்ற வேந்தன் இராவணனைத்
தேரொடும் போய் வீழ்ந்து அலற, திருவிரலால் அடர்த்த
வார் ஒடுங்கும் கொங்கை பங்கா! வலிவலம் மேயவனே!
8
ஆதி ஆய நான்முகனும் மாலும் அறிவு அரிய
சோதியானே! நீதி இல்லேன் சொல்லுவன், நின் திறமே;
ஓதி நாளும் உன்னை ஏத்தும் என்னை வினை அவலம்
வாதியாமே வந்து நல்காய் வலிவலம் மேயவனே!
9
பொதியிலானே! பூவணத்தாய்! பொன் திகழும் கயிலைப்
பதியிலானே! பத்தர் சித்தம் பற்று விடாதவனே!
விதி இலாதார் வெஞ்சமணர் சாக்கியர் என்று இவர்கள்
மதி இலாதார் என் செய்வாரோ? வலிவலம் மேயவனே!
10
Go to top
வன்னி, கொன்றை, மத்தம், சூடும் வலிவலம் மேயவனைப்
பொன்னி நாடன்-புகலி வேந்தன், ஞானசம்பந்தன்-சொன்ன
பன்னு பாடல் பத்தும் வல்லார் மெய்த்தவத்தோர் விரும்பும்
மன்னு சோதி ஈசனோடே மன்னி இருப்பாரே.
11
Thevaaram Link
- Shaivam Link
Other song(s) from this location: திருவலிவலம்
1.050
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
ஒல்லைஆறி உள்ளமொன்றிக்
Tune - பழந்தக்கராகம்
(திருவலிவலம் மனத்துணைநாதர் வாளையங்கண்ணியம்மை)
1.123
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பூ இயல் புரிகுழல்; வரிசிலை
Tune - வியாழக்குறிஞ்சி
(திருவலிவலம் மனத்துணைநாதர் வாளையங்கண்ணியம்மை)
6.048
திருநாவுக்கரசர்
தேவாரம்
நல்லான் காண், நால்மறைகள் ஆயினான்
Tune - திருத்தாண்டகம்
(திருவலிவலம் மனத்துணைநாதர் வாளையங்கண்ணியம்மை)
7.067
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
ஊன் அங்கத்து உயிர்ப்பு ஆய்,
Tune - தக்கேசி
(திருவலிவலம் மனத்துணைநாதர் மாழையங்கண்ணியம்மை)
This page was last modified on Wed, 19 Jun 2024 20:35:04 +0000