வண்ண மாடங்கள் சூழ் திருக்கோட்டியூர்க் கண்ணன் கேசவன் நம்பி பிறந்தினில் எண்ணெய் சுண்ணம் எதிரெதிர் தூவிடக் கண்ணன் முற்றம் கலந்து அளறு ஆயிற்றே
|
[13.0] |
ஓடுவார் விழுவார் உகந்து ஆலிப்பார் நாடுவார் நம்பிரான் எங்குத்தான் என்பார் பாடுவார்களும் பல்பறை கொட்ட நின்று ஆடுவார்களும் ஆயிற்று ஆய்ப்பாடியே
|
[14.0] |
பேணிச் சீர் உடைப் பிள்ளை பிறந்தினில் காணத் தாம் புகுவார் புக்குப் போதுவார் ஆண் ஒப்பார் இவன் நேர் இல்லை காண் திரு- வோணத்தான் உலகு ஆளும் என்பார்களே
|
[15.0] |
Back to Top |
உறியை முற்றத்து உருட்டி நின்று ஆடுவார் நறுநெய் பால் தயிர் நன்றாகத் தூவுவார் செறி மென் கூந்தல் அவிழத் திளைத்து எங்கும் அறிவு அழிந்தனர் ஆய்ப்பாடி ஆயரே
|
[16.0] |
கொண்ட தாள் உறி கோலக் கொடுமழுத் தண்டினர் பறியோலைச் சயனத்தர் விண்ட முல்லையரும்பு அன்ன பல்லினர் அண்டர் மிண்டிப் புகுந்து நெய்யாடினார்
|
[17.0] |
கையும் காலும் நிமிர்த்துக் கடார நீர் பைய ஆட்டிப் பசுஞ் சிறு மஞ்சளால் ஐய நா வழித்தாளுக்கு அங்காந்திட வையம் ஏழும் கண்டாள் பிள்ளை வாயுளே
|
[18.0] |
வாயுள் வையகம் கண்ட மடநல்லார் ஆயர் புத்திரன் அல்லன் அருந்தெய்வம் பாய சீர் உடைப் பண்பு உடைப் பாலகன் மாயன் என்று மகிழ்ந்தனர் மாதரே
|
[19.0] |
பத்து நாளும் கடந்த இரண்டாம் நாள் எத் திசையும் சயமரம் கோடித்து மத்த மா மலை தாங்கிய மைந்தனை உத்தானம் செய்து உகந்தனர் ஆயரே
|
[20.0] |
Back to Top |
கிடக்கில் தொட்டில் கிழிய உதைத்திடும் எடுத்துக் கொள்ளில் மருங்கை இறுத்திடும் ஒடுக்கிப் புல்கில் உதரத்தே பாய்ந்திடும் மிடுக்கு இலாமையால் நான் மெலிந்தேன் நங்காய
|
[21.0] |
செந்நெல் ஆர் வயல் சூழ் திருக்கோட்டியூர் மன்னு நாரணன் நம்பி பிறந்தமை மின்னு நூல் விட்டுசித்தன் விரித்த இப் பன்னு பாடல் வல்லார்க்கு இல்லை பாவமே
|
[22.0] |
சீதக் கடலுள் அமுது அன்ன தேவகி கோதைக் குழலாள் அசோதைக்குப் போத்தந்த பேதைக் குழவி பிடித்துச் சுவைத்து உண்ணும் பாதக் கமலங்கள் காணீரே பவள வாயீர் வந்து காணீரே
|
[23.0] |
முத்தும் மணியும் வயிரமும் நன்பொன்னும் தத்திப் பதித்துத் தலைப்பெய்தாற் போல் எங்கும் பத்து விரலும் மணிவண்ணன் பாதங்கள் ஒத்திட்டு இருந்தவா காணீரே ஒண்ணுதலீர் வந்து காணீரே
|
[24.0] |
பணைத்தோள் இள ஆய்ச்சி பால் பாய்ந்த கொங்கை அணைத்து ஆர உண்டு கிடந்த இப் பிள்ளை இணைக்காலில் வெள்ளித் தளை நின்று இலங்கும் கணைக்கால் இருந்தவா காணீரே காரிகையீர் வந்து காணீரே
|
[25.0] |
Back to Top |
உழந்தாள் நறுநெய் ஒரோர் தடா உண்ண இழந்தாள் எரிவினால் ஈர்த்து எழில் மத்தின் பழந்தாம்பால் ஓச்ச பயத்தால் தவழ்ந்தான் முழந்தாள் இருந்தவா காணீரே முகிழ்முலையீர் வந்து காணீரே
|
[26.0] |
பிறங்கிய பேய்ச்சி முலை சுவைத்து உண்டிட்டு உறங்குவான் போலே கிடந்த இப்பிள்ளை மறம் கொள் இரணியன் மார்வை முன் கீண்டான் குறங்குகளை வந்து காணீரே குவிமுலையீர் வந்து காணீரே
|
[27.0] |
மத்தக் களிற்று வசுதேவர் தம்முடைச் சித்தம் பிரியாத தேவகிதன் வயிற்றில் அத்தத்தின் பத்தாம் நாள் தோன்றிய அச்சுதன் முத்தம் இருந்தவா காணீரே முகிழ்நகையீர் வந்து காணீரே
|
[28.0] |
இருங்கை மதகளிறு ஈர்க்கின்றவனைப் பருங்கிப் பறித்துக்கொண்டு ஓடும் பரமன்தன் நெருங்கு பவளமும் நேர்நாணும் முத்தும் மருங்கும் இருந்தவா காணீரே வாணுதலீர் வந்து காணீரே
|
[29.0] |
வந்த மதலைக் குழாத்தை வலிசெய்து தந்தக் களிறு போல் தானே விளையாடும் நந்தன் மதலைக்கு நன்றும் அழகிய உந்தி இருந்தவா காணீரே ஒளியிழையீர் வந்து காணீரே
|
[30.0] |
Back to Top |
அதிருங் கடல்நிற வண்ணனை ஆய்ச்சி மதுரமுலை ஊட்டி வஞ்சித்து வைத்துப் பதறப் படாமே பழந் தாம்பால் ஆர்த்த உதரம் இருந்தவா காணீரே ஒளிவளையீர் வந்து காணீரே
|
[31.0] |
பெரு மா உரலிற் பிணிப்புண்டு இருந்து அங்கு இரு மா மருதம் இறுத்த இப் பிள்ளை குரு மா மணிப்பூண் குலாவித் திகழும் திருமார்வு இருந்தவா காணீரே சேயிழையீர் வந்து காணீரே
|
[32.0] |