சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS   Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  

முதல் ஆயிரம்   பெரியாழ்வார்  
திருப்பல்லாண்டு -  

Songs from 1.0 to 12.0   ( திருவில்லிபுத்தூர் )
முதல் ஆயிரம்   ஆண்டாள்  
திருப்பாவை -  

Songs from 474.0 to 503.0   ( திருவில்லிபுத்தூர் )
முதல் ஆயிரம்   திருமழிசை ஆழ்வார்  
திருச்சந்த விருத்தம் -  

Songs from 752.0 to 871.0   ( )
முதல் ஆயிரம்   தொண்டர் அடிப்பொடி ஆழ்வார்  
திருமாலை -  

Songs from 872.0 to 916.0   ( )
முதல் ஆயிரம்   தொண்டர் அடிப்பொடி ஆழ்வார்  
திருப்பள்ளி எழுச்சி -  

Songs from 917.0 to 926.0   ( )
முதல் ஆயிரம்   திருப்பாணாழ்வார்  
அமலன் ஆதிபிரான் -  

Songs from 927.0 to 936.0   ( உறையூர் )
முதல் ஆயிரம்   மதுரகவி ஆழ்வார்  
கண்ணி நுண் சிறுத்தாம்பு -  

Songs from 937.0 to 947.0   ( )
(937.0)    
Pages:    1    2  3  4  5  6  7  8  9  10  Next  Next 10
அடிமையிற் குடிமை இல்லா
      அயல் சதுப்பேதிமாரிற்
குடிமையிற் கடைமை பட்ட
      குக்கரில் பிறப்பரேலும்
முடியினில் துளபம் வைத்தாய்
      மொய் கழற்கு அன்பு செய்யும்
அடியரை உகத்தி போலும்
      அரங்க மா நகருளானே



[910.0]
திருமறுமார்வ நின்னைச்
      சிந்தையுள் திகழ வைத்து
மருவிய மனத்தர் ஆகில்
      மா நிலத்து உயிர்கள் எல்லாம்
வெருவு உறக் கொன்று சுட்டிட்டு
      ஈட்டிய வினையரேலும்
அருவினைப் பயன துய்யார்
      அரங்க மா நகருளானே             



[911.0]
வானுளார் அறியல் ஆகா
      வானவா என்பர் ஆகில்
தேனுலாம் துளப மாலைச்
      சென்னியாய் என்பர் ஆகில்
ஊனம் ஆயினகள் செய்யும்
      ஊனகாரகர்களேலும்
போனகம் செய்த சேடம்
      தருவரேல் புனிதம் அன்றே                



[912.0]
Go to Top
பழுது இலா ஒழுகல்-ஆற்றுப்
      பல சதுப்பேதிமார்கள்   
இழிகுலத்தவர்களேலும்
      எம் அடியார்கள் ஆகில்
தொழுமின் நீர் கொடுமின் கொண்மின்
      என்று நின்னோடும் ஒக்க
வழிபட அருளினாய் போல்
      மதில்-திருவரங்கத்தானே             



[913.0]
அமர ஓர் அங்கம் ஆறும்
      வேதம் ஓர் நான்கும் ஓதித்
தமர்களிற் தலைவராய
      சாதி-அந்தணர்களேலும்
நுமர்களைப் பழிப்பர் ஆகில்
      நொடிப்பது ஓர் அளவில் ஆங்கே
அவர்கள்தாம் புலையர் போலும்
      அரங்க மா நகருளானே



[914.0]
பெண் உலாம் சடையினானும்
      பிரமனும் உன்னைக் காண்பான்
எண் இலா ஊழி ஊழி
      தவம் செய்தார் வெள்கி நிற்ப
விண் உளார் வியப்ப வந்து
      ஆனைக்கு அன்று அருளை ஈந்த
கண்ணறா உன்னை என்னோ?
      களைகணாக் கருதுமாறே



[915.0]
வள எழும் தவள மாட
      மதுரை மா நகரந் தன்னுள்
கவள மால் யானை கொன்ற
      கண்ணனை அரங்க-மாலைத்
துளவத் தொண்டு ஆய தொல் சீர்த்
      தொண்டரடிப் பொடி சொல்
இளைய புன் கவிதையேலும்
      எம்பிராற்கு இனியவாறே



[916.0]
Go to Top
கதிரவன் குணதிசைச் சிகரம் வந்து அணைந்தான்
      கனை இருள் அகன்றது காலை அம் பொழுதாய்
மது விரிந்து ஒழுகின மா மலர் எல்லாம்
      வானவர் அரசர்கள் வந்து வந்து ஈண்டி
எதிர்திசை நிறைந்தனர் இவரொடும் புகுந்த
      இருங் களிற்று ஈட்டமும் பிடியொடு முரசும்
அதிர்தலில் அலை-கடல் போன்றுளது எங்கும்
      அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே



[917.0]
கொழுங்கொடி முல்லையின் கொழு மலர் அணவிக்
      கூர்ந்தது குண-திசை மாருதம் இதுவோ
எழுந்தன மலர் அணைப் பள்ளிகொள் அன்னம்
      ஈன்பணி நனைந்த தம் இருஞ் சிறகு உதறி
விழுங்கிய முதலையின் பிலம் புரை பேழ்வாய்
      வெள் எயிறு உற அதன் விடத்தினுக்கு அனுங்கி
அழுங்கிய ஆனையின் அருந்துயர் கெடுத்த
      அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே



[918.0]
சுடர்-ஒளி பரந்தன சூழ் திசை எல்லாம்
      துன்னிய தாரகை மின்னொளி சுருங்கிப்
படர் ஒளி பசுத்தனன் பனி மதி இவனோ
      பாயிருள் அகன்றது பைம் பொழிற் கமுகின்
மடலிடைக் கீறி வண் பாளைகள் நாற
      வைகறை கூர்ந்தது மாருதம் இதுவோ
அடல்-ஒளி திகழ் தரு திகிரி அம் தடக்கை
      அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே



[919.0]
மேட்டு இள மேதிகள் தளை விடும் ஆயர்கள்
      வேய்ங்குழல் ஓசையும் விடை மணிக் குரலும்
ஈட்டிய இசை திசை பரந்தன வயலுள்
      இரிந்தன சுரும்பினம் இலங்கையர் குலத்தை
வாட்டிய வரிசிலை வானவர் ஏறே
      மா முனி வேள்வியைக் காத்து அவபிரதம்
ஆட்டிய அடு திறல் அயோத்தி எம் அரசே
      அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே.



[920.0]
Go to Top
புலம்பின புட்களும் பூம் பொழில்களின் வாய்
      போயிற்றுக் கங்குல் புகுந்தது புலரி
கலந்தது குணதிசைக் கனைகடல் அரவம்
      களி வண்டு மிழற்றிய கலம்பகம் புனைந்த
அலங்கல் அம் தொடையல் கொண்டு அடியிணை பணிவான்
      அமரர்கள் புகுந்தனர் ஆதலில் அம்மா
இலங்கையர்கோன் வழிபாடு செய் கோயில்
      எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே.



[921.0]
இரவியர் மணி நெடுந் தேரொடும் இவரோ
      இறையவர் பதினொரு விடையரும் இவரோ
மருவிய மயிலினன் அறுமுகன் இவனோ
      மருதரும் வசுக்களும் வந்து வந்து ஈண்டி
புரவியொடு ஆடலும் பாடலும் தேரும்
      குமர-தண்டம் புகுந்து ஈண்டிய வெள்ளம்
அருவரை அனைய நின் கோயில் முன் இவரோ
      அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே



[922.0]
அந்தரத்து அமரர்கள் கூட்டங்கள் இவையோ
      அருந்தவ முனிவரும் மருதரும் இவரோ
இந்திரன் ஆனையும் தானும் வந்து இவனோ
      எம்பெருமான் உன கோயிலின் வாசல்
சுந்தரர் நெருக்க விச்சாதரர் நூக்க
      இயக்கரும் மயங்கினர் திருவடி தொழுவான்
அந்தரம் பார் இடம் இல்லை மற்று இதுவோ
      அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே



[923.0]
வம்பவிழ் வானவர் வாயுறை வழங்க
      மாநிதி கபிலை ஒண் கண்ணாடி முதலா
எம்பெருமான் படிமக்கலம் காண்டற்கு
      ஏற்பன ஆயின கொண்டு நன் முனிவர்
தும்புரு நாரதர் புகுந்தனர் இவரோ
      தோன்றினன் இரவியும் துலங்கு ஒளி பரப்பி
அம்பர தலத்தினின்று அகல்கின்றது இருள் போய்
      அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே



[924.0]
Go to Top
ஏதம் இல் தண்ணுமை எக்கம் மத்தளி
      யாழ் குழல் முழவமோடு இசை திசை கெழுமி
கீதங்கள் பாடினர் கின்னரர் கெருடர்கள்
      கெந்தருவர் அவர் கங்குலுள் எல்லாம்
மாதவர் வானவர் சாரணர் இயக்கர்
      சித்தரும் மயங்கினர் திருவடி தொழுவான்
ஆதலில் அவர்க்கு நாள்-ஓலக்கம் அருள
      அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே.



[925.0]
கடி-மலர்க் கமலங்கள் மலர்ந்தன இவையோ
      கதிரவன் கனைகடல் முளைத்தனன் இவனோ
துடியிடையார் சுரி குழல் பிழிந்து உதறித்
      துகில் உடுத்து ஏறினர் சூழ் புனல் அரங்கா
தொடை ஒத்த துளவமும் கூடையும் பொலிந்து
      தோன்றிய தோள் தொண்டரடிப்பொடி என்னும்
அடியனை அளியன் என்று அருளி உன் அடியார்க்கு
      ஆட்படுத்தாய் பள்ளி எழுந்தருளாயே            



[926.0]
அமலன் ஆதிபிரான் அடியார்க்கு என்னை ஆட்படுத்த
விமலன் விண்ணவர்கோன் விரையார் பொழில் வேங்கடவன்
நிமலன் நின்மலன் நீதி வானவன்
      நீள் மதில் அரங்கத்து அம்மான் திருக்
கமல பாதம் வந்து என் கண்ணின் உள்ளன ஒக்கின்றதே



[927.0]
உவந்த உள்ளத்தனாய் உலகம் அளந்து அண்டம் உற
நிவந்த நீள் முடியன் அன்று நேர்ந்த நிசாசரரைக்
கவர்ந்த வெங்கணைக் காகுத்தன் கடியார்
                    பொழில் அரங்கத்து அம்மான் அரைச்
சிவந்த ஆடையின் மேல் சென்றது ஆம் என சிந்தனையே



[928.0]
Go to Top
மந்தி பாய் வட வேங்கட மா மலை வானவர்கள்
சந்தி செய்ய நின்றான் அரங்கத்து அரவின் அணையான்
அந்தி போல் நிறத்து ஆடையும் அதன்
      மேல் அயனைப் படைத்தது ஓர் எழில்
உந்தி மேலது அன்றோ அடியேன் உள்ளத்து இன்னுயிரே



[929.0]


Other Prabandhams:
    திருப்பல்லாண்டு     திருப்பாவை     பெரியாழ்வார் திருமொழி     நாச்சியார் திருமொழி         திருவாய் மொழி     பெருமாள் திருமொழி     திருச்சந்த விருத்தம்     திருமாலை     திருப்பள்ளி எழுச்சி     அமலன் ஆதிபிரான்     கண்ணி நுண் சிறுத்தாம்பு     பெரிய திருமொழி     திருக்குறுந் தாண்டகம்     திரு நெடுந்தாண்டகம்     முதல் திருவந்தாதி     இரண்டாம் திருவந்தாதி     மூன்றாம் திருவந்தாதி     நான்முகன் திருவந்தாதி     திருவிருத்தம்     திருவாசிரியம்     பெரிய திருவந்தாதி     நம்மாழ்வார்     திரு எழு கூற்றிருக்கை     சிறிய திருமடல்     பெரிய திருமடல்     இராமானுச நூற்றந்தாதி     திருவாய்மொழி     கண்ணிநுண்சிறுத்தாம்பு     அமலனாதிபிரான்     திருச்சந்தவிருத்தம்    
This page was last modified on Thu, 09 May 2024 05:33:07 +0000
 
   
    send corrections and suggestions to admin-at-sivaya.org

divya prabandham chapter